Thursday, August 3, 2023

முத்தலாக்..
குர்ஆன் இறைவன் அருளியது ஷரியத் சட்டம் மனிதன் இயற்றியது என்ற சென்னை பல்கலைகழக துணைவேந்தர் திரு.சாதிக் அவர்களின் கருத்தை மேற்கோள்காட்டி தான் துவக்கி வைத்தேன் ..பல்வேறு கருத்தாளர்கள் கலந்துக் கொண்டு இஸ்லாமிய குடும்ப பின்னணிகளையும் யாரும் தலாக்கை விரும்புவதில்லை என்றும் பேசினர் .. கிராம ஜமாத் பஞ்சாயத்துகளில் தீர்த்துவைக்கபடுகிற சாதாரண விடயம் போல சிலர் பேசினார் மொத்தத்தில் பேசியவர்கள் அனைவருமே இந்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை கடுமையாக சாடினர் ..
..
முத்தலாக் 
இஸ்லாமிய நான்கு கருத்தியலில் (மத்ஹப்)
(ஷாஃபியீ, ஹனஃபீ, மாலிகீ, ஹம்பலீ ) ஹனபியில் மட்டுமே முத்தலாக் சொல்லபடுகிறது மற்ற மத்ஹப்களில் அது ஒருமுறை மட்டுமே சொல்லபட்டதாக கருதபடும் .. தலாக் விடயத்தில் பெண்கள் மட்டுமே பாதிக்கபடுகிற சூழலும் வாழ்வு பாதுகாப்பின்மையும் குழந்தைகளின் எதிர்கால நலனும் வெகுவாக பாதிக்கபடுவதை உச்சநீதி மன்றம் கருத்தில் கொண்டு விரைந்து ஒரு சட்டவரைவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.. அதை தொடர்ந்து  மோடி அரசு அசுரவேகத்தில் முத்தலாக்கை கடுமையான எதிர்ப்பிக்கிடையில் நிறைவேற்றியிருக்கிறது .. சாதக பாதங்கள் நிறைய இருந்தாலும் இதை இஸ்லாமியர்கள் எதிர்ப்பதற்கு காரணம் ஷரியா சட்டத்தை இவர்கள் யார் திருத்தம் செய்ய என்பது தான் .. ஆனால் உண்மையில் ஷரியா சட்டம் கலிபா உமர் காலத்தில் தான் அதிகளவு வரையறை செய்யபட்டிருந்தாலும் பின் வந்த இஸ்லாமிய அரசுகள் நிறைய இடைசொருகலை செய்திருப்பதாகவும் .வரையறை செய்யபட்டபோது கூட கலிபா உமர் அவர்கள் கூட இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என துணைவேந்தர் சாதிக் அவர்கள் கூறுகிறார்கள்.. இதிலிருந்தே மாற்றத்திற்குட்பட்டது அல்லது மிக கவனமாக கையாளவேண்டியதென்ற உண்மையை விளங்க முடியும் ..
..
சரியான காரணமின்றி தலாக் சொல்பவருக்கு மூன்றாண்டு சிறை என்பது இஸ்லாமியர்கள் மீதான அரசின் அலட்சியம்/கோபம்/வெறுப்பு  காரணமாக இருக்கலாம்.. விவாகரத்து செய்தவர் மீண்டும் இணைய விரும்பினால் .. அந்த பெண் வேறொருவரை மணந்து அவரிடமிருந்து விவாககரத்து (தலாக்) பெற்ற பிறகே மணமுடிக்கலாம் என்ற ஷரியத் சரத்'தும் மீறப்பட்டிருக்கிறது .. இந்த முத்தலாக் சட்டம் அவசரகதியில் இயற்றபட்டிருக்கிறது .. திருந்தங்கள் செய்யபடவேண்டுமே தவிர .. முழுவதுமாக நிராகரிக்கபட வேண்டிய சட்டமில்லை .. 
இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் பங்களாதேஷ் சவுதி அரேபியா நாடுகளில் கூட தடை விதிக்கபட்டது முத்தலாக் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்..
..
"மாங்குனி கித்தாப்" என்ற புத்தகத்தை உருவாக்கி 
ஷரியத் சட்சத்திற்கு விளக்கமளிக்க சிலர் மார்க்கஅறிஞர்கள் முன் வந்தார்கள், ஏனோ அந்த முயற்சி வெற்றி பெறாமல் போய்விட்டது.. அது போல மிக சரியான விளக்கங்களோடு இன்றைய காலத்திற்கேற்ப அடிப்படை கோட்பாட்டிலிருந்து மாறாக விளக்கம் தரும் நூலை இயற்றிட வேண்டும் 
மதரஸாக்கள் மார்க்க அறிஞர்கள் தரும் "பத்வா"க்கள் நிறைய குறைபாடுடையதாக இருப்பது தெளிவின்மையை காட்டுகிறது ..
இஸ்லாமிய நான்கு கருத்தியலையும் தவறென்று சிலரும் சரியென்று பலரும் பிரிந்து நிற்கும் போது 
ஷரியத்தின் விளக்கங்கள் கூட வெவ்வேறாக 
ஆளுக்கொரு பதிலை தருகிறார்கள் இஸ்லாமிய சமூகம் தன்னை புனர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய காலகட்டமிது
.. 
மனிதர்கள் வகுத்ததில் உள்ள சிரமங்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாறுதலை சந்திக்காவிடில் முற்றிலுமாக இழப்பை தரும் அல்லது யாரும் பொருட்படுத்தாமல்/கண்டுக்கொள்ளாமல் போக நேரிடும் .. முத்தலாக் என்பது குர்ஆனின் அடிப்படைக்கு எதிரானது என்ற உச்சநீதிமன்ற ஐந்துபேர் கொண்ட அமர்வின் தீர்ப்பை சாதாரணமாக கடந்து போக இயலாது ..  சட்டவிதிகளில் மாற்றம் தேவை என்பதில் எப்படி மாற்று கருத்தில்லையோ அதைபோல இது பெண்களுக்கு சிறியளவில் பாதுகாப்பை தரும் என்பதிலும் வேறு கருத்து இல்லை ..கொண்டுவந்த பாசிச ஆரிய அரசின் நோக்கம் புரிந்தாலும் இஸ்லாமிய நெறிமுறைகளில் இருந்து முஸ்லிம் வெகுதூரம் பின்னிட்டு நிற்கிறார்கள் என்பதை உணரவேண்டும் ..
..
முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை விதிக்கப்படும்.

முத்தலாக் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்.

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம் பற்றி நீதிபதியின் முடிவே இறுதியானது.

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்படும் பெண்ணிடமே, மைனர் குழந்தைகளின் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
..
இவை முத்தலாக் சட்ட வரைவுகள் இதில் பெண்களுக்கு சுமையும் அநீதியும் இருப்பதை சில பெண்கள் அமைப்பு குறை கூறுகின்றன சிறையில் இருப்பவர் எப்படி அந்த பெண்ணின் செலவிற்கு பணம் தரமுடியுமென்ற கேள்வியும் எழாமல் இல்லை 
மோடி அரசு அவசரகதியில் இயற்றிய சட்டத்தால் இஸ்லாமிய ஆண் மட்டுமல்ல பெண்ணும் பாதிக்கபடுவார்கள் என்பதே உண்மை அது தான் இந்த பாசிச அரசுக்கு தேவையாக இருந்தது 
..
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தெளிவான விளக்கங்களை தங்கள் சமூக மக்களிடம் எத்திவைக்க வேண்டும் .. விவாகரத்து என்றில்லை 
இஸ்லாமிய சிவல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையவும் முன் வரவேண்டும்..
"ஷரியத் சட்டம் குர்ஆன்  அடிப்படையில் பிறரால் விளக்கமளிக்கபட்டு கொண்டுவரபட்டதுதான் இதில் உட்பிரிவுகளை புகுத்தி தெளிவுபடுத்த சமூகம் முன்வரவேண்டும் " என்ற துணைவேந்தரின் கூற்றில் நானும் உடன்படுகிறேன் ..
..
சட்டங்கள் மக்களுக்கானது ஆள்வோருக்கானதல்ல
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment