Friday, June 30, 2017

பார்பனர்..யார்

அம்பேத்கர் பெரியார் வட்டம் APSC சார்பில் தோழர் மதிமாறனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்பன கும்பலை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் சென்னை பல்கலைகழக வளாகத்தில் ஒரு பார்பன சகோதரி எப்படி நீங்கள் பாப்பாத்தி என அழைக்கலாம் என கேள்வி எழுப்பினார்.. கண்ணியமாக பதிலளித்த தோழர்களுக்கு வணங்கங்கள்.. .. முதலில் நான் பாப்பாத்தி தான் என்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள் பெண்கள் முழு உரிமையோடு பேசவும் செயல்படும் தான் பெரியார் ஆரம்பம் தொட்டே போராடி வந்தார்.. வேலைக்கு செல்லும் பெண்களை விபசாரிகள் என்ற சமூகத்திலிருந்து வந்து இன்று எதிர் கேள்வி கேட்கிறீர்கள் மகிழ்ச்சி.. வேலைக்கு செல்லும் பெண்களை கேவலப்படுத்தி தீட்டு வந்த பெண்கள் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகத்தில் பூகம்பங்கள் வருகிறதென #அருளிய மகாபெரியவரின்..? மீதான நம்பிக்கை கொண்டவர்கள் போராட்ட குணம் கொண்டிருப்பதில் எதிர்கேள்வி கேட்பதில் பெரும் மகிழ்ச்சி.. .. விசயத்திற்கு வருவோம்.. ஏன் பார்பனன் என அழைக்க சொன்னார் பெரியார்.. பிராமணன் என நாங்கள் அழைத்தால் .. தலையில் இருந்து பிறந்தவன் (உயர்ந்தவன்) என்ற தங்களின் கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ..நாங்கள் தான் மனிதர்கள் அனைவரும் சமமென்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் பின் எப்படி பிராமணன் என அழைப்பது..இரண்டாவதாக பார்ப்பு தொழிலை செய்யதான் இங்கே வந்தவர்கள் நீங்கள்.. "பார்த்துக்கொள்ளுதல்" அதை செய்யவேண்டிய விதத்தில் செய்து இந்த மண்ணை ஆண்டவர்களை சரிசெய்ததால் இன்று உயரத்தில் இருந்துக்கொண்டு கதைக்கிறீர்.. சடங்கு சம்பிரதாயம் வேதம் என கதைகள் சொல்லி ஆண்ட இனத்தை அடிமைபடுத்தி வைத்திருந்தீர்கள்.. இன்று வெகுண்டெழுந்து கேள்வி கேட்பதால் ஆத்திரம் வருகிறது.. .. செய்யும் தொழிலை வைத்து சாதியை பிரித்தவர்கள் ..அதையே அடையாளமாய் வைத்து நாங்கள் விளிக்கிற போது.. கோவம் வருகிறது ஆண்டாண்டு காலமாய் அதே நடைமுறையை பின்பற்றி எம்மை அழுத்திவைத்ததின் விளைவு திருப்பி தாக்கும் போது கொஞ்சம் வீரியமாய் தோன்றும்.. .. பிராமணன் என்றால் தங்களை உயர்வானர்வர்கள் என ஏற்றுக்கொண்டதாக பொருள்.. நாங்கள் வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்ளாததாலும்.. பார்த்து வந்த தொழிலை வைத்தே எல்லோரையும் அழைக்கிற பழக்கத்தை உருவாக்கியது நீங்கள் தான் என்பதால் அதையே நாங்களும் நடைமுறைபடுத்துகிறோம்.. .. #பார்பனன்_என்றசொல்_தவறானசொல்_அல்ல .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment