Wednesday, March 1, 2017

புத்தங்களே அறிவின் நுழைவாயில்

இன்று பெரும் மகிழ்ச்சியில்.. . தளபதி பிறந்தநாளுக்கு புத்தகங்கள் குவிந்திருக்கின்றன.. வழக்கமான பிறந்தநாள் விழாக்களிலிருந்து மாறுபட்ட விழா.. புத்தங்களை பரிசாக தந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.. முன்பெல்லாம் திருமண விழாக்களுக்கு செல்லும் போது புத்தங்களை பரிசளித்திருக்கிறேன்.. என்னை சின்ன சிரிப்போடு சிலர் பார்த்திருக்கிறார்கள்.. உண்மையில் மிகச்சிறந்த பரிசு புத்தகங்கள்.. .. அறிவை சேமித்துக்கொள்ள உதவும் அற்புதம்.. நிறைய விடயங்கள் நமக்கு தெரியாததை அறிந்துக்கொள்ள உதவும்.. எந்தவகையானதாக இருந்தாலும் எதைப்பற்றி எழுதியிருந்தாலும் நம் கொள்கையிலிருந்து ..கோட்பாட்டிலிருந்து மாறுப்பட்டிருந்தாலும்.. மூடம் பேசினாலும் காமம் கவிதை கலவி,இல்லறம் ..விஞ்ஞானம் நளபாதம் எதுவாக இருந்தாலும்.. மடமையை போதிப்பதாக இருந்தாலும்,மதம் புராணம் வேதம் சடங்கு கேலி கூத்து என விளங்காதவை , எதற்கும் உதவாததாக இருந்தாலும்.. கலை பண்பாடு கலாச்சாரம் மொழி இனம் எதுவாக இருந்தாலும் படியுங்கள்.. சொல்லப்போனால் எழுதப்படாத வெள்ளை காதிதத்தை தவிர எல்லாவற்றையும் படியுங்கள்.. தெரிந்துகொள்வது எல்லாம் அறிவு அதில் உங்கள் அறிவு ஏற்பதை ஏற்பதுவே சிறந்தது.. பகுத்தாயும் திறன் மனிதனுக்கு மட்டுமே உண்டு.. எது சரி.. எது பொய் எது நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது..எதனால் எந்த பிரயோசனமும் இல்லை என பகுத்தாய்ந்து அதன்படி நடப்போம்.. .. அறிந்து கொள்ளுதல் அறிவு அதை ஆய்ந்தறிந்து ஏற்றல் பகுத்தறிவு.. சில குப்பைகள் கூட நம் மனதில் ஆழ சென்று விதைதூவும்.. ஆனால் அறிவேற்பதை மட்டுமே செழிக்கவிட வேண்டும்.. .. இந்த பிறந்தநாள் தளபதியாருக்கு மிகச்சிறந்த பரிசை தந்திருக்கிறது.. புத்தகங்களாய் அறிவு மலையாய் குவிந்து இருக்கிறது.. நிச்சயம் இது பயனுள்ளதாக்க அருகிலுள்ள நூலகங்களில் சேர்க்கப்படும்.. மக்களின் அறிவை தீர்க்கும் அரும்மருந்தாகும்.. பூமாலைகளும் பொன்னாடைகளும் பதாகைகளும் தராத மகிழ்ச்சியை இந்த நூல்கள் தரும்.. .. #புத்தகங்களே_அறிவின்_நுழைவாயில்…… .. #பெருவாழ்வு_வாழ்க_தளபதியாரே…… .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment