உதயநிதியின் பார்வையும், பதிலும் அவரின் அரசியல் புரிதலையும் மேன்மையையும் காட்டுகிறது .. ஈராயிரமாண்டு அடித்தமர்த்தலை சில ஆண்டுகளுக்குள் மாற்றத்தை தந்துவிட முடியாதென்றாலும் ஐம்பதாண்டுகளாக அதன் பிரச்சாரத்தை அடுத்த கட்ட நகர்வை நோக்கியே திராவிட இயக்கங்கள் பயணிக்கின்றன..
..
யாரெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறாரகளோ அவர்களுக்கெதிராக தான் இயக்கம் நின்றிருக்கிறது, தொடர்ந்து நிற்கும்.. பெண்கள் மீது குடும்பம் திணிக்கும் ஆதிக்கம்,
அடிமைத்தனம் தொட்டு எங்கெல்லாம் எவரெல்லாம் அழுத்தபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாய் நின்று குரல் கொடுக்கும்.. காலங்காலமாய் அமுக்கிவைக்கபட்டவர்கள்,மூர்ச்சையாகி கிடந்தவர்கள் இன்று தலைநிமிர காரணியாக திகழ்ந்தது திராவிட இயக்கங்கள்தான்
..
தலித்தியம் பேசும் இயக்கங்கள்,நபர்களுக்குள்ளும் பாகுபாடும், தீண்டாமையும் இப்போதுமிருப்பதை காணலாம்.. இன்றும் அருந்ததியர்களை சக்கிலிய பய என்றழைக்கும் பறையர் "பெருமகன்களை" ரஞ்சித்தின் கவனகுறைவாக பார்க்கவேண்டுமா..,? அருந்ததியினர் உள்பட ஓதுக்கீட்டை எதிர்த்தவர்கள் யார்
இடைசாதி திமிரென்பவரகள் தங்களை விட தாழ்நதவன் என்ற மனப்பான்மையை விடவேண்டும்.. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றுணர்தல் வேண்டும்..
..
இந்திய ஒன்றியத்திற்கே எடுத்துக்காட்டாய் சமூகநீதியை பறைசாற்றும் மாநிலம் தமிழ்நாடுதான் முழுவதுமாக சமநீதியை உரிமை பெற்றுதந்துவிட்டோம் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்க மாட்டேன் இன்னும் அடக்குமுறையும் ஆணவமும் தலைக்காட்டுகிறதென்பதும் அதற்கு சாதி மத அமைப்புகள் காப்புகட்டுவதும் , தேர்தல் அரசியலில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்துவதும் மறைப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லை .. நிறைய தடங்கல்களும் தடைகளும் தொடர்ந்தாலும் இன்னமும் வெகுமக்களை பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்க காரணியாய் அமைந்ததற்கு திராவிடமே காரணம்.. வடமாநிலங்களில் முதல்குடிமகனை நடத்தும்விதம் நாம் காண்பதுதான்.. இங்கே எதிர்த்து பேசவும் போராடவும் உரிமைகளை பெறவும் பெரியாரெனும் பெருஞ்சுடர் வெளிச்சம் தந்தது ..
..
திமுகவை விமர்சிக்கும் இவர்கள் சனாதனத்தை, ஏற்றதாழ்வை, தங்களின் சித்தாந்ததமாக கொண்டு செயல்படும் பாசிச பாஜகவை மெல்லியளவில் கூட தும்முவதில்லை.. இவர்கள் சமூகநீதி எல்லாம் திமுக எதிர்ப்பில் கரைந்துபோகும் ..
..
நீங்கள் இப்போது தான் சமூகநீதிப் பற்றி
பேச முனைகிறீர் நாங்கள் ஏற்கனவே விரிவுரை நிகழ்ந்தியவர்கள்.. "பராசக்தி" அருளியவர்கள் மலைக்கள்ளனையும் மாமன்னனாக்கிய கூட்டம்ங.
"பரியாரி" கடையை சிகை அலங்காரக்கடையாக மாற்றியவர்கள்.. திமுக சமூகநிதிக்கான இயக்கம் தொடர்ந்து பேசும் பகுத்தறிந்து செயல்படும்..
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
No comments:
Post a Comment