கவிதை
சொல் என்றார்..
தமிழில்..
என்றார்
தமிழே
கவிதைதானென்றேன்
..
மயங்கி நிற்கிறேன்
உன் அழகில்
நீ ..
தரும்
அறிவின் வெளிச்சம்
நான் செல்லும்
பாதையெங்கும்
வழிகாட்டுகிறதே..
..
பழமை பேசலாம் என்றால்
"சங்கம்" தருகிறாய்..
புதுமையெனில்
பராசக்தி தருகிறாய்..
(கலைஞரின் பராசக்தி)
..
பறக்கிறேன்
இறைக்கையாகிறாய்.
படர்கிறேன்..
மரமாய் ..
எனை..
வளைத்துக்கொள்கிறாய்..
..
காதல் சொல்ல
காமம் சொல்ல
மலர்ந்ததை
மலராததை
மொட்டை..
மயக்கும் விதத்தை
மயங்கும் வித்தையை
தந்து செல்கிறாய்....
..
மடமை கொளுத்தி
சாதி
மதத்தை வீழ்த்தி..
மானுடம் உடுத்தி..
மண் பெருமை பேசி
மகிழ்வாய்
கதைக்கிறேன்
மயக்கம் தருகிறாய்..
..
கோபம் கொள்கிறேன்.
கொள்கை பேசுகிறேன்
சிலநேரம்..
கொந்தளிக்கிறேன்..
வளைந்து.. எனக்கு
வழங்குகிறாய்..
..
தீயாய்..
தென்றலாய்
சிலநேரம் புயலாய்..
எனை சூழ்ந்துநிற்கிறாய்
பேச்சில் மூச்சில்
என் சுவாசத்தில்
என் துடிப்பில்..
எல்லாம் நீயே..
என் தமிழே..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment