Tuesday, March 7, 2017

எழுபதாண்டில் ஒர் இயக்கம்

#IUML இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. எழுபதாவது ஆண்டில்.. அகில இந்திய முஸ்லீம் லீக்காக ஒன்றிணைந்த இந்தியாவில் நவாப் சலீம் முல்லாகான் 1902 ல் தொடங்கினார்.. இந்திய பாக் பிரிவினைக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் "அகில" என்பது நீக்கப்பட்டு 1948 மார்ச்10 ல் இந்திய ஒன்றிய இஸ்லாமிய கூட்டிணைவாக IUML தொடங்கப்பட்டது .. அதன் தலைவராக கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் வந்தார்.. அதை தொடர்ந்து பனாத்வாலா சுலைமான்சேட் .. தொடங்கி இன்று பேராசிரியர் எழுபதாவதாண்டில் தலைமை ஏற்றியிருக்கிறார்.. .. இந்தியா விடுதலைக்கு பிறகு இதன் தலைமை பொறுப்பை பனாத்வாலா தவிர்த்து திராவிடர்களே ஏற்றுவந்திருக்கிறார்கள்.. காயிதெ மில்லத் ஷிகாப் தங்ஙள், இ.அகமது இப்போது பேராசிரியர்.. வடமாநில முஸ்லீம்கள் அதிகளவில் காங்கிரஸ் பேரியக்கத்தோடு ஐக்கியமாகிவிட்டதால் அல்லது பின்துணைத்ததால் பெரியளவில் சமூக மக்களிடம் சென்று சேரவில்லை.. அதிகார போட்டியும் அகந்தை மனப்பான்மையும் தெற்கிந்தியாவில் பல பிரிவுகளாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்தி கொள்கிற அமைப்புகளாக தங்களே சரி என்கிற ரீதியில் பிரிந்து போய் செயலிழந்த சமூகமாக இஸ்லாமிய சமூகம் இருந்து வருகிறது.. மலபாரில் மட்டும் ஒன்றுமையுணர்வால் அதிகாரத்தை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள்.. தமிழகம் போன்ற மாநிலங்களில் கேட்கவே வேண்டாம்.. மொத்தம் எத்தனை இஸ்லாமிய அமைப்புகள் என்பதை எண்ண விரல்கள் போதாது.. .. நீண்ட இடைவெளிக்கு பிறகு தேசிய தவைவராக ஒரு தமிழர் வந்திருக்கிறார்.. மிகவும் மென்மையான போக்கும் எளிமையுமே இவரது முகவரி.. நெல்லையில் எழுபதாவது ஆண்டு விழா கொண்டாடுகிறார்கள் வாழ்த்துகள்.. எங்களூர் சேர்ந்தவர் மாவட்ட பொறுப்புகளிலும் மாநில பொறுப்புகளிலும் இருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி.. எனது நண்பரும் சிறந்த சமூக ஆர்வலரும் toshiba elevator மத்திய கிழக்கின் நிர்வாக இயக்கனரும் சிறந்தநிர்வாகியும் நல்ல எழுத்தாளருமானM J இக்பால் Jamal Mohamed Mohamed Iqbal அவர்கள் ஷிகாப் தங்ஙள் விருதை பெறுகிறார்.. பெரும் மகிழ்ச்சி.. .. இஸ்லாமிய சமூகம் பிரிந்து கிடப்பது காலபோக்கில் கிடைக்கவேண்டிய அங்கீகாரத்திற்கு தடையாக இருப்பதை அறிந்து ஒரு கொடி நிழலில் சேரவேண்டும்.. இது குறிப்பாக முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வை பெற வழிவகை செய்யும். இன்னமும் தடுக்கப்பட்டும் வரும் உரிமைகளை கூட போராடி பெற முடியும்.. நூற்றாண்டு இயக்கத்தில்.. சுதந்திர இந்தியாவின் எழுபது வருட பழமைவாய்ந்த இயக்கத்தின் கீழ் பிற இஸ்லாமிய சமூக அமைப்புகள் செயல்பட்டால் உன்னதநிலையை அடையலாம்.. .. எழுபதாண்டாய்.. சமூக நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழும் IUML க்கு வாழ்த்துகள்.. .. தோழர் ஆலஞ்சி...

No comments:

Post a Comment