Wednesday, March 15, 2017
தளபதி..பெருமைக்கொள்வோம்
பெருமைபடவேண்டிய விடயம்..
கொஞ்சம் அடர்த்தியாக இருந்த சூழலை மாற்றி.. எளிமைபடுத்தியிருக்கிறார்.. செயல்தலைவர்
இளைஞர்கள் (இளைஞர்அணிகூட்டத்தில்) மத்தியில் உரையாற்றிய போது பணி செய்யுங்கள் வாய்ப்புகள் உங்களை தேடிவருமென உறுதியளித்தார்
நிச்சயமாக தலைமுறை இடைவெளியை உணர்ந்து நாம் மதிக்கும் மூத்தோரோடு வரும் தலைமுறையும் (இளைஞர்கள்) இணைத்து அழைத்துச்செல்ல வேண்டுமென எண்ணும் போதே .. நான்காம் தலைமுறை மிக அருமையாக கட்டமைக்கப்படுவதாகவே எண்ணுகிறேன்..
..
நேர்காணலில் அனைவரிடமும் கலந்தாலோசித்து கருத்துக்களை கேட்டு இறுதியில் ஒருவருக்குதான் வாய்ப்பு என்று வருகிற போது வெற்றியை பிரதானமாக்கிய நகர்வு அவசியம்.. தேர்தல் அரசியலில் அது இன்றியமையாதது.. பகுதி செயலாளர் எனும்பட்சத்தில் அவரை தொகுதியில் அறியாதவர் யாரும் இருக்கமுடியாது அவருக்கும் தொகுதி நிலவரம் அத்துபடி.. எனவே மருதுவை தேர்வு செய்திருக்கிறது..
நேர்காணலில் அவர் சொன்ன ஒருவிடயம் என்னால் செலவு செய்ய முடியாது இது எல்லாரிடமும் வரும் வார்த்தை தான் எனினும் இங்கே உண்மையாய் வந்தது அதை கருத்தில் கொண்டு அவரையே நிறுத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது..
..
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் தமிழக அரசியலில் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமைக்கு பிறகு வரும் புதியதொரு மாற்றம்.. கட்சிக்கு புதிய உத்வேகத்தை தந்திருக்கிறது.. தலைமுறை மாற்றம் ஏற்படும் போது வரும் இயல்பு இதென்றாலும் அதில் நேர்மையை கடைபிடிக்கவேண்டியது அவசியம் அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு கடினம் என்பதை அறிந்தும் விடாபிடியாக புதியபாதையை வகுத்துவருகிறார் #தளபதி அவர்கள்.. நல்லதொரு முயற்சி.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறது வாழ்த்துகள்..
..
இயக்கத்தின் வெற்றி .. இளைஞர்களிடத்தில் நமது கொள்கைகளை கொண்டுசேர்ப்பதிலும்.. அவர்களின் பங்களிப்போடு அடுத்த இலக்கை நோக்கி நகர்த்துவதிலும்.. குறிப்பாக சாமானியர்களை அதிகம் இனம்கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி பங்காற்ற வைப்பதிலும் திமுகவின் வெற்றி இருக்கிறது..
இந்த இயக்கம் வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல.. சமுதாயத்தின் முன்னேற்றத்தை.. சமூகநீதியை நிலைநாட்டி.. ஒடுக்கப்பட்ட.. பின்தங்கிய மக்களை அரவணைத்து அவர்களுக்கான அரசியலை உரிமையை
பெற்று தருவதிலும்.. அவர்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதிலும்.. இனம் மொழி கலாச்சாரம் பண்பாட்டை கட்டிகாப்பதிலும் இருக்கிறது இயக்கத்தின் வெற்றி..
..
தனிநபருக்கானதோ தனிபிரிவினருக்கானதோ அல்ல
இந்த இயக்கத்தின் பணி.. ஒட்டுமொத்த இனத்திற்கானது.. அந்த இனத்தின் அடுத்த தலைமுறையை தலைமேற்று வழிநடத்த #அருமையான_தளபதி கிடைத்திருக்கிறார்..
மகிழ்ச்சி!.. மகிழ்ச்சி!! பெரும்மகிழ்ச்சி!!!
..
#திராவிடன்_என்பதில்_பெருமைக்கொள்வோம்……
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment