Saturday, March 25, 2017
திமுக...
#திமுக_வரலாறு..
..
திராவிட இயக்கத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காக
திராவிட கழகத்தலிருந்து பிரிந்து தேர்தலை சந்திப்பதென்ற முடிவை அறிஞர் அண்ணா எடுத்தார்.. 1957 ல் தேர்தலை சந்தித்தது 15 பேர் வென்று தமிழக சட்டமன்றத்தில் துவக்கம் குறித்தனர்..அப்போது பேசிய எதிர்க்கட்சி எப்படி நடந்துக்கொள்ளவேண்டுமென்பது ஆளும்கட்சியின் நடத்தையில் இருக்கிறதென்றார் பேரறிஞர் அண்ணா..
..
அப்போது அந்த 15 பேரையும் அடுத்த தேர்தலில் தோற்கடித்து காட்டுகிறேன் என்றார்.. பெருந்தலைவர் காமராஜர்
கலைஞர் தவிர மற்றவர்கள் 14 பேர் 1961ல் தோற்றார்கள்.. கலைஞரை தோற்கடிக்க முடியவில்லை..
அப்போது தந்தை பெரியார் காமராஜரை அழைத்து கருணாநிதியை எதிர்த்து யாரை நிறுத்துகிறாய் என கேட்டு பரிசுத்தநாடாரை நிறுத்த பரிந்துரைந்து நானே பிரசாரத்திற்கு வருகிறேன் என்றார்.. தஞ்சையில் பிரமாண்ட பொதுகூட்டம்.. பெரியார் பேச துவங்குகிறார்.. அருகிலிருந்த தேர்தல் அலுவகத்தில் கலைஞர் அமர்ந்து பெரியார் பேசுவதை குறிப்பெடுக்கிறார்..
பெரியார் பேசுகிறார்.. கருணாநிதி எனது நேரடி சீடன்.. அவனிடத்திலே ஒரு பொறுப்பை தந்தால் அதை செய்துமுடிக்கும் வரை உறங்கமாட்டான் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்ககூடியவன்.. சிறந்த அறிவாற்றல் உண்டு என புகழ்ந்து 10நிமிடம் பேசிவிட்டு அதை தொடர்ந்து திமுகவையும் அண்ணா கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசுகிறார்.. ஒருமணிநேரம் பேசுகிறார்.. கலைஞர் கலைஞரைப்பற்றி பேசியதை
துண்டு சீட்டாக அருகில் உள்ள வெற்றிவேல் பிரஸில் அச்சடித்து பெரியார் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் விநியோகம் செய்தார் அதில் ஒரு இளைஞன் வேகமாக மேடையில் ஏறி பெரியாரின் மடியில் துண்டு பிரசுரத்தை போட்டுவிட்டார் பெரியார் அந்த துண்டு பிரசுரத்தை படித்துவிட்டு சிரித்துக்கொண்டே சட்டைபையில் வைத்துக்கொண்டார்..
பிரசாரம் முடிந்து வந்து அறையில் அமர்ந்து மீண்டும் படித்துபார்த்துவிட்டு கருணாநிதியை யாராலும் தோற்கடிக்கமுடியாது என கூறி சிரித்தார்..
அந்த துண்டுபிரசுரத்தில்
#பெரியார் தன் நேரடி சீடன் கருணாநிக்கு புகழாரம்..
எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஊன்உறக்கமின்றி உழைப்பவன்..என எழுதியிருந்தது..
தஞ்சையில் கலைஞர் வெற்றியடைந்தார் ..
1962ல் காமராஜரால் அந்த14 பேரை தோற்கடித்தாலும் 48 பேர் தேர்வானார்கள்..
..
1967ல் அண்ணா தலைமையில் ஆட்சியமைக்கிறது..
பதவியேற்றதும் நேரடியாக பெரியாரை பார்க்க செல்கிறார்.. அண்ணா.. காரிலிருந்து இறங்கி நேராக பெரியார் அருகில் அமர்கிறார்.. அண்ணனின் கண்களிலிருந்து நீர் பெரியார் காலில்விழுகிறது
பெரியாரிடம் பத்திரிகையாளர் கேட்கிறார்கள் தங்களின் மனநிலை எப்படியிருந்தது என்றார்கள் பெரியார் புதுமணப்பெண்ணின் மனநிலைப்போல இருந்தது என்றார்..
..
திமுக வரலாறென்றாலே அது கலைஞரின் வரலாறுதான்..
திமுக வரலாற்றை துவக்கம் பேரறிஞர் அண்ணா என்றாலும் அதை தொடர்ந்து கட்டிகாத்து யாராலும் எந்நிலையிலும் எக்காலக்கட்டத்திலும் சிதைக்கமுடியாமல் .. துரோகங்கள் பழிவாங்கல்கள்..எல்லாம் கடந்து நான்காம் தலைமுறையினரிடம் தந்திருக்கிறார்.. திராவிடபெருந்தலைவர் கலைஞர்..
ஆம் ஆசான்.. #திராவிடபெருந்தவைவர்..
..
#பெரியாரின்_நேரடிசீடர்...
…
தோழர் ஆலஞ்சி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment