Tuesday, March 21, 2017
தா.பா.. கம்யூனிஸசத்தில் அசிங்கம்
இந்திய கம்யூனிஸ்டில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை தா.பா..
இவருக்கு தெரியாமல் இருப்பதே.. நன்று.. பொதுவுடமை சித்தாந்தத்திலிருந்து வெகு பின்னில் வந்துவிட்டார். இந்திய கம்யூனிஸ்ட்டை மக்களின் மனதிலிருந்து துடைத்தெறிந்ததில் பெரும்பங்கு பாண்டியனுக்கு உண்டு.. கீழ்தஞ்சையில் செல்வாக்கோடு இருந்த கதிர்அரிவாள்.. சொணைப்போய்விட காரணம் நம்மாளுதான்.. பெரியவர் நல்லகண்ணுவிற்கு பிறகு தேய்ந்து போனது இந்திய கம்யூனிஸ்ட்..
..
கமிழகத்தின் இன்றைய சீர்கேட்டிற்கு கம்யூனிஸ்ட்களின் பங்கு அதிகம். தா.பா. மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாதென்றாலும் மிகப்பெரிய காரணிகளில் ஒருவர்.. தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று தெரிந்தும் ஜெயலலிதாவோடு சமீபம் காட்டியதும். 2ஜி வழக்கை காட்டி திமுகவோடு இடதுசாரிகளை சேரவிடாமல் செய்ததும்.. மநகூவை ஆரம்பித்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்குவர காரணமாக இருந்தவர்களில் தா.பாவும் ஒருவர்
..
கட்சியின் வளர்ச்சியைவிட அதிமுகவின் வளர்ச்சியும் குறிப்பாக கிரிமினல் ஜெயலலிதாவின் வளர்ச்சிக்காக கம்யூனிஸத்தை குழித்தோண்டி புதைத்தவர்..இப்போது இவரை கேட்காமலேயே முடிவுகள் எடுக்கப்படுகிறது.. கண்கெட்டபிறகு வந்த ஞானோதயம்..
பொதுவுடமைக்கு இவருக்கும் ஏழாம் பொருத்தம்.. தன் சொந்த சகோதரரோடு சொத்து பிரச்சனையில் நடந்துக்கொண்ட விதம் பொதுவுடமைவாதிக்கு உகந்ததல்ல.. அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் இவருக்கு சாதகமாக நடக்க மறுத்தது. நியாயம் யார்பக்கம் இருக்கிறதென நீதிமன்றத்தை நாட சொன்னதும் கலைஞர் மீது கடும் கோவம்.. தன் மகனுக்கு பல்கலைகழகத்தில் உயர்பதவி வேண்டி ஜெயலலிதாவின் பின்னால் அலைந்து காரியம் சாதித்துக்கொண்டார்..
..
இடதுசாரி சிந்தனையாளர்களிடம் கூட ... தா.பாண்டியனுக்கு அவ்வளவு நல்லபெயரே இல்லை..
ஊழலுக்கெதிராக குரல் கொடுத்துக்கொண்டே ஜெயலலிதாவை ஆதரித்தது அவர்களின் இரட்டைவேடம் மக்களுக்கு புரிய தொடங்கியது.. திருத்துறைப்பூண்டி பகுதியில் கூட செல்வாக்கை இழக்க நேரிட்டது . பாண்டியனின் கலந்தாலோசிக்காமல் இயக்குவதுதான் எதிர்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்லது.. தா.பா. போன்றவர்கள் பொதுவுடமையின் அசிங்கம்..எப்படி பார்த்தாலும்
இவர் தன் கட்சியை விட அதிமுகவிற்குதான் அதிகம் மெனக்கட்டிருக்கிறார்..
..
#கம்யூனிஸ்ட்டில்_கரும்புள்ளி……
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment