Sunday, March 26, 2017

நல்லதொரு துவக்கம்

#நல்லதொரு_துவக்கம்.. .. தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். சசிகலாவை புகழ்ந்து பேச துவங்கியதும் பார்வையாளர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.. பாண்டே அமைதி ஏற்படுத்த எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை எதிர்ப்பு பலமானதால் அமைச்சர் பாதியிலேயே ஓட்டம் பிடித்தார் நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு பாண்டேவும் இறங்கிப்போனார்.. .. கருத்தை சொல்வதென்பதும் அதை நியாயப்படுத்துவதும் ஒரு வரையறைவரை ஏற்றுக்கொள்ளலாம் அதே நேரம் அளவிற்கதிகமாக போனால் அது திருப்பி தாக்குதலை தரும்..கிரிமினலை புகழ்ந்து அமைச்சரே பேசுவதும் அதை நெறியாளர் தொடர்ந்து அனுமதிப்பதும் தொலைக்காட்சிகளிலே நடந்து வருகிறது.. ஊடகங்கள் காப்ரேட் கம்பெனிகளான பின் அங்கே ஜர்னலிஸம் என்பது வியாபாரமாகி போகிறது.. நியூஸ்7 ல் கூட ஆர்.கே நகரில் போட்டி அதிமுகவிற்குள் என்பதை போலவும் திமுக பலவீனமான வேட்பாளரை நிறுத்தியிருப்பது போல சேதியை கட்டமைக்க முயன்று தோற்றது.... காரணம்.. தாதுமணல் மாபியா வைகுண்டராஜன் தினகரனுக்கு ஆதரவு தந்தவுடன் தன் போக்கை மாற்றிக்கொண்டு நிலைமாறி நின்றது.. .. மக்களின் கோவம் சரியானதும்கூட .. தொடர்ந்து சசிகலாவையும் ஜெயலலிதாவையும் உயர்த்திப்பிடிக்கும் கேடுகெட்டத்தனம் ரசிக்கமுடியவில்லை விலகி கடந்து போகவும் முடியவில்லை.. ஜனநாயகத்தின் நான்காம் தூண்.. செல்லரித்து போய்விட்டது.. ஆளும்கட்சிக்காக வளைந்து நின்றது என்பது மாறி யார் அதிகம் தருகிறார்கள் என்று பார்த்து எழுதுகிற பேசுகிற ஊடகத்துறை .. சிலர் மட்டுமே கொஞ்சமேனும் நேர்மையாக நடந்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.. ஆனால் ஜனநாயகத்தின் நான்காம்தூண்... நான்காம்தர செயல்பாட்டால் தகுதியிழந்து நிற்கிறது.. எமர்ஜென்ஸியின் போது கூட அஞ்சாமல் கருத்திட்டவர்கள்.. இப்போது ஆளும்தரப்பிற்கு ஜால்ரா தட்டுகிறார்கள்.. அதனால்தான் தரங்கெட்டுப்போய் ..பாண்டேக்களும்... கார்த்திகை செல்வன்களும்..உருவாகிறார்கள்.. தங்கள் காப்ரேட் முதலாளிகளின் காலடியில் கிடக்கிறார்கள்.. கோயங்கே .. சிவராமன்.. குல்தீப் போன்றோர் கோலோச்சிய ஊடகத்துறை..இன்று மதிப்பிழந்து மக்கள் விரட்டும் நிலைக்கு வந்துவிட்டது.. .. மக்கள் பிரதிநிதிகள்,அரசு ஊழியர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள்.. இவை அனைத்திலுமே ஜனநாயக மாண்பு கெட்டுப்போய் கிடக்கிறது.. ஊடகத்துறையின் மகத்துவத்தை உணர்ந்து செயல்படாமல் பிழைப்புக்காக நடத்தினால் இப்படிதான் நாசமாய் போகும்.. .. #காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீ தான்! ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே” என்று பாடினார். எங்கள் #புரட்சிகவிஞர்_பாவேந்தர் .. நடுநிலை என்பதே பொய் .. ஏதேனும் ஒன்றை சார்ந்தே நிற்கமுடியும் எனினும் .. சில இக்கட்டான சமயங்களில்/நேரங்களில் தார்மீக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.. இல்லையெனில்.. #மக்களால்_இப்படிதான்விரட்டபடுவீர்கள்… .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment