Friday, March 24, 2017

மம்தாவிற்கு நன்றி!!

இனி.. மத்திய அரசு திட்டங்களை மேற்குவங்கத்தில் செயல்படுத்தவேண்டுமெனில் #ஹிந்தி_சமஸ்கிருத பெயர்களில் இல்லை மாறாக வங்கமொழியில் பெயர் வைத்து செயல்படுத்தப்படும்.. #மானமிகு_மம்தாபானர்ஜி.. உண்மையான பொதுவுடைமையாளர் #செவ்வணக்கம்_மம்தா.. .. ஆம்.. என்னிடம் பேச பரிந்துரைக்க.. செயல்படுத்த, என்னை உட்படுத்த எனதுமொழியில் பேசினால் பெயர்வைத்தால் தானே எனக்கு விளங்கும்..ஆம் ஜீவன் தருண் ஜீவன்ஆரோக்கியா ஜீவன்ஷிகர்..ஜீவன்ஆனந்த..ஆதார்.. பிரதமரின் ஜன்தன் யோஸனா ஆவாஸ் யோஸனா.. யாருக்காவது புரிகிறது திட்டத்தின் பெயர்.. சமஸ்கிருதத்திலும் இந்தியிலும் பெயர்வைத்து பிறமொழி பேசும் மக்களிடையே வலுகட்டாயமாக திணிக்கும் சர்வாதிகாரசெயலை தான் மம்தா துணிவோடு எதிர்க்கிறார்.. தமிழகம் கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்கள் இதை பின்பற்றலாம் முதலிலேயே இதை தமிழகம் செய்திருக்கவேண்டும். காலதாமதமாகானாலும் விரைந்து செயல்படுத்தலாம் .. .. சுயமாநில உரிமையை நிலைநாட்டுவது அவசியம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அவர்கள் மீதான மொழிவழி தாக்குதலை நாம் கண்டுக்கொள்ளாமலே விட்டுவிட்டோம். மாநில சுயாட்சி பேசும் திராவிட கட்சிகள் திமுக உட்பட இதில் கவனம் கொள்ளவில்லையென்பதும் வருத்தம்தரகூடிய விடயம்தான்.. இனியாவது சமஸ்கிருத பெயரில் வரும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமெனில் தமிழில் பெயர்வைத்து பிரசாரம் செய்யவேண்டும்.. என்று உத்தரவிடவேண்டும்.. அப்போதுதான் மக்களின் மொழியில் அதுகுறித்த தெளிவு பிறக்கும்.. சமஸ்கிருத திண்ப்பை முற்றிலுமாக துடைத்தெறியலாம்.. இனி.. #எதுவாயினும்_எம்மொழியில்_பேசு.. .. #மம்தாவிற்கு_நன்றி.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment