அனைவருக்கும் வணக்கம்
..
பேராசான் வழியில் கலைஞர் ..
தான் கொண்ட கொள்கை வழியில் நின்று சமத்துவம், சமூகநீதி பெண்ணுரிமை என தமிழ் நாட்டில் மாபெரும் புரட்சி செய்தார் ..
பெண்களின் கைகளிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை தாருங்கள் என்றார் பெரியார்.. உங்கள் வீட்டில் ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்க வையுங்கள் என்றார் உங்கள் ஊரில் அதற்கான வசதியில்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்க வையுங்கள் என்றார் அதைதான் கலைஞர் பெண்களின் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கட்டணமில்லா கல்வியென்றார், எட்டாவது படித்திருந்தால் திருமண உதவித்திட்டம் என தொடங்கி அதை 12 வது என உயர்த்தி பெண் குழந்தைகளின் கல்விக்கு வழி வகுத்தார்
..
ஐந்து கிலோ மீட்டரில் நடுநிலைப்பள்ளி, தாலுக்கா தோறும், கலைக்கல்லூரி மாவட்டந்தோறும் தொழில்ஙட்ப, மருத்துவகல்லூரிகள் கண்டார்..
அதுமட்டுமா
ஒடுக்கபட்டோரில் குரலாய் நின்று கல்வி வேலைவாய்ப்பில் விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கு வழி வகுத்தார்.. இன்றைய தமிழகத்தின் வளர்ச்சியின் காரணகர்த்தா கலைஞர் நவீன தமிழகத்தின் சிற்பி ..
நூற்றாண்டு காணும் கலைஞர் புகழை பாடுவோம்..
No comments:
Post a Comment