Saturday, March 11, 2017

அரசியல் .. தேர்தல் முடிவுகள்

தேர்தல்.. உ.பி மாநிலத்தில் 15 வருடத்திற்கு பிறகு அறுதி பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைக்கிறது.. கோவாவிலும் பஞ்சாப்பிலும் காங்கிரஸ்.. உத்ரகாண்டடில் பாஜக.. தேர்தல் முடிவுகள் உணர்த்துவதென்ன.. இந்தியா முழுவதும் உ.பி தேர்தல் யாருக்கு என பேசப்பட்டது .. ஆரம்பம் முதலே சமாஜ்வாடிக்கு பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.காரணம் அப்பன் மகன் அதிகார சண்டை பெரியளவில் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின.. முலாயம் விட்டுகொடுக்க மறுத்ததும் பின் வேறு வழியின்றி சரண்டர் ஆனதும் மக்களிடம் வெறுப்பை தந்தது.. அதோடு ஆளும்கட்சிக்கு எதிரான பார்வை .. எப்பதுமே ruling party இருக்கும் எதிர்போக்கும் எஸ்பியை பள்ளத்தில் தள்ளியது.. மிக முக்கியமாக இஸ்லாமிய வாக்குகள் இந்த முறை எஸ்பி காங்கிரஸ்க்கு கிடைக்கவில்லை கணிசமான வாக்குகளை உவைஸி பிரித்துக்கொண்டு போனார்.. 23 விழுக்காடு முஸ்லிம்களை ஒருங்கிணைக்க நல்ல தலைமை இல்லாததும்.. பாஜக முற்றிலுமாக முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாதது.. போன்றவை எதிர்வினையை தந்ததால் அதன் பலன் பாஜக மொத்தமாக கொண்டுபோனது.. .. இது மோடிக்கு ஆதரவாக என்பதைவிட அகிலேஷ் முலாயமிற்கு எதிராக என கொள்ளுதலே சரி.. பஞ்சாப்பில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.. அதேபோல கோவாவிலும் இங்கெல்லாம்,ஆளும்கட்சி மீதான அதிருப்தி மிக தெளிவாக பதிவாகியிருக்கிறது.. இந்த தேர்தல் ஏற்கனவே மக்கள் தீர்மானித்த முடிவாகதான் இருக்கிறது.. பாஜகவிற்கான வாக்குகள் ஒருங்கிணைக்கப்படாதவரை பாசிசம் வளரும் என்பதை முடிவு காட்டுகிறது.. எஸ்.பி காங்கிரஸோடு உவைஸி கைகோர்த்திருந்தால் கொஞ்சம் மெச்சப்பட்டிருக்கிருக்கலாம்.. ஆனால் கட்சிக்குள் சண்டை அதுவும் அப்பன் மகனுக்கு என்கிற போது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. பிறமாநில முடிவுகளோடு ஒப்பிடும் போது தானே தேடிக்கொண்ட வினை இது என்பதை அகிலேஷ் உணர்ந்திருப்பார்.. முலாயமின் சொல்லை கேட்டிருக்கவேண்டும் நீண்ட அரசியல் அனுபவமுடையவரை புறக்கணித்தது முடிவில் தெரிகிறது. .. நடந்த தேர்தல் மற்றொரு சேதியை சொல்கிறது.. மாநிலத்தில் ஆளும்கட்சி தோற்றியிருக்கிறது.. மாநிலத்தில் நடைபெற்ற அரசின் மீதான வெறுப்பும் கோபமும் பிரதிபலித்திருக்கிறது.. மக்கள் கோபம் கொள்ளவேண்டும் அப்போதுதான் ஜனநாயகம் செம்மையாகும்.. சில காலம் ஜனநாயகத்தின் கருப்புபக்கங்கள் நம்மை பார்த்து சிரிக்கும் அதே மக்கள் திரும்பவும் தூக்கியடிப்பார்கள்.. அப்போது ஜனநாயகத்தின் வலிமை தெரியும்.. .. #வெற்றிபெற்றோருக்கு_வாழ்த்துகள்… .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment