மீண்டு வருகிறது சென்னை..
அனைவருக்கும் நன்றி! இந்த பெருமழை நிறைய செய்திகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது..எம்ஜிஆர் எனும் கோமாளியின் நிஜத்தையும், இரும்பு பெண்மணி என பார்ப்பன ஊடகங்கள் கட்டமைத்த பிம்பத்தையும் அதிமுக எனும் அறிவிலிகள கூட்டத்தையும் திமுக என்றாலே அதிகம் தண்ணீர் குடிக்கும் "நடுநிலை" களையும் தோலுரித்து காட்டி இருக்கிறது..
..
நாடாளுமன்றத்தில் ₹4000 கோடி எங்கே என தம்பிதுரை கேள்வி எழுப்ப அவரது அறியாமையை அவரே வெளிச்சம் போட்டார்.. முன்பெல்லாம் தமிழகத்திலிருந்து தான் அறிவுஜீவிகள் செல்வார்கள் அதில் பார்ப்பனர்கள் கை ஓங்கி அரசியல் சாசனத்தை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் நாங்கள் தான் என இறுமாப்போடு இருந்தவர்களை I Am Dravidian stock என அதிரவைத்து தொடர்ந்து வல்லமையோடு பேசும் அறிவார்ந்தவர்களை அனுப்பியது தி.மு.கழகம்.. தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் என்றாலே சபை உற்றுநோக்கும்.. அதை உடைத்து காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீரென பாடலை பாட செய்த பெருமை ஜெயலலிதாவை சாரும் தங்களை விட யாரும் அறிவாளிகளாகிவிட கூடாது என்ற மனப்பான்மை முட்டாள்களை அனுப்பி தமிழ்நாட்டில் இப்படியும் சில கோமாளிகள் இருக்கிறார்கள் என காட்டினார் அப்படியான வரிசையில் வந்தவர் தான் தம்பிதுரை
..
47 ஆண்டுகளுக்கு இப்படியொரு பெருமழை பேரிடராய் வந்தது #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இல்லாமல் இருந்திருந்தாலும நினைக்கவே அச்சமாகிறது.. தொலைக்காட்சியை பார்த்து தெரிந்துக் கொண்டேன் என உளறிவைத்து அதையும் ஊடகங்கள் சொல்லி குதூகலம் அடைந்திருக்கும் .. பேரிடர் நிவாரணத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கும் தவிர்க்க முடியாதுதான்.. காலதாமதமும் தனக்கு கிடைத்துவிட்டதென சிலர் பகிர்ந்ததை கண்டு பலர் கோபம் கொள்வதும் தனக்கு தெரிந்த அதிகார மட்டத்தில் காரியம் சாதித்துக் கொணடவர்களின் இறுமாப்பும் விமர்சனத்திற்கு உள்ளாகும் தான் .. ஆனாலும் விரைந்து சேவை செய்து மாநகரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.. அமைச்சர்கள் அதிகாரிகள் தன்னார்வலர்கள் #துப்புறவுதெயவங்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கி பெருங்துயரிலிருந்து மீட்டுயிருக்கிறார்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Chief Minister of Tamil Nadu
M. K. Stalin
..
மாநகர மேயர்.. இவரின் உழைப்பை திறமை கேலிசெய்தவர்கள் சின்னப் பெண் என்றவர்களுக்கு தான் சிங்கப்பெண் என நிரூபித்திருக்கிறார் .. ஊடகங்கள் சமூகவலைத்தளங்கள் நேர்மை தவறிய போதும் எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் தனக்கு வாய்ப்பளித்த தலைமைக்கும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தன் உழைப்பின் மூலம் தான் யார் என்பதை உணர்த்தி திறம்பட செயல்பட்டிருக்கிறார் PriyaRajan DMK ..
..
அனைத்து
களப்பணியாளர்களுக்கும் நன்றி!🙏
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment