Wednesday, March 15, 2017
தளபதி...தீ..
நாகரீகமில்லாமல் எப்படி பேசமுடிகிறது..
தங்களைப்பற்றி தாங்களே அறிந்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு பேசவிடமுடிகிறது.. அதிமுகவும் திமுகம் உயிரோடில்லை பாமகதான் இருக்கிறது.. அன்புமணி.. கச்சதீவை கொடுத்ததற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும்.. தமிழிசை.. அழைத்தாலும் வரமாட்டேன்.. இப்படி சிலர்
..
போடா போக்கத்தவனுகளா.. என்றுதான் சொல்லதோணுகிறது.. என்னமோ ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் சரியான தலைமையோ கட்சியோ இல்லையென்பதைப்போல ஒரு தோற்றத்தை ஊடகங்களும் சில்லுவண்டிகளும் ஏற்படுத்த நினைக்கின்றன.. கலைஞர் ஓய்வில் இருப்பதால் திமுக அவ்வளவுதான் என்பதைபோல நினைக்கிறார்கள்.. முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்..
திமுக முன் எப்போதுமில்லாத அளவிற்கு பலம் பெற்றுவருகிறது. அதிமுக கூட நீங்கள் நினைக்கிற அளவிற்கு பலம்,இழந்துவிடவில்லை இதுதான் உண்மை.. மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக தமிழிசை கொஞ்சம் ஓவராக ஆடுகிறார்..
திமுக சலங்கை கட்டினால்.. தமிழிசை இருக்குமிடம் தெரியாமல் போவார்..
..
ஜனநாயக அரசியலில் சிறுகட்சிகளும் அமைப்புகளும் ஏன் தனிப்பட்டவர்கள் கூட கருத்திட விமர்சிக்க அனுமதியுண்டு ஆனால் வார்த்தை பிரயோகங்கள் சலிப்பை தரகூடாது.. அகம்பாவத்தையோ, அருவருக்கதக்கவகையிலோ இருக்கலாகாது.. முதலில் எதை பேசுகிறோம் பேசுவதும் சரியா.. அல்லது விமர்சனம் உண்மையானதா.. சொல்லும் சொல்லில் நயம் இருக்கிறதா யாரையும் காயப்படுத்தாமல் பேசுகிறோமா.. அதை விட பேச நமக்கு தகுதியிருக்கிறா என எண்ணி பார்க்கவேண்டும்.. முடவன் கொம்புதேனுக்கு ஆசைபடுவது தவறில்லை .. ஆனால் தானே.. மரம் ஏறி தானே எடுத்து உண்ணவேண்டுமென்றால் அது சரியாகாது..
விழுந்து மேலும் உடைத்துக்கொள்ள வேண்டிவரும்..
அன்புமணி தான் மட்டுமே தகுதியானவர் பாமக மட்டுமே தகுதியான கட்சியென சொல்லிக்கொண்டு திரிகிறார்..இவ்வளவு பெரிய பின்னடைவிற்கு பிறகும் சாதிய கட்டமைப்பில் இருந்து வெளியே வராமல்..பேசுவது அவரின் இயலாமையை காட்டுகிறது..
..
எச்.ராசா பொன்னர் தமிழிசை அன்புமணி.. இவர்கள் வாய் திறந்தாலே சம்பந்தமே இல்லாமல் உளறுவதையே காணமுடியும் காரணம் இவர்களால் எதையும் சாதிக்கமுடியாது என்கிற இயலாமை.. மக்கள் செல்வாக்கு இல்லாததும் பெரியதொரு தாக்கத்தை இவர்களால் ஏற்படுத்தமுடியாததும் குறுகிய வட்டத்திற்குள்ளே தான் அரசியல் செய்யமுடியும் அதுவும் வேறுவழியின்றி என்கிற ஆற்றாமை இவர்களின் பேச்சினுடே தெரிகிறது..
திமுகவை திட்டியாவது கொஞ்சம் பிழைக்கமுடியாதா என நினைப்பவர்கள்..
..
#வாழ்கவசவாளர்கள்..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment