Monday, July 31, 2017

திருப்பிஅடி

கடும் கோவத்தில்.. என்ன நடக்கிறதிங்கே.. நாட்டின் பிரதமர் தலித் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென்கிறார்.. தலித்கள் வேட்டையாடபடுவது அதிகரிக்கிறது.. மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் பிரிவினை செய்வதை அனுமதிக்க முடியாதென்கிறார்.. ஜாதி மத மோதல்கள் அதிகரிக்கிறது.. அதாவது மௌனமாய் எதிர்மறையாக செயல்பட ஊக்குவித்தல் நடக்கிறதா.. .. தலித்துகள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என பாஜக அரசு அறிவித்துவிட்டதா.. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு குறிப்பாக வடமாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதல் பெரியளவில் கூடியிருக்கிறது.. இதை செய்வதை பாஜக ஊக்குவிக்கிறது இதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினரை அதிகார திமிரோடு கிரிமினலாக்கி..அவர்களின் உரிமைகளை எடுத்துக்கொள்ளும் மறைமுக திட்டம்.. இடைசாதிகாரர்களை குற்றவாளியாக்கி குளிர்காய நினைக்கிறார்களோ என சந்தேகம் வருகிறது.. .. வடமாநிலங்களில் பாஜக வெற்றிக்கு பிறகு நடக்கும் தாக்குதல்கள் இந்தியாவில் இதுவரை ஒரு போதும் நடக்காதது .. குறிப்பாக தலித் மற்றும் இஸ்லாமியர்கள் வேட்டையாடபடுகிறார்கள் அதிலும் குறிப்பாக தலித்.. இந்தியா வாழ்வதற்கு லாயிக்காத நாடாகிறதென்று சொன்னால் வேறு நாட்டிற்கு போய் தொலை என்கிறான் முலைவரி கட்டிவளின் பேரன்.. நாடு நமதடா என இவனுக்கும் சேர்த்து சொல்ல வேண்டியிருக்கிறது.. .. இங்கே என்ன கிழித்தது திராவிடம் என கூச்சல் போடுவோரே.. என் சகோதரிகளையை இங்கே அம்மணமாக ஓட விடாமல் காத்திருக்கிறதே.. மதம் தலைக்கேறி சாதிவெறிப்பிடித்து அலைபோரை தலையில் தட்டி அடக்கி வைத்திருக்கிறதே.. இடுப்பு வேட்டியை இறுக கட்டி தோளில் துண்டோடு நடக்கவைத்திருக்கிறதே.. கும்பிடுறேன் சாமி என்ற அடிமைத்தனத்திலிருந்து விடைவாங்கி தந்திருக்கிறதே.. அச்சத்தோடு திரியாமல் அமைதியாய் தமிழகத்தில் ஏழைகளும் நடமாட முடிகிறதே ..இதுகூட பெருங்கிழவன் பெரும்பாடுபட்டு மீட்டுதந்தது தான்.. இல்லையெனில் ஆண் பெண் என்றுபாராது கோவணத்தை உருவி.. ஓடவிட்டிருப்பான் அயோக்கிய மத ஜாதி வெறிப்பிடித்த நாய்கள் .. இந்த ஆட்சிக்கு முடிவுகட்டியாக வேண்டும் .. மனிதனை மனிதன் இழிவாய் பேசி தாக்குதல் நடத்தும் அயோக்கத்தனத்திற்கு .. ஜாதீய மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேணும்.. இந்த பாசிச ஆட்சி அகற்றப்படவேண்டும்.. .. #அடங்கமறு_அத்துமீறு_திருப்பிஅடி.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, July 30, 2017

கலாம்

மீண்டும் சர்ச்சையில்.. கலாம் நினைவகத்தில் வீணை சிலக்கருகே கீதையோடு குர்ஆனையும் பைபிளை வைத்தது சர்ச்சையாகி இந்து அமைப்பினரின் எதிர்ப்பால் அகற்றப்பட்டது.. வைத்தது கலாமின் சகோதரரின் பேரன் சலீம்.. நன்று.. .. சில வினாக்கள்.. கலாமை இந்துவின் காவலராக்க நினைக்கிறார்களா எனில் மகிழ்ச்சியே.. ஆனால் குர்ஆனையும் பைபிளை வைக்க கூடாதென சொல்ல இந்து அமைப்புகளுக்கு என்ன அதிகாரமிருக்கிறது.. யார் அதிகாரத்தை தந்தது இதேபோல் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கெதிராக கலாம் சிலை வைக்கப்பட்டிருக்கிறதென இஸ்லாமிய அமைப்புகள் போராடினால் சொன்னால் ஏற்பார்களா.. .. முதலில் கலாமிடம் பின்பற்ற வேண்டியது மதம் சார்ந்த விடயங்கள் அல்ல மாறாக அறிவியல் சார்ந்தும்.. கல்வி சமூக ஒற்றுமை அறிவின் தேடல் போன்றவையே தவிர மதமேறிய மூடபழக்கங்கள் அல்ல.. மதத்தை யார் பேசினாலும் அது வீணான விவாதித்திற்கும் முட்டாள்தனமான செயல்களுக்கும் கடைசியில் கலவரத்துக்குமே வழிவகுக்கும்.. அது தான் நடக்கிறது.. ஏற்கனவே நான் குறிப்பிட்ட போது கொதிந்தெழுந்த சிலர் கலாமை சிறுமைபடுத்துவதாக கூட சொன்னார்கள் அவர்களின் மாற்று சிந்தனையை கருத்தை உடன்படாவிடினும் மௌனமாய் கடந்தேன்.. கலாம் தேசத்தின் அடையாளமாக ஆக்க நினைத்தால் அவரின் விஞ்ஞானத்தை அறிவியலை கொண்டு அவர் நடத்திட்ட அறிவுசார் விடயங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கவேண்டுமே தவிர பகவத்கீதையையோ மதம் சார்ந்த அவரின் பொன்மொழிகளையோ ..?அல்ல.. .. முன்னாள் குடியரசு தலைவர் முகமது இதாயத்துல்லா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆனால் அவரின் மரணத்தின் போது அவரை எரிக்கவேண்டுமென அவரது குடும்பத்தார் கேட்டுக்கொண்டார்கள் அதன் படி அவரது உடன் தகனம் செய்யப்பட்டது..அவரது துணைவியார் பஷ்பா அவர்கள் இந்துமத கோட்பாட்டின் படி வாழ்ந்தார் என சொன்னார்.. ஆனால் கலாம் எப்படி வாழ்ந்தாரென தெரியாது அது அவரது சொந்த விடயம் ஆனால் இஸ்லாமிய சடங்குகளோடு புதைக்கப்பட்டார்.. இன்று அவரின் சிலை அருகே கலாம் குடும்பத்தார் குரானை கொண்டுவைத்தவர்களுக்கு சிலையே கூடாதென்பது தெரியாதா.. சிலை வைத்ததை எதிர்த்திருந்தால் இன்று கீதை அருகில் இருக்கிறதென சங்கோசப்படலாம்.. .. ஒரு விடயம் சிலை வைப்பது இஸ்லாத்திற்கு மட்டுமல்ல இவர்கள் கலாம் சிலை அருகே வைத்திருக்கும் கீதைக்கு எதிரானது. கீதையில் 7:20 ல் // எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்.. .. கடைசியாக கலாமை அறிவியலோடு பாருங்கள் சமயநெறிகளோடோ சடங்குகளோடோ மூடபழக்கவழக்கத்தோடோ அல்ல .. தோழர். ஆலஞ்சி

திருக்குறள்

திருக்குறளை முழுவதுமாக பகுத்தறிவு நூலென சொல்லமுடியாது .. கிருஷ்ணசாமி.. ஏன் சொல்லணும் .. எல்லா மனிதருக்குமான நூல் .. வேதங்கள் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களுக்கு அதாவது தன்னை நம்புகிறவனுக்கு வழிகாட்டும் என சொல்கிறது .. அது கூட குறிப்பிட்ட பிரிவினரை முதன்மைபடுத்தும்.. ஒரு சிலரை மட்டுமே மேன்மையானவர்களாக படைத்திருப்பதாக சொல்லும்.. .. ஆனால் குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்... என சொல்லும்.. இவ்வளவு தான் வித்தியாசம்..திருக்குறள் காலம் கடந்தும் நெறி பேசுகிற நூல்.. வாழ்வியலின் எல்லா அம்சங்களையும் அலசுகிற ஆய்வு செய்கிற நூல்.. அவ்வளவுதான் பகுத்தறிவை பேசாதவர்களுக்கும் புரிதலை தந்து பேசவைக்கும்.. .. திருக்குறளைப் பற்றி அறிஞர் அண்ணா #திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டும். திராவிடன் கையில் குறள் இருப்பதை, பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனீயம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும் , மூட நம்பிக்கைகளையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடுவார்கள் ..என்றார் .. திருக்குறளை சிலர் இறைவனின் தூதர் அருளியதென்றெல்லாம் சொன்னார்கள் காரணம் நிறைய தூதர்கள் வந்திருக்கிறார்கள் ஏன் இறைத்தூதராக இருக்ககூடாதென வினாக்கள் எழுந்து அது சபைகளில் விவாதிக்கப்பட்டதுண்டு புலால் உண்ணாமை கூட அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இறைவனின் சட்டமாக இருந்திருக்கலாமென்றல்லாம் சொன்னார்கள்.. திருக்குறளை விளக்கமெழுதியவர்கள் பெருந்தகைகள்.. மு.வ. பரிமேலழகர் போன்றோர் மதத்தோடு இணைத்தும் கலைஞர் பகுத்தறிவோடு ஆய்ந்து சொன்னார்கள்.. .. இறுதியாக ஒன்று.. திருக்குறள் பகுத்தறிவு பேசுகிறதா என்பதைவிட பகுத்தாய படவேண்டிய நூல்.. அனைவருக்குமான அற்புதமான வாழ்வியலை போதிக்கும் மறை.. .. தோழர். ஆலஞ்சி

Saturday, July 29, 2017

கலைஞர் தமிழகம் செய்த தவம்

#முத்தமிழ்_அறிஞர்.. .. ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக தொடர்ந்து 49 ஆண்டுகள் இந்தியாவில் உலகில் எங்குமே நடந்திராத அற்புதம்.. ஒரு அரசியல் கட்சியை/இயக்கத்தை கட்டிகாப்பதென்பது அதிலும் கட்டுகோப்பாக நடத்துவதென்பது எல்லோராலும் முடியாது .. எத்தனை விமர்சனங்கள் கூட இருந்தே குழிப்பறித்தவர்கள்.. நம்பி கழுத்தறுத்தவர்கள் முதுகில் குத்தியவர்கள் ..தொடர் தோல்விகள்..அத்தனையையும் தன் அசாத்திய திறமையால் மாறி கடந்து திமுக எனும் கட்சியை இன்றும் மிகப்பெரிய கட்சியாக இயக்கி வருகிற பெருமகன் கலைஞர்.. .. 1980 களில் மாணவனாய் திராவிட இயக்கத்தின் மீதான காதல் வர தொடங்கிய நாள் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.. தஞ்சை நடராசனின் வெற்றிக்கான பிரச்சாரத்திற்காக திலகர் திடலில் பொதுக்கூட்டம்.. நேரமாகி் கொண்டே இருக்கிறது.. நள்ளிரவை தாண்டி மக்கள் காத்திருக்கிறார்கள்.. அந்த மக்களோடு மக்களாக அமர்ந்திருக்கிறேன் நித்திரை கண்களை தழுவுகிறது.. இதோ வந்துவிடுவாரென சொல்லி சொல்லி கடைசியாக விடிய சிலமணிநேரமே இருக்கிற வேளையில்.. முகில் கிழித்து வரும் முழுமதிப்போல .. கூட்டத்தை கிழித்துக்கொண்டு வருகிறது தமிழ்.. வானம் அதிர முழக்கம்.. கலைஞர் வாழ்க ..வாழ்க.. முதன் முதலாய் சங்கத்தமிழை பார்க்கிறேன்.. கரகரக்குரலில் பேச தொடங்கியதும் ஆர்ப்பரித்த கூட்டம் அமைதியாய் செவிமடுக்கிறது.. அன்று தொடங்கி இந்த பெருமகனை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன் .. திகட்டதாக சுவையாக.. .. என்பதாண்டு பொதுவாழ்வில் .. ஐம்பதாண்டுகள் தன்னை சுற்றி.. தன்னை மட்டுமே சுற்றி அரசியலை சுழல செய்த ஆளுமை இதுவரை தேசம் கண்டிராதது.. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் செய்தி தரும் கருத்து கரூவூலம்.. இங்கே கலைஞரை எதிர்த்தோ ஆதரித்தோ தான் அரசியல் செய்யமுடியும்.. இல்லையெனில் யாரென்று தெரியாமல் போவார்கள்.. என்ன அதிசயம்.. இங்கே எதிரிகளுக்கு சேர்த்தே இவர் உழைக்கிறவர்.. இவர் அசைவில் தான் தமிழகமே இயங்கியது இயங்குகிறது.... இவர் சிந்தித்ததை தான் தமிழக அரசியல் கட்சிகள் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டது.. இங்கே எல்லோருக்கும் அரசியல்வாழ்வு தந்தவர்.. .. இதோ இப்போது உடல்நலிவுற்று.. பேச்சாமல் இருந்தும்.. அபார நினைவாற்றலால் தமிழக அரசியலை ஆட்சி செய்தவர் முதுமையால் நினைவாற்றல் தடுமாறுகிற போதும்.. இப்போதும் கூட கலைஞரை பேசினால் தான் சிலருக்கு அரசியல் பிழைப்பே நடக்கிறது... தமிழகத்தின் அரசியல் வரலாற்றை கலைஞர் பெருமகனாரை நிராகரித்தோ மறுத்தோ எழுதிட முடியாது.. தமிழக அரசியல் என்றால் அது கலைஞர் தான் கலைஞர் மட்டும் தான்.. .. #கலைஞர்_தமிழகம்_செய்த_தவம்… .. #அரைநூற்றாண்டு_அரசியல்_அதிசயம் .. தோழர். ஆலஞ்சி

Friday, July 28, 2017

கலாம் ஆர்எஸ்எஸ் அடையாளம்

அப்துல்கலாம்.. அரசியல்.. சிலர் அப்துல் கலாம் நினைவு மணிடபத்திற்கு தமிழகமே திரண்டிருக்கவேண்டாமா என கேட்கிறார்கள்.. கலாமோடு நமக்கு நிறைய கருத்துவேறுபாடு உண்டென்றாலும் கலந்துக்கொண்டிருக்கவேண்டுமென சொல்கிறார்கள் .. .. கலாம் மிகவும் ஏழ்மையான மீனவ இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து தன் திறமையால் இந்தியாவின் உயரிய பதவிகளை வகித்தவர் மாணவ சமுதாயத்தை கனவு காண சொன்னவர்.. இந்திய ஏவுகனைகளின் தந்தை என்பதில் எல்லாம் விமர்சனமோ மாற்று கருத்தோ இல்லை. ஆனால் அவர் பெரியளவில் காவிகள் மற்றும் ஒருசிலரை தவிர மற்றவர்களால் கொண்டாடபடவில்லையே.. எல்லோருமே மௌனமாய் கடந்து போகிறார்களே ஏன்.. அவர் பிறந்த சமுதாயமே அவரை கொண்டாடவில்லையே.. சாதாரணமாக உயரத்திற்கு வரும் வரை எவரையுமே கண்டுக்கொள்ளாத அவர்களின் சமூகம் .. உயரத்தை எத்தியவுடன் கொண்டாடுமே அது கூட கலாம் விடயத்தில் நடக்கவில்லையே ஏன்..? .. எந்தவொரு மனிதனும் தான் நம்புகிற கோட்பாட்டில் (கொள்கையில் அல்ல) நம்பிக்கையாளனாக இருக்கவேண்டும்.. அது எந்த கடவுள்,மதம் பிரிவு ஜாதி அல்லது கடவுள் மறுப்பு எதுவாக இருந்தாலும் அந்த கொள்கையில் உறுதியும் அதோடு அதன் கோட்பாட்டில் தடம்பிறழாமலும் இருக்கவேண்டும் ஆனால் இவர் இஸ்லாமிய மத கோட்பாடுகளை விட இந்துத்துவ கோட்பாடுகளை நேசித்தார் அதில் தவறில்லை ஆனால் அதை நேர்மையோடு பின்பற்றி இருக்கவேண்டும்.. அது இல்லாததால்தான் முஸ்லிம்கள் அவரை சக முஸ்லிமாகவே பார்க்கவில்லை.. அதிலும் சில அமைப்புகள் மிக கடுமையாக கூட விமர்சித்தன .. .. அவரது அரசியல் பார்வை அப்பட்டமான அடிபணிதல் அல்லது ஆர்எஸ்எஸ் சொல்படி ஆடும் இந்திரன் அவ்வளவுதான்.. குஜராத் இனபடுகொலையை அதை யார் செய்திருந்தாலும் கலவரத்திற்கு காரணம் முஸ்லிம்களே என்று நம்பியிருந்தாலும் கூட குடியரசுத்தலைவராக இருந்தவர் அதை கண்டித்திருக்கவேண்டும்.. ஆர்எஸ்எஸ் கூடாரத்திலேயே வளர்ந்து வந்த வாஜ்பாய் கூட மோடியை பார்த்து #அரசதர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கள் என சொன்னார்.. குஜராத்தின் கசாப்கடைகாரனென ஊடகங்களில் சில விமர்சித்தன ஆனால் கலாம் மௌனம் காத்தது எந்த வகை நியாயம்.. பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால் அன்றைய அரசை கலைக்க வலியுறுத்தியிருக்க வேண்டும் . ஆர்எஸ்எஸ் சித்தாந்த்தை சுமந்து திரிந்தவராக தான் தெரிந்தார் அதிக சுமையை சுமக்கும் என அறிந்ததால் தான் அவரை குடியரசு தலைவராக கூட ஆக்கி அழகுபார்த்தது.. .. கலாம் நினைவு மண்டப திறப்புவிழா அன்று நீட் தேர்வுக்கான மனிதசங்கலியை நடத்தி விழாவை கொண்டாடாமல் தடுத்ததென்கிறார்கள்.. முதலில் அவர் கொண்டாட படவேண்டியவரா என்பதிலேயே வேறொரு பார்வை இருக்கிறது மற்றொன்று கனவு கண்டுக்கொண்டிருந்த மாணவர்களின் எதிர்காலம் களவாடப்பட்டதை கலாம் நினைவு நாளில் எதிர்பது கூட அவருக்கு செய்கிற அஞ்சலிதான்.. ஆர்எஸ்எஸ்காரனின் கைபாவைக்கு பகவத்கீதையோடு வீணை சிலை மிக பொருத்தம்.. வாழ்ந்த போது அவர் தூக்கிபிடித்த ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மறைந்தும் சிலையாய் செய்கிறார்.. அவ்வளவுதான்.. .. #கலாம் இஸ்லாமியர்களின் தமிழர்களின் அடையாளமல்ல.. #ஆர்எஸ்எஸின்_அடையாளம்.. .. தோழர். ஆலஞ்சி

Thursday, July 27, 2017

நிதிஷ் துரோகியாய்

நிதிஷ்.. அரசியலில் துரோகங்கள் அரியணைக்காக நடப்பதென்பது மன்னர் காலத்திலிருந்தே கண்டும் கேட்டும் வந்ததுதான்.. ஐந்துமணிக்கு விலகலும் 10 மணிக்கு யாரை வேண்டாமென வைத்து ஆட்சியை பிடித்தாரோ அவர்கள் ஆதரவு தருவதாக சொல்வதும்.. அவர்களோடு இணைந்து ஆட்சி அமைப்பது வெட்ககேடும் மரபு மீறிய செயலாகும்.. .. அரசின் தலைவர் பதவி விலகுகிறார் முறைப்படி விலகல் கடிதம் அளிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டிருகிகுறது மீண்டும் அவரே முதல்வராக வருவது எதில் சேர்த்தி.. இங்கே பன்னீர் ராஜினாமா செய்தவுடன் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கேட்டபோது மறுத்தவர்கள் மற்றொரு பிரிவிற்கு வாய்ப்பை தந்தவர்கள்.. லல்லுவிற்கு வாய்ப்பை தந்திருக்கவேண்டும்.. தனி பெரும் கட்சியான RJD ராஷ்ட்ரீய ஜனதாதளத்திற்கு வாய்ப்பை வழங்கியிருக்கவேண்டும்.. லாலுவால் பெரும்பான்மை நிரூபிக்கமுடியாமல் தேர்தல் நடத்துவது தானே சிறந்த ஜனநாயக முறை .. மக்கள் வாக்களித்து நிதிஷ் தான் வேண்டுமென தீர்மானித்தால் வரட்டும்.. ஆனால் பாஜக எங்கெல்லாம் செல்வாக்கில்லையோ அங்கெல்லாம் புறவாசல் வழியாக ஆட்சி செய்ய பார்க்கிறது அவர்களின் #புறவாசல் பழக்கம் அரசியலிலும் கடைப்பிடிக்கிறார்கள்.. .. கூட்டணி தர்மத்திற்காக இதுவரை அமைதி காத்ததாக சொல்கிறார் நிதிஷ் .. கூட்டணிகளோடு கலந்துதான் எல்லா முடிவையும் எடுத்தாரா.. பண மதிப்பில் தொடங்கி குடியரசுத்தலைவர் தேர்தல் வரை கூட்டணி தர்மத்தை மீறியவர் ‍... உண்மையில் லல்லுவும் காங்கிரஸும் தான் அமைதி காத்ததே தவிர நிதிஷ் தர்மத்தை மீறியதோடு அல்லாமல் யாரை பிரதமராக ஏற்க முடியாதென மோடிக்கெதிராக லாலுவோடு கூட்டணி அமைத்தாரோ அந்த பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவை தந்து அரசியல் அயோக்கியத்தனத்தை செய்தவர்.. காவிகளோடு சேர்வதை பற்றி கவலை இல்லை அதை நேர்மையான முறையில் செய்திருக்கவேண்டும்.. மாறாக புற முதுகில் குத்தும் ராம வம்சத்தோடு இணைந்து தாக்கியது வெட்ககேடானது.. .. ஊழலுக்கெதிராக செயல்படும் நிதிஷ்க்கு வாழ்த்துகளை மோடி சொல்லியிருக்கிறார்.. ஊழல் குற்றசாட்டில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவோடு விருந்துண்ட ஜெட்லியை பதவி நீக்கம் செய்துவிட்டு பேசியிருக்கலாம்..இதற்கெல்லாம் காரணமான தான் பிரதமராக இருப்பது அவமானமென உணர்ந்து.. ராஜினாமா செய்துவிட்டு ஊழலுக்கெதிரான போரில் பங்குபெறலாம்.. .. பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர் நேர்மையைப்பற்றி பேசுவது வேடிக்கை.. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் கூட கலந்தாலோசிக்கவில்லை என்பதும் .. கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்துகேட்காமல் ராஜினாமா செய்தது சலசப்பை உண்டாக்கியிருக்கிறது.. இரவுக்குள் தெரியும்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடக்குமென்று.. ஒருவேளை வெற்றி பெறலாம்.. ஆனால் மக்களின் நம்பிக்கையை இழந்தாயிற்று.. நிதிஷின் துரோக வரலாறு காலம் கடந்தும் பேசப்படும்.. .. #நிதிஷின்_எதிர்காலம்_இனி_இறக்கத்தில்.. .. தோழர். ஆலஞ்சி

Wednesday, July 26, 2017

அதிமுக..இயக்கமல்ல

அதிமுக... கரைகிறது.. எந்தவொரு லட்சியமும் இல்லாமல் தொடங்கப்பட்ட அதிமுக தனிநபரின் செல்வாக்கு விருப்பம் செயலை நம்பி ஆரம்பம் முதலே செயல்பட்டதால் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்காமல் .. கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத ஏதோச்சிய அதிகாரத்தோடு மக்களின் அபிலாசைகளை முதலாக்கி நடந்த கட்சி.. அந்தியில் பூசப்பட்ட அரிதாரம் நேரம் வெளுக்கும் போது கலைய தொடங்குமே அது போல .. கலகலத்துப்போய் உதிர தொடங்கியிருக்கிறது.. .. ஜெயலலிதா எனும் அடாவடித்தனத்தை ஆளுமை என நம்பி சென்றவர்கள் கட்டுபட்டு நின்றவர்கள் சுயமாய் சிந்திக்க தெரியாதவர்களாய் இருக்கிறவரை தூற்றிக்கொள் என்ற உலக நடப்பில் ஆசை கொண்டு அலந்து திரிந்ததால்.. கடைசியில் கண்டவனும் மிரட்டுகிற நிலை.. கண்டவன் காலில் விழுந்து கிடக்கிற அவலம்.. சுயமரியாதை இயக்கத்தின் நிழலில் நின்று வளர்ந்தவர்கள்.. சுயம் அறியாமல் அழிந்து போகிறார்கள்.. காரணம் அரசியல் இயக்கம் மக்களின் நலன் சார்ந்ததாக தொடரவேண்டுமே தவிர தனிநபர் புகழ்பாடுவதை குறிக்கோளாய் கொண்டால் இடிந்து விழவேண்டியதுதான் .. .. அதிமுகவை சிதைதத்தில் பெரும் பங்கு பன்னீருக்கே உரித்தது பாஜகவை நம்பி நடாற்றில் இறங்கினார்.. ஆனால் மண்குதிரை என அறியாமல் கடைசியில் சுயமிழந்து.. பாஜகவோடே ஐக்கியமாகலாமா என யோசிக்கிற இழிநிலைக்கு ஆளாகியிருக்கிறார்.. எடப்பாடியோ சொல்லவே தேவையில்லை தளபதி சொன்னதைப்போல தமிழர்களுக்கெதிரான நிலையை பாஜக எடுக்கிறபோது எள் என்றால் எண்ணாய் வழிகிறார் மத்திய அரசிற்கு அது எதை செய்தாலும் ஆமாம்சாமி சரி சாமி போடுகிறார்.. கட்சியின் கொள்கையென்ன தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிரானதாக இருக்கிறதா என்று கூட பார்க்காமல் தலையாட்டி.. செய்றேன் சாமி போட்டு ஒட்டுமொத்தமாக செயலிழந்து மானம் மரியாதை எல்லாம் கலைந்து.. மாதொரு பாகனாய் நிற்கிறார்.. கொஞ்சமும் கட்சியை பற்றியோ தமிழகத்தில் கட்சியின் நிலைப்பற்றியோ கவலை ஏதுமில்லை.. இனி வாய்க்காது என அறிந்து எதைப்பற்றுயும் கவலைபடாமல் மானம் மரியாதை எல்லாம் எமக்கில்லை என்று இருக்கிறவரை ஜொலிப்போம் .. என்று எண்ணி செயல்படுகிறார்.. .. நிறுவனர் எம்ஜிஆரும் அதை தொடர்ந்து ஜெயலலிதாவும் சசிகலாவும் சுயநலம் மட்டுமே சிந்தித்ததால் அதிமுக எனும் கட்சி அகலபாதாளத்தில் விழுந்துகிடக்கிறது.. அரசியல் கட்சிகள் தனிநபரை மட்டுமே நம்புமாயின் இதுதான் நிலை.. ஆளுமைகளை கண்டெத்தாததும்.. கொஞ்சமேனும் ஜனநாயக நெறிமுறைகளை கடைப்பிடிக்காததும்.. அதிமுக எனும் கவர்ச்சியை மூலதனமாக கொண்ட கட்சி கரைகிறது.. அதிமுக கட்சி இயக்கம் அல்ல .. AIADMK is not a movement .. தோழர். ஆலஞ்சி

Tuesday, July 25, 2017

கோபால கிருஷ்ண காந்தி

கோபால கிருஷ்ணன் காந்தி.. குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்பட்டிருக்கிறார் மெத்த படித்தவர் .. மென்மையான போக்கை கொண்டவர் நாகரீக கோமாளிகளை போல அல்லாமல் நவீன சிந்தனையாளராக நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் பற்றுக்கொண்ட முற்போக்கு சிந்தனையாளர்.. .. காந்தியின் பெயரன் என்பதாலோ அல்லது திருமதி லட்சுமி (ராஜாஜிமகள்) மகன் என்பதாலோ அவரை ஆதரிக்க சொல்லவில்லை.. திரு.வெங்கய்யா நாயுடுவைப்போல மதமேறிய சிந்தனை இல்லாதவர் என்பது அவரை தேர்வு செய்யவேண்டும் .. என்ன செய்வது செல்லாத ஓட்டை போட கூடியவர்களை வைத்துக்கொண்டு நேர்மையான ஜனநாயகம் பேசுவது கொஞ்சம் வேடிக்கையாக தானிருக்கும்.. .. திருமதி லட்சுமி தேவதாஸ்.. மத நம்பிக்கையில் ஊறி திளைத்த ராஜாஜி தன் மகளுக்கு பால்ய விவாகம் செய்துவைத்தார் சிறுவன் சில மாதங்களிலேயே இறந்து போக மொட்டையடித்து வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டார்.. இதை கண்ட எங்கள் பேராசான் பெரியார் தான் காந்தியிடம் பேசி.. ராஜாஜியிடமும் பேசி மணம் முடித்து வைத்தார்.. அப்போதெல்லாம் விதவை திருமணத்திற்கு எவ்வளவு எதிர்ப்பிருக்கும்.. இந்த சம்பவத்திற்கு பிறகு காஞ்சி பெரியவர் சரஸ்வதி சுவாமிகள் ராஜாஜியை பார்க்க கூட அனுமதி தரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. அன்று பெரியாரின் பெரும் முயற்சியில் நடந்த திருமணம் அது.. அந்த தம்பதியரின் மகன்தான் கோபால கிருஷ்ணன் காந்தி.. .. இது அவரின் தகுதியல்ல என்றாலும் ஆச்சாரியமான குடும்பத்தில் நடந்த சீர்திருத்த திருமணம் .. லட்சுமி தேவதாஸ் இருவருமே பெரியாரிய கருத்துக்களோடு நிறைய உடன்பட்டவர்கள் முற்போக்கான எண்ணங்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களின் மகன் நிச்சயமாக நல்ல தலைவராக நாடு நம்பும் நல்லவராக இருப்பார்.. .. இன்றைய நிலையில் நல்ல வேட்பாளர் திரு.கோபால கிருஷ்ண காந்தி.. .. #வேறொன்றும்_சொல்வதற்கில்லை… .. தோழர். ஆலஞ்சி

ஐந்தாம் வகுப்பில் பொது தேர்வு

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு மத்திய அரசு .. மேலோட்டமாக பார்த்தால் தேர்வு என்பது சரியென்பதுபோல தோன்றும்.. ஆனால் மிக சாதூர்யமாக வடிகட்டுதல் என்ற பெயரில் ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களை அவர்களின் அப்பன் தொழிலை நோக்கி தள்ளுகிற ராஜாஜியின் குலக்கல்விதிட்டம் இது.. தேர்வை என்பதே கூடாதென விவாதிக்கிற கல்வியாளர்கள் மத்தியில் இது குறித்து மௌனம் மிகவும் ஆபத்தானது.. .. எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்கிற நிலை மாணவர்கள் சுயமாய் சிந்திக்கிற பருவத்தில் தேர்வை நோக்கி நகர்த்தவேண்டுமென்ற சரியான பார்வை .. காரணம் படித்ததை வாந்தியெடுக்கும் பயிற்சியிலிருந்து புரிந்து படிக்கும் கற்றலை நோக்கி மாணவ சமுதாயத்தை கொண்டுவரவேண்டுமென்பதே ..சரியென செயல்பட்டதும் பிற மாநிலங்களை விட கல்விதரம் தமிழகத்தில் உயர்ந்திருப்பதும் தெரிந்ததே.. .. ஐந்தாம் வகுப்பு என்பது 10 வயதை கடக்காத சிறுவர்கள் மீது மன அழுத்தத்தை தந்து ஆசிரியர்களை கோச்சிங் சென்டர்களை உருவாக்கி அல்லது தனியாக பயிற்சியென்ற பெயரில் காசுபார்க்கவைக்கும் திட்டமாகதான் போகும்.. மாணவர்கள் படிப்பின் மீதான ஆர்வத்தை குறைக்கும் என்பதைவிட ஒருவித பயத்தை இளம்பிராயத்திலேயே கொண்டுவருவது வளரும் செடிக்கு வெந்நீர் ஊற்றுவதைப்போல.. .. திமுக ஆட்சியில் கலைஞரும் தங்கமும் சமச்சீர் கல்வியை கொண்டுவந்த போதே பொறுமியவர்கள் .. எட்டாவது வரை தேர்ச்சி என்பது சிறுவர்களை அடுத்த படித்தளத்திற்கு மகிழ்ச்சியோடு அழைத்துச்செல்லும் விடயம்.. சிறுவர்களுக்கு கல்வி கட்டாயமாக்கவேண்டும் என பேசபடும் சூழலில் வடிகட்ட நினைக்கும் செயல் அயோக்கியத்தனமானது.. ஐந்தாம் எட்டாவதில் தோல்வி என்ற நிலைவந்தால் .. மேற்கொண்டு படிக்கவைக்க மறுக்கிற பெற்றோர்களும்.. வேலைக்கு அனுப்பலாம் என தீர்மானிக்கிற ஏழைகுடும்பங்களும்..கூலிவேலைக்கு அனுப்புகிற கொடுமை அதிகளவில் நிகழும்.. பள்ளி படிப்பிற்கு உத்ரவாதம் தரவேண்டிய அரசே.. பொதுதேர்வு எனும் பூச்சாண்டியை காட்டி .. குறிப்பாக ஏழைகளின் கல்வியை இல்லாதாக்க செயலை கைவிட வேண்டும்.. .. இன்னும் என்னவெல்லாம் குளறுபடிகளை செய்து ஒரு பிரிவினர் மட்டுமே (வசதியுள்ளவன் ஆதிக்கம் செலுத்துபவன்) கல்வியை பெறவேண்டும் என சொல்வார்கள் போல் இருக்கிறது.. 6000 பள்ளிகளை மூடிய ராஜாஜியின் அயோக்கிய செயலை.. மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டுவந்து கல்வியை எட்டாக்கனியாக்க நினைக்கிறார்கள்.. கல்விக்காக குழந்தைகள் படிக்கவைக்கவேண்டுமென்பதற்காக காமராஜர் சத்துணவை கொண்டுவந்து ஏழைகளுக்கும் கல்வி தந்தார்..அப்போது விவசாயிகளிடத்தில் முதல் மரைக்கால் சாமிக்கும்,இரண்டாவது மரைக்கால் ஊர்கோவிலுக்கும் தருகிறீர் மூன்றாவது மரைக்காலை எனக்கு தாருங்கள் நான் சோறு போட்டு படிக்கவைக்கிறேன் என்றார்.. அந்த பெருமகன்.. எல்லாருக்கும் சமமான கல்வி வேண்டும் பணக்காரன் ஏழை என்றில்லாமல் அனைவருக்கும் சமச்சீராக கல்விவேண்டுமென எங்கள் தங்கத்திடம் சொல்லி #சமச்சீர்கல்வியை கொண்டுவந்தார் கலைஞர் பெருமகன்.. .. இதோ இப்போது குழந்தைகளை கூட வடிக்கட்ட நினைக்கும் பாசிச போக்கை நடப்பிலாக்க நினைக்கிறார்கள்.. அனைவரும் ஒத்தகுரலில் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.. .. #விரட்டப்படவேண்டியவர்கள்_தூக்கியெறிவோம் .. தோழர். ஆலஞ்சி

Monday, July 24, 2017

சசிகலா எங்கே..

சிறைக்குள் சசிகலா.. சிறையில் சசிகலா படு சௌகரியமாக வாழ்கிறார் வெளியே போய் வருகிறார் என்ற குற்றசாட்டும் அதன் பின்னணியில் பணம் பெருமளவு கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பதும் மெல்ல வெளிவந்து சமூக வலைதளங்களில் ஊடகங்களில் பெரிய விடயமாக பேசபடுகிறது..கமலில் பிக்பாஸில் கூட 5ஸ்டார் ஜெயலில் இதென சொல்லிய போது வெளியே இதைவிட பைவ் ஸ்டார் ஜெயிலெல்லாம் இருக்கிறதென சாடியதும் பரப்பரப்பாக பேசபடுகிறது.. .. கையூட்டு வாங்கியவரையோ கொடுத்தவரையோ இதுவரை விசாரணைக்கவில்லை கையூட்டு பெறவில்லையென சத்யநாராயணன் சொல்லியிருக்கிறார் அதைவிடுங்கள் இந்திய சிறைச்சாலைகள் நியாயமானதாக இருக்கிறதா சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா.. விசாரணைகைதிகள் என்ற பெயரில் காசில்லாதவன் நீண்டகாலம் சிறையில் கழிக்கவேண்டியிருக்கிறது.. ஆனால் பணமிருந்தால் வெளியில் கூட போய்வரலாம் அதிகாரியே அதற்கு துணைநிற்பார்.. இங்கே 10 நாட்கள் ப்ரோலில் சென்றுவர முடியவில்லை.. ஆனால் வலுத்தவன் ஷாப்பிங் சென்று வரலாம்.. இதுதானே இந்திய நீதி சிறைத்துறையின் லட்சணம்.. .. சரி இன்றைக்கு ஏதோ சசிகலாவிற்காக சட்டம் வளைந்ததாக கூக்குரல் இடுவோர் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரன் எனும் சுப்ரமணியனை சிறையில் அடைத்த போது பீ பேல கூட வாழையிலை தந்தது எந்த சட்டத்தின் அடிப்படையில் .. ஏறக்குறைய இதே போல் கொலை வழக்கில் கைதான முத்துராமலிங்க தேவரை பேண்ட பீயை அள்ள சொன்னார்களே அதேபோல சங்கரராமன் புகழ் சுப்ரமணியனை அள்ள சொல்லவில்லையே.. பாப்பானுக்கு ஜெயந்திரர் ஜகத்குரு என்றால் தேவர்இனத்திற்கு ..முத்துராமலிங்கம் குருதானே.. தெய்வப்பிறவியாகதானே நினைக்கிறார்கள்.. ஜெயேந்திரருக்காக உயர்நீதிமன்றமே ஜாமீன் வழக்கை கீழமை நீதிமன்றங்களிலோ அல்லது வழக்கை நடத்தும் நீதுமன்றத்திலோ விசாரிக்காமல் நேரடியாக உடனே விசாரித்தது விதிமுறைகளை மரபுகளை மீறிய செயல் இல்லையா.. மற்றவர்கள் வழக்காக இருந்தால் Trial court விசாரணை நீதிமன்றத்தை நாட சொல்வது என்ன நியாயம்.. .. சசிகலா என்றில்லை.. யாரெல்லாம் விதிமுறைகளை மீறுகிறார்களோ அவர்களெல்லாம் தண்டிக்கப்படவேண்டும் விதியை தளர்த்திய சட்டமும் அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.. ஆனால் எல்லோரையும் ஒருபோல பார்க்கவேண்டுமே தவிர சசிகலாவை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதும் மற்றவர்களுக்கு விதிகளில் தளர்வை கொண்டுவந்து கொண்டாடுவதும் சரியா..? .. இங்கே நீதி.. யாருக்கானது.. #வலுத்தவனுக்கானதே_நீதி.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, July 23, 2017

இனம்காண்போம்

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சீட் கிடைக்காவிட்டால் என்ன cbsc ல் படித்த மாணவர்கள் சீனாவிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ, பங்களா தேசத்திலிருந்தோ வரவில்லையே.. அவர்களும் தமிழக மாணவர்கள்தான் என்கிறார் கிருஷ்ணசாமி.. மாநில பாடத்தில் படித்தவன் யார்.. பாகிஸ்தான்காரனோ சைனாகாரனோ அல்ல.. #தமிழ்க்குடிப்பிள்ளைகள்.. இந்த மண்ணில் குழந்தைகள் அவர்களுக்கு அநீதி இழைக்கபடுவதை எதிர்காவிடினும் ஆதரிக்கிற அயோக்கத்தனத்திற்கு பெயர் துரோகம் கிருஷ்ணசாமி..பச்சைதுரோகம்.. .. மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் யாரென்று கூட தெரியாதவர் என நம்புவோம் cbsc ல் தமிழக மாணவர்கள் மட்டுமல்ல பிறமொழி பேசும் படிக்கிறார்கள் அவர்களுக்குரிய இடங்களில் நாம் கேட்கவில்லை மாறாக தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நமது குழந்தைகளின் உரிமையில் கை வைப்பதைதான் கேட்கிறோம்..1264 இடங்களில் 83 பேர் தான் சேர்ந்திருக்கிறார்கள் மீத இடங்களை நீட் தேர்வென்ற பெயரில் எடுத்துக்கொண்டார்கள் இதெல்லாம் இடஒதுக்கீட்டில் படித்த கிருஷ்ணசாமிக்கு புரியாமல் இல்லை என்ன செய்வது எதற்கு பயன்படாத அடிமாட்டை சொற்ப விலைக்கு வாங்குவதை போல விலைக்கு வாங்கபட்டிருக்கிறார்.. .. என்னதான் குளித்து சந்தனம் பூசி நின்றாலும் நாலு அடி தள்ளிதான் நிற்கவைப்பான் என்கிற நிலையிலும் இப்படி பேச வைத்திருக்கிறது பாருங்கள் அதில்தான் பார்பனத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது .. தன் சமுகத்திற்குமட்டும் ( பள்ளர்,வாய்காரர்,காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி,தேவேந்திரக் குலத்தான் ) துரோகம் இழைக்கவில்லை மாறாக ஒட்டுமொத்த தமிழனத்திற்கே துரோகம் இழைக்கிறார்.. சென்ற ஆண்டு பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 67 பேர் மருத்துவத்திற்கு வந்ததாகவும் இந்த முறை ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பதாக கூறபடுகிறது.. இது தன் இனத்திற்கு அநீதி இல்லையா.. யாரெல்லாம் நீட் தேர்வை எழுத முடிகிறது பாருங்கள் நீட் தேர்வு பயிற்சிக்கென்று இரண்டு லட்சம் செலவு செய்ய தயாராக இருக்கிறவர்களோடு அரசுப்பள்ளி பயின்றவன் திறமையிருந்தும் செலவு செய்ய இயலாமையால் இடம் கிடைக்காமல் போகிறதே.. அது அவரின் வாய்ப்பை பறிப்பதற்கு சமமானதில்லையா.. தேசமெங்கும் ஒரே தேர்வு என சொல்லி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு வினாதாள்கள் .. சில மாநிலங்களில் கேள்விகள் எளிதாகவும் தமிழகத்திற்கு கடுமையானதாகவும் கேட்பதும் .. மாநில பாடத்தில் பயின்றவனுக்கு cbsc பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்பது எந்தவகை நியாயம்.. இதெல்லாம் அடிமாடாய் போன கிருஷ்ணசாமிக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை.. .. இப்போது தமிழினத்தின் மீதே பாய துவங்கியிருக்கிறார்.. இவர் சொம்பு தூக்குவதை விட நேரடியாகவே பாஜகவில் சேர்ந்துக்கொள்ளலாம் அப்படியிருந்தாலும் நிர்மலா சேகரின் அடிமையாகதான் வலம்வரமுடியுமே தவிர.. எதிர்த்து பேசவோ கருத்துச்சொல்லவோ முடியாது.. இன்னும் சில தினங்கள் போனால் பெரியாரை நேரடியாகவே தாக்கி பேசுவார் அதுதான் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணி அவ்வளவுதான் அதற்கு பிறகு தூக்கியெறியபடுவார் அப்போதும் நாம் தான் துணைநிற்கவேண்டிவரும்.. இவரை போன்ற இனதுரோகிகள் முதலில் விரட்டப்படவேண்டும்.. .. நீட் தேர்விற்கெதிராக திமுக மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகிறது.. யாருக்கோ என எண்ணாமல் தங்கள் பிள்ளைகளுக்காக பேரன் பெயர்த்திகளுக்காக சகோதரி சகோதரன்களுக்காக.. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க நினைக்கிற பழையபடி அப்பன் தொழிலையே மகன் மீது திணிக்க நினைக்கிற பாசிச கும்பலின் விசப்பற்களை பிடிங்க ..அணி திரள்வோம்.. .. நீட் தேர்வு ஆதரவாக பேசுகிற செயல்படுகிற கிருஷ்ணசாமி போன்றோரை.. இனம்கண்டு தூக்கியெறிவோம்.. #இனதுரோகிகளை_களையெடுப்போம்.. .. தோழர். ஆலஞ்சி

Saturday, July 22, 2017

நீட் குறித்து நிர்மலா..

தமிழக அரசின் நீட் மசோதா எங்கிருக்கிறதென்றே தெரியவில்லை நிர்மலா சீதாராமன்.. பன்றிக்கு பூணூல் போட்டு அதனால் ஆட்சி கலைந்தால் நாங்கள் பொறுப்பில்லை எஸ்.வி.சேகர்.. .. இப்போது சொல்லுங்கள் பூணூல் போராட்டம் சரிதானே.. கிராஸ் பெல்ட் செய்கிற காரியங்கள் ஆவணத்தை உள்ளடக்கியே இருப்பதால் அவர்கள் வழியில் போராட பேச வேண்டியிருக்கிறது.... நிர்மலாவின் பேச்சு அதிகாரமிருக்கிறதென்பதால் வந்ததல்ல.. தான் பாப்பாத்தி என்பதால் வந்தது. அந்த திமிரையை தான் கேள்வி கேட்கிறோம்.. அனுப்பப்பட்ட மசோதாவை காணோம் என்கிறீர்களே இதே செயலை திமுக ஆட்சியிலிருந்தால் செய்துவிட முடியுமா ..அல்லது ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி பேசிடதான் முடியுமா.. பாவங்கள் கையில் அதிகாரத்தை கொடுத்து ஆட்டுவிப்பதால் எதையும் செய்யலாம் பேசலாமென்கிற ஆணவத்தை திமிரை அடக்கவாயினும் இந்த ஆட்சி கலைக்கப்படவேண்டும்.. .. சேகர் என்ன மிரட்டுகிறாரா அல்லது அரசை இப்படிதான் செய்யவேண்டுமென ஆணையிடுகிறாரா இவருக்கு யார் இந்த அதிகாரத்தை தந்தது .. இவரது சகோதரின் துணைவியார் தலைமைசெயலராக இருந்தால் எதுவேணுமானாலும் பேசவாரா.. இவரெல்லாம் எங்கிருந்தார் இத்தனை காலம்.. இவரின் திமிரான பேச்சிற்காயினும் பன்றிக்கு பூணூல் போடலாம்.. இந்த போராட்ட அறிவிப்பை என்னை போன்ற சிலர் இப்போதைக்கு தேவையில்லையென எண்ணியதுண்டு.. ஆனால் தோழர்களின் முடிவும் திட்டமும் சரியாகதான் இருக்கிறதென பொதுமக்களைகூட எண்ண வைத்திருக்கிறது. .. .. இவர்களை விட மிகவும் ஆபத்தானவர்கள் பொன்.ராதா தமிழிசை போன்றோர்... நீட் கேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு தருவதில் எனக்கு உடன்பாடில்லை என்று முலைவரி கட்டிவளின் பேரன் பேசுகிறான் இவரைப்போன்ற கோடாறி காம்பிற்காவும்.. இந்த ஆட்சியை கலைக்கவேண்டியிருக்கிறது.. தமிழகம் இதுவரை இவ்வளவு அசிங்கங்களை சந்தித்ததில்லை விவரகேடுகளும் .. விலைபோனவர்களும் அரசியல் வேசித்தனமும் பயத்தால் காட்டிக்கொடுப்பவர்களும்.. அதிகார திமிரில் ஆட்டமாடுவோரும் சேர்ந்து நின்று சாமானியனின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள் .. .. கடைசியாய் நான் மதிக்கிற முற்போக்கு சிந்தனையுடைய பெண்மணி (பார்பனர்) உள்ளடப்பில் வந்து .. நாவடக்காமல் திமிரோடு திரிகிறவர்கள் வீழ்ந்தே போவார்கள் விரைந்து வீழ்த்துவது நம் கடமைஎன்றார்.. கூடவே பொன்னர் போன்ற குடும்பமில்லாதவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்வி குறித்து கவலை தெரிய வாய்ப்பில்லை என்றார்.. எத்தனை நிஜம்.. .. #விரைந்து_வீழ்த்தவேண்டியிருக்கிறது_அரசை.. .. தோழர். ஆலஞ்சி

Thursday, July 20, 2017

நீட் கமல்

வைதீக பிராமணனை விட முற்போக்கு பேசும் பிராமணன் தான் ரொம்பவும் ஆபத்தானவன் என்றார் எங்கள் பெருங்கிழவன் #பெரியார்... .. நீட் தேர்வு பற்றி திருவாளர் கமல் பேசும் போது பள்ளிபடிப்பே முடிக்காத எனக்கு அதன் தாக்கம் தெரியாது ஆனால் எனது இரண்டாவது மகள் டெங்கு காய்ச்சலில் அவதிப்பட்டபோது அதன் வலி எனக்கு தெரியும்.. .. கமலை தொடர்ந்து எதிர்த்து பேசிவரும் தோழர்கள் சொல்லும் வாசகம் அவர் போலியைானவர் நாத்திகம் பேசும் பெரியாரியராக தன்னை காட்டிக்கொள்ளும் போலித்தனம் நிறைந்தவர்.. சற்றென்று கடநிதுவிட முடியாது கொஞ்சம் குழப்பமாக பேசினால் அறிவாளி என நம்பும் சமூகம் இதையும் ஜீரணிக்கும்.. கமல் சிறந்த நடிகர் என்பதில் இரண்டாவது கருத்தில்லையோ அதைப்போல அவரின் அரசியல் பார்வை என்பது இரணடாங்கெட்டான் நிலையை கொண்டது அதனால் இதற்கு முந்தைய பதிவில் கமலின் அரசியலை பற்றி மேலோட்டமாக சொன்ன போது முற்போக்கு சிந்தனையாளரைப்போல சிறியளவில் பெரியாரியம் பேசுவது மட்டுமே தகுதியாக என்றால் இல்லையென சொன்னேன்.. .. கமல் எல்லாவற்றையும் பேசுவார் நாக்பூர் நடத்தும் நீட் தேர்வென்ற பெயரில் பழைய குலக்கல்வி நோக்கிய நகர்த்தலை பேசமாட்டார் தெரியாததென்பார்.. கமல் மிக தெளிவாக பாஜக அரசை விமர்சிக்காமல் பாவம் அதிமுக பினாமி அரசை தாக்குகிறார்.. நீட் பற்றி அது எந்தளவிற்கு தமிழக மாணர்வகளை குறிப்பாக தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் வாய்ப்பை பறித்திருக்கிறது குறிப்பாக அதன் பலன் குறிப்பிட்ட மேட்டுக்குடிகளை மட்டுமே மருத்துவத்தை பயல இலகுவாக்கியிருக்கிறதென்பது அறிந்தும் அறியாதவரைபோல காட்டிக்கொள்கிறார்.. படிக்காதவன் என தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் மெத்த அறிவாளிகளிடம் காணபடும் முற்போக்கு சிந்தனையுடையவரென நம்பவைக்கிறார்.. தமிழக மாணவர்களின் பிரச்சனையை கூட கவனிக்க தெரியாத அது குறித்து கவலைபடகூட மனமில்லாத இவர் தன்னை தாக்குகிறவனை மட்டுமே திருப்பி தாக்குவேன் ..பிறரை இம்சை செய்கிறவனை பற்றி எனக்கு என்னவந்தது என்ற மனநிலை உடையவராக காட்டிக்கொள்கிறார்.. .. மோடியை எதிர்க்கவேண்டுமென சொல்லவில்லை ரஜினியை போல வெளிப்படையாக ஆதரித்துவிட்டு போங்கள் அதில் கூட ஒரு நேர்மை இருக்கிறது.. ஆனால் மோடி அரசை விமர்சிக்காமல் நழுவும் செயல் வெட்ககேடானது கழுத்தறுப்பதற்கு ஒப்பானது.. கமலின் சகோதரர் சாருஹாசன் சொன்னதைப்போல கமல் பாப்பான் என்பதை திராவிட தமிழன் சாகும் வரை மறக்கமாட்டான்.. .. எங்கள் பெருங்கவிஞன் பாவேந்தர் சொல்வார் எப்பாப்பானாயினும் தமிழன் தலையை தடவப்பாப்பான்.. எவ்வளவு சரி.. .. #நல்ல_அபிநயம் .. தோழர். ஆலஞ்சி

உ.பி..பார்பானர்கள்...

Brahmins are as victimised as Dalits and Muslims in BJP’s Uttar Pradesh என்ற தலைப்பிட்டு அமிரிஷ் மிஸ்ரா எழுதிய கட்டுரை ஜனதா ரிப்போர்டரில் வந்துள்ளது.. உ.பி யில் பிராமணர்கள் வேட்டையாட படுகிறார்கள் இடைசாதிக்காரர்களால் என சேதி சொல்கிறது.. இதில் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை யோகி பதவியேற்ற பிறகு 30 பார்பனர்கள் கொல்லப்பட்டதாகவும் பார்பன சமூகம் ஒடுக்கப்படுவதாகவும் ஒப்பாரி வைக்கிறது.. நோக்கம் இதுதான் பாஜக பார்பனர் கட்சி என்ற மாயையிலிருந்து மீட்க செய்கிற உக்தியாக கூட இருக்கலாம் அல்லது இடைசாதிகாரர்களின் ஆதிக்கம் அதிகமாகி தூண்டி விட்டவனையே பதம்பார்த்து இருக்கலாம்.. கட்டுரையின் நம்பகதன்மையில் சந்தேகம் வருவதென்பதற்கு ராமர் கோவில் கட்டவேண்டுமென பார்பனர்கள் விரும்பியிருக்கலாம் ஆனால் பாபர் மஜ்ஸித் இடிக்கப்பட்டதை அவர்கள் விரும்பவில்லை என சொல்வதிலிருந்தே இந்த கட்டுரை ஆசிரியரின் நோக்கம் நமக்கு பிடிபடுகிறது.. இறுதியாக தலித்களும் பிராமணர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை கொண்டுவரமுடியுமென்கிறது.. .. பாஜக பார்ப்பனர் கட்டுபாட்டியிலிருந்து போய்விட்டதென நம்பவைக்கும் முயற்சியை யாரும் நம்ப தயாரில்லை.. பாஜக ஆட்சி என்பதே ஆர்எஸ்எஸின் சொல்படி நடக்கிறது என்பதை ஒவ்வொரு செயலும் நமக்கு நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பே பார்பனர்களுக்கானது என்கிற போது அவர்களின் மீறி எதுவும் நடந்திராது.. யோகி மீது வரும் விமர்சனங்களை கடக்க அது பார்ப்பனின் சொல்படி நடக்காத ஆட்சியென நம்பவைக்க முயற்சிக்கிறது இந்த கட்டுரை.. பொது சமூகத்தை திசை திருப்ப கையாளப்படும் முயற்சி என்ற விமர்சனத்தையும் தள்ளிய களையமுடியாது.. .. அதேவேளை... தொடர்ந்து பார்பனர்கள் தாக்கபடுவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லாமல் இல்லை.. தாக்கூர்களும் பனியாக்களும் அதிகார பகிர்வை ருசிக்க ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு போட்டியாக அல்லது இடைஞ்சலாக நிற்கும் பார்ரனர்களை கொல்ல துணிவதை நிறைய செய்திகள் சொல்லிவருகிறது.. எவ்வளவு காலம் தான் இடைசாதிகாரன் எடுபிடியாக எடுப்பார்கையில் இருப்பது திருப்பி தாக்க நினைக்கிற போது வலுவிழந்த கடைசாதியை குறிவைக்காமல் தன்னிலும் உயர்ந்தவனென சொல்லி திரிவோரை தாக்குவது அடித்தமர்த்த நினைப்பது இயல்புதானே அதுதான் நடக்கிறது.. உ.பி.யில் தலித் பிராமணர் முஸ்லிம்களோடு யாதவர்கள் கைகோர்க்க திட்டமிடுவதாக செய்தி சொல்வதை தள்ளிவிட முடியாது பார்பனர்களை இணைத்துக்கொள்வதென்பது கொள்ளிக்கட்டையோடு சவாரி செய்வதை போன்றது.. .. யாரையும் கீழ்மை படுத்திக்கொண்டே நீண்டநாள் இருக்கமுடியாதென்பதை தான் பார்பனர் தாக்கப்படுவது உணர்த்துகிறது.. இது தமிழகம் வரை வர நீண்டநாட்கள் தேவைபடாது ராசா சேகர் போன்றவர்களின் அத்துமீறல்கள் திருப்பி அடி என்ற நிலையை நோக்கி நகரலாம் வடமாநிலங்களில் தொடங்கியிருப்பது தெற்குநோக்கலாம்.. .. #இன்னும்வரும்_செய்தவினை .. தோழர். ஆலஞ்சி

வளர்மதி

கிளர்ச்சியை தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் செய்ததால் தோழர் வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது.. முதல்வர் எடப்பாடி ..மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது சரி.. மாணவர்களிடையே தீவிரவாதம் அதிகரித்துவிட்டது எச்.ராசா.. தமிழிசை.. .. முதலில் அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளில் ஒன்று அரசுக்கெதிராக போராடுவது போராட மக்களை ஒன்று திரட்டுவது.. இதுகூட தெரியாமல் முதல்வராக இருக்கிறவரின் அரசியல் அறிவைக்கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை.. தடைச்செய்யபட்ட இயக்கத்திற்கு ஆதரவாக கூட துண்டுபிரசுரங்கள் வீதிகளில் தொடர்முழக்கங்கள் பிரசாரங்கள் செய்யலாம் அது தண்டனைக்குரிய குற்றமில்லையென உச்சநீதிமன்றமே தமிழ் அமைப்புகள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரபாகரனின் படங்கள் பதாகைகள் ஆதரித்து துண்டுபிரசுரங்கள் வெளியிட்டதை எதிர்த்து ஈழத்தாய் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மேற்கூரிய தீர்ப்பை வழங்கியது.. அகெல்லாம் தெரிந்தும் பாஜகவின் சொல்படி ஆடும் அதிமுக அரசு தோழர் வளர்மதியை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறது.. .. வளர்மதி செய்த குற்றம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கெதிராக மக்களிடம் விழுப்புணர்ச்சியை ஏற்படுத்த சமூகவலைதளங்களையும்.. துண்டுபிரச்சரமும் தெருமுனை விளக்கமும் செய்தது .. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குற்றமென .. குற்றவாளி அரசு என தினம் தினம் சொல்லிக்கொள்ளும் அதிமுக அரசு நினைக்கிறது போலும்.. உண்மையில் வெட்கி தலைகுனிய வேண்டும் .. இப்போதுமட்டுமல்ல கிரிமினல் ஜெயலலிதா ஆட்சியின் போது கூட பலமுறை நீதிமன்றம் குட்டுவைத்திருக்கிறது..அதேதான் இந்த முறையும் நடக்கும்.. தோழர் வளர்மதி தீவிரவாதியாகவோ அல்லது இறையாண்மைக்கெதிராகவோ செயல்பட்டதாக அரசே சொல்லவில்லை மாறாக மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார் என்கிறது.. .. போராட தூண்டுவது குற்றமல்ல மக்களிடம் இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்து சொல்ல அரசு இந்த திட்டம் கைவிட வலியுறுத்தி போராட அழைப்பது சட்டப்படி குற்றமில்லை.. குற்றவாளி அம்மா அரசிற்கு இதெல்லாம் புரியாதா .. .. தோழர். ஆலஞ்சி

Wednesday, July 19, 2017

இளைஞர் அணி..

#ஜூலை20_1980 திமுக இளைஞர் அணி துவக்கப்பட்டநாள்.. மதுரையில் மிக பிரமாண்ட கூட்டம் தலைவர் கலைஞர் துவக்கிவைத்தார்.. அப்போது இளைஞர் அணி அமைப்பாளர்கள் என ஐந்து பேரை தேர்வு செய்து மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் திராவிட கொள்கைகளை எடுத்துச்செல்லவேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.. .. பாபநாச கிளை கழகம் சார்பில் சிலர் ஸ்டாலினை சந்திக்க சென்றார்கள் நானும் கூட பயணித்தேன்..திரு.வைகோ ஸ்டாலின் வந்து கொடியேற்ற வேண்டுமென்றால் கட்சிக்கு ₹1000 கொடுக்கவேண்டும் பொதுக்கூட்டமென்றால்₹5000 தரவேண்டுமென்றார்.. நந்தனத்தில் உள்ள கட்சி அலுவலகத்தை இளைஞர் அணிக்கு தருவதாக கலைஞர் சொல்லியிருக்கிறார் அதற்கு ₹10லட்சம் கட்சி நிதி தரவேண்டும் அதற்காகதான் இந்த தொகையென்றார்.. 11 லட்சத்தை திரட்டி பேராசிரியரிடம் கொடுத்தார்..ஸ்டாலின்.. மாநிலம் முழுவதுமிருந்து கிளை கழகத்தை சேர்ந்தவர் குறிப்பாக இளைஞர்கள் ஸ்டாலினிடம் தேதி கேட்டு நச்சரித்தனர்.. 1980 இந்தியாவிலேயே முதல்முதலாக கட்சிக்கென்று இளைஞர் அணியை உருவாக்கியது திமுகதான் ஸ்டாலின் 81 ல் நடந்த இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதார அமைப்பாளராக தேர்தெடுக்கப்பட்டார்.. தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் மக்கள் நல போராட்டமென திமுக அறிவித்த போராட்டங்களில் பெருமளவில் இளைஞர்களை பங்கு பெற செய்தார் மாவட்டம் தோறும் சென்று கிராமகிராமாக கட்சியினரை சந்தித்தார் ஸ்டாலின்.. .. இலக்கியம் புதுக்கிடு ஈனரை ஒதுக்கிடு பகைவர்க்கு வளையேல் மாயைக்கு மயங்கேல் 'ழ' கரமாய் சிறப்புறு என்ற கலைஞர் சொல்லிற்கிணங்க செயல்பட்டு வந்தார் ..இன்றைக்கு கட்சியின் பொருளாளராய் #செயல்தலைவராய் நிமிர்ந்து நிற்கிறார் என்றால் இவையாவும் ஒற்றை இரவில் பூத்ததல்ல.. .. 1989 வரை ஊர்வலம் என்ற சொல்லைதான் கேட்டிருந்த தமிழகம் .. ஸ்டாலின் தலைமையேற்று நடத்திய போது தான் அது #பேரணி என்றழைக்கப்பட்டது.. திரு.ஸ்டாலின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்குவகித்தவர் வைகோ என்பதும் பின் அதிகார மோகம் பிரள வைத்ததும் அறிந்தது தான்.. .. இயக்கம் தலைவனை தானே தேர்வு செய்கிறது நிறைய பேர் வந்தார்கள் அழகிரி உட்பட ஆனால் உழைப்பவரை தொடர்ந்து மக்களோடும் கட்சியினரோடும் கொள்கையோடும் உடன்படுகிறவரைதான் தலைவனாக தேர்வு செய்யும்.. இதோ திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த வந்திருக்கும் ஸ்டாலின் 1980 முதல் பயிற்றுவிக்கப்பட்டார் என்பது தான் உண்மை. .. #உழைப்பிற்கு_உரியஅங்கீகாரம்.. .. தோழர். ஆலஞ்சி

கமலின் விளி

கமலின் விளி.. கமலின் அரசியல் பார்வை மிக துல்லியமாக எதிர்ப்பை பதிவு செய்வதில் மட்டுமே இருக்கிறதே தவிர உடனடியாக செயல்படும் எண்ணம் இருப்பதை உணர்த்தவில்லை ஒரு கலைஞனின் சில நிர்பந்தங்கள் தடையாக இருக்கலாம் அல்லது பொதுவான விமர்சகபார்வை போதுமென்று நினைத்திருக்கலாம்.. ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக புரியவைத்திருக்கிறார்.. ரஜினியை போல குழம்பி மற்றவர்களை குழப்பி தெளிவற்ற கோணல் புத்தியோடு கூடிய வியாபாரியாக இல்லாமல் அரசியல்பற்றி விவரம் அறிந்த தன்னை காட்டிக்கொள்ளும் மேதாவித்தனம் அவரின் அறிக்கை நெடுக தெரிகிறது.. அது கமலின் அறிவின் நிழலில் நின்று கதைப்பதால் கூட இருக்கலாம்.. நிறைய விடயங்களில் ஆழ்ந்த அறிவோடு கூடிய நவீன சிந்தனையின் வெளிபாடு அவரை நாகரீகமாக எதிர்க்க வைத்திருக்கிறது.. ஆனால் பாருங்கள் அவர் விமர்சிக்கிற அல்லது எதிர்க்கிற கூட்டம் அதிமுக/பாஜக அரசியலின் விசால பார்வையில்லாத விவேகமற்ற தெளிவில்லாதவர்களாக இருப்பது கமலுக்கு இலகுவாக இருக்கிறது.. அதிமுகவின் அமைச்சர்களோ அல்லது பாஜகவின் மதமேறிய கிறுக்கர்களோ அரசியல் தெளிவற்றவர்கள் அதைவிட விவரகேடுகள்.. .. கமலின் அரசியல் பிரவேசம் உடனடியாக வருமென எண்ணவில்லை என சொன்னதற்கான காரணம் ரசிகர்களை குறிப்பாக காசுக்கு விலைபோகதவர்களை ஊழல் பட்டியலை அனுப்புங்கள் என்பதலிருந்தே தூர நின்று கதைப்பதாகவே தோன்றுகிறது இது மேலே குறிப்பிட்டவர்களின் பேச்சை அடக்க அல்லது திசைதிருப்ப அவர் எடுத்த வழியாக காணலாம்.. கமல் அரசியல் வரவேண்டுமா என்றால் வரலாம் தவறில்லை சினிமா மட்டுமே மூலதனமாக கொண்டு சுயசிந்தனை ஏதுமில்லாக ம.கோ.ரா போன்றவர்கள் வந்து போன தமிழகத்தில் கொஞ்சம் கம்யூனிஸ பார்வையும் சிறியளவில் பெரியாரிய சிந்தனையையும் கொண்டு நடக்கும் நவநாகரீக செயல்பாட்டாளராக தன்னை முன்னிறுத்தும் கமல் வருவதில் என்ன தவறிருக்கிறது.. ஆனால் அதுமட்டுமே தகுதியா என கேட்டால் இல்லை போதாது என்றே பதில் கூறநேரிடும்.. முற்போக்கு சிந்தனையாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும் ..ரஜினிப்போல மதத்தை தலைக்கேற்றி நடக்கும் போலி காரியவாதிகளை விட கமல் தேவலாம்.. .. கமல் அரசியலுக்கு வந்தாலும் நீண்டநாள் காத்திருக்கவேண்டி வரும் இன்றைய சூழல் அதிமுகவிற்கு மாற்று என்கிற கேள்வி அல்லது அந்த இடத்தை யாரால் நிரப்பமுடியுமென்ற நிலையில் யாராரோ ஆசைப்படுவதும் .. அதற்கு ஊடகங்களும் சமூகவலைத்தளங்களும் கொண்டாடுவதும் எதிர்பார்ப்பை கூட்டுவதை காணலாம் அதெல்லாம் கடைசியில் நீர்த்து போக செய்துவிடுமென்பது தான் யதார்த்த உண்மை இதை அறிந்திருந்தால்தான் ரஜினியோ கமலோ தயக்கம் காட்டுகிறார்கள்.. திமுக எதிர்ப்பு நிலை என்பது இங்கே காலியாக இருக்கிறது அந்த இடத்தை நிரப்ப இன்னும் எத்தனை பேரை தேடுவார்கள் என தெரியவில்லை .. ஆனால் நிச்சயமாக திமுகவை எதிர்க்கும் சக்தி வலுவானதாக இல்லை என்ற நிஜமே தற்போதுவரை இருக்கிறது.. .. திமுக பலமான எதிரியில்லாத களத்தைதான் வரும் தேர்தலில் சந்திக்கும்.. .. தோழர். ஆலஞ்சி

வராக

பாப்பான் மட்டுமா பூணூல் போடுகிறார் செட்டியாரும் ஆசாரிகளும் பூணூல் போடவில்லையா என கேட்கிறார்கள். நூல் அல்ல இங்கே பிரச்சனை அதை போட்டதால் தாங்கள்தான் உயர்ந்தவரெனும் பிராமணச்சிந்தை இருக்கிறது பாருங்கள் அதைதான் எதிர்க்கிறோம் 1938 லேயே ராஜாஜி ஆசாரிகள் தங்களை ஆச்சாரியர்கள் என அழைத்துக்கொள்ள கூடாது பெயருக்கு பின்னால் போடவும் கூடாதென உத்தரவே போட்டார்.. அதாவது ஆசாரிகள் தங்களை விட கீழானவர்கள் என அவர்களுக்கு உணர்த்தினார்.. .. பிறரின் உரிமைகளில் தலையிடுவது ஏன் என கேட்கிறார்கள் அவர்களுக்கும் இதே பதில்தான். எந்தவொரு பிரச்சனையையும் மற்றவரையும் இழுத்துவிடும் அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்துவரும் பாப்பான்களின் செயல்களை யாருமே கண்டிப்பதில்லை தமிழனை பொறுக்கியென்று பேசியபோது இதுபோல் யாரும் பொங்கிவரவில்லை.. பன்றிக்கு பூணூல் என்றவுடன் பாப்பானை பாவமாக சித்திரிக்க சூத்திரனே முட்டுக்கொடுக்கிறான்.. சுவற்றில் எழுதியதை கண்டித்த அழிக்க சொன்னவர்கள் காவிகள் கோட்டை என எழுதி வம்பிற்கிழுக்கிற போது பேசாமடந்தையாய்.. காரணம் வலுவில்லாத முதுகெலும்பில்லாதவர்கள் ஆட்சியும் அதை பாப்பான்கள் கண்காணிப்பதும் தான் இதெல்லாம் அயோக்கியத்தனமாக தெரியாதபோது.. பன்றிக்கு பூணூல் என்றவுடன் கொதிக்கிறார்கள்.. தி.க.வினரை குறைச்சொல்பவர்கள்தான்.. தேவையில்லாமல் பன்றிக்கு குல்லா போட தயாரா என்ற சேகரின் சிண்டுமுடியும் நிரித்தனத்தை முஸ்லிம்களின் உணர்வை கிளறி மதகலவரத்தை தூண்டுகிற செயலை யாரும் கண்டிக்கவில்லை.. .. ஏற்கனவே குஜராத்தில் நாய்க்கு குல்லா போட்டு போட்டோ பிடித்தவர்கள் தான் எனவே சேகரின் பேச்சு பெரிய தாக்கத்தை தராது.. ஆனால் தி.க. போன்ற சமூக இயக்கங்கள் நிறைய போராடவேண்டியிருக்கிறது.. பாப்பானின் சேட்டைகளை யாருமே கேள்வி கேட்ககூடாது எதிர்க்ககூடாது மறுத்து போராட கூடாதென்பதெல்லாம் வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள்.. எங்களை தேவடியாள் மகன் என்பவனை நாங்கள் அதே பாணியில் திட்டவும் பகிரங்கமாக ஏசவும் செய்வோம்.. .. சேகர் போன்ற ஜாதிவெறிப்பிடித்த.. எதையாவது சொல்லி மதகலவரத்தை நடத்திட முடியுமா என துடிக்கிற ஐந்தறிவு ஜீவிகளை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருப்போம்.. கடைசியாக.. பன்றி.. மகாவிஷ்ணு வராக அவதாரம் தரித்தவரென நம்புகிறவர்கள் பன்றியை கேவலமாக எண்ண தேவையில்லை. #வராக.. .. தோழர். ஆலஞ்சி

Tuesday, July 18, 2017

காதல்

காதல் நெஞ்சில் ஆழமாய் பதிந்து அன்பை பீறிட்டடிக்கும் சிறு சிறு செயல் கூட கவிதையாய் மின்னும்.. .. ஒற்றை மலர் கூட வேண்டாம் புன்னகையே மலராய் வாசம் தரும்.. மேனி சிலிர்த்து சில்லறென்ற காற்றை சுவாசிக்கும் உணர்வு வரும்.. .. பசியோ வறுமையோ தோற்றுபோகும்.. அவள் சிணுங்கும் ஒரு சிலிர்ப்பில்.. அழுக்கில்லா மனதில் அன்பில் வரைந்தது வறுமையிலும் ஜொலிக்கும்.. .. காதல் நிஜமெனில் அவர் வாழ்வே கவிதை.. கவிதையாய் ஒரு வாழ்வு காசில் கிடைப்பதில்லை.. .. #காதல்_அழகு.. .. தோழர். ஆலஞ்சி மீள்.

பெரியார் சிலையும்..பூணூலும்

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம். இதுகுறித்து கருத்து தெரிவித்த s.v. சேகர் பன்றிக்கு குல்லா போடுவார்களா என திசை திருப்பும் செயலை அதாவது சம்பந்தமே இல்லை முஸ்லிம்களை உள்ளே இழுத்துவிடுகிறார்.. இதைதான் காலம்காலமாக பாப்பான் செய்து வருகிறான் .. குல்லா போடவேண்டுமென்று இஸ்லாத்தில் சட்டமெல்லாம் இல்லை தேவையானால் போடு இல்லையேல் தூக்கியெறி உன் இஷ்டம் இதுதான் இஸ்லாம் மதம் சொல்கிறது.. ஆனால் பூணூலை இந்துமதத்தின் அடையாளமாக இங்கே அடையாளப்படுத்த நினைக்கிறார்..அது பாப்பானின் அடையாளமே தவிர வெகுஜன இந்துக்களின் அடையாளமல்ல.. .. பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தில் நமக்கு விருப்பமில்லை ஆனால் நூல் செய்கிற சேட்டைகளை அதிகார திமிர்த்தனத்தை ..ஆணவபோக்கை தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை இல்லாதாக்குவதே நோக்கம்.. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வளவு ஆட்டம் ஆடுகிறார்கள் தெனாவட்டாக பேசுகிறார்கள் அதற்கெல்லாம் கடிவாளம் போடவேண்டுமென்பதற்காகவே விரும்பமில்லாமல் சில தோழர்கள் செய்கிற செயலை கடந்து போகவேண்டியிருக்கிறது.. .. மற்றொரு விடயத்தில் ஸ்ரீரங்கத்தில் கோவில் வெளியே பெரியார் சிலை இருப்பதை கிண்டல் செய்யும் விதமாக கோவில் வெளியே பிச்சைக்காரர்கள் இருப்பது சகஜம்தானே என்று சொல்லியிருக்கிறார்.. அப்படியெனில் பெரியார் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் வரை சென்று போராடியது ஏன் .. ஒவ்வொரு முறையும் பெரியாரை தரிசித்துவிட்டுதான் கர்ப்பகிரகத்திற்குள் நுழைய முடியுமென்கிற நிலையை உருவாக்கி இருக்கிறோமே அந்த எரிச்சலில் பேசுகிறார்.. தட்டிலே காசை எதிர்பார்க்கிற பிச்சைக்காரர்களுக்கு வெளியில் அறிவுக்கொண்டு அந்தணர்கள் ஆட்டத்தை அடைக்கிவைத்த ஆசானை காணும் போதெல்லாம் கோவம் வரதானே செய்யும் .. .. பெரியாரை பிச்சைக்காரன் என பேசிய சேகரை அதே மொழியில் பதிலளித்திட/பேசிட முடியும் .. ஆனால் அவர்களின் கோபப்படுகிறார்கள் என்றால் நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதால் கண்ட ...கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.. கடலூரில் பெரியார் மீது செருப்பெறிந்தார்கள் செருப்பு எறிந்த இடத்தில் சிலையை நிறுவினார் கலைஞர் .. செருப்பிற்கு ஒரு சிலை வருமென்றார்.. அதையே தான் இப்போதும் சொல்கிறோம்.. பெரியாரை இழிவாக பேசும் போதெல்லாம் .. மீண்டும் மீண்டும் ஆரிய எதிரிப்பை பார்பன திமிரை அடக்க முன்னெப்போதுமில்லாத வேகத்தோடு செயல்படுவோம்.. #எச்சரிக்கை.. .. தோழர். ஆலஞ்சி

