Thursday, March 16, 2017

பொன்னர் வெறும் கருவி..

திரு.பொன்ராதா மீது செருப்பு வீச்சு.. நாகரீகமான சமூகத்தில்தான் வாழ்கிறோமா.. பொன்னர் மீது கடும்கோபம் உண்டு அவரின் கருத்துகள் செயல்கள் நம்மை இழிவுபடுத்துகிறது..ஆனால் அதற்காக செருப்பை வீசுவதை ஏற்கமுடியாது அது நம் எதிர்ப்பை காட்ட சரியான வழியுமல்ல.. .. பொன்னர் தமிழிசை போன்றோரெல்லாம் கருவிகள் பாவம் அவர்களது இயலாமை நம் மீது ஏதாவது பேசினால் தான் தங்கள் எஜமானர்களிடம் ஏதாவது நக்காபிச்சை கிடைக்கும்.. எப்போதுமே நம் பிரதான எதிரிகள் நேரடியாகவே நம்மோடு மோதுவதில்லை அவர்கள் நம் இனத்தின் மீதான தாக்குதலை நம்மவரை கொண்டே செய்வார்கள் அது தான் அவர்களது பலம்.. எதற்கெடுத்காலும்,உணர்ச்சிவயப்படும் தமிழர்களின் உணர்வின் மீதே கல்லெறிவார்கள்..நாமும் சட்டென்று பொங்கி கருவியை துளைத்துவிடுவோம்..எய்த்தவன் நம்மை பார்த்து கைக்கொட்டி சிரிப்பான்.. நம் இன எதிரிகள் ஆயுதம் இரண்டுதான்..ஒன்று நம்மவரை நமக்கெதிராக திருப்பிவிடல்.. மற்றொன்று திறக்கப்படாத கதவுகளும் மடிக்கப்படாத விரிப்புகளும் தான்.. முதல் ஆயுதத்தில் தோற்றால் இரண்டாவதை களமிறக்கி நம்மை மதிமயக்கித்தில் ஆழ்த்தி காரியம் சாதித்துக்கொள்வார்கள்.. .. சிறியளவில் கூட இல்லாத ஒரு கூட்டம் பெருவாரியவர்களின் உரிமைகளை நம்மிடமிருந்து தட்டிப்பறித்து சுகபோகம் அனுபவிக்கிறார்களே எப்படி என நாம் சிந்தித்ததுண்டா.. உணர்ச்சிவயப்படுத்தியே நம்மை பரபரப்பாக வைத்திருக்கிறார்கள்.. நாம் செருப்பை வீசுவோம் நம் கோவம் தணிந்துவிடும் அப்புறம் அவர்கள் வேலை ஜரூராக நடக்கும் நாம்தான் எப்போதும் போல் வழக்கு நீதிமன்றம் சிறைச்சாலை என அலைந்துக்கொண்டே இருப்போம்.. அவர்கள் இருட்டுக்குள் நாலுசுவற்றுக்குள் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவார்கள்.. உயர்பதவி பொறுப்பு..அதிகாரமையம், ஆட்சி எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பார்கள்.. நாம் சிறைச்சாலைகளில் தனி அறைகளில் காலத்தை கழித்துக்கொண்டிருப்போம் .. பொன்னரோ தமிழிசையோ அல்ல நமது இலக்கு.. இதற்கு மூலக்காரணத்தை‍/ காரணமானவர்களை கண்டறிந்து அவர்களின் செயல்களை அம்பலமாக்கி அவர்களின் கொள்கையோடு .. அவர்களின் திட்டங்களை முறியடிக்க ..யுத்தம் நடத்தவேண்டும்.. அது நேரானதாக இருத்தல் அவசியம் அதற்கு நம்மிடையே ஊடுறிவியிருக்கும் துரோகங்கள் இனம் கண்டு ஒதுக்கிவிடவேண்டும் அரசியலில் பொதுவாழ்வில் இருக்குமிடம் தெரியாமல் செய்தாலே போதும்.. நம் இன எதிரிகள் நேரடியாக நம்மோடு மோத தைரியமில்லாமல் போவார்கள்.. .. பொன்னர் மீது செருப்பெறிவது நமக்குதான் அசிங்கம்.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment