Monday, March 20, 2017
சிபிஐ..நாறுகிறது..
சிபிஐ..
மத்திய புலனாய்வு துறை.. இந்த அளவிற்கு சீர்கெட்டு போனது இப்போதுதான் என நினைக்கிறேன் ஆட்சியாளர்களுக்கு எந்தவொரு புலனாய்வு அமைப்பு வளைந்து நிற்கும் தான் ஆனால் நடுவொடிந்துபோய் இப்போது நிற்கிறது.. விசாரணை நீதிமன்றத்தில் தினம் தினம் முகமிழந்து நாறிக்கொண்டிருக்கிறது..₹170000,கோடி என்றவர்கள் இப்போது தடுமாறுகிறார்கள்.. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அடுக்கி வைக்கலாமென்ற பார்பன ஏடு தினமலர்கூட வேறுவழியின்றி சிபிஐ மானத்தை கப்பலேற்றுகிறது.. பாஜகவின் முரளிமனேகர் ஜோஷி வற்புறுத்தியதாலேயோ கையெழுத்திட்டதாக ஆர்.பி.சிங் சாட்சியம் சொல்கிறார்.. கடைசியில் நீர்த்துப்போன கதையாய் ..
..
கலைஞர் டிவிக்கு ₹200 வழக்கில் அனுசரனையாக நடந்துக்கொண்டார் என்ற வாதம் கடைசியில் கேலிபொருளாக எல்லோரும் சிரிக்கிற நிலைக்கு வந்திருக்கிறது.. ராசா மிக சிறந்த நிர்வாகி என்பதை காலம் கடந்து நாடு உணர தொடங்கியிருக்கிறது.. கலைஞர் பெருமகன் ஒருவரிடம் ஒரு பதவியை வாய்ப்பை.. தருகிறார்கள் என்றால் நிச்சயமாக அவர் திறமையை பலகட்டமாக கண்டும் கேட்டும் இருப்பார் நிறைய ஆலோசனைக்கு பிறகுதான் கலைஞரிடமிருந்து வாய்ப்பை பெறமுடியும்.. அரசியலில் பொதுவாழ்வில் நிர்வாகத்தில் இதுவரை யாருமே எதிர்கேள்வி கேட்கமுடியாமல் தான் கலைஞரிடம் திணறுகிறார்கள்.. எத்தனை விமர்சனங்கள் பொய் பிரச்சாரங்கள்.. விஷமதனங்கள் .. அனைத்தையும் அவர் கடந்து வந்திருப்பது அவர் தனக்கு சரியெனப்பட்டதை அறிவேற்றதை , துணிச்சலாக செய்திருக்கிறார்.. ஆரம்பத்தில் எதிர்ப்பு வந்தாலும் கடைசியில் கலைஞர் செய்ததுதான் சரி என்று மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..
..
இதோ 2ஜி வழக்கு இந்தியாவில் இது போன்று ஒரு ஊழல் வழக்கு எப்போதுமே பேசப்பட்டதில்லை ஒட்டுமொத்த இந்தியாவின் ஊடகங்களும்.. அரசாங்கமும் அதைவிட உச்சநீதிமன்றமும் வரிந்துக்கட்டிக்கொண்டு திமுகவின் மீது பழிசுமத்தி தனிமைப்படுத்தின.. இது வேறு யாருக்காவது அல்லது எந்த அரசியல் கட்சிக்காவது நடந்திருந்தால் இந்நேரம் அந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.. கலைஞரின் அஞ்சாமையும் .. தவறு செய்யவில்லை என்பதால் எதுவும் நடந்துவிடாது என்று அசைக்கமுடியாத நம்பிக்கையும்.. திமுகவை இதுவரை கட்டிகாத்தது..
இதனால் திமுக இழந்ததென்வோ ஆட்சியைதான் மாறாக தமிழகம்.. கிரிமினல் ஜெயலலிதாவின் கையில் சென்று குட்டிசுவரானது மாநிலத்தின் வளர்ச்சி அகலபாதாளத்தில்.. இன்று தமிழகம் சந்திக்கிற அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணியானது.. மாநிலத்தில் வளர்ச்சியென்பது போய் வறட்சியானது..
..
எதையும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகினால் கடைசியில் இழப்பைதான் தரும்....
பொய்க்கு அலங்காரம் செய்து நம்முன்னே நிறுத்தினார்கள்.. நாமும் நம்பினோம்.. சாயம் வெளுத்தபோதுதான் தெரிந்தது.. உண்மை ஆழ குழித்தோண்டி புதைத்தாலும்.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும்.. நிச்சயமாய் ஒருநாள் வெளிவரும்..
மண்ணை கிழித்துக்கொண்டு முளைக்கும்.. அப்போது புரியும்..அதுதான் இப்போது நடக்கிறது..
#உண்மைஎன்றைக்கும்_உறங்காது……
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment