Thursday, March 9, 2017

ஆர்.கே.நகர்

ஆர்.கே நகர்.. இடைத்தேர்தல்.. யார்யாரெல்லாம் களமிறங்க போகிறார்கள் என்பதுகூட இன்னும் முடிவாகாத நிலையில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் யார் வெற்றிபெற கூடாது என்பதுதான்.. .. அதிமுக சசிகலாதரப்பு இங்கே நிறைய பணத்தோடும் அதிகாரபலத்தோடும் போட்டியிