Saturday, March 18, 2017

ராசா..வின் இசை சுருதி இழந்து..

ராசா.. எப்போதுமே இப்படிதான்.. கொஞ்சம் தலைகனத்தோடு தோன்றியதை பேசுவார்.. அவரது இசை நம்மை ஏதோயொரு வகையில் மயக்கியிருக்கிறது மனசை சாந்தபடுத்தியிருக்கிறது அதுவரை இசை மேட்டுக்குடி ரசனைக்கானதென்றதை மாற்றி பாமரனின் இசையை பந்தியில் வைத்தவர்.. அவருக்கு முன்பும் பின்பும் யாரும் இதுபோன்ற தாக்கத்தை வெகுமக்களிடையே கொண்டு சேர்க்கவில்லை.. இசையமைப்பில் நிறைய புதிய முயற்சிகளை செய்து சில ராகங்கள்கள் சிலவற்றிக்கும்தான் பயன்படுத்தவேண்டுமென்ற விதியை தூக்கியெறிந்து புரட்சி செய்தவர். கர்னாடக இசையில் மட்டுமே திரைஇசை என்றதை மாற்றி மக்கள் இசையில் மகுடம் சூட்டியவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ராசா பற்றி.. உண்மையில் திரைஇசையில் ராசாவாக தான் வலம்வந்தார் இப்போதும்கூட ராசாவாகதான் தெரிகிறார் இசையில்.. .. இளையராசாவிடம் இசையை மட்டுமே கேட்கவேண்டும் வேறேதும் கேட்டால் இப்படிதான் ஏதாவது உளறிவைப்பார்.. சிலகாலம் முன்பு ஆன்மீகத்தில் ஒன்றிப்போய் இருந்தார்.. அப்போது அவரை பற்றி ஒருவர் தாழ்த்தப்பட்ட குடியிலிருந்து வந்த இசை அரசர் என்று எழுதிவிட்டார் அவர் மீது வழக்கே தொடர்ந்தார் அப்போது அவர் சொன்ன வார்த்தை அதிர்ச்சியை தந்தது .. இந்த இழிபிறவியை போக்கத்தான் பிராயசித்தம் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.. தன்னை தானே தாழ்த்திக்கொண்டவன் எப்போதும் மேன்மை அடைவதில்லை.. ஏன் இதை பதிவு செய்கிறேன் என்றால் ராசாவிற்கு தன் திறமை மீது நம்பிக்கையில்லாமல் தன் முயற்சியால் உயர வந்ததை மறந்து தன்னைதானே சரியாக மதிப்பிட தெரியாதவராகதான் இதுவரை இருக்கிறார்.. கடவுள் நம்பிக்கை என்பது வேறு இவரிடம் இருப்பது கிறுக்குத்தனம்.. .. தன் பால்யகால நண்பர் பாரதிராசாவோடும் தனக்கு கச்சேரிகளில் வாய்ப்பளித்த பாலுவோடும் .. சகதோழனாய் தன்னை புகழ்ந்த வைரமுத்துவோடும் தன் உடன்பிறந்த சகோதரரோடும்..ஒவ்வொரு காலகட்டத்தில் வீம்புபிடித்திருக்கிறார்.. தன் இசைதந்த கம்பீரத்தை தவறாக புரிந்துக்கொண்டதால் தான் தன் பிறவியையே இழிவாக எண்ண முடிந்தது.. இப்போது பாலு தனது இசையில் வந்த பாடல்களை பாட கூடாதென சொல்லியிருப்பதாக வரும் செய்தி ரசிக்கமுடியாத இசை.. திரைஇசை வடிவம் என்பது ஒரு கூட்டுமுயற்சி.. இசையை முழுக்க முழுக்க வடிவமைத்தாலும் அதை ஒருங்கிணைக்க பல்வேறு இசைகலைஞர்களின் உழைப்பும் அதில் அடங்கியிருக்கிறது..அப்படி பாலுவின் உழைப்பும் திறமையும் அதில் சேர்ந்திருக்கிறது என்ற உண்மையை யாராவது ராசாவிடம் எடுத்துச் சொல்லுங்கள்.. ராசாவின் இசையை ரசிக்க முடிந்த நம்மால் பேச்சை ரசிக்கமுடியவில்லை.. .. #நிசப்தம்தான் சிறந்த இசையென்று சொன்னவர் இப்போது கூச்சலிடுகிறார்.. #சுருதிபோன_இசை.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment