Sunday, March 12, 2017

தியான அரசியல்

பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு செய்யப்படும் தியானம் #சகாம தியானம்.இறையனுபூதிக்காக மட்டும் செய்யப்படும் தியானம் #நிஷ்காம தியானம். .. இப்போதெல்லாம் #சகாம_தியானம் தான் விரும்பி நடந்தேறுகிறது.. தியானம் செய்தால் மனம் தூய்மையாகுமென நம்ப படுவதை இங்கே தவறாக தன் ஆசையை நிறைவேற்ற கொள்ள செய்யாமல் மக்களை மூடர்களாக்க நடத்தப்படும் கீழ்தரமான நாடகமாக நடத்தப்படுகிறது.. .. தமிழர்களா எளிதில் முட்டாளாக்க முடியுமென நம்புகிறார்கள் பாருங்கள் அங்குதான் அவர்களின் செயல் அவர்களை காட்டிக்கொடுத்து விடுகிறது.. வீட்டுவாசலுக்கே வரகூடாதென்று தடைவிதித்திருந்தவர் நேரில் பார்க்கவே விரும்பதாவர் இறந்தவுடன் சமாதியில் அமர்ந்து தியானம் செய்யலாம் மரணம் எவ்வளவு உதவுகிறது பாருங்கள்.. .. எந்த தைரியத்தில் இவர்கள் இதை செய்கிறார்கள்.. பன்னீர் வந்து தியானமிருந்ததால் புத்தர் லெவலுக்கு கொண்டுபோனார்கள்.. பதவியில் இருந்தபோது வாய்மூடி இருந்துவிட்டு பதவி பறிக்கப்பட்டவுடன் உத்தமன் வேசம் கட்ட தியானம் தொடக்கம் குறித்ததே அதைப்போல .. ஒருவேளை இங்கே தன்னை விரட்டிய அத்தையை கண்மூடி தியானத்தில் #நிஷ்காமத்தில் காண்கிறாரோ.. இதுபோன்ற சுயநல கிருமிகளை இனம்கண்டு புறந்தள்ளவேண்டும்.. .. அதுசரி (குற்றவாளி) கிரிமினல் சமாதியில் தியானமிருந்து என்ன வரம் பெற போகிறார்கள் எப்படி கொள்ளையடிப்பது என்பதை கற்றுதர மௌனமாய் கேட்கிறார்களோ.. மனதை ஒருமைபடுத்த தியானம் என்றார்கள் இங்கே அரசியல் செய்ய தியானத்தை பயன்படுத்துகிறார்கள்.. மனஅமைதிக்கு என்றது போய் பதவிஆசைக்கு தியானம் என்றாகிவிட்டது.. மனதை ஓருமைப்படுத்த தியானம் என்பதுபோய் பேராசைக்கு என்றாகிவிட்டது.. .. #நல்லதொழில்_தியானம்.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment