Friday, March 3, 2017

பொன்மனதளபதி

#பொன்மனதளபதி.. நெடுவாசலில் தளபதியார்.. போராட்டத்தை அரசியலாக்கவிரும்பவில்லை ஆம் அரசியல் ஆதாயம் தேடவேண்டிய அவசியம் திமுகவிற்கு எப்போதும் இருந்ததில்லை என தெளிவாக சொன்னார் ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவந்தது என்கிறாரே வைகோ என்றதற்கு மிக தெளிவான பதிலை தந்திருக்கிறார்.. மீத்தேன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே mou போட்டோம் அதுவும் அங்குள்ள மக்களிடம் ஒப்புதல் வேண்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு வர கூடாது விவசாயிகள் பாதிக்கப்படகூடாது.. என்று தெளிவாக விளக்கினார்.. கூடவே என்மீது வைகோவிற்கு தனிபாசம் உண்டு அரசியலில் துறவறம் சென்றிருந்தார் என நினைத்தோம் என்னைப்பற்றி பேசி அரசியலில் பிழைத்துக்கொண்டிருக்கிறார்.. அண்ணா சொன்னதைப்போல வாழ்க வசவாளர்...என்றார்.. .. கனிந்திருக்கிறார்.. பொன்மனம் மிக தெளிவான அரசியல் நாகரீகமான சொல்லாடல்.. யாரை எங்கே வைக்கவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.. வைகோ போன்ற நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகளுக்கு தெளிவான விளக்கத்தை ஆதாராத்தோடு விளக்கியிருக்கிறார்.. அரைகுறை அறிவோடு எதையும் அணுகுவது ஆரம்பம் முதலே வைகோவிற்கு உண்டு அவசரகதியில் செயல்படுவோரிடம் காணப்படும் செயல் இது தெளிவின்மையும் எரிச்சலும் கையாலாகாததனமும் அடுத்தவரின் வளர்ச்சியில் ஏற்படும் பொறாமையும் வைகோவை சீரழித்திருக்கிறது.. .. எந்தவொரு போராட்டமும் அரசியல்படுத்தபடவேண்டும் அப்போதுதான் அது வெகுஜனங்களை சென்றடையும் வெற்றியடையும் அரசியல் செய்கிறார் என சிலர் பேசலாம் அரசியல் கட்சிகள் அதைதான் செய்யும் செய்யவேண்டும்.. இதுவரை நிறைய பேர் வந்தார்கள் ஆனால் பிரதான எதிர்க்கட்சி களத்திற்கு வந்தபிறகுதான் அதன் potency ஆற்றல்/வல்லமை பெறும் அரசிற்கு அழுத்தத்தை தரும் எல்லாவற்றையும் விமர்சிப்பதென்பது சரியான அரசியல் அல்ல மைய அரசு தொடர்ந்து தமிழகவிரோதபோக்கை செய்துக்கொண்டிருக்கிறது சேதுசமுத்திரம் நுழைவுதேர்வு மீனவர் பிரச்சனை ஜல்லிக்கட்டு...நெடுவாசல் .. வெகுமக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் அரசு மக்கள்அரசாகாது.. .. தளபதி செயலாற்றும் விதம் சிலருக்கு எரிச்சல் தருகிறது சிலகட்சி தலைவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.. ஆளும் அரசை விமர்சிப்பதை விடுத்து எதிர்க்கட்சி தலைவரை விமர்சிக்கிறார்கள் இதிலிருந்தே திமுகவும் தளபதியும் சரியானபாதையில் செயல்படுவது வெளிச்சமாகிறது.. மக்கள் செல்வாக்கில்லாதவர்கள் தளபதியை எதிர்ப்பதன்மூலம் தங்களை நிலைநிறுத்தக்கொள்ள வேண்டியிருக்கிறது.. பாவம் பிழைத்துபோகட்டும்.. #தளபதி_மின்னுகிறார்.. .. #பொன்மனதளபதி... தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment