Sunday, March 26, 2017

ஜெயலலிதா..

மாலையிலேயே அம்மா இறந்துவிட்டார்கள் என்ற செய்தி பாண்டேக்கும் தெரியும் Ma Foi K Pandiarajan .. கூடவே அது ரங்கராஜ் பாண்டேவிற்கும் தெரியுமென்றார்.. அவர் அரசியல் பேசுவதாகவே வைத்துக்கொள்வோம்.. ஆனால் அப்போலோ நிர்வாகம் முதலில் ஜெயலலிதா இறந்ததாக எல்லா ஊடகங்களிலும் வந்த செய்தியை மறுத்து மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என அறிக்கை தந்ததே .. அப்படியெனில் மருத்துமனை நிர்வாக தந்த செய்தியும் பதிலும் பொய்.. ஏற்கனவே பன்னீரும் இதே செய்தியை அதாவது நாலரை மணிக்கே இறந்துவிட்டார்களென சொன்னார்.. ஒரு மாநில முதல்வரின் மரணத்தில் ஏன் இத்தனை குளறுபடிகள் இவர்கள் அதிகார சண்டையில் மெல்ல உண்மை வெளிவருகிறதே.. இவர்களுக்குள் அதிகார போட்டி வராமல் பதவி ஆசை இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் இப்போது கூட இதை சொல்லபோவதில்லை.. .. என்னவொரு அயோக்கியத்தனம்.. தொடர்ந்து பதவி தந்து அதிகாரம் தந்து இவர்களை அடையாளபடுத்தியவர்.. சரியோ தவறோ திறமை இருக்கிறதோ இல்லையோ தான் விரும்புகிறவரை தூக்கிவிட்டவர்...இவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை இல்லாததால் தான் அடிக்கடி அமைச்சரை .. சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் போலும்.. ஒருவர் கூட உண்மையாக இல்லை..நம்பிக்கையானவரை நல்ல நண்பரை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்ற அந்த பெண்மணியில் வாழ்வியல் எவ்வளவு மோசமானவர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கவேண்டும்..யாரையும் நம்ப முடியாமல் நோயின் பிடியில் சொந்தங்கள் யாருமின்றி பதவி பண அதிகார ஆசை பிடித்தவர்களின் பிடியில் தன் இறுதிநாட்களை கழித்திருக்கிறார்.. உண்மையில் இறக்கமில்லாதவர்களின் பிடியில்.. .. ஜெயலலிதா என்ற அரசியல்வாதியின் மீது கடும் அதிருப்தி உண்டு .. அவரின் அரசியல் எக்காலகட்டத்திலும் நமக்கு ஏற்புடையதாக இல்லை கொஞ்சமும் ஜனநாயமரபுகள் இல்லாத தான்தோன்றித்தனமான, விவரகேடான,ஆட்சியை தான் தந்தார்.. அவரது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் நிறைய சோகங்களை இழப்புகளை கொண்டிருந்தார்.. அவரின் அரசியலை தவிர்த்து அவரது வாழ்க்கை மிக பரிதாபகரமானது .. வாழ்வில் ஒருவரை கூட நம்பிக்கையானவராக தேர்வு செய்யமுடியாத கொடுமை.. உறவுகள் உட்பட மிகவும் சோகமானது.. உறவின் பலம்,இறப்பில் தெரியுமென்பார்கள் அதுகூட ஜெயலலிதாவிற்கில்லாமல் போனது.. .. சரியான எதிரியை இனம்கண்ட அவரால் ஒரு நல்லவரை நம்பிக்கைக்குரியவராக இனம்கான முடியவில்லை.. நல்ல ஒரு மனிதரை /மனுஷியை கூட அவரோடு இல்லை.. எல்லாரும். நயவஞ்சகர்களாகவே,இருந்திருக்கிறார்கள்.. பாவம் வாழ்வியலில்.. #ஜெயலலிதா_தோற்றமனுஷி.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment