Sunday, March 19, 2017
தலைநகரில் அம்மணமாய் உழவன்..
திரும்பவும் சொல்கிறேன்.. நாம் தேடி செய்த தவறு இப்போது நம்மை பார்த்து சிரிக்கிறது.. தலைநகரில் அம்மணமாய் உழவர்கள்.. சிறிதுகூட சங்கோசபடாமல் தமிழக மக்களும் அரசும் அதை வேடிக்கை பார்க்கிறோம்.. ஆறு நாட்களாகிவிட்டது.. இருதினங்களுக்கு முன்பு திருச்சி சிவாவும் இப்போது கனிமொழியும் போய் போராடும் உழவனை சந்தித்து அவர்களின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பபடும் என உறுதியளித்தார்கள்.. ஆளும் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் எவரும் கண்டுக்கொள்ளவில்லை..
..
ஏறக்குறைய கடந்த ஆறு ஆண்டுகளில் 600 மேற்பட்ட உழவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்டபோது சொந்த விடயங்களுக்காகவும் நோய்வந்தும் செத்தார்கள் என்றார் கிரிமினல் ஜெயலலிதா.. அப்போதே இவர்களின் பிரச்சனை அதிமுக அரசு கவனித்தில் கொள்ளவே இல்லை.. எப்போதும் தன்னை சுற்றிய அரசியலை தன்னை புகழ்ந்து பாடகேட்டு மக்கள் பிரசிசனைகளை கண்டுக்கொள்ளாமல் தேர்தலில் எதற்கும் ஒருவிலை நிர்ணயம் செய்து வென்றுவிடலாமென்ற அகந்தையில் ஆட்சி நடத்தினார்..நாமும் சொற்பகாசிற்கு ஆசைப்பட்டு வாழ்வாதாரங்களை உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இப்போது அம்மணமாய் தலைநகரில் நிற்கிறோம்..
..
திமுக ஆட்சியில் விவசாயகடன் ₹7000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது விவசாயிகளுக்கு மீண்டும் கடன் வழங்கியது.. அவர்களும் அதை திருப்பி செலுத்தினார்கள் ..
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் போனதும் வரலாறு காணாத வறட்சியும் அவர்களை தற்கொலை செய்துகொள்ள செய்தது..
..
இதோ இப்போது கூட கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகைகூட முழுவதுமாக தர அரசிடம் பணமில்லை
வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி ..பிரதமரை வலியுறுத்த முதல்வருக்கு வக்கில்லை.. வழக்கு ,தேவை, பதவிக்காக தமிழர்நலனை கிரிமினல் ஜெயலலிதா அடகுவைத்தார் இப்போது சசிகலாவின் பினாமி ஆட்சியும் அடகுவைக்கிறது.. நாடாளுமன்ற மக்களவையில் இப்போது திமுகவிற்கு குறைந்த அளவிலேனும் எம்பிக்கள் இருந்திருந்தால் பிரதமரின் கவனத்தை ஈர்த்து மத்தியரசை பணியவைத்திருப்பார்கள்.. யாரை தேர்வு செய்து என்று கூட தெரியாமல் அடிமாடுகளை அனுப்பியதால் .. பாட்டுபாடியும் கிரிமினல் ஜெயலலிதா புகழ்பாடியும் .. ஜெயலலிதாவிற்கு ஒன்றென்றால் கூச்சலிட்டும் காலம்கடத்துவார்கள்..
இப்போது அது கூட இல்லை மோடிக்கு வாலாட்டுகிறார்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஈனத்தனமாய் விழுந்து கிடக்கிறார்கள்..இந்த கேடுகெட்ட அதிமுக எம்பிக்கள் ..
..
இப்போது கூட தமிழக அரசு மத்திய அரசிடம். தமிழக உழவர்களின் அவலத்தை எடுத்துரைத்து விவசாயகடனை தள்ளுபடி செய்ய .. கோரலாம்..அதைவிடுத்து ஆட்சியை காப்பாற்ற காலடியில் விழுந்து கிடந்தால் ..காலம் மன்னிக்காது..
..
#தலைநகரில்_உழவன்_கேட்பாரற்று……
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment