Thursday, March 30, 2017
கலைஞர்...
தலைவர் கலைஞர் சட்டசபையில் இன்று வைரவிழா காண்கிறார்.1957ல் குளித்தலையில் பெற்ற வெற்றியில் கோட்டையில் தொடர்ந்து 60 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக உள்ளார்...
இது ஒரு வரலாற்று சாதனை..
Incapable of defeating .. தோற்கடிக்க முடியாத ஒன்றாகவே இவரது சட்டமன்ற வெற்றிப்பயணம் அமைந்திருக்கிறது..
..
கிள்ளியெறிந்துவிடுவேன் என்றவர்களெல்லாம் இடம்தெரியாமல் ஆக்கி தொடர்ந்து மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயலாற்றுகிறார்.. எதிரிக்கட்சித் துணைத்தலைவர்.. அமைச்சர் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் என அலங்கரித்தவர்.. இவரின் சொல்லாற்றலில் சொக்கிப்போய் எதிரிகள் கலங்கி நின்றிருக்கிறார்கள்.. நகைச்சுவையோடும்.. சுவைமாறா தமிழோடும் இவரின் வார்த்தைகளின் சிலம்பாட்டம் சீறிவரும்.. சிலநேரம் தென்றலாய் தடவிபோகும்..
திருசெந்தூர் முருகனின் வேல் காணாமல் போனது..
தகவலை யார் தந்தார்கள் என்கிறார் எம்ஜிஆர் (ம.கோ.ரா) அந்த முருகனே கொடுத்தான் என்கிறார்.. மகோரா.. முருகனின் பெயரில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கைது செய்தார் அப்போதுதான் கலைஞரின் உதவியாளர் சண்முகம் கூட கைது செய்து விசாரித்தார்கள்...
..
சட்டமன்றத்தில் ரகுமான்கான் மானியகோரிக்கையில் பேசிக்கொண்டே இருக்கிறார் அடுக்கடுக்காய் குற்றசாட்டுக்கள்.. எம்ஜிஆர் திணறுகிறார்.. சபாநாயகர் உடனே ரகுமான்கானை உட்கார சொல்கிறார் நேரம் முடிந்துவிட்டுதென சொல்லியும் ரகுமான் விடுவதாக இல்லை.. சொல்லி சொல்லி பார்த்து உங்களை அந்த ஆண்டவன் தான் உட்கார வைக்கவேண்டுமென்கிறார் சபாநாயகர்.. கலைஞர் உடனே எழுந்து உட்கார் என்கிறார் ரகுமான் உட்கார்ந்தார்.. சபாநாயகர் ராஜாராம் கலைஞருக்கு நன்றியை சொன்னார்.. உடனே கலைஞர் நீங்கள் தானே ஆண்டவனால்தான் முடியுமென்றீர்.. நானும் ஆண்டவன்தான் தமிழ்நாட்டை ஆண்டவன்தான் என்றார் எம்ஜிஆர் உட்பட சபையே கைத்தட்டியது..
..
கலைஞர் பெருமகன் ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டால் புத்தகமாகவே போடலாம்.. அருந்ததியினருக்கு இட உள்ஒதுக்கீடு.. அப்போது பேசிய கலைஞர்.. மலத்தை அள்ளும் அந்த சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை சபையில் அறிமுக செய்து சொன்னார் என் தலையில் வைத்து கொண்டாடுகிறேன்.. மிகவும் ஒடுக்கப்பட்ட ..இன்னும் சொல்லப்போனால் ஒடுக்கப்பட்டவர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த சமூகத்திற்கு ஒளியேற்றி எந்த கொள்கைக்காக திராவிடம் இயக்கம் தோன்றியதோ அதை சரியான பாதையில் செலுத்தி கவனமாக பயணித்தார்..
..
வைரவிழா காணும் கலைஞர் உடல்நலியுற்று இருக்கிறார் அந்த கம்பீரமான குரலை இப்போது கேட்கமுடியவில்லை.. அவரின் அரசியல் நகர்த்தல்களை கண்டு ரசிக்கமுடியவில்லை.. ஆனாலும் அவரின் பார்வை நம்மீதும் இந்த சமூகத்தின் மீதும் விழுந்துக்கொண்டுதானிருக்கிறது.. அவர் போட்ட பாதையில் தான் தமிழகம் செல்லும்.. சரியான தலைமை தந்துவிட்டு காலம் அவருக்கு சிறிது ஓய்வு தந்திருக்கிறது.. மீண்டும் நலிவு நீங்கி வழிகாட்டி நடத்திட வருவார்..
#இந்த_பெருமகனை_பெற்றதால்_நாம்_பெருமையடைந்தோம்..
..
#திராவிட_பெருந்தலைவர்_கலைஞர்..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment