Wednesday, March 22, 2017

மோடியை நம்பகூடாது.. அட்டர்னிஜெனரல்

#பிரதமர் மோடி சொல்பவற்றை எல்லாம் மக்கள் நம்பத்தேவையில்லை..மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) உச்ச நீதிமன்றத்தில் தகவல்... இதிலிருந்து பிரதமர் பொய் பேசுவார்.. அதாவது வாய்க்குவந்ததை பேசி மக்களை ஏமாற்றுவார்.. ஆனால் அதை நாட்டுமக்கள் கேள்வி கேட்க தேவையில்லை.. நம்பவும் கூடாது .. ஆம்.. பொய் தானே மோடியின் மூலதனம் எப்போதாவது சொன்னதை செய்திருந்தால் தானே நம்பிக்கை வரும் ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் எல்லாமே எப்போதும் செயல்படுத்தபடுவதில்லை.. எல்லாகட்சிகளுக்கும் இது பொருந்தும்..சிலவற்றையாவது செயல்படுத்தினால் தான் அவர்களது மீது நம்பகதன்மை வரும்.. ஆனால் மோடி வார்த்தை பிரயோகம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.. சாமானியனுக்கான சர்க்கார் இதென்று பேசிக்கொண்டே அம்பானிக்கும் அதானிக்கும் சிவப்பு கம்பளம் விரிப்பார்.. ஆனால் ஏழைகள் மீது கொடுங்கோலை பாய்ச்சுவார்.. மன்மோகன் ஆட்சியிலிருநிது இறங்கியபோது இருந்த சிலிண்டர் விலையை விட ₹340 அதிகம்.. இது ஒன்றே போதும்.. பெட்ரோல் 120 டாலர் இருந்த போது கூட இவ்வளவு விலை உயர்வில்லை..பேரல் 52 டாலர் விற்கிற போது விலை 70% வரை உயர்வு.. இவையெல்லாம் சொல்லாமல் செய்தது.. செய்வதாக சொன்னதை பற்றி பேசி பிரயோசனமில்லை. ஏனெனில் உச்சநீதிமன்றத்திலேயே அதெல்லாம் விளையாட்டுக்கு சொன்னது என்ற பின்.. பேசி என்ன பிரயோசனம்.. மோடி வந்தால் இந்தியா மிளிரும் என்றவர்கள் தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.. .. உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசின் நிலைபாடு ஒன்று போதும் இனி யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் வாக்குறுதியாக தரலாம் .. சும்மா பேச்சுக்குதானே சொன்னேன் என சொல்லி தப்பிக்கலாம்.. இதற்கெல்லாம் முன்னோடியாய் தமிழகம்..மறைந்த கிரிமினல் ஜெயலலிதா சொல்லவே வேண்டாம் எல்லாவற்றையும் அறிவிப்பிலேயே ..110 ல் படித்துவிட்டு போய்விடுவார் இந்தநாள்வரை கிடப்பில் தான் .. தமிழகத்தில் மருத்துவமனையையே காணோம் என்று போராடுகிற அவலநிலை .. .. கொடுத்த வாக்குறுதிகளை ஏறக்குறைய நிறைவேற்றிய கட்சியென்று பார்த்தால் திமுகதான்.. தலைவர் கலைஞர் 2006 ல் சொன்னதில் முழுவதுமாகவே நிறைவேற்றினார்... பிரதானமாய் விவசாயிகள் கடன் தள்ளுபடி ஒரு ரூபாய்க்கு அரிசி..என சொல்லிக்கொண்டே போகலாம்.. சிலநேரம் காலதாமதாக எனினும் நிறைவேற்றியிருக்கிறார்.. அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வாய்சவடால் விடவில்லை.. சொன்னதை செய்தார்.. செய்ய முடிந்ததையே சொன்னார்.. #கலைஞர் .. ஆனால் மோடி #வாய்சொல்வீரர்.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment