Tuesday, March 28, 2017

காவி..

18 லிருந்து 20 மணிநேரம் வரை அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டுமாம் , அப்படி முடியாதவர்கள் விலகி கொள்ளலாம்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.. .. இந்தியாவில் மன்னராட்சி வந்துவிட்டதா.அனைத்து அதிகாரமும் பெற்றவரா... அல்லது தங்களுக்கு கிடைத்த வெற்றியின் மமதை அப்படி பேசவைக்கிறதா.. அவர்களே எதிர்பார்க்காத வெற்றியை தந்தது அவர்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையால் அல்ல.. பிரிந்து கிடந்து தங்களுக்குள்ளே அதிகார சண்டையை பகிரங்கமாகவே செய்ததால் மக்கள் வெறுப்பை அவர்கள் (முலாயம் அகிலேஷ்) மீது காட்டியதால் மாபெரும் வெற்றியை தந்தார்கள்.. ஜனநாயகத்தில் இதுபோன்ற வன் வெற்றிகள் தலைகனத்தையே தரும்.. .. மதம் தலைக்கேறிய தலைவர்களை கொஞ்சம் கவனியுங்கள் அவர்களிடம் வெற்றியை தந்தால் இதுபோன்று நெறிகெட்ட செயலைதான் நடைமுறை படுத்துவார்கள்.. பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து காவிகளின் பேச்சை கவனியுங்கள்.. பிணத்தை தோண்டியெடுத்து கற்பழிக்க சொல்வதும் 70 சதவிகிதம் மக்கள் மாட்டுக்கறி உண்ணும் போது தடைசெய்வதும் அதற்காக கொல்வதும் .. இல்லாத ஒன்றுக்காக நாட்டின் வளர்ச்சியை தடுப்பதும் (சேது திட்டம்) .. பாஜகவை தவிர மதவெறியர்களை தவிர மற்றவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்க முயல்வதும் ..தொடர்ந்து செய்திகளாக ..வருகிறது.. இதோ இப்போது நாட்டின் இறையான்மையை ஒருமைப்பாட்டை சீர்குலைக்க மோகன்பகவத் குடியரசுதலைவராக வரவேண்டுமென இப்போதே நூல்விடுகிறார்கள்.. .. தமிழகத்தில் எங்கிருந்தார்கள் என தெரியாதவர்களை எல்லாம் சமூக ஆர்வலர்.. பொருளாதார நிபுணர்.. நடுநிலையாளர் என்ற போர்வையில் விவாதங்களில் தொடர்ந்து பங்களிக்க செய்வதும்.. ராசா போன்ற அரைவேக்காடுகளை வைத்து தினம் தினம் உளறவைப்பதும்.. இதோ இப்போது கூட தமிழர்கள் சோம்பேறிகள்.. பொழுதுபோகாமல் போராடிக்கொண்டிருக்கிறார்களென தலைநகரில் போராடும் உழவர் பெருமக்களை கேலி செய்வதும் நடந்துக்கொண்டுதானியிருக்கிறது.. .. உ.பியில் என்றில்லை ஒட்டுமொத்த இந்தியாவையும் காவிகள் களேபரமாக்கி கொண்டிருக்கிறார்கள்.. அதிகாரம் கையில் இருக்குவரை ஆடதான் செய்வார்கள்.. மதம் தலைக்கேறியவர்கள்.. மக்கள் திரும்பி தாக்கும் போது இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.. மதம் தலைக்கேறியவரிடம் அறிவிருக்காது சிந்கனை செயல் எல்லாம் மூடத்தனங்களால் நிரம்பி வழியும்.. சரியானதை நியாயமானதை தேர்வு செய்ய இயலாது .. மக்கள் மீதான தாக்குதல் ஒரு இரவில் பணமெல்லாம் செல்லாதென்றார்களே அதைப்போல அறிவிலித்தனமாக இருக்கும்.. அப்படியொரு அறிவிப்புதான் 18மணிமுதல் 20 மணி நேரம் உழைக்கவேண்டும்.. மதம் மடையனாக்கும்.. .. #கிறுக்கன்கள்கையில்_என்நாடு... .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment