மதுரையில் ஓர் அறிவாலயம்..
..
எழுதுகோல் கொண்டு சமூகத்தை பண்படுத்திய பேரரசனின் நூலகம்
ஒரு இனம், சமூகம் மேம்பட, பண்பாட்டை காக்க, இனத்தின் மேன்மையும் வளமையும் அழியாது காக்க, புனைச்சுருட்டுககளைச் சொல்லி மடமையில் மூழ்க செய்யாமல் அறிவுக்கொண்டு பார் உண்மை விளங்கும் வரலாறு தெரியும் பண்பாடும் கலையும் மொழிவளமும் சொல்லாட்சியும் புரியும் என்ற மாமன்னனின் பெயரில் ஒரு அறிவாலயம்.. அரசியல், சமூகநீதி, தொலைநோக்கு சிந்தனை,பார்வை,செயல் என வாழ்ந்த காலத்தில் "தரு" வாய் நின்று நிழல் தந்த எங்கள் ராசராசனின் பெயரில் நூலகம்..
சமூகத்தின் இருளகற்ற காலமெல்லாம் எழுதிய கலைஞரின் பெயரில் நூலகம் ஆதிக்கத்தின் பிடியில் இருந்த கல்வியை அனைவருக்கும் கிடைக்க ஊர்தோறும் பள்ளி, தொடங்கி மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரியென கல்விப்புரட்சி செய்த பெருமகனார் கலைஞர் பெயரில் நூலகம்
சங்கம் வளர்த்த மதுரைக்கு ஓர் பொன் மகுடம்
..
ஒரு இனத்தை வரலாற்றை பறைசாற்ற, அறிவுடைமை சமூகமாய் திகழ்ந்த தமிழனின் வரலாற்றை, எதையும் அறிவுக்கொண்டு பார்த்த தமிழனின் பெருமையை உலகிற்கு சொல்ல தமிழ் வளர்த்த மதுரையில் மாபெரும் நூலகம் .. என்பதாண்டு பொதுவாழ்வு பெருமகனுக்கு இந்திய ஒன்றியத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையாய் தன் தொலைநோக்கு சிந்தனையால் எவரும் தொட முடியாத உச்சத்தை தொட்ட பேரறிவாளனின் பெயரில் நூலகம்
விளிம்புநிலை மக்களின் துயர் துடைக்க காலமெல்லாம் உழைத்த ஓய்வறியா ஒப்புமையில்லா பேரருளாளனுக்கு மதுரையில் புகழ்பேச ஓர் அறிவுசுரங்கம்
..
நூலகம் அறிவின் நுழைவாயில் ..
அறிவுடைய சமுதாயமாக மாற நல்லொழுக்க சமூகத்தை சமைக்க,எதையும் அறிவுக்கொண்டு பார் விளங்கும் புரியும் மேம்படும் , அறிவின் நிழலே பண்பை தரும், உலகத்தை அறியலாம், பொய் எது என புரியும் புரட்டுகள் பொசுங்கும், உண்மை எனும் ஒளி வழிகாட்டும், வழிநடத்தும்,..
..
கலைஞர் நூற்றாண்டு நூலகம் பன்முகத்தனமையோடு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாய் அமைந்திருப்பது திராவிடம் தந்த அறிவுப்பசிக்கான தீனி .. குழந்தைகள் தொடங்கி ஆய்வு மாணவர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்திருப்பது திராவிட அரசு படிப்பிற்கு தரும் முக்கியத்துவத்தை சொல்கிறது இந்திய ஒன்றியத்திலேயே அதிகம் நூலகம் கொண்ட தமிழ்நாடு அதனால் தான் சிலர் பதறுகிறார்கள்.. மக்களை மடைமையில் வைத்திருந்தால் ஏன் என்று கேட்க மாட்டான் மதத்தை புராணபுரட்டைச் சொல்லி வயிறு வளர்க்கலாம் அடிமையாக நடத்தி அதிகாரம் செய்யலாம் என நினைப்பவர்கள் கலக்க மடைகிறார்கள்.. பெட்டிகடை வைத்து முதலாளியாகலாம் அப்பன் தொழில் இருக்க ஏன் அடுத்தவனிடம் கைக்கட்டி வேலை பார்க்கிறாய் என மடைமாற்ற செய்கிறார்கள் ஆனால் திராவிட அரசு கல்வி முக்கியம், அதுவே உன்னை திருத்தும் மேம்படுத்தும் உயர்த்தும் நல் வழிகாட்டும் மானத்தோடு தலை நிமிர செய்யும் என தொடர்ந்து அறிவுக்கண்ணை திறக்க கடமையாற்றுகிறது..
..
நூலகம் அறிவின் திறவுகோல்..
திராவிடம் அறிவின் தேடலுக்கான பாதை .. மாண்பமை தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu
M. K. Stalin
மாபெரும் அறிவு சுரங்கத்தை மக்களுக்கு தந்து வரலாற்றில் இடம் பெறுகிறார் .. காலமெல்லாம் தமிழ் சமூகம் நன்றியோடு நிற்கும் ..
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
No comments:
Post a Comment