ஜோதிடம் ஆருடம்

நோயாளிகளை குணப்படுத்த ஜோதிடர்களை நியமிக்க மத்தியப்பிரதேச அரசு முடிவு... .. மடையர்கள் கையில் நாடு.. மூடநம்பிக்கை தன்னோடு நிறுத்திக்கொள்ளவேண்டுமே தவிர அதை மற்றவர்கள் மீது திணிப்பதென்பது ஏற்ககூடியதா.. ஜோதிடம் என்பது மிகச்சரியாக கணிக்ககூடியதல்ல.. அதோடு மனிதர்களின் உயிரோடு விளையாடுகிற செயல் இது.. ஜோதிடம் மந்திரம் என மக்களிடம் இருக்கும் தவறான மூட நமபிக்கைகளை நீக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு அறிவுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத நம்பிக்கைகளை திணிப்பதென்பது வெட்ககேடானது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.. .. இன்றையஇளம் தலை முறையிடம் அறிவியலை கொண்டு சேர்க்காமல் ஆன்மீகம் மந்திரவாதி என புழுத்த பொய்களை கொண்டு சேர்ப்பது வளரும் தலைமுறையை விவரகேடாக மாற்றும் முயற்சி அவர்களுக்கு செய்கிற துரோகம்.. ஜோதிடம் என்பதே புரட்டு எத்தனை ஜோதிடர்கள் கணித்தவையெல்லாம் பொய்யாகி இருக்கிறது மனிதர்களை ஏமாற்ற பிழைக்க இவர்கள் செய்த ஏற்பாடு ஜோதிடம் மாந்திரீகம் பரிகாரம் ... .. உலகநாடுகள் Big bank theory சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொள்கின்றன பூமிக்கடியில் பெரும்பள்ளம் எப்படியென ஆய்வுகொள்கின்றன நாசா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி ஆய்வு மேற்கொள்கிறது வேற்று கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா என ஆய்வுகள் நடக்கிறது.. வேறு ஜீவராசிகள் பிற கோள்களில் வாழ்கிறதா என மனிதன் ஆய்வு செய்யும் வேளையில்.. கட்டம் அமைத்து சோலி உருட்டுகிறான் #இந்தியன்.. .. உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறவனை கட்டம் சரியில்லையென மருத்துவம் பார்க்காமல் அனுப்பிவிடுவார்களோ.. ஜோதிடத்தில் நோயாளிக்கு இருக்கிற ரத்தகொதிப்பு சக்கரை அளவு தெரியுமா.. என்ன மருந்து கொடுக்கவேண்டுமென சொல்வார்களா.. .. தந்தை பெரியார் சொல்வார்.. நாட்டு வைத்தியனை மறந்து இங்கிலீஷ் மருந்து வந்த பிறகுதான் நிறையபேர் பிழைத்தான் இல்லையென்றால் நாட்டுவைத்தியன் எதற்கு கொடுக்கிறான் என தெரியாமல் வாங்கி தின்று பரலோகம் போனான்.. கேட்டால் விதி முடிந்ததென சொல்வான்.. ஆங்கில மருத்துவம் வந்த பிறகு என்ன வியாதியென கண்டறிப்பட்டது அதற்கான சிகிச்சை தரப்பட்டது ..மீண்டும் நாட்டுவைத்தியனிடம் அனுப்பும் செயலாக தான் பார்க்கவேண்டும் அதைவிட இது மோசம்..சோலியை உருட்டி ஜோலியை முடிக்கிற கதையாக மாறும்.. .. முட்டாள்களோடு வாழ்வதென்பது எவ்வளவு கடினம்.. மடையர்கள் மூடர்கள் கையில் நாடு மதம் தலைக்கேறிய அரசாள்வோர் குடிமக்களை காவு கேட்கிறார்கள்.. மதத்தின் பெயரில் ஜோதிடம் மாந்திரீகம்..புனிதம் ..என மூடநம்பிக்கை விதைக்கிறார்கள் .. வரும் தலைமுறையை அறிவிலிகளாக்க.. மதத்தின் பெயரில் சடங்கென்றும் தம்பிராதாயமென்று அழித்தொழிக்க பார்க்கும் கயவர்கள் கூட்டம்.. .. மதநம்பிக்கையென்ற பெயரில் இதுபோன்ற அறிவுகெட்டத்தனத்தை ..மருத்துவர்கள், மெத்தபடித்தவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் வெகுண்டெழுந்து இந்த அரசிற்கெதிராக குரல்கொடுக்கவேண்டும்.. பெரியாரின் பணி எவ்வளவு உயர்ந்ததென்று வடமாநிலங்களின் தினம் தினம் நடக்கும் கூத்தை பார்க்கிற போது புரிகிறது..கிழவனின் தொண்டு.. .. #விழிப்புணர்வு_தேவை.. .. தோழர். ஆலஞ்சி

Monday, July 17, 2017

கமலின் அரசியல் பார்வை

"கமல்ஹாசனாவது பொதுவாக அனைத்துத் துறையிலும் ஊழல் என்றார். அதற்காக அவர் மீது அவதூறு வழக்கு போடுவதாக அதிமுக அமைச்சர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். நான் பெயர் குறிப்பிட்டு ஒவ்வொருவரின் ஊழல் பட்டியலை சொல்லிவருகிறேன் . அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல், முதலமைச்சர் பழனிசாமி செய்த ஊழல், பான் மசாலா குட்கா விவகாரத்தில் போலீஸ் உயரதிகாரிகளும் அமைச்சர்களும் சேர்ந்து செய்த ஊழல் என ஒவ்வொன்றையும் ஆதாரத்தோடு குற்றஞ்சாட்டுகிறேன். என் மீது வழக்கு போட தயாரா..?!" தமிழக எதிர்க்கட்சித்தலைவர் #மாண்பிமை_ஸ்டாலின் .. பதில் சொல்ல திராணி இருக்கிறதா தமிழக அமைச்சர்களுக்கு.. கமல் மீது விழுந்து பிராண்டும் இவர்கள் யோக்கியதையை தளபதி சட்டமன்றத்தில்யே மக்கள் மன்றத்திலேயும் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.. ஆனால் கொஞ்சம் கூட வெட்கே இல்லாமல் மௌனம் சாதிக்கிறவர்கள் மக்களை மகிழ்விக்கும் கலைஞன் மீது கோவம் கொள்கிறார்கள்.. திருமணம் ஆகாமலேயே வாழ்ந்தார் Give it together என்கிறார்கள் அதில் இவர்களுக்கென்ன வந்தது சம்பந்தப்பட்டவர்கள் திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்தார்கள் பிரிய வேண்டும் என்கிறபோது நண்பர்களாக பிரிந்தார்கள்.. தனிநபரை விமர்சிப்பதென்பது தவறு அதை அரசாள்போரே செய்வது தவறு மட்டுமல்ல இவர்கள் மீது மானநஷ்ட ஈடு வழக்கே போடலாம்..தனிநபர்களின் Privacy உரிமைகளில் தலையிட இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது.. உண்மையில் இவர்களெல்லாம் ஜெயலலிதாவை சரியாக படிக்கவில்லையென்றே தோன்றுகிறது. கமலுக்கெல்லாம் முன்னோடி தான் இவர்களின் புரட்சித்தலைவி தான் இவ்வளவு அழகாக தங்களை தலைவியை கிண்டல் செய்து அவமானபடுத்த முடியாது .. கமல் அரசியலுக்கு வந்தவுடன் விமர்சிக்கட்டும் என்கிறார் ஜெயகுமார்..எல்லோரும் அரசியலுக்கு வந்துதான் விமர்சிக்கவேண்டுமென்பதில்லை நாட்டின் குடிமகன் வாக்களிக்கும் உரிமை பெற்றவன் விமர்சிக்க எதிர்க்க எல்லா உரிமையும் உண்டு.. கமலின் அரசியல் பார்வை ஜெயகுமாரின் அரசியலை விட சிறந்தது.. அதுசரி உரிமைகளை பற்றி அடிமாடுகள் போல் ஜெயலலிதாவால் நடத்தப்பட்டவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்.. .. ஜனநாயகமென்பது கூஜா தூக்குவதோ ஜால்ரா போடுவதோ அடிமைகளைப்போல தலையாட்டி நடப்பதோ அல்ல.. எந்த கருத்தை யார் சொன்னாலும் அதில் உடன்பாடில்லையென்றால் சத்தமாக எதிர்ப்பதும் விமர்சிப்பதும் தான்..சர்வாதிகாரியின் காலடியில் விழுந்து கிடந்த இப்போது ஆட்சி அதிகாரமிருந்தும் யாராருக்கோ பயந்து தலையாட்டி திரியும் அடிமைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.. .. எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வாரே ஜெயலலிதா அதைப்போல தளபதி மீது வழக்கு தொடர வேண்டியதுதானே.. ஜெயலலிதா தொடர்ந்தே வழக்கையே ஒன்றுமில்லாமல் செய்தவர்கள்.. இப்போது வழக்கு தொடர்ந்தால் கட்டிய வேட்டியும் உருவப்படும்.. .. கமல் கேட்பதிருக்கட்டும் தளபதி மீது வழக்கு தொடருங்கள் முடியாது காரணம் அவ்வளவுபேரும் கிரிமினல்களாக வலம் வருகிறார்கள்..ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்ததைப்போல .. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கு தொடரப்படும்.. நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் .. அதற்கு முன் மக்களால் புறக்கணிக்கபட்டு விரட்டபடுவீர்கள்.. .. காலம் காத்திருக்கிறது.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, July 16, 2017

தமிழிசை.. அரசியல்

கமல்ஹாசன் திரைத்துறையின் குறைகளை சரி செய்யும் வேலையை செய்தால் போதும், அரசியலை பின்பு பாக்கலாம் .. ஜெயலலிதா இருந்தபோது கமல் இப்படி பேசினாரா.. பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை.. .. முதலில் ஜெயலலிதா விடயம் பற்றி பேசலாம்.. ஜெயலலிதா இருந்த போது பேசவில்லை என்பதற்காக இப்போதும் பேசகூடாதென்பது எந்தவகை நியாயம்.. ஜெயா போன்ற சர்வாதிகாரிகள் ஆளும் போது அரசியல் சார்பில்லாதவர்கள் பேசினால் எழும் பிரச்சனைகளும் தொடர்ந்து அவரின் படத்திற்கு திரையிட தரப்பட்ட தொந்தரவுகளும் மௌனம் காக்கவைத்தது ஆனாலும் முதல்வரை சந்திக்கிற போது போலித்தனமான கூழை கும்பிடு போடவில்லை.. கம்பீரமாக சந்தித்தார்.. திரைப்பட வெளியே வரவேண்டுமென்ற சமயோசித புத்தி அவரை மௌனமாய் இருக்க செய்தது.... உண்மையில் கிரிமினல் ஜெயலலிதாவைதான் விமர்சித்திருக்கவேண்டும் .. திரைத்துறையின் குறைகளை சரிசெய்யும் வேலையை செய்தால் போதும் அரசியலை பின்பு பார்க்கலாம்.. அதை சொல்ல நீங்கள் யார் வாக்களிக்கும் ஒவ்வொருவரும் இந்த அரசை கேள்வி கேட்க உரிமை உண்டு.. நேர்மையாக ஆட்சி செலுத்த முடியாமல் திரைமறைவில் நின்றுக்கொண்டு அதிமுக ஆட்சியை வழிநடத்தும் பாஜகவிற்கு இதை பேச அருகதையில்லை .. தமிழகத்தில் அரசென்று ஒன்று இருக்கிறதா.. தேர்தெடுக்கப்படாத அரசு என்பது ஜனநாயக விரோதம் இல்லையா..அமைச்சர்கள் மக்கள் விரோத செயல்களை செய்கிற போது அதை தட்டிகேட்க எந்தவொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு.. கமலின் அரசியல் பார்வையில் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அவரது அரசியல் பார்வையே தவறென்பது எப்படி சரியாகும் அவரின் கருத்தை அது நமக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அதை சொல்ல அவருக்குள்ள உரிமை தடுக்க நீங்கள் யார்.. தமிழகம் இதுவரை கண்டிராத அயோக்கியத்தனமான ஆட்சி வெளிப்படையாகவே மத்திய அரசின் தலையீடு மக்கள் விரோத செயல்களை திட்டங்களை ஏன் ஜெயலலிதாவே எதிர்த்த நீட் உதய் மின்திட்டம் போன்றவற்றை எந்த எதிர்ப்பை பதிவு செய்யாமல் தலையாட்டி பொம்மையைப்போல பினாமி அரசு செயல்படுவதை கேட்க கூடாதென சொல்வதிலிருந்தே இது அதிமுக அரசல்ல மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசல்ல கொள்ளைப்புறமாக வந்தேறிய, விரட்டப்படவேண்டிய, நேர்மையாக மக்களை சந்திக்க பயந்து திராணியற்றவர்களின் ..ஏன் எக்காலத்திலும் மக்கள் ஆதரவை பெறமுடியாதவர்களின் மறைமுக ஆட்சியென்பது தெரிகிறது.. .. #கொண்டையை_மறையுங்கள்_தமிழிசை.. .. தோழர். ஆலஞ்சி

நிழல் நிஜமாகாது

"கமலஹாசன் ஊழல்பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். கமலஹாசன் தனது திரைப்படங்களுக்கு முறையாக வரி செலுத்தனாரா என ஆய்வு செய்யட்டுமா?" அமைச்சர் வேலுமணி.. .. சினிமாதுறையினர் வரிஏய்ப்பு செய்வதென்பது காலங்காலமாக பேசப்பட்டு வரும் விடயம்தான் வெளிப்படையான ஊதியமோ வெளிப்படையான செலவினங்களோ வரையறுக்கப்படாத ஒரு துறையாக/தொழிலாக இருப்பதாலும் அதன் கேளிக்கைவரி என்பது டிக்கட்டில் அச்சிடப்பட்ட தொகைக்கே செலுத்தபடுவதாலும் இதன் கணக்குவழக்குகளை நிறைய குருமூர்த்திகளே கவனித்து வருவதாலும் அவ்வளவு எளிதில் சிக்கவைத்திட முடியாது.. .. முன்பெல்லாம் இவ்வளவுதான் வசூலிக்கவேண்டுமென்று வரையறை இருந்தது இப்போதெல்லாம் முதல் மூன்று நாட்களிலேயே மொத்த பணத்தையும் வசூல் செய்துவிடவேண்டும் என்கிற வேகம் எவ்வளவு வேண்டுமானாலும் டிக்கட் விலையை நிர்யணத்துக்கொள்ள தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதும் கணக்கில்லா கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது.. .. சிலர் சினிமாவில் தோல்வியடைந்தவர்கள் சோற்றுக்கே கஷ்டபடுவதாக சொல்கிறார்கள் ஆனால் திரைப்படங்கள் புதிது புதிதாய் வராமல் இல்லை அரசாங்கம் இதை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்ளாததும் கிடைக்கிறவரை பறித்துவிடவேண்டுமென்ற ஒரே நோக்கோடு செயல்படுகிறார்கள்.. மலையாளம் படங்களில் எல்லாம் செலவினங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு திரைப்படம் தயாராகிறது முழு ஸ்கிரிப்ட் முழுவடிவமும் தயாரித்தபின்பே படப்பிடிப்பு செல்வதும் திட்டமிட்டு செயல்படுவதும் நாயகன் நாயகிமார் சம்பளங்கள் வரையறுக்கபடுவதும் கச்சிதமாக நடக்கிறது.. ஆனால் தமிழ்த்திரை உலகில் இதெல்லாம் இல்லை கதை இல்லாமலே படப்பிடிப்பு செல்வதும் நாயகன் கால்ஷீட் கிடைத்தால் போதுமென்பதும் வரையறுக்கப்படாத செயல்களும் வீண்விரயங்களும் மக்கள்/ரசிகர்கள் தலையில் விழுகிறது.. .. சரி விடயத்திற்கு வருவோம்.. கமல் முறையாக வரிசெலுத்துவதாக தொடர்ந்து சொல்லிவருகிறார் அதை வருமானவரித்துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது .. அவர் தவறு செய்தாரென்றால் தாராளமாக விசாரணையை மேற்கொள்ளலாம்.. அதே போல் அமைச்சரும் தன் சொத்து கணக்குகளை வெளிப்படையாக அறிவித்து விசாரிக்க சொல்லலாம்.. .. அதுசரி கதாநாயகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களென உண்மையை சொல்வார்களா அல்லது இவ்வளவு கொடுத்தேன் என சினிமா முதலாளிகள் சொல்வார்களா.. இரண்டுமே நடக்காத போது விசாரித்து என்ன பயன் .. சினிமா நிழல் வியாபாரம்.. நிழலோடு மல்லுக்கட்டி ஒரு பயனுமில்லை. .. #நிழல்_நிஜமாகாது… .. தோழர். ஆலஞ்சி

Friday, July 14, 2017

குடியாத்தம் அரசியல்

காமராஜர் பிறந்தநாள்.. .. திராவிடம் என்ன செய்து என்போரே.. காமராஜரை ஏன் புகழ்கிறோம் என்போரே.. குடியாத்தம் அரசியல் தெரியுமா .. .. தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை தந்தது குடியாத்தம் இடைத்தேர்தல் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்த பார்ப்பன நரி ராஜாஜியை அரசியலில் ஒன்றுமில்லாதாக்க பெரியார் நினைத்தார்..அதற்கு சரியான போட்டியாளராக காமராஜரை தேர்வு செய்தார்.. .. 1953 ல் குடியாத்தம் இடைதேர்தலில் தந்தை பெரியார் காமராஜரை குடியாத்தத்தில் போட்டியிட சொல்கிறார்..பெரியாரின் நோக்கம் பார்பனர் கைகளிலிருந்த அதிகாரத்தை பறிக்கவேண்டும் அதற்கு காமராஜர் தான் சரியான கருவியென தீர்மானித்து செயல்படுகிறார்.. அப்போது காமராஜர் சொன்னார் நான் சாதாரண மிகவும் பிற்படுத்த பிரிவை சார்ந்த நாடார் குலத்திலே பிறந்தவன் என்னை குடியாத்தத்தில் நிற்க சொல்கிறீர்களே அங்கே முதலியார்களும் முஸ்லீம்களும்தானே அதிகமிருக்கிறார்கள் என தயக்கம் காட்டுகிறார்.. உன்னை எப்படி ஜெயிக்க வைக்கவேண்டுமென்று எனக்கு தெரியும்..எனச்சொல்லி #தமிழர்கள் அனைவரும் காமராஜரை ஆதரியுங்கள் என்கிறார்.. இதிலிருந்தே தமிழர்கள் வேறு பார்பனர்கள் வேறு என்பதை மிகதெளிவாக சொல்லியிருக்கிறார்.. .. அறிஞர் அண்ணாவும் பெருந்தலைவரை ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார் #குணாளா_மணாளா_குலக்கொழுந்தே சென்று வா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு .. திமுக தொண்டர்கள் காமராஜரின் வெற்றிக்கு பாடுபடவேண்டுமென கேட்டுக்கொண்டார்.. கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் பெரியார் நிற்கவைத்திருக்கிறார் அண்ணா சொல்லிவிட்டார் பிறகு கேள்வியே எழவில்லையென காமராஜரை ஆதரித்தார்.. காமராஜர் வெற்றிப்பெறுகிறார்.. உடனே காமராஜர் பெரியாரை சந்தித்து எதில் முதல் கையெழுத்து போடவேண்டுமென கேட்கிறார்.. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் யூ.என். தேவரைபார்த்து கேட்கவில்லை.. பெரியாரைதான் கேட்டார் பெரியாரும் ஒரு தாழ்த்தப்பட்டவனை இந்து அறநிலையதுறை அமைச்சராக்கு என்றார்.. அப்போதுதான் #பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவர் அறநிலைய துறை அமைச்சரானார்.. அப்போது பேரறிஞர் அண்ணா #பரமேஸ்வரன் வருகை கண்டு #தில்லைநடராசரும்_ஸ்ரீரங்கம்_ரங்கநாதரும் பதறும் காட்சிக்கண்டேன் அந்த மாட்சி கண்டேன் ..என்றார்.. .. அப்போது டாக்டர் அம்பேத்கர் சொன்னார் என் இனத்திலே பிறந்தவனை குளத்தில் குளிக்கவும் விடமாட்டேன் என்கிறான் குனிந்து அள்ளி தண்ணி அள்ளி குடிக்கவும் விட மாட்டேன் என்கிறான்.. பெரியார் பிறந்த மண்ணில் தான் என் இனத்தவன் கடவுளின் மூலவிக்ரகத்துக்குள்ளே போகும் அதிகாரத்தை பெற்றான் என்றார்.. .. பெரியாரை இன்றைக்கும் சிலர் வெறுக்கிறார்கள் என்றால் காரணம் புரியுமே ஆனால் அந்த பெருங்கிழவன் பெற்று தந்த உரிமைகளை அனுபவித்துக்கொண்டே பெரியார் இல்லாவிட்டால் நாங்கள் முன்னேறி இருக்கவே முடியாதா என்கிறார்கள்....உ.பி.யிலும் குஜராத்திலும் பீகாரிலும் இருப்பதை போல இருந்திருப்பான்.. .. பெருந்தலைவரை சரியான நேரத்தில் கொண்டுவந்து பார்பனர்களின் அதிகார மையத்தையே ஆட்டிவைத்தவர் பெரியார்.. ராஜாஜி அரசியல் வாழ்வின் வீழிச்சி இங்குதான் குறிக்கப்பட்டது.. 1967 ல் திமுகவோடு கூட்டணி வைத்தார் திமுக வெற்றி பெறும் சேதி வந்துக்கொண்டிருக்கிறது.. ராஜாஜி மிஸ்டர் அண்ணாதுரை முதல்வர் யாரென்று தீர்மானித்து விடுவோமா என்ற போது அருகில் இருந்த கலைஞர் திமுக பெரும்பான்மை பெறும் அண்ணாதான் முதல்வர் என்றார்.. திமுக மிகப்பெரிய பெற்றது அண்ணா நேராக பெரியாரைதான் போய் பார்த்தார்.. பெரியாரின் காலடியில் அமர்ந்து அண்ணா கண்ணீர் சிந்துகிறார்.. உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேட்டபோது பெரியார் புதுப்பெண்ணின் மனநிலையில் இருக்கிறேன் என்றார்.. பெரியாரை ராஜாஜி சந்தித்தது குறித்து அண்ணாவிடம் என்னை ஏமாற்றி விட்டீர்களே என்றபோது காலமெல்லாம் எங்கள் இனத்தை ஏமாற்றி வருகிறீர்களே நான் இரண்டுதினம் ஏமாற்றகூடாதா என்றார்.. .. அண்ணாவை, கலைஞரை ,மட்டுமல்ல #பெருந்தலைவரை உருவாக்கியதில் பெரும்பங்கு எங்கள் பெருங்கிழவனுக்குண்டு.. என்ன கிழித்தது திராவிடம்.. #புரிகிறதா.. .. தோழர். ஆலஞ்சி

காமராஜர்

#காமராஜர்.. .. என்ன.. சொல்லிவிட போகிறேன் எளிமை.. எப்போதும்.. சொல்லில் இனிமை.. துணிவு.. செயல்திறன்.. அஞ்சாமை ஆளுமை, இரக்கம்.. நேர்மை. பொதுவாழ்வில் தூய்மை.. கல்வி #எல்லோருக்கும்_கல்வி .. .. எங்கள் அறிவாசான் #பெரியார் சொன்னார்.. பள்ளியில் கடவுள் வாழ்த்துக்கு பதில் காமராஜர் வாழ்த்தை பாடவேண்டும் இதைவிடவா சொல்லி விட போகிறோம்.. .. இதுதான்.. பெருந்தலைவர்.. நிஜத்தில்.. இவரே.. #பெருந்தலைவர் பிறந்தார்.. மக்கள் மனதில்.. #வாழ்கிறார்.. இறப்பில்லை.. இவருக்கு.. #ஜூலை15.. .. தோழர். ஆலஞ்சி

கமல்

கமலோடு நமக்கு கருத்துவேறுபாடுண்டு.. சிலவற்றில் அவர் நடத்தும் நாடக அரசியல் நமக்கு பிடிக்காமல் போனதுண்டு ஆனால் அவரை நாம் தரகுறைவாக விமர்சனம் செய்ததில்லை ஒருமையில் அழைத்ததில்லை.. ஆனால் உயர்க்கல்வி அமைச்சர் அன்பழகன் அவனெல்லாம் ஒரு ஆளே இல்லை அவனுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்கிறார்.. மாண்பிமை மந்திரி மதிக்கெட்ட மந்திரியாக தெரிகிறார் இதுதான் இவர்கள் தகுதி.. .. இந்துமுன்னணியினர் கலாச்சார சீரழிவென போராட்டம் செய்கின்றனர்.. உண்மையில் நகைப்பிற்குரியதாக இருக்கிறது.. போராட்ட செய்கிறவனில் கொடி பிடித்து கோசம் போடுகிறவனில் பார்பன் இல்லை பாவம் சூத்திரபயல்கள் வழக்கம் போல் கம்பு சுத்துகிறார்கள்.. உன்னையும் சேர்த்து மிக கேவலமாக சேரிக்குணம் என பேசிய காய்த்ரிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை வீடு முற்றுகையிடவில்லை.. ஆனால் கமல் குறிவைக்கப்படுகிறார்.. அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர்களை முன் போராட்டம் நடத்துவோம் என்கிறார்கள் விஸ்வரூபத்திற்கு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் செய்த அலப்பறையை போல இதுவும் கண்டிக்கதக்கது.. கருத்தை கருத்தை சந்திக்கவேண்டுமே தவிர அவரது வீடு அலுவலகத்தை தாக்க எண்ணுவதும் முயல்வதும் கையாலாகாத கோழைத்தனம் அறிவின் குறைபாடு.. .. எல்லா அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என கமல் சொன்னதில் என்ன தவறிருக்கிறது அதுதானே அச்சுறுத்தும் நிஜமும் கூட மக்கள் மத்தியில் வெளிப்படையாகவே அமைச்சர்களின் ஊழல்களும் பேசப்படுகிறது ஒவ்வொரு துறையிலும் மேல்மட்டம் தொடங்கி கீழ்மட்டம் வரை வெளிப்படையான கையூட்டு பகிரங்கமாக நடக்கிறது.. பத்திரிக்கைகள் வார சஞ்சிகைகள் தினம் தினம் தோலுரித்து காட்டுகிறது அப்போதெல்லாம் வாய்மூடி இருந்துவிட்டு கமல் சொன்னவுடன் ஏன் கோபபடவேண்டும்.. இல்லையென மறுத்திருக்கலாம் அல்லது பொய் செய்தி என்றோ அரசிற்கு களங்கம் ஏற்படுத்துகிறாரென்று தங்கள் தலைவியைப்போல அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கலாம் அதைவிடுத்து சினிமா வில்லனைப்போல அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதென சொல்வது வகிக்கும் பதிவிற்கு அழகல்ல.. .. தகுதியானவர்களை திறமையானவர்களை தேர்வு செய்யாமல் சொற்ப காசிற்கு வாக்குகளை விற்றதால் தமிழகம் படுகிறபாடு இவ்வளவு கேவலங்களை தமிழகம் என்றைக்குமே சந்தித்ததில்லை ஆண்மையற்ற அரசு எடுப்பார்கைப்பிள்ளையாக அதிமுக அமைச்சர்கள் மத்திய அரசின் பொம்மலாட்டத்திற்கு தகுந்தார்போல் ஆடுகிற கேவலமான ஆட்சி.. ஆனால் பாதிக்கப்படுவதென்னவோ.. தமிழக மக்கள்.. எத்தனைவிதமான இழப்புகளை சநிதித்திருக்கிறார்கள் .. நீட்..ஜிஎஸ்டி.. மின்சாரம் .. சொல்லிக்கொண்டே போகலாம்.. பினாமி அரசால் தமிழக மக்கள் நேரடியாகவே பாதிக்கப்படுகிறார்கள்.. ஆனால் பாப்பனர்கள் மறைமுகமாக இதன் அனுகூலங்களை அனுபவிக்க தொடங்கியிருக்கிறார்கள் .. இந்த கேடுகெட்ட ஆட்சியை கமல் என்றில்லை ஒவ்வருவரும் கேள்வி கேட்கவேண்டும்.. அந்த காலம் வருமென்றே எண்ணுகிறேன்.. ஒவ்வொரு தமிழனும் நேரடியாக பாதிக்க தொடங்கியிருக்கிறான்.. அரசின் செயல்களால் தமிழக அரசாங்கத்தின் நேர்மையற்ற திறமையற்ற செயல்பாட்டால் ஆளுமையின்மையால் .. தொடைநடுங்கும் செயலால் ..மத்திய அரசை தட்டிகேட்க முடியாத இந்த பினாமி அரசால் தமிழக மக்கள் சொல்லொண்ணா துயரம் அடைந்திருக்கிறார்கள் .. இதெற்கெல்லாம் பதில் சொல்லியாகவேண்டும்.. .. கடைசியாக இந்த அமைச்சர் அன்பழகனை தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்.. .. தோழர். ஆலஞ்சி

நான் யார்

நான் நானாகதானிருக்க..ஆசை ஆனால்.. என்னை நானாக இருக்க விடுவதேயில்லை.. .. பொய் சொல்லாதே எனச்சொன்னவர்.. பொய் பேசுவதை பார்க்கும் போதும்.. அமைதியாய் நகர்ந்தேன். .. வலுத்தவன் சொல் அம்பலமேறும் போது மௌனம் காக்கிறேன் தவறென்ற போதும்.. .. அப்பாவிற்கு தெரியாமல் அம்மா காசு கொடுத்து சொல்லாதே என்ற போதே கயமையை கற்றுக்கொண்டேன்.. .. பிரியமானவர்கள் பித்தலாட்டகாரர்கள் என்றறிந்தபோது நானும்.. சேர்ந்துக்கொண்டேன்.. .. காதல்.. கடைந்தெடுத்த பொய்யென்றறிந்தபோது காமத்தில் கரைந்தேன்.. .. ஒரு நாளேனும்.. பொய் புரட்டில்லாமல்.. அடுத்தவனைப்பற்றி புறம் சொல்லாமல்.. முன்னால் செல்கிறவனின் முதுகிலேறி.. சவாரி செய்யாமல்.. குப்புறதள்ளி.. மீதேறாமல்.. அடுத்தவன் உரிமையை அபகரிக்காமல்.. இருக்க ஆசைதான்.. .. எல்லாம் பழகி..பழகி.. கடைசியில் நான் ... யாரென்றே தெரியாமல்.. .. தெரியாமல்தான் கேட்கிறேன்.. நான்.. யார் என் முகம் இதுவல்ல என்னை யாரோ வடிவமைக்கிறார்கள் அப்பனுக்காக.. அவன் வம்சத்திற்காக சொந்தங்கள் கூட வாழ்ந்தவர்கள் என்னோடு அடுத்தவர்கள் அன்பால் அதிகாரத்தில் எனை வீழ்த்தியவர்கள் இவர்களுக்காக வாழ்ந்தது போதும் எனக்காக.. எப்போது வாழ்வது.. வாழணும் #சிலகாலமேனும். .. தோழர். ஆலஞ்சி

Thursday, July 13, 2017

மெல்லிசை

#நினைவில்.. .. கேரளம் தந்த நல்லிசை மனதை வருடும் மெல்லிசை .. அனைவரையும் பிடிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.. .. அதிர்ந்து பேசாத அரசியல் பேசாத ஆணவம் கொள்ளாத அற்புத கலைஞன் .. தமிழகத்தை.. அரைநூற்றாண்டாய் தாலாட்டிய.. இசைமகன்.. .. மெல்லிசை.. தன்... இசையை.. காற்றில் விட்டு அந்த கானகுயில் காலமானது.. (ஜூலை14) .. தமிழனை தாலாட்டிய மெல்லிசை கர்வமில்லா இசைமகன்.. .. என்றும் எங்கள் #எம்எஸ்வி .. #காற்றினிலேவரும்கீதம் .. தோழர். ஆலஞ்சி

கிரிஜா..ரகுராம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம் பிஜேபி யில் இருப்பதால் அவரைப்பற்றி நிறைய விமர்சனம் வருகிறதோ என்று நினைக்கிறேன். காயத்ரியின் தாயார் கிரிஜா ரகுராம் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னார் காயத்ரி பிராமண பெண் என்பதால் அவரை குறிவைக்கிறார்கள்.. சூத்திரன் அர்ஜூன் சம்பத்.. .. கமலின் பதிலே அர்ஜூன் சம்பத்திற்கு போதும் கண்ட மாடெல்லாம் மணி அடிக்க கூடாது.. என்னதான் நீ கூவினாலும் அவாளை அடிதொழுதாலும் உன்னையெல்லாம் கலவரத்து பயன்படுத்துவார்களே தவிர கருத்துச்சொல்லவெல்லாம் அனுமதிக்கமாட்டார்கள் அதற்கெல்லாம் மகேந்திரன் சேகர் போன்ற அதிமேதாவிகள் இருக்கிறார்கள்.. கிரிஜாவிற்கு நாம் பதில் சொல்லவேண்டும்.. பாஜக என்பதால் அல்ல பார்ப்பன குணத்தை வெளிப்படுத்தியதால் எல்லோரையும் தாழ்வாக எண்ணும் அடிமுட்டாள்த்தனமான செய்கையால் விமர்சிக்கப்படுகிறார்.. சேரி பிஹேவியர் என ஓவியாவை விளித்தில் தான் மொத்தமாக மக்களின் வெறுப்பு வந்தது.. தனிமையில் இருக்கிற போது வரும் வெறுப்பும் இயலாமையும் பிறர்மீது எரிச்சலை தரும் அதுவும் காய்த்ரி போன்ற ஆட்டக்காரிகளுக்கு அடங்காத கோவம் வருவது இயல்புதான் ஆனால் அதை வெளிப்படுத்திய விதம் தான் இங்கே விவாதமாகியது பாலக்காடு கிரிஜாவிற்கு தெரியாமல் போனது .. சேரி மக்களென்றாலே தீண்டதாகவரைப்போன்று நினைக்கிற பாசிசகுணத்தை வேரறுக்கவேண்டிருக்கிறது.. உண்மையில் நன்மை மட்டுமே நெஞ்சில் கொண்டு நடக்கும் உயர்சேரிக்குணம்.. பாசிச சிந்தனையிலேயே இருப்போர்க்கு வராது.. கிரிஜா.. என் மகள் Straightforward எதையும் மறைக்காமல் நேரடியாக பேசகூடியவள் என சொல்கிறீர்..ஆம் அதனால்தானோ மற்றவரை தாழ்வாக நினைக்கும் பார்பன குணம் வந்திருக்கிறதா.. இந்த கும்பகோணம் ரகுராம் மகளுக்கு.. இது Straightforward அல்ல Arrogance ஆணவம்.. .. மகளுக்காக மன்னிப்பு கேட்கிற பெருந்தன்மைக்கு நன்றி!.. மன்னிக்கும் பெரும்குணம் #எங்கள்_சேரிக்குணம்… .. தோழர். ஆலஞ்சி

சசிகலா ராஜஉபச்சாரம்

சகலவசதியுடன் சசிகலா.. சிறைத்துறையின் 8 விதிகள் மீறப்பட்டு , சசிகலாவுக்கு ஏதுவான விஷயங்கள் செய்து தரப்பட்டுள்ளன சிகலாவுக்கென தனி சமையல் அறை, சமையல்காரியாக ஒரு கைதி என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது சிறைததுறை அதிகாரி சசிகலாவிடமிருந்து 8 கோடி லஞ்சம் பெற்று இதுபோன்ற அத்தனை சலுகைகளையும் செய்துள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா குற்றச்சாட்டு.. .. ஏன் சிறைக்கு சென்று ஆய்வு நடத்தினீர்களென சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாரயணன் கேள்வி பதில் அளித்தவர் எனக்கு ஆய்வு செய்ய அதிகாரமிருக்கிறது.. அதோடு மிகப்பெரியளவில் (லஞ்சம்) கையூட்டு பெற்றுக்கொண்டு உயர்அதிகாரிகளே வசதியை செய்துகொடுக்க உத்திரவிட்டிருப்பதும் ₹8கோடி வரை பணம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.. .. ஏதோ இன்றைக்குதான் சிறை அதிகாரிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு செய்வதைபோல ஊடகங்கள் வரிந்துகட்டி செய்திவெளியிட்டிருக்கிறது. இந்திய சிறைச்சாலைகள் ஏழைகளுக்குதான் கடினமே தவிர வசதிப்படைத்தவர்களுக்கு சொர்க்கம் .. சிறையில் இருப்பவர்களின் அதிகாரயுடையோராய் இருந்தால் எல்லாம் கிடைக்குமென்பது அரசாள்வோருக்கு தெரியும். ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்தபோது எப்படியெல்லாம் சட்டமும் சிறையும் வளைந்து கொடுத்தது.. அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லையே.. உயர் #நீதி_பீடங்கள் இறங்கி வந்து யாருக்கேனும் இவ்வளவு அவசரத்தில் (ஜாமீன்)பிணை வழங்கியதுண்டா.. குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வழக்கை முடிக்கவேண்டுமென உத்தரவிட்டதுண்டா.. கணிதப்பிழையை காட்டி விடுதலை செய்தததுண்டா .. மேல்முறையீட்டு விசாரணை முடிந்தும் தீர்ப்பை வழக்கின் பிரதானவர் சாகும்வரை தள்ளிவைத்ததுண்டா .. இறுதிதீர்ப்பில் இடையில் தந்த கணிதமேதையின் தீர்ப்பை ரத்து செய்ததே ஏன் அவரை தண்டிக்கவில்லை குறைந்தபட்சம் கண்டிக்கவில்லை பணம் பெற்றுக்கொண்டு தீர்ப்பை வழங்கியதாக சொல்லப்பட்டதை ஏன் விசாரிக்கவில்லை.. நீதிபதி கர்ணன் நீதிகள் விற்கபடுகின்றன என்ற போது துரத்திதுரத்தி கைதுவரை வந்தவர்கள் ஏன் தவறான தீர்ப்பை தந்தவரை கேள்விகேட்கவில்லை.. பணம் பணம் பணமிருந்தால் அதைவிட உயர்ந்தவராக..? இருந்தால் சட்டம் சிறைச்சாலை நிர்வாகம் அரசு எல்லாம் வளையும்.. .. ஆனால் சசிகலா முதல்வராக வர நினைத்தும் செத்துகிடந்தவனெல்லாம் கூக்குரல் போடவில்லையா.. ஆஹா கொள்ளைக்காரி மாபியா ஆட்சிக்கு வரலாமா என்னாவது இறையாண்மை என கூச்சலிட்ட கூட்டம் என்றைக்காவது ஜெயலலிதா தான் முதல் குற்றவாளியென பகிரங்கமாக கிரிமினல் நம்பர்1 என சொன்னதுண்டா.. ஆனால் சசிகலாவிற்காக கொதித்தெழுவார்கள்.. .. சசிகலா என்றில்லை பணம் படைத்தவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்... மறுக்கமுடியாது அது இந்திய அதிகாரவரம்பில் புரையோடி போயிருக்கிற விடயம் காசு கொடுத்தால் எதுவும் நடக்கும்.. குற்றவாளியென அறிவித்த ஜெயலலிதாவையே மத்திய அமைச்சரே சந்தித்து பேசியதை விட இதொன்றும் பெரியவிடயமல்ல.. பணம் அல்லது ஆதரவு என்கிற லஞ்சம் இதுதானே ஜெயலலிதாவை சந்திக்கவைத்தது.. இதெல்லாம் அத்துமீறல் அயோக்கியத்தனமென சொல்லாமல் மௌனம் காத்த நாம் சசிகலாவிற்கு வரம்புகள் மீறப்பட்டவுடன் பொங்கியெழுகிறோம்.. .. சிறை..அரசாங்கம் அதிகாரிகள் என எல்லாவற்றையும் தன் அதிகாரத்தால் வழிநடத்த முடியகிற உச்சநீதிமன்றத்தையே சிலரால் வழிநடத்தமுடியுமென்கிற போது.. இவையெல்லாம் நகைப்பிற்குரியது .. #பணம்_பத்துஅல்ல_பதினொன்றும்செய்யும்... தோழர். ஆலஞ்சி

Wednesday, July 12, 2017

சேரிக்குணம்

நான் பகுத்தறிவளனாக இருப்பதால் குறிவைக்கப்படுகிறேன் கமல்ஹாசன் .. கலாச்சார சீரழிவென்பதை ஏற்க முடியாது என்பதும் இப்படி உடையணியலாமா என்ற கேள்விக்கும் சரியான பதிலை தந்தவர் சேரி பிகேவியர் (சேரிக்குணம்) என்ற ஆட்டக்காரி காய்திரியின் பேச்சுக்கு ஸ்ரிப்ட் திரைக்கதை என்னுடையதல்ல என சொல்லி போய்விட்டார் Mr.Big boss பிக்பாஸ் இதுதான் பதிலா.. சினிமாவோ சின்னத்திரையோ தமிழக மக்களின் வாழ்வில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்திருக்கென்றாலும் எங்கள் பண்பாட்டை சிதைத்துவிடவில்லையென இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.. எங்கள் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதால் இது பற்றியெல்லாம் கவலையில்லை எத்தனையோ மாற்றங்களென்ற பெயரில் தாக்குதல் நடத்திய போதும் இன்னமும் நிலைத்துநிற்கிற பண்பாடு எங்களுடையது.. .. உடை விடயத்தில் யார் எதை உடுத்தவேண்டும் என்று நிர்பந்திப்பது அவரவரின் உரிமை என்பதை அறிவோம் யாரும் யாரையும் இதை உடுத்தவேண்டும் இப்படிதான் நடக்கவேண்டும் கட்டாயப்படுத்துவதில் உடன்பாடில்லை.. எனினும் பேச்சில் செயலில் அடுத்தவரை தாழ்வாக எண்ணும் பாசிச திமிர் போக்கை எதிர்க்க கேள்வியெழுப்ப உரிமை உண்டு .. அதென்ன சேரிக்குணம் .. சேரி என்றால் சேர்ந்துவாழும் வாழ்விடயத்தை குறிக்கும் அவ்வளவுதான் அக்ரஹாரத்தை பார்ப்பனச்சேரி என்றழைத்திருக்கவேண்டும்.. சேரி என்றாலே யாரோடும் சேராத தீண்டாதகவர்களின் உறைவிடம் போல் சினிமாக்களும் நாடகங்களும் மக்களிடம் மிகப்பெரியளவில் எடுத்துச்சென்றதும்.. அதை தொடர்ந்து அரசும் அதே மனப்பான்மையை கொண்டிருப்பதும் உண்மையில் வெட்ககேடானது.. .. உண்மையில் சேர்க்குணம்.. யாரையும் தீண்டதகாதவர் என பறையாத யாரையும் உதாசீனம் படுத்த்தாத அடுத்தவர் உழைப்பில் வாழாத யாரையும் ஏமாற்றி பிழைக்காத.. உயர்ந்த குணமுடையோர்.. பகட்டான வாழ்க்கை என்ற பெயரில் ஏமாற்றி வஞ்சித்து கூடஇருந்தே குழிப்பறித்து சகமனிதனை இழிவாக பேசாத உன்னதர்கள் குணம் #சேரிக்குணம். .. #கமல்_கறுப்புச்சட்டை..? .. தோழர். ஆலஞ்சி

தளபதி

பாமக.. அன்புமணி வகையறாக்களுக்கு.. முதலில் எதிரியின் பலமறிந்து அதோடு தன் பலமும் அறிந்து மோது என்பார்கள்.. எந்த தொகுதியிலும் தனித்து நின்று வெற்றிபெற முடியாத ..சிலதொகுதிகளில் குறிப்பிட்ட எழட்டு சதமானம் வாக்குகளும் பலவற்றில் கட்டிவச்சகாசும் (டெபாஸிட்) போகும் நிலைதான் தங்களுக்கு என்கிற போது சும்மாவாவது உள்ளேன் அய்யா சொல்வதற்காக திமுகவை விமரிசிப்பதும் ஒன்டிக்கொண்டி வரீயா என கேட்பதும் சிறுப்பிள்ளைதனமாக இருக்கிறது.. .. நீங்களும் தான் அன்புமணியை முதல்வராக ஏற்கிறவர்கள் கூட்டணிக்கு வரலாமென்று கூவி கூவி அழைத்தும் யாருமே சீந்தவில்லையே காரணம் புரியவில்லையா யாரும் தற்கொலைக்கு தயாரில்லை என்று பொருள்.. இப்போது அதிமுக பலவீனப்பட்டிருப்பதால் அதிலிருந்து ஏதாவது கிடைக்குமா என நினைத்து காத்துகிடப்பதும் மக்களிடம் வேறு ஏதாவது ரீதியில் ஆதரவு வருமா என எதிர்பார்ப்பதும் தவறில்லை.. அதிமுக இப்போது சிதறுண்டு இருந்தாலும் சில வருடங்களில் அது மெச்சபடாவிட்டாலும் சசிகலாவின் கீழ் ஒன்றாகும் அவர்களுக்கு அதைவிட்டால் வேறுவழியில்லை.. ஆனால் பாமகவிற்கு எந்தநிலையிலும் ஜாதிய வளையத்தை மீறிய வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.. காரணம் எளிது நீங்கள் உங்கள் ஜாதியை உயர்த்தி பிடிக்கிறபோது மற்றவர்கள் அவர்கள் தங்கள் ஜாதியை/பிரிவை உயர்த்திப்பிடிப்பது இயல்புதானே.. மற்றொரு விடயம் 108 ஆம்புலன்ஸ் சேவையை தான் கொண்டுவந்ததாக பேசிவருகிறீர் முதல் முதலில் ஆந்திர சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் தேசம் முழுவதும் ஒரே எண்ணில் விளிக்கும் சேவை வேண்டுமென வழக்கே தொடர்ந்திருந்தால் அது நடப்பில் ஆக்கிய போது பதவியில் இருந்தீர் அவ்வளவுதான்.. அது கூட திமுக தயவில் கலைஞர் போட்டது என்பதை மறந்து பேசுகிறீர்.. அந்த எண் 108 வழங்கியது ராசா என்பதால் அவர் மார்த்தட்டிக்கொள்ளவில்லை இதெல்லாம் அரசு செய்யவேண்டியவை.. .. மற்ற கட்சிகளின் தயவில்லாமல் செல்வாக்குள்ள தொகுதிகள் என நம்பியவற்றில் கூட திண்டிவனத்திலிருந்து தர்மபுரி சென்று நின்றும் கட்டிவச்ச காசை பிடிங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்கள். மற்றவர்கள் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட சீலம் அதை மாற்ற முடியாது .. திமுகவோடு மோதுவதற்கு முன் பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள் கடைசியில் இருக்குமிடம் தெரியாமல் மதிமுகவை போல மெல்ல கரைய வேண்டிவரும் .. இது பாமகவிற்கு மட்டுமல்ல முதல்வர் கனவோடு அரசியல் வண்டி ஏறும் அனைவருக்குமானது.. திரு.ஸ்டாலின் அரசியலுக்கு வந்தவுடனே முதல்வர் பதவியை குறிவைக்கவில்லை எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான் அவர் மீதான மக்களின் அரசியல்பார்வை கனிவானதாக இருந்தது.. வாய்ப்பை எளிதில் தட்டி பறிக்கலாமென்ற நிலையிலும் மக்கள் தரவேண்டுமென காத்திருக்கிற அதுவரை பணிசெய்துகிடப்போம் என்கிற பெருமைமிகு செயல் அவரை உயர்த்திற்கு கொண்டுபோகிகிறது.. கலைஞர் மகன் என்பதால் தான் காலதாமதம் ஆனதே தவிர அது அவருக்கு மிகப்பெரிய அணுசரனையான நிலை கொண்டுவரவில்லை.. ஆலமர நிழலில் எவுதும் வளரமுடியாது என்கிற நிலைதான் இருந்தது.. காலம் செதுக்கி செதுக்கி பண்பட்ட தவைவராக .. வரும்கால வரலாற்றில் நிலைபெறுகிறவராக தயார்படுத்தி தந்திருக்கிறது.. .. அவசரபடுவோரே கேளுங்கள்.. பதவி தேடி வரவேண்டும் மக்கள் தரவேண்டும் தவிர நான் தான் அழகானவன் அன்பானவன் என கூவி திரிவதில் பலனில்லை... மக்கள் தீர்மானிக்கவேண்டும்.. யார் அழகான அமைதியான அன்பான.. திறமையான தகுதியானரென்று.. புரிகிறதா.. .. #தளபதி_தமிழர்களின்_மகுடம்.. .. தோழர். ஆலஞ்சி

Tuesday, July 11, 2017

ஈதல்

இரக்கமற்றுப்போன சமூகத்தில்.. இன்னமும் ஈரமிருக்கிறதா.. .. யார் குற்றம்.. எல்லாம் எனக்கானது என்ற பேராசையா.. நம்மில் ஈதல் இசைப்பட வாழ்தல் மறந்துபோனதேன்.. .. விளைந்து குவிந்து கிடந்த நெற்குவியலை குருவிகள் கொத்தி திண்ணும் ச்சோ என விரட்ட போனேன்.. அதற்கு சேர்த்துதான் விளைச்சல் என்றார் என் பெரியப்பன் .. .. ஆம் .. என்னிடம் தந்ததெல்லாம் எனக்கானது மட்டுமல்ல வறியவன் யாசிக்கும்போது கொடுத்துதவ.. என்னிடம் தரப்பட்டிருக்கிறது.. என்பது புரிந்தது.. .. மரைக்கால் அளவுகளில் கொடுத்தவனின் வழிவந்தவர்கள் கைப்பிடியளவில் கூட தந்துதவ மறுப்பதேன்.. பேராசையா.. மனம் மரத்துப்போனதா.. .. இன்னமும் கொஞ்சம் ஈரமிருக்கிறது.. வறண்டு போகாமல் இருப்பதை பகிர்ந்தளி.. உனக்கானது போக எஞ்சியதை கொடுத்துதவு.. காலம் கடந்தும்.. வாழ்வாய் இப்புவியில்.. .. எனக்காதெல்லாம் எனக்கானதல்ல என்றுணரு... .. தோழர். ஆலஞ்சி

Monday, July 10, 2017

கோமாளிகள்

சைவ உணவு சாப்பிட்டும் கோபம் ஏன்.. கஞ்சா கருப்பு இடம் கமல்ஹாசன் கேள்வி.. அடிக்கடி கமலிடம் தலைகாட்டும் திமிர் இது.. அவரை சொல்லி குறையில்லை .. இவரைப்போல நிறைய பேரை நாங்கள் கண்டிருக்கிறோம்.. பகுத்தறிவு பேசும் பழைமைகள் அசைவம் தின்கிறவன் மிருகமென சொல்லவருகிறாரா.. அல்லது சைவ உணவை உட்கொள்கிறவன் சாது என நம்பவைக்க முயல்கிறாரா.. .. அசைவ உணவில் புரத சத்து அதிகம் வல்லமையை தரும் உடல் தினையளவை அதிகரிக்கும் உடல் உழைப்பு செய்வோருக்கு அதிக புரதம் தேவைப்படும் இவை சைவ உணவில் அதிகம் கிடைப்பதில்லை அதே நேரம் உணவு பழக்கமென்பது சிறு வயது முதலே பழக்கப்படுகிற .. நம்மை சார்ந்தவர்களின் உணவுமுறைகளை பின்பற்றி வருவது.. சைவம் சாப்பிடுகிறவனை உயர்ந்தவனாகவும் அசைவம் சாப்பிடுகிறவன் முரடனாக தான்தோன்றியாக அதிகம் உணர்ச்சிவயப்படுவனாக .. முட்டாளாக காட்ட நினைக்கும் பாசிசக்தின் குரலை .. அதே வழியில் வந்த கமல் சொல்வதில் எங்களுக்கு வியப்பொன்றும் இல்லை.. .. தோழர் மதிமாறன் அடிக்கடி சொல்வார் கமல் பெரியாரை முகமூடியாக கொண்டு நடக்கிறாரென்று ஆம் அவரது படங்களை சற்று கூர்ந்து கவனியுங்கள் புரியும்.. தசாவதாரத்தில் கூட பிராமணனை உயிரோடு கடலில் இறக்கியதால் தான் சுனாமி வந்ததைப்போல காட்சி இருக்கும் சுனாமி சிலையை கொண்டுவந்து கரைசேர்த்ததைப்போல காட்சி அமைந்திருக்கும்.. ஆனால் வெளியில் வேசம் கட்டுவதில் கைதேர்ந்தவரென்பதால் நாமும் கவனித்து சிரித்துவிட்டு நகர்ந்து செல்கிறோம்.. நிறைய முறை நான் பதிவிட்டிருக்கிறேன் கமல் சிறந்த நடிகர் திரையில் மட்டுமல்ல.. .. மற்றுமொரு திரை நட்சத்திரம் விசு .. நான் ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பங்கேற்பேன் என்கிறார்.. யார் அவரை தடுத்தது.. அவரின் மணல்கயிறு படத்திலேயே 1967 க்கு பிறகு பேண்ட் சட்டை போடுறதையே விட்டுட்டேன் என்பார்.. நாமெல்லாம் பேண்ட் சட்டை போடுவதால் எரிச்சல் வந்தால் நாம் போடதான் செய்வோம்.. எப்போதுமே நன்றி கெட்டவராக தான் விசு இருந்திருக்கிறார்... அரட்டை அரங்கத்திலிருந்து TRP குறைந்ததால் கலாநிதிமாறன் அவரை நீக்கம் செய்தார் உடனே கலைஞரை சந்தித்து எனது இரண்டாவது பெண் திருமணத்தை வைத்திருக்கிறேன் இந்த நேரத்தில் என்னை நீக்கினால் பொருளாதார ரீதியாகவும் கஷ்டம் வருமென்ற போது கலைஞர்தான் அவருக்கு மேலும் ஒரு வருடம் வாய்ப்பை தரும்படி கூறினார்.. ஒரு வருடம் முடிவதற்குள் ஜெயலலிதா சந்தித்து ஜெயா டிவியில் ஒப்பந்தம் செய்துக்கொண்டார்.. அன்றைக்கு சசிகலா உதவி செய்யாமல் இருந்திருந்தால் இருக்குமிடமே தெரியாமல் போயிருக்கும்... ஆனால் சசிகலாவிற்கு எதிராக கம்பு சுத்தினார்.. காரியம் நடக்கிறவரை காலைப்பிடிக்கிற ரகம்.. .. நிறைய கோமாளிகள் வருவார்கள் கண்டு ரசிப்போம் அரிதாரம் கலைந்தால் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்பதை உணர்வோம்.. .. தோழர். ஆலஞ்சி

விவரகேடு

திமுகவை அரசியல் ரீதியாக பாஜக ஆட்டுவிக்கும்.. விமானநிலைய செய்தி தொடர்பாளர்.. .. முதலில் நிற்க முடியுமா என பாருங்கள் காரணம் எளிது ஆளும் அதிகாரமிருப்பதால் எதை பேசினாலும் கேட்டுக்கொள்வார்களென எண்ணி பாஜகவினர் அடிக்கும் கூத்து அவர்களுக்கெதிராகவே திரும்பும்.. அதிமுகவின் வீழ்ச்சியில் சுவரேறி குதிக்க நினைக்கும் போது விழும் இடம் பாதாளமென அறியாமல் போவதுதான் வேடிக்கை .. .. தமிழகத்தில் திராவிட சிந்தனை மக்களின் இரத்ததிலேயே ஊறிப்போனது இங்கே ஜாதி பேசுவான் கோவிலுக்கு போவான் ஆனால் வெறிக்கொண்டு அலைய மாட்டான் இது எல்லா ஜாதி மதத்தினருக்கும் பொருந்தும் சிறுபான்மையினர்கள் கூட குறிப்பாக முஸ்லிம்களம பெருவாரியானோர் திமுகவைதான் பின் துணைப்பார்கள் .. திமுக பாஜகவோடு கைகோர்த்த போது கூட இயக்கங்களை சேர்ந்தவர்களை தவிர பிறர் திமுகவோடு அனுசரணையாக தான் நடந்துக்கொண்டார்கள் கோவத்தை கூட உரிமையோடு கேள்வி எழுப்பினர்.. .. ஏன் இங்கே மதவாதம் தோற்கிறதென்றால் காலகாலமாய் மாமன் மச்சானென்றெ அழைத்து பழக்கப்பட்டவர்கள் திருமண பத்திரிக்கைகளில் கூட மதம் கடந்து பெயரிடும் வழக்க கொண்டவர்கள் ..அதுமட்டுமல்ல பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இந்த சமூகத்தை தங்களின் அரசியல் பார்வை கொண்டு காத்துநின்றார்கள் இப்போதும் அதே பார்வையில் தளபதியின் தலைமையில் தமிழகமக்கள் சேர்த்திணைந்து செயலாற்ற காத்திருக்கிறார்கள்.. சில சில உதிரிகள் ஜாதிகளை சொல்லி மதவெறியை தூண்டி கூறு போட நினைக்கும் எண்ணத்தை தமிழகம் எதிர்கொள்ளும் .. .. பொன்னரின் சமீபகால நடவடிக்கைகள் விரக்தியின் வெளிப்பாடாகதான் தெரிகிறது.. நாகர்கோவில் குறிப்பிட்ட சதமானம்/ விழுக்காடு ஆதரவிருந்தும் முக்கியத்துவமில்லாத பதவியை தந்து .. மக்கள் ஆதரவே இல்லாத நிர்மலாவிற்கு பிறப்பின் அடிப்படையில் அதிகாரத்தை தந்ததின் விளைவாக கூட இருக்கலாம்..கத்தி கத்தி பேசினாலும் யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதால் விரக்தியில் உளறலாம்.. எச் ராசாவிற்கு தருகிற மரியாதையை கூட ஊடகங்கள் தமக்கு தருவதில்லை என்ற நிலை இவரை ஏதையாவது பேசி உள்ளேன் அய்யா சொல்லவைக்கிறது.. அவ்வளவுதான்.. .. மற்றபடி இந்த திராவிடன் மீதெல்லாம் வருத்தமில்லை விவரகேட்டை கோவம் கொள்ளவா முடியும்.. .. பொன்னரே.. #நிறையதண்ணீர்_குடிக்கவேண்டிவரும்.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, July 9, 2017

