Monday, July 31, 2023

அகவை..
ஒன்று 
கணக்கில் கூடி..
..
என் தேடல்
நின்றபாடில்லை
தேடல் இல்லையேல்
நானில்லை..
..
காதலில்
கவிதையில்
அறிவியலில்
ஆன்மீகத்தில்
என் தேடல்..
நின்றபாடில்லை ..
..
என்னை நானே
எடைப்போட
கிழிசல்கள்
நிறைந்த
உண்மைகள்
வலிதரும்
பக்கங்கள்
அதை வார்த்தையில்
வடிக்க ..
என்னால் இயலாது ..
.. 
உண்மையை மட்டும்
பேசி போக
யோகி இல்லை நான்
கெட்டவன்..
கேடுகெட்டவனில்லை..
மிருகம் சிலநேரம் 
என்னுள்
வந்து போகும்..
..
ஒரு சார்பு பேசும்.
திராவிடன்..
தமிழ் பேசும்
பாமரன்..
அன்பு பேசினால்
அடங்கிப்போவேன்
அடக்க நினைத்தால்..
ஆட்டிவைப்பேன்..
..
சினம் சொன்னால்
சிவந்து போவேன்
சிரிக்கச் சொன்னால்
கரைந்து போவேன்
தமிழ் சொன்னால்
மலர்ந்துப்போவேன்..
..
அன்பில் மலரும்
அருந்தமிழ் பேசும்
அறிவியல் பேசும்
சான்றோர்கண்டால்
எழுந்து நிற்பேன்
..
அடிமை பேசும்
மடமைச் சொல்லும்
அறிவிலி கண்டால்
சிரித்து வைப்பேன்..
..
தினம் தினம்
புதிதாய் ஒரு
புத்தகம் ..
சில..பக்கங்கள்
சிலவரிகளாவது
வாசிக்க வேண்டும்
புதிதாய் 
ஒர்அறிவு
தினம் தினம் வேண்டும்..
..

வெற்றி..தோல்வி
உழைப்பு.. உயர்வு
அகங்காரம் ஆணவம்
அமைதி அன்பு..
நல்லது கெட்டது
எல்லாம் வேண்டும்
என்னை இழக்காத
என்னுள் வேண்டும்..
..
யாரையும் துன்புறுத்தாக
சொல்லில் சுவைமாறாத
சொக்க வைக்கும்
தேன் தமிழ்..
என்னுள்..
தீயாய் வேண்டும்
அணையாத..
தீயாய் வேண்டும்..
..
இரக்கம் கொள்ளும்
இதயமும்..
ஈகை கொண்ட நெஞ்சும்
சுனை  மாறா அறிவும்..
நிறம் மாறாமல் நானும்..
வேண்டும்..

***********************
என்னை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கும் முகநூலில் வாழ்த்திட்ட நல்உள்ளங்களுக்கும் 
நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும் 
நன்றி!..
..
#நன்றியோடு..
*******************
அன்பெனும்
பெரும்மழையில் நான்
கொஞ்சம் மூச்சு முட்டுகிறது
அன்பிற்குண்டோ 
அடைக்கும்தாழ்..
..
முன்னிலும் முனைப்பாய்
செயல்பட வேண்டும்
இன்னும் இன்னும் 
நிறைய அறிந்திட வேண்டும்
புதிதாய் தினமொரு சேதி
அறிவில் சேர்த்திட வேண்டும்..
..
பழைமை பேசி
பாசாங்கு செய்வோரை
அறிவின் கூர் கொண்டு
வென்றிட வேண்டும்..
மூடம் தொலைத்து
முற்போக்கு விதைத்து
சொல்லும் சொல்லின்
வலிமை உணர்ந்து
கொண்ட கொள்கை
உறுதியுடைத்து
செப்பிடவேண்டும்..
..
அறிவேற்றதை
ஆய்ந்து சரியென்பதை
நாகரீகமேலிட
நல் சொல்லெடுத்து
நா.. இனிக்கும்
தேன்தமிழ் குழைத்து..
நல்லவர் சபையில்..
நவின்றிட வேண்டும்..
..
எப்போதும் போல்
இயல்பாய்..
இனிதாய்
ஈகைக்குணத்தோடு..
நேர்மையாய்
நான் ..நானாகவே
எப்போதும் வேண்டும்..
இன்னும் கொஞ்சம்
விரிவாய் விவேகமாய்
பகைவரும் 
போற்றும்வண்ணம்
கதைக்கவேண்டும்...
..
#அன்பெனும்_பெரும்மழையில்_நான்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment