Thursday, December 28, 2023

விஜயகாந்த் 
இவரைப் பற்றி பேச துவங்கினாலே இப்ராகிம் ராவுத்தர் ஞாபகம் வருகிறது .. மதுரையில் ரைஸ்மில்லை பாரத்துக்கொண்டிருந்தவரை சினிமா ஆசையை அறிந்து சென்னை அழைத்த வந்தவர்..
..
ஆரமபகாலங்களில் அவரை கேலிசெய்தவர்களின் அலுவலகம் சென்று சண்டை போட்டவர்.. நடித்தால் கதாநாயகனாக நடி என இல்லையென்றால் வேண்டாம் என்றவர்.. விஜயகாந்த் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த போது ராவுத்தர் பிலிம்ஸ்  என்ற கம்பெனியை உருவாக்கி வெற்றி படங்களை தந்தவர் .. அன்றைக்கு கும்பகோணம் யூகிசேது வின் தந்தையிடம் பைனான்ஸ் பெற்று படங்களை தயாரித்தார் விஜயகாந்திற்காக தானே பைனான்ஸ் கம்பெனியில் கடனுக்கு கையெழுத்திட்டு பணம் பெற்று புதிய இயக்குனர்களை கொண்டு வெற்றி படங்களை தந்து விஜயகாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர் ..  நட்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய மனிதர் தனக்கு கல்யாணம் ஆனால் விஜயகாந்தை பிரிய நேரிடுமோ என கல்யாணம் செய்தக் கொள்ளாதவர் இப்ராகிம்
..
ராவுத்தர் பிலிம்ஸில் தினமும் சாப்பாடு போட்டார், வெள்ளிக்கிழமை பிரியாணி என வருகிறவர்களுக்கு சாப்பாடு போட்டவர் இதெல்லாம் ராவுத்தர் பிரிவதற்கு முன்பு வரை நடந்தது.. தனக்கான வாழாமல் தன் நண்பனுக்காக வாழ்ந்தவர்
கடைசி காலத்தில் நோயின் பிடியில் இருந்த போது கூட விஜயகாந்த் அருகில் வைத்துக்கொள்ளவில்லை..  விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முதன்மை காரணமானவர் ,
விஜயகாந்த் வாழ்வில் ஒளியேற்றியவர் இப்ராகிம் ராவுத்தர்  ஏனோ இந்நாளில் நினைவில் வந்தார் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment