வழிநெடுக பார்க்கிறேன் உன்
அமைதி அர்த்தங்கள் பொதிந்ததாய்
ஆரவாரமற்ற மொழியில் கதைக்கிறது.. உன் விழிகளில் பெரு வெளிச்சம் தமிழகத்தின் சுடரொளியாய் ஜொலிக்கிறது.. எதையும் பகுத்தாயும் தெளிவு ஆசானை நினைவுபடுத்துகிறது ..
..
எத்தனை சதிகள், தொடர் இடையூறுகள்.. பாசிசத்தின் சூழ்ச்சிகள் , கூட இருப்பவரின் சனாதன சேட்டைகள், அதிகாரம் வந்தவுடன் தான் என்ற அகந்தையில் திரியும் அற்பர்கள் ..ஊடகம் என்ற பெயரில் உமிழும் வதந்திகள், பூச்சாண்டி காட்டும் ஒன்றிய ஏவல்கள்
இவையனைத்தும் உன் அழுத்தமான அமைதி முன் அடிப்பட்டு போகிறது..
..
உன் வெற்றிடத்தை நீயே செதுக்கியதென்பதை அறியாதோர் புலம்புகிறார்கள்.. உன் அடுத்த அடி எதுவென யோசிப்பதற்குள் நீ சதுரம் கட்டுகிறார..
உன் நிழலை கண்டாலே பதறுகிறது பகைவர் கூட்டம் உன் செயல்கள் மக்களை அடையும் ஒவ்வொரு நொடியும் எதிரிகளின் விலா எலும்பு ஒடிகிறது.. எனக்கு உன் எதிரிகளை கண்டு அச்சமில்லை எதை நீ உன் பீச்சாங்கையில் டீல் செய்வாய்..
..
உன் கூட இருப்பவர் நீ அதிகாரம் தந்து அழகுபார்த்தவர்கள் உன்னால் நியமனம் செய்யபட்டவரகள் செய்யும் அழிச்சாட்டியம் ஆரவாரம் உன் அமைதி முன் அகங்காரமாய் நிற்கிறது ..
பொறுப்புணராதவர்களின் செயல்கள் கழகத்தின் கொள்கையை கேள்வியாக்குகிறது.. தலித் என்பதற்காக நிற்கவைக்கும் குறியீடுகள் பாசிசத்தின் நிழலை காட்டுகிறது எவனும் உயர்ந்தவனில்லை எவனுக்கும் தாழ்ந்தவனில்லை என்ற கோட்பாடு சிதைகிறது தலைவா..
..
பொறுப்பென்பது எதுவென்று தெரியாதவர்களை அகற்றி நிறுத்தி திராவிடத்தை உணர்ந்த, சித்தாந்த தெளிவும் அறிவும் பெற்றவர்களை முன்னிறுத்த வேண்டும்..
திமுகவில் ஊடுறுவிற்கும் சனாதனவாதிகளை பதவிக்காக எதையும் செய்யும் பித்தர்கள் இனங்கண்டு "களையெடுத்தல்" அவசியம்
..
நல்லதை விதைத்தால் அறுவடையின மகிழ்ச்சி வரும்.. நாம் தீய "களை"களையும் கூடவே வளர்ப்பது தீங்கு தரும்
..
ஆலஞசியார்
No comments:
Post a Comment