இதைதானே எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தீர்கள் ..
படிப்பே வராது என்றீர் தரமுடியாது என்றீர்.. தோளில் துண்டை கூட போட கூடாதென்றீர்.. இதையெல்லாம் கடந்து தான் இங்கு வந்து கம்பீரமாய் நிற்கிறோம்.. பொறுக்கமுடியவில்லை.. எதேனும் செய்து தடை போட நினைக்கிறீர்.. இதையும் கடப்போம்.. ஆட்டம் முடியும் நேரம் பதறுவதும் கூறுவதும் கண்ணீர் வடிப்பதும் உங்கள் தொடை நடுங்குவது தெரிகிறது..
..
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் சாதனைகளை செல்வாராம் அப்போ இதுவரை எதையும் செய்யவில்லை.. மக்களை பிழிந்து ஆட்சி நடத்தும் லட்சணம் தெரிகிறது.. ஒரு சில முதலாளிகளுக்காக நாட்டை ஏறக்குறைய விற்றாகிவிட்டது.. எளியவர்கள் நடுத்தர குடும்பங்கள் சொல்லண்ணா துயரத்தில் .. கேஸ் விலையை இவ்வளவு உயர்த்தி யாரை குளிர வைக்கிறீர் ..
..
ஊழலுக்கெதிராக ஆட்சி நடத்துகிறாராம்.. யார் மீதெல்லாம் குற்றசாட்டு உண்டோ அவர்களை பாஜகவில் சேர்த்து புனிதராக்கும் இவர் பேசுகிறார்.. PMCARE எவ்வளவு வசூலானது எதற்கெல்லாம் செலவு செய்யப்பட்டது என கேட்கக்கூடாது என்பவர் உத்தமராம்..
கடைசியில் வாரிசு அரசியலாம் அதெல்லாம் பழைய புளித்தமாவு வேறெதாவது வடை சுடவும்
..
இந்திய ஒன்றியமே மூச்சுதிணறலில்.. வாழ வழிதெரியாது முழிக்கிறார்கள் மக்கள்.. ஏழைகள் வயிற்றில் அடித்து ஆட்சி செய்யும் இவர் மான்கிபாத் என்பதுதான் கொடுமை.. நீதிமன்றங்கள் தனித்தன்மையை இழக்க செய்து நீதியரசர்கள் மிரட்டபடுவதும்..
எதிர்க்கட்சிகள் மீது விசாரணை என்ற பெயரில் பரபரப்பை உண்டாக்கி ஒருவித பதட்டத்தோடு
தேசத்தை வைத்திருப்பதும், பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுப்பதும் ஊடகங்கள் விலைபேசபடுவதும் ஜனநாயகத்தின் நரம்புகள் வெட்டப்படுவதும் அனைத்து மரபுகளையும் குழித்தோண்டி புதைத்து சர்வாதிகார தோற்றத்தை உருவாக்கி இந்தியாவின் மாண்பை குலைத்துதான் இவர்கள் ஓன்பதாணடுகளில் செய்தது..
..
இந்த சுதந்திர தினத்தில் ஒரு உறுதிமொழி எடுப்போம்..
இந்த பாசிச அரசை வீழ்த்தி ஜனநாயகத்தின் தூயகாற்றை சுவாசிப்போம்.. கார்ப்பரேட்டுகளின் விசுவாச ஆட்சியை அகற்றுவோம்..
இந்த சாதி,மதவெறியவர்களின் கையிலிருக்கும் செங்கோலை பிடுங்குவோம்.. மீண்டும் ஒரு சுதந்திரப் போர்..
அன்பை விதைக்கும், நல்லிணக்கத்தை பேணும் நல்லவர்கள் கையில் நாட்டை தருவோம்..
..
,ஆலஞ்சியார்
No comments:
Post a Comment