திராவிடர் பூமி

வங்கத்தின் சிங்கம் மம்தா பானர்ஜி...!! மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் சௌவிக் சர்க்கார் எனும் RSS சேர்ந்தவர் சமூக வலைதளத்தில் இஸ்லாத்தை பற்றியும்,நபிகள் நாயகத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் பதிவிட்டதும்.. அதை தொடர்ந்து அப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் ஏற்பட்டது குஜராத் மாடலில் மேற்கு வங்காளத்தில் மதவாதம் தலைதூக்க கூடாது என்ற அக்கறை கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி முதற்கட்டமாக RSS சேர்ந்த சவுக்காரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பரகானாஸ் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக சுமார் 400 எல்லை படை பாதுகாப்பு வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளார்.ஆங்காங்கே சில பூசல்கள் நடந்தாலும் யாரும் கொல்லப்படவில்லை,காயப்படவில்லை என பாதுகாப்பு படை அதிகாரி உறுதிபட கூறியுள்ளார். .. இதை சரியாக பயன்படுத்த நினைத்து மதகலவரத்தை நடத்த திட்டமிட்ட பாஜக MP மீனாட்சி லேகி,ஓம் மாத்தூர்,சத்யபால் சிங் ஆகியோரை அதிரடியாக கைது செய்ய உத்தரவிட்டார் மம்தா பானர்ஜி மேலும் பாஜகவின் கரூபா கங்குலி விமான நிலையம் வந்த சில மணித்துளியிலேயே கைது செய்து மேற்கு வங்கத்தில் அமைதியை நிலை நாட்டினார் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்.. .. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் ,மேற்கு வங்க ஜமாஅத் இ இஸ்லாம் இயக்கத்தின் தலைவர் முஹம்மது நூருதீன் அவர்கள் "சமூக வலைதளங்களை மாநில அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும்,மதவாதத்தை தூண்டுபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கைது செய்து வங்காளத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வழிவகை செய்யவேண்டும்"எனவும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதான் மதசார்பின்மை .. யாராக இருந்தாலும் கலவரத்தை தூண்ட நினைப்பவர்களை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் .. மம்தாவின் செயல்பாடுகள் நமக்கு சில விசயங்களை உணர்த்தியிருக்கிறது..மதவெறிபிடித்க பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து வங்கத்தை காத்திருக்கிறார். இதே போன்ற பிற மாநில முதல்வர்களும் நடந்துக்கொண்டால் நிச்சயமாக நாட்டில் மதத்தின் பெயரை சொல்லி நடக்கும் கலவரங்கள் இல்லாமல் போகும்.. .. .. இங்கே தமிழகத்தில் மத்திய அமைச்சராக இருக்கும் பொன்.ராதா இந்து முன்ணணியினரை தாக்கினால் கலவரபூமியாக தமிழகம் மாறும் என்கிறார்.. இதுபோன்று பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல .. இந்திய அரசியமைப்புக்கெதிராக ஏற்றுக்கொண்ட சத்திய ரகசிய பிரமாணத்திற்கெதிராக .. கலவரத்தை தூண்டும் வகையில் அமைச்சராக இருந்துக்கொண்டே பேசுகிறவர் பதவிவகிக்க தகுதியற்றவராகிறார்.. ஏற்கனவே வெத்து பதவியை வைத்துக்கொண்டு விமானநிலைய பேச்சாளராக வலம் வரும் திறமையற்றவர் வாயடைக்க வேண்டும்.. .. தமிழகத்தில் குஜராத்மாடலை கலவரத்தை கொண்டுவர பெரும் முயற்சி எடுத்துவரும் பொன்னர் வகையறாக்களுக்கு .. தமிழகம் வேறுமாதிரி பதிலடி தரும்..பெருங்கிழவனின் பெருந்தொண்டால் பண்படுத்தப்பட்ட நிலமாய் .. எதையும் எதிர்கொள்ளும் அஞ்சாமையோடு எவரையும் அறிவெனும் ஆயுதம் கொண்டு வெல்லும் ஆற்றல் பெற்றவர்கள்.. ஜாதியை மதத்தை சொல்லி பிரிக்க நினைக்கும் கேடுகெட்ட செயல் இங்கே ஈடேறாது.. .. தமிழகத்தில் அதிமுகவெனும் நொண்டி குதிரையில் ஏறி சவாரி செய்யலாமென்ற ஆசை படிப்படியாய் நிராசையாக கண்டு எதேதோ உளறி கொட்டிகிறார்.. மத்திய அமைச்சர்... வங்கத்து சிங்கத்தைப்போல இங்கே திராவிட சிங்கமாய் தளபதி இருக்கிறார் திமுக ஆட்சிக்கு வரும்போது இருக்குமிடம் தெரியாமல் போவார்கள் மதவெறிகொண்டலையும் அறிவிலிகள்.. .. #போபோ_இதுதிராவிடர்பூமி.. .. தோழர். ஆலஞ்சி

Saturday, July 8, 2017

நாடு..சுடுகாடாய்

ஒரு சிலரால் பாஜகவின் பெயர் கெடுகிறது முரளிதர்ராவ்.. யாரால்.. புதுமண தம்பதியர்களுக்கு ஆணுறையை இலவச வழங்கும் மொட்டபய யோகியால.. தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாகிறது.. தினம் தினம் 100 பேர் பாஜகவில் சேர்த்துவருகிறேன் என பச்சையாய் புளுகும் பொன்னராலா.. மாதமொருமுறை புதிய இந்தியா பிறந்ததென சொல்லிவிட்டு ஊர்ச்சுற்றி திரியும் மோடியாலா.. யாரால் சொன்னால் நல்லது.. .. சாமியாரை கொண்டுவந்து ஆட்சியல வச்சா அவனும் மத்தவனமாதிரி திருட்டடுத்தனமா ஜோலியை முடிச்சுக்கிற மாதிரி இருக்க சொன்ன எப்படிடா புள்ளை குட்டியை பெத்து வம்சத்தை வளர்க்கவேண்டாமா.. அதற்கு மோடி மாதிரி பெண்டாட்டிய விலக்கி வச்சுட்டு ஊர் சுத்த போயிடலாமே தேசப்பற்றுன்னு சொல்லிகிட்டு.. தினம் தினம் இந்த மொட்ட பசங்களோட தொல்லை தாங்கமுடியல.. அறிவின் வெளிச்சமே அறியாத கூட்டமாய் திரிகிறார்கள்.. காமம் என்பது மனிதனின் அபிலாசைகளுள் ஒன்று ஒரு உணர்வு அது எல்லோருக்கும் வரும்.. சும்மா பிரம்மச்சாரியா வாழ்வேன்னு சொன்னா அவன் ஒன்னாநம்பர் அயோக்கியன் திருட்டுத்தனமா சுகத்தை அனுபவிப்பவன் பிறர் வாழ்வில் தேவையில்லாமல் இடைஞ்சலை தருபவன் .. ரள்ள உறவில் மகிழ்ந்து கொண்டே பிறரை ஏமாற்றுகிறவனாகவே இருப்பான்.. இல்லையென்றால் செத்தவனாக.. ? செத்த கிளியாக இருக்கும் .. காமம் உணர்வு அது எல்லோருக்கும் இருக்கும் அதை நேர்மையான முறையில் அடைந்து கொள்ள .. வடிகாலாய் அமைவதரதான் திருமணம்.. ஒப்பந்தம் Give it together .. அதிலும் ஒரு மரியாதை இருக்கிறது ஆனால் ..மற்றதில்..? .. மோடி.. இஸ்ரேலுக்கு போனா தொப்பி போடுவார் இங்கே இருந்தால் முஸ்லிம் ஆசையோடு கொடுத்தார் மறுப்பார்.. அரபுநாடு போனால் காலில் கூட விழுவார் ஜூனைத் படுகொலை செய்யபட்டால் கூட குறைந்தபட்ச இரங்கலையோ வருத்தத்தையோ சொல்லமாட்டார் இஸ்ரேல் சிறுவனை ஆரத்தழுவி அனைத்து சிறந்த நடிப்பை வெளிகொணருவார்.. கொள்கை எல்லாம் இல்லை மனதில் குரோதம் மட்டுமே மக்களை சாதியை சொல்லி பிரித்து அவர்களுக்குள் சண்டையை மூட்டி மதவெறியை மூட்டி அதில் குளிர்காய்கிற பாசிசத்தின் சொல்படி நடக்கிற தலையாட்டி அவ்வளவுதான்.. .. இந்த தேசம்இதுவரை இப்படிப்பட்ட கேடுகெட்டவர்களை சந்தித்ததில்லை தினம் தினம் ஒரு பிரச்சனை மாட்டிற்காக மனிதனை வெட்டலாம் தவறில்லை சிறிய தொழில் முனைவோரே கடன்காரனாக்கலாம். ஆனால் பெருத்த முதலைகளுக்கு வெண்சாமரம் வீசி நாட்டை அடகுவைக்கலாம். வலுத்தவனுக்கான நாடாய் இந்தியா மாற தொடங்கியிருக்கிறது.. வலுத்தவனுக்கு கிடைக்கும் நீதி இங்கே சாமானியனுக்கில்லை.. மொத்தத்தில் #மதவெறியர்களால்_நாடு_சீரழிகிறது... .. தோழர். ஆலஞ்சி

Friday, July 7, 2017

திராவிடம்

அதிமுக அழிந்த கதை என்று விகடன் அட்டை படத்தில் அச்சிட்டிருக்கிறது.. அதிமுக தொண்டர்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக தான் உள்ளது.. அதிமுக கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி அல்ல அல்லது சமூகத்தின் நடக்கும் அநீதி கண்டு அதற்கெதிராய் போராட உருவாக்கபட்ட இயக்கமல்ல.. தனிநபரின் அபிலாஷைகளுக்காக .. தனிநபரின் விருப்புவெறுப்புகளுக்காக துவங்கப்பட்டது.. கவர்ச்சியும் பொய்யும் மூலதனமாய் தமிழனின் மூளை மழுங்க செய்யும் நிழலின் மீதான காட்சியும் ரசனையும் அதிமுக தொடங்க போதுமான காரணமாக இருந்தது.. .. சினிமாவில் கவர்ச்சிக்கு கிடைத்த புகழை மாலைநேர கேளிக்கையை நிஜமென நம்பிய மக்களின் அறியாமை கொண்டு.. நிழலின் ரசிகர்களின் உழைப்பில் ஆர்வத்தில் அவர்களை சிந்திக்கவிடாது செய்த கைங்கரியத்தில் உருவான கட்சி சினிமாவில் காணும் நடிப்பை .. நம்பிய ஏமாளித்தனத்தால் மிக பெரிய சக்தியை போல் ஊடகங்களும் ஆரிய பாசிசமும் நம்பவைத்ததில் கிடைத்த வெற்றி .. அது நீண்டநாள் நீடிக்காதென ஆரம்பம் முதலே அறிந்திருந்ததால் வியப்பொன்றும் இல்லை.. .. Mass personality வெகுஜன ஆளுமை.. திறமையால் வந்ததல்ல என்றாலும் கவர்ச்சி அரிதாரம் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட பொய் குதிரையை நம்புகிற கூட்டத்தால் மிகப்பெரிய ஆளுமையை போல் கட்டமைத்து காண்பிக்கபட்டது காற்றடைத்த பலூன் என்றறியாமல் உயர பறந்ததை விண்நோக்கி பார்த்து நின்றிருந்தது தமிழகம்.. காற்று போன பிறகு தான் தெரிந்தது அது எதற்கும் உதவாதென்று. மகோராவையும் (எம்ஜிஆர்) அதை தொடர்ந்து ஜெயாவையும் தூக்கி பிடித்து நின்றது ஊடகங்களும் பார்பனீயமுமே அல்லாமல் வேறொன்றுமில்லை.. தனி தலைவர்களிடம் அடிமையாய் சொரணையற்று விவாதிக்கவோ விவரிக்கவோ திராணியற்று .. மதி செயலிழந்த மூடர்களின் கூடாரம் சிதறிபோவதில் வியப்போ அதிர்ச்சியோ இல்லை... .. முதலில் நிற்க இடமும் காலில் பலமும் வேணேடுமென்பதை மறந்து கரயான் அரித்துக்கொண்டிருக்கும் கட்டைக்காலே போதும் என நினைக்கிற கூட்டம் எப்படி கட்டிகாக்கும்.. ஜானகி ஜெயா அணியென பிரிந்தபோது ஜெயாவின் ராஜகுரு சோ சொன்னதை கேட்டதால் தான் ஜெயலலிதாவால் நீண்டநாட்கள் ந்ற்க முடிந்தது. கட்சியா ஆட்சியா என்று வருகிற போது கருணாநிதியை போல கட்சியை கைக்குள் வைத்துக்கொள்ளுங்கள் ஆட்சியை பிறகு பார்த்துக்கொள்ளலாமென்றார்.. திமுக ஒவ்வொருமுறை சிலரால் உரிமை கொண்டாடி போதும் கலைஞர் கட்சியை கட்டுகோப்போடு தன் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.. ஆட்சியில் இல்லாத போதும் கட்சி முக்கியமென்று செயலாற்றினார் அதைதான் ஜெயலலிதாவிற்கு சோ எடுத்துரைத்து கட்சி முக்கியமென்றார்.. .. ஆனால் இப்போது கட்சியை விட இருக்கிற காலத்தை அதிகாரத்தோடு கழிக்கவேண்டும் அதைவிட எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு கட்சியாவது கொள்கையாவது இருக்கிற வருடங்களில் நாலு காசு பார்த்து விட வேண்டுமென செயல்படுவோரால் கட்சி அழியதான் செய்யும்.. .. எந்த கொள்கையும் இல்லாதவர்களால் தொடங்கபட்ட கவர்ச்சி கோட்டை (அதிமுக) அடித்தளம் வலுவிழந்ததால் விழுந்துவிடும் அபாயத்தில் .. இருக்கிறது.. ஆனால் சிலர் அதிமுகவை திராவிட இயக்கம் போல் காட்டி முடிந்தது பார் திராவிடமென கூக்குரலிடுகிறார்கள் உண்மையில் திராவிட இயக்கம் திமுகதான்.. மிக தெளிவான கொள்கைகளோடு நாட்டின் சமூகநீதியை நிலைநாட்ட மிக சரியாக திட்டமிடபட்ட வழியில் பயணிக்கிற இயக்கம் திமுக.. கொள்கை மறவர்களால் அவர்கள் தம் தியாகங்களால் தொடர்ந்து இயங்குகிறது அதனால் தோற்றாலும் அடுத்த நாளே சலவை செய்ய கரை வேட்டியோடு மக்களை கம்பீரமாய் சந்திக்க முடிகிறது. எத்தனை சூழ்ச்சிகள் பொய் வழக்குகள் ஊழல் குற்றம்சாட்டி பொய் பிரச்சாரங்கள். எல்லாவற்றையும் ஜனநாயகநெறிமுறைகளோடு சந்திக்க முடிகிறது.. தோற்றபோதும் கம்பீரத்தோடு எழுந்துநிற்க முடிகிறது.. திராவிடம் நின்று கதைக்கும் ஆம்..திமுக #எஃகுகோட்டை .. #திராவிடம் .. .. தோழர். ஆலஞ்சி

Thursday, July 6, 2017

சொரணையற்ற..

இந்துத்துவா என்று சொல்லாதீர்கள் ஆரியம்ன்னு சொல்லுங்கள்.. விலைப்போன அடிமாடு.. பெரியார் மிக சரியாக சொல்வார் நம்மாளுங்க நல்லவிலைக்கு போனகூட பரவாயில்லை குறைஞ்சவிலைக்கு போறானே என்பார் ஆம் குறைந்தவிலை கூலிகள். .. பெருமாள்மணி போன்று நிறைய பேரை வழிநெடுக கண்டிருக்கிறோம்.. அடிமையாய் இருப்பதை இழுக்கென்ற கருதாக ,ஏன் சுமக்கிறோம் என தெரியாமல் சுமக்கும் கோவேரிகள்.. ஆரியம் என்றழைக்க வேண்டுமாம்.. இதிலிருந்து பாசிசத்தை மதவெறி கொண்டு நடக்கும் மடையர்களை தவிர்க்கவேண்டும் அப்படிதான் பொருட்பட பேசுகிறார்.. நீ வேண்டுமானால் நான் இடைசாதி என கூறி திரியலாம் அவனுக்கு நீயும் சூத்திரன்தான்.. தேவடியாமகன்தான் என்று பெரியார் மிக அருமையாக சொல்லிவிட்டுபோனார்.. .. இந்துத்துவா என்பதே பார்பனனை தவிர மற்றவர்களை அடிமைபடுத்தும்.. அவனுக்கு மட்டும் நீதி வழங்கும் மற்றவரை தரம்பிரித்து படிபடியாய் இறக்கிவைக்கும் ஈனச்செயலை .. மதம் சடங்கு சம்பிரதாயம்.. அதைவிட தெய்வசெயல் என பயத்தோடு நம்மை அடக்கியாள நினைக்கும் நயவஞ்சகம்.. இதை எப்படி அழைத்தாலும் சரிசமமாக முடியாது என்பதை உணராதவரை.. நிறைய தலையாட்டும் பெருமாள்கள் தோன்றிகொண்டே இருப்பார்கள்.. .. நேரடியாய் எதிர்போரைவிட நம்மோடு இருந்தே குழிபறிக்கும் கேடுகெட்டவர்களிடம்தான் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.. மொழியென்றும் இனமென்றும் சாதியென்றும் மதமென்றும் வருவார்கள் கடைசியில் வெறிபிடித்தவர்களை திடீரென குதறுவார்கள்..உண்மை இனபற்றோ..மொழிப்பற்றோ ஏன் தேசப்பற்றோ இவர்களிடம் இல்லை மாறாக ஏதாவது சொல்லி எதையாவது பெறமுடியுமா என நவீன யாசித்தலை கௌரவமாக செய்யும் போலிகள்.. இவர்கள் விவரகேடுகள் மட்டுமல்ல சமூக கெடுதிகள்.. .. மக்கள் நலனின் அக்கறையில்லாத சமூகநீதியை விரும்பாத, அடிமைகளென்று அழைத்துக்கொள்வதையே விரும்புகிறவர்கள்.. வேறெதையும் எதிர்பார்பதில்லை வருமானத்தை தவிர.. இவர்களுக்கு தன்மானம் என்பது தெரியாது.. சொரணையற்றவர்கள்.. நிறைய பெருமாள் மணிகள் உண்டு #செத்தவர்கள்.. .. தோழர். ஆலஞ்சி