Thursday, March 16, 2017
மானமிகு ராசா...
#ஆதாரமெங்கே..
..
2014 பிப்ரவரியில் ராசாவை இந்தி சேனல் india tv யில் Rajit sharma பேட்டி கண்டார்.. அவரது நிகழ்ச்சி பிரபலம் ஆப்கே அதாலத் கோர்ட் போல வடிவமைக்கப்பட்ட அரங்கில் நடந்தது.. அப்போது என்ன சொன்னோரோ அதுதான் இப்போதும் நடக்கிறது.. 2.2 11 நான் கைதுசெய்யபட்டேன் 11.2. 11 ல் times of india 3000 கோடி சொத்து சேர்த்திருப்பதாக எழுதியது அப்போது நீதிபதியிடம் வருமானத்திற்கு அதிகமாக நான் ஒரு ரூபாய் சேர்ந்திருந்தது நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தயார் என்றேன் இதுவரை முடியவில்லை என்றார்..
தகுதியில்லாத Ineligible கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதாக சிபிஐ சொன்னது நான் அமைதியாக இருந்தேன் சட்ட அமைச்சகம் அந்த நிறுவனங்கள் (கம்பெனிகள்) தகுதியானது Eligible என trial court விசாரணை நீதிமன்றத்தில் சொன்னது என்றார்..
..
அதுதான் இந்த ஆறு ஆண்டுகளில் ராசாவிற்கு எதிரான ஆதாரங்களை தரமுடியாமல் சிபிஐ திணறுகிறது..
நேற்றைய தினம் கூட பொறுமை இழந்த நீதிபதி ஷைனி.. விசாரணை துவக்கத்தில் என்ன சொன்னீர்களோ அதையேதான் இப்போதும் சொல்கிறீர்.. குற்றசாட்டபட்டவருக்கும் சிபிஐக்கும் நீதிவழங்க ஆதாரத்தை வழங்கவேண்டும்.. என சிலகேள்விகளை கேட்டார். பத்துநாள் அவகாசம் கேட்டு தற்காலிகமாக தப்பித்தது..சிபிஐ
மிக தெளிவாக கோப்புகளில் ராசா எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்.. ஆறு ஆண்டுகள் கடந்தும் அவர்களால் ஒரு சிறிய ஆதாரத்தை கூட தரமுடியவில்லை ..
..
ஆனால் இதனால் திமுக இழந்தது ஏராளம் .. ஊடகங்கள் அரசியல் கட்சிகளும் திமுகவை இருக்குமிடம் தெரியாமல் ஆக்க கடும்முயற்சி எடுத்தார்கள் எத்தனை சைபர் என தெரியாதவன் எல்லாம் கம்பு சுத்தினான்.. அதனால் #நிஜ_கிரிமினல்_ஜெயலலிதா பலனடைந்தார்.. மூட்டை மூட்டையாய் பணம் அறிவாலத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக அறிவுகெட்ட வைகோ சொன்னார்.. கம்யூனிஸ்ட்கள் திமுகவை தீண்டதகாக கட்சியாக சித்தரித்து நிஜ கிரிமினலோடு சேர்ந்து கும்மாளமிட்டார்கள் உலகில் அதிநவீன கட்டங்களையெல்லாம் படமெடுத்து இதெல்லாம் ராசா வெளிநாடுகளில் வாங்கி குவித்தவை என்றார்கள்..
..
ஏய்.. ஈனப்பிறவிகளே.. இதோ சிபிஐ சாட்சியோ ஆதாரமோ இல்லாமல் திணறுகிறது.. தங்களிடம் ஆதாரம் இருந்தால் கொடுத்துதவுங்கள் .. இல்லையெனில் #மானமிகு_ராசாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்.. சிஏஜி அறிக்கையை அரசியலாக்க வேண்டாமென இன்றைய நிதியமைச்சர் அரூண்ஜெட்லி சொல்கிறார் .. ஆனால் பாஜக தான் 2ஜியில் சிஏஜி அறிக்கையை வைத்துக்கொண்டு வானத்துக்கும்பூமிக்கும் குதித்தது நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் செய்தது..
..
வேறோன்றுமில்லை.. தாழ்த்தப்பட்டவர்கள் உயர்பதவிக்கு வந்தால் அவர்கள் மீது ஊழல் குற்றசாட்டை சுமத்தி கேவலபடுத்துவதுதான் இந்தியாவில் நடக்கிறது.. உச்சமீதிமன்ற தலைமைநீதிபதி பாலகிருஷ்ணன், பாஜக தலைவராக வந்த பங்காருலட்சுமணன்..என அடுக்கிகொண்டே போகலாம்..
..
ராசா பெரியாரை படித்து அண்ணாவை ரசித்து கலைஞரால் வார்த்தெடுக்கபட்டவர். பார்பனீயத்தால் ஒன்றும் செய்யமுடியாது..
#மானமிகு_ராசா...
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment