என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும்
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல்
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல்
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்..
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும்
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல் இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன்
பழிதீர்க்காத பெருமைக்குரியவன்
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர்
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும்
வெறுக்கபட்டவர்களுக்கும்
வழி தெரியாதோர்க்கும்
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன்
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன்
படிப்பே வராதென்றவன் முன் உயரத்திற்கு வா..
உலகம் அன்னாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற
சாஸ்திரப் புரட்டை உடைத்து
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன்
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் ..
பொதுவாழ்வில்
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன்
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன் .
..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று
ஓயாத உழைப்பு
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும்
புறமிருந்து குத்தியவனையும்
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம்
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும்
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment