Saturday, March 11, 2017

அதிகார யுத்தம்

தினகரனை அழைத்து வந்து பேட்டிகாண்கிறார்.. நவீன சங்கரரை பார்த்து வந்தபிறகு இதெல்லாம் நடக்கிறது.. சரி.. பேட்டி மிக அபத்தம்.. ஜெயலலிதா கட்சியைவிட்டு நீக்கிய பிறகும் ஜெயாவோடு தொடர்பில் இருந்தேன்.. இதை ஜெயா உயிரோடு இருந்தபோது மறைமுகமாக கூட தெரிவிக்கவில்லை. மருத்துமனையிலிருந்து வீடு திரும்பியதும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாமென்றிருந்தார்.. திவாகரனையும் நடராஜனையும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை..சித்தியும் சித்தப்பாவும்,27 ஆண்டுகள் உறவில் இல்லை.. அதிமுக சட்டவிதிப்படி இடைக்கால பொதுசெயலர் நியமிக்கபடலாம்.. .. இதிலிருந்து என்ன சொல்லவருகிறார்.. நான்தான் அதிமுக அதாவது சசிகலா அதிமுக நான்தான் குடும்பத்திலிருந்து பிறர் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்காதீர்கள் அவர்கள் யாரென்று தெரியாது கட்சிக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை..என்ற ரீதியில் பேட்டியளிக்கிறார்.. அடிக்கடி திமுகதான் எங்கள் பிரதான எதிரி என சொல்வதன் காரணம் .. அப்போதுதான் நாங்கள்தான் அதிமுக என மக்களை/ஊடகங்களை நம்பவைக்கதானே தவிர வேறில்லை.. .. திரு.துரைமுருகன் பேசியதிலும் காரியம் இல்லாமல் இல்லை.. இவரெல்லாம் யார் என்ற கேள்வி நிறைய பொருள் பொதிந்தது.. காரணம் நாளையே இவரது குடும்பசண்டையில் சசியால் தூக்கியெறியபடலாம்.. அதுமில்லாமல் தினகரனை அதிமுகவினருக்கே பிடிக்கவில்லை..எது அதிமுக என்று முடிவாகிவிட்டபிறகு பேசலாம் என்று நினைத்து பேசியிருக்கிறார் துரைமுருகன்.. ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புகிறார்.. அதன் மூலம் அரசியலில் பலம்பெற்றால் நேரடி ஆட்சி அதிகாரத்தை கையிலெடுக்கலாமென திட்டம் காரணம் நான்காண்டுகள் என்பது மிகப்பெரிய காலஅவகாசம்.. அதை கருத்தில்கொண்டுதான் காய்நகர்த்துவதாக தெரிகிறது எங்கே தன் குடும்பத்திலிருந்து போட்டிக்கு வந்துவிடுவாரிய்களோ என அஞ்சிதான் .. முன்னெச்சரிக்கையாக நடராஜனையும் திவாகரையும் கழட்டிவிட தீர்மானித்து பேசியிருக்கிறார்.. .. ஆர்.கே.நகர் மக்கள் கைகளில் தான் இருக்கிறது..இவரை போன்றவர்கள் (மாபியாக்களை) ஆரம்பத்தலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும்.. இல்லையெனில் இந்த விச செடி படர்ந்து நாட்டையே அழித்துவிடும்.. #எச்சரிக்கை. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment