Friday, March 17, 2017
கடவுளை மற மனிதனை நினை..
தோழர் பரூக் படுகொலை..
கோவையை சேர்ந்த அன்வர் என்பவர் சரண்..
கடவுள் மறுப்பை சொல்வதால் ஒருவன் கொல்லப்பட வேண்டுமெனில் இன்னமும் அந்த சமூகம் காட்டுமிராண்டியாக வாழ்கிறது என்று பொருள்..
இஸ்லாம் தெளிவாக சொல்கிறது உனக்கு உன் வழி எனக்கு எனது வழி.. அரைகுறை அறிவோடு இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத அரைவேக்காடுகள்.. தமிழில் வந்த மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு.. சிலரின் மூளை சலவையில் மதியிழந்து திரிகிறார்கள்..
..
கடவுள் உண்டென்றாலும் இல்லையென்றாலும் அதை ஏற்றுக்கொள் அல்லது மறுத்து கருத்திடு அதை விடுத்து கழுத்தறுத்து கொல்வது தான் இஸ்லாம் போதித்ததென்றால் அது மார்க்கமல்ல #மதம்.. இஸ்லாமிய நெறிமுறைகளை வாழ்வியலை சரியாக புரிந்துக்கொள்தாவர்கள்.. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கடும் கண்டணத்திற்குரியது.. இவர்களை போன்றவர்களை கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்..
..
கடவுளை மற மனிதனை நினை என்று சமத்துவம் பேசிய ஒருவனை கொன்றுவிட்டால் .. ஆயிரமாயிரம் மறுப்பாளர்கள் மனிதநேயர்கள் .. வருவார்கள்.. உலகில் பாதிக்குமேல் கடவுள் மறுப்பாளர்கள்தான் என்கிறது ஒர்ஆய்வு.. விஞ்ஞானிகள் உலகம் போற்றிய போற்றும் நல் வழிகாட்டிகள் சிறந்த மனிதர்கள் எல்லாம் நாத்திகர்களாகதான் வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்....
உலகையே தன் சிரிப்பால்/நடிப்பால் கவர்ந்திழுந்த..
#சார்லிசாப்ளின்.. சாதாரணமாக சிந்தித்தால் கூட
எனக்கு எதிலும் கடவுள் நம்பிக்கை ஏற்படவில்லை என்றார்.. அதுதானே உண்மை..
..
முதலில் மனிதனாகுங்கள்.. பிறகு
உங்கள் கடவுளைக் கட்டிக்கொண்டு அழலாம்.. எந்தமதமும்/கடவுளும் தன்னை மறுப்பவனை ஏற்றுக்கொள்ளாதவனை அழிக்க நினைக்கவில்லை கொல்ல சொல்லவில்லை.. மதம் மடையர்களையே உருவாக்கும் என்பதற்கு .. பரூக் படுகொலையே உதாரணம்..
கடவுள் இல்லை ..இல்லை ..இல்லவே இல்லை ..கடவுள்தான் வேண்டுமெனில் அதை உங்கள்
மனதிற்குள் வைத்துக்கொள்ளுங்கள்..
#மடையர்களே……
..
#மதம்தவிர்_மனிதனாகலாம்...
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment