Monday, March 13, 2017

ராஜாஜி..பதிவிலிருந்து..

“ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டஎம் அன்னையின் மீது திகழ் அன்பெனு மேன்கொடி வாடிய காலை அதற்குயிர் தந்திருவான் --- --- --- --- --- வீரிய ஞானம் அரும்புகழ் மங்கிட மேவிய நல் ஆரியரை மிஞ்சி வளைத்திடு புன்மை.. --- --- --- --- --- வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம் வந்தே மாதரமே” இவர், இதே சுதேசமித்திரனின் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப் பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே --- --- --- --- --- வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப் பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே” எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார். இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது” என்ற பாடலில், “வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர். --- --- --- --- --- பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன், புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன். மாட்டுதீர் மிலேச்சர் மனப்படி ஆளும் ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன் ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர் யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!” “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்”

No comments:

Post a Comment