Monday, March 13, 2017
கமல்..
மெல்ல தலைகாட்டுகிறது பூனைக்குட்டி..
கமல் எனும் நாத்திகரின்..? பேட்டி முழுவதும் மீண்டுமொருமுறை கேட்டுபாருங்கள்.. பத்து தருண்விஜய் தெரிவார்.. காந்தி திலகரோடு சர்வாக்கரை இணைக்கும் மெல்லிய தந்திரம் நமக்கு புரியாமல் இல்லை.. இப்படிதான் ஆரம்பத்தின் சமூகத்தின் பால் அதிகோபம் கொள்வதைபோல காட்டிக்கொண்டிருப்பர்.. கமல் அரசியல் செய்வதை தடுக்கவில்லை வெளிப்படைதன்மை இல்லாத போகிறபோக்கில் எல்லோரையும் சகட்டுமேனிக்கு திருடர்கள் போல பேசுவது ஏதோ ஒன்றை முன்னெடுக்க
என்பதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்
..
முற்போக்கு பேசுகிற பார்பனர்கள் ஆபத்தானவர்கள் என்பார் எமது பேராசிரியர் நன்னன் அவர்கள் கம்யூனிஸிட்களில் பார்பனர்கள் தலைமை பொறுப்பை ஏற்று கடைசியில் கட்சியை ஒன்றுமில்லாததாக்கியதை போல தான் .. கமல் பேச்சினுடே தொடர்ந்து சொன்னவிடயம் பாஜக வெற்றிபெற்றிருக்கிறதே.. என்றபோது அதை மௌனமாய் மழுப்பி கடந்து போனார்.. சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் மன்னிப்பு எழுதி கொடுத்த சர்வாக்கரை காந்தியோடு இணைத்து பேசும் போதே .. #அவர் வெளியே வருகிறார்..
..
மக்கள் கருத்துகளை தைரியமாக சொல்லவேண்டுமென்கிறார்.. மோசமான ஆட்சியாளருக்கெதிராக போராட வேண்டுமென்கிறார்..சரி.. ஆனால் விஸ்வரூப பிரச்சனையில் நேரடியாக பாதிக்கப்பட்டும் ஜெயலலிதா பெயர் சொல்ல மறுக்கும் இவரது நேர்மை கேள்விகுறியாகிறது.. அநீதி என்று தெரிந்தும் அப்போது ஏன் வாய்மூடி இருந்தார் என்று கொஞ்சம் யோசித்தால் புலப்படும்.. தோழர் மதிமாறன் சொல்வதை போல .. போலியானவர் கமல்.. நேரடியாக எதையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ மறுப்பவர்கள் /ஆதரிக்கவோ தெரியாதவர்கள் பலவீனமானவர்கள் அதைவிட ஆபத்தானவர்கள்.
..
சிலர் என் மீது கோவபடகூடும்..
தனிபட்ட கமலின் மீதோ அவரது கலையின் மீதோ எந்த எதிர்கருத்துமில்லை அவரது தனிப்பட்ட விடயங்களை நாம் பேசபோவதுமில்லை பேசவும் தேவையில்லை.. ஆனால் அவரது சமூகம் சார்ந்த கண்ணோட்டம் போலியானது ..
..
சிறிய தகவல்..
நான் கமலின் தீவிர ரசிகன்.. #நடிப்பிற்குமட்டும்..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment