Friday, March 10, 2017

தமிழக கோமாளிகள்..

நாடாளுமன்ற மேலவையில் தமிழக எம்பிகள்.. அதிமுக எம்பி மைத்ரேயன் ஜெயா மரணம்குறித்து பேச விஜிலா கடும் எதிர்ப்பை தெரிவித்தார் சபாநாயகர் குரியன் எச்சரிக்கை செய்தி.. மற்றொன்று செய்தி தமிழக மீனவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கனிமொழி மத்திய அரசு என்ன செய்கிறது .. என கேட்கிறார் கொடுக்கப்பட்ட மூன்று நிமிடம் போதாது என போராடுகிறார்.. .. இதுதான் தமிழகத்தின் நிலை.. யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து அனுப்பியதன் விளைவு.. நல்ல தலைவர்களை புறக்கணித்து காசிற்காக சில ஊடகங்களில் பொய்யுரையை நம்பி .. தகுதியில்லாத தரம் கெட்டவர்களை தேர்வு செய்து அதிகாரத்தை கொடுத்ததால் அவர்கள் தங்களுக்கு வேண்டியவரை மேலவைக்கு அனுப்பி தங்கள் புகழ்பாடவும் யாரும் எதிர்த்தால் கூச்சலிடவும் சபையை கேலிகூத்தாக்கிறார்கள்.. முன்பெல்லாம் தமிழக எம்பிகள் பேச ஆரம்பித்தால் நாடே கூர்ந்து கவனிக்கும்.. பிரதமர்வரை இருந்து கேட்பார்கள்.. ஆனால் இப்போதெல்லாம் பியூட்டிபுல் காஷ்மீர் பாடல் பாடும் தெரு பாடகரை தேர்வு செய்திருக்கிறோம்.. .. திமுகவை சிலகாலம் புறக்கணித்தின் விளைவு கண்கூடாக தெரிகிறது.. திமுக தலைமை மிக சமார்த்தியமாக பேசகூடியவர்களை பிரச்சனை சரியான முறையில் கையாளும் திறமையாளர்களை.. தங்கள் வாததிறமையால் நாடாளுமன்றத்தை திணறடித்தவர்களை..நாட்டையே திரும்ப பார்க்கவைத்தவர்களை அனுப்பி தமிழகத்தின் மானத்தை காத்தது.. இரா.செழியன் ..நாவலர் தொடங்கி கனிமொழி ஆர்.எஸ்.பாரதி வரை .. திருச்சி சிவா போன்றவர்களால் நாடாளுமன்றம் பெருமைபடுகிறது.. ஆனால் நவநீதம் போன்றவர்களால் தமிழர்கள் தலைகுனிகிறார்கள்.. .. எதை பேசவேண்டும் நாடாளுமன்றம் போன்ற கண்ணியமிக்க ,பெருமைக்குரிய சபையில் எவ்வளவு முக்கியமான பிரச்சனைகள் தமிழகத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது.. எப்படி கொடுக்கப்படும் சிறியகால அளவில் கவனஈர்ப்பு செய்து மத்திய அரசிடம் பதிலை பெறவேண்டுமென தெரியாமல் ..சொந்த பிரச்சனையை உட்கட்சி பூசலை கையிலெடுத்து நேரத்தை விரயம் செய்கிறார்கள்.. இது வரை ஒரு அதிமுக உறுப்பினர் கூட சரியாக திறமையாக பேசியதாகவோ வாதிட்டதாகவோ தெரியவில்லை.. மக்களின் பிரச்சனையை சபைக்கு அறிவித்து கவனஈர்ப்பு செய்ததாகவோ... எந்தவொரு தமிழக நலன்கள் மீதான விவாதத்தில் தங்கள் பங்கை சிறப்பாக செய்ததாகவோ தெரியவில்லை மாறாக திமுக எந்த பிரச்சனை பற்றி பேசினால் அதற்கெதிராக பேசி.. திசைதிருப்பி தமிழகநலன்களை கெடுத்தே வந்திருக்கிறார்கள்.. ஜெயலலிதாவிற்காக பேச தெரிகிறது சண்டை போடதெரிகிறது.. ஆனால் மக்களின் துன்பங்களை துடைக்க வழிவகை செய்ய முடியவில்லை.. .. காரணம் நாம் தான்.. தகுதியில்லாதவர்கள் அரிதாரம் பூசி மயக்கியவர்களை நம்பி போனோம்.. சாயம் வெளுத்தால் நிஜம் தெரியுமென அறியாமல்.. நேரம் ஆக ஆக சாயம் போனது.. நிஜம் நம்மை சுட்டெரிக்கிறது.. .. #சாயம்_வெளுத்தால்_மோகம்போகும்…… .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment