Wednesday, March 8, 2017

செத்தவீட்டில்_கூத்துக்கச்சேரி..

#வீதிக்குவரும்.. ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டார்கள்.. ஓபிஎஸ்ஸும் விஜய் பாஸ்கரும்.. விசாரணை வந்தால் நீதான் முதலில் ஜெயிலுக்கு போவாய் என்கிற ரீதியில்.. உண்மையில் இவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கிறது.. நான்கு மணிக்கே ஜெயலலிதா இறந்ததாக செய்தி வந்ததாகவும் உடனே மருத்துவமனை சென்றேன் விஜய்பாஸ்கர் இல்லையென சொன்னதாக பன்னீர் சொல்கிறார்.. இருவருமே குற்றம் செய்திருக்கிறார்கள்.. மாநிலத்தின் மூத்த அமைச்சர் பன்னீர் முதல்வருக்கு என்ன நடந்தது என கேட்கும் உரிமை இருக்கிறது ஆனால் எதற்காக இவ்வளவு காலம் அதை மறைத்து வைத்து இன்று ஏன் பேசவேண்டும்.. இன்னும் இவர்கள் வாய் திறந்தால் யாரெல்லாம் உள்ளே போவார்கள்.. யார் கொன்றார்கள் அல்லது இயற்கையான மரணமா.. என்பதெல்லாம் அறியலாம்.. .. திடீரென்று தா.பாண்டியன் ஆஜராகி... சிகிச்சை அளித்த டாக்டருக்கு நன்றி சொல்வார்கள் என்கிறார்.. பி.எச். பாண்டியனின் சில கேள்விகள் சந்தேகத்தை தருகிறது.. ஜெயலலிதாவிற்கு 4 மணிநேரம் எம்பாயிங் செய்தார்கள் ஆனால் அதை 15 நிமிடம் செய்ததாக சொல்கிறார்கள் .. கருப்பு பூனைப்படை அவ்வளவு சீக்கிரம் விலக்கிக்கொள்ள முடியாது ஆனால் ஜெயலலிதா மருத்துமனையில் இருந்த 75 நாட்கள் கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் இல்லை .. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருகிறார்கள்.. .. பன்னீர் கோஷ்டி பகிரங்கமாகவே ஜெயாவை சசிகலாதான் கொன்றிருக்கவேண்டுமென்கிற ரீதியில் பேசுகிறார்கள்.. இன்னும் கொஞ்சம் நாள் போனால் நேரடியாகவே குற்றம் சாட்டலாம்.. சுகாதரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் என்னோடு எம்ய்ஸ் மருத்துவ அறிக்கைப்பற்றி விவாதித்ததாக சொல்கிறார்..என்னிடம் விவாதிக்கவோ அறிக்கைப்பற்றி எதுவும் சொல்லவில்லை அவர் அந்த அறிக்கையை திரும்ப பெறாவிட்டால் வழக்கு தொடர்வேன் என்கிறார்.. .. உண்மையில் பன்னீர் விசாரணை கேட்டு வழக்கு தொடரலாம்..யாரேனும் ஒருவர் எந்த தரப்பில் இருந்தாவது சசிகலா தரப்போ அல்லது பன்னீர்தரப்போ வழக்கு பதிவு செய்யலாம்.. அப்போதுதான் உண்மை வெளிவரும்.. இவர்கள் ஆடும் நாடகம் முடிவுக்கு வரும்.. தினம் தினம் மாறிமாறி ஒருவர் மற்றவரை கைக்காட்டி நடத்து கூத்து முற்று பெறும்.. .. இல்லையெனில் இவர்கள் ஆதாயம் தேட ஜெயலலிதா மரணத்தை கொண்டு களிக்கிறார்கள்.. என்றே மக்கள் புரிந்து கொள்வார்கள்.. .. #செத்தவீட்டில்_கூத்துக்கச்சேரி.... .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment