Thursday, March 16, 2017

பட்ஜெட்..

டாஸ்மார்க் கடைகளை மூடியதே பொருளாதாரவீழ்ச்சிக்கு காரணம்.. பொருளாதார மேதை Economic Genius ஜெயகுமார்.. குற்றவாளி படத்தை ஒட்டி சபைக்குவந்து சிறையில் இருக்கும் மற்றொரு குற்றவாளியின் வழிகாட்டுதலில் நடத்தேறிய வரவுசெலவு நிதிநிலை அறிக்கை.. இதுபோன்ற கேவலம் தமிழகத்தை தவிர வேறெங்கும் நடக்காது.. இனி நடக்காது காக்கவேண்டியது மக்களின் பொறுப்பு. .. முட்டாள்கள் கையில் மூலதனம் தந்தால் முச்சந்தியில் நிற்கவேண்டும் என்பார்.. அதுதான் நடக்கும்.. வரிகளை முன்பே அதிகரித்து அறிவிப்புசெய்துவிட்டு வரியில்லா பட்ஜெட் என்பது ஏமாற்றுவேலை.. கடந்த இரண்டாண்டில் மட்டும்,இரண்டு லட்சம் கோடி கடன்சுமை.. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதிஒதுக்கப்படவில்லை அதனால் புதிய திட்டங்கள் ஏதுமில்லை.. கரும்பு விவசாயகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைதொகை 1400 கோடிகளுக்கு மேல் இருக்க 127 கோடி ஒதுக்குவதிலிருந்தே அரசின் கையில் பணமில்லை என்பதை காட்டுகிறது.. மீனவநண்பர்களுக்கு கொஞ்சம்,ஆசுவாசம் தரும் பட்ஜெட் அவ்வளவுதான்.. .. வித்தை தெரியாதவன் கையில் நூல் பொம்மைகள் தாறுமாறாக ஆடும் பொம்மலாட்டம் அதுதான் இங்கே நடந்தேறுகிறது.. உலகிலேயே கிரிமினல் பெயரை புகழ்ந்து அதுவும் சிறையில் தண்டிக்கப்பட்ட கிரிமினலை புகழ்ந்து பேசுவது அசிங்கமாக இருக்கிறது.. எதிர்க்கட்சிதலைவர் தளபதியின் பதில் சொல்ல முடியாமல் குற்றம்சாட்டப்பட்டவர் தேர்தலில் போட்டியிடலாம் என்கிறார்.. தண்டிக்கப்பட்டவர் தண்டனைக்காலம் கழிந்தும் ஆறுவருடங்கள் போட்டியிட முடியாது என செங்கோட்டையன் அறியாதவரா.. பாவம் கோபி மக்களை எண்ணி வருத்தம் தோணுகிறது.. காலில் விழும் கலாச்சார சீரழிவை துவக்கிவைத்த மானங்கெட்ட ,மதியிழந்தவரை தொடர்ந்து தேர்வு செய்து அனுப்புவதேன் .. .. சிறந்த நிதிநிலை அறிக்கையை எல்லாம் கண்ட தமிழகம்.. இப்போது அனுபவமில்லாதவர்களின் கையில் சிக்கி திணறுகிறது.. பட்ஜெட் குற்றவாளிகளின் (கிரிமினல்கள்) புகழ்பாடுகிறதே தவிர வேறொன்றுமில்லை.. கூமுட்டைகள். .. #ஆடத்தெரியாதவன்_வேசம்கட்டுகிறான்…… .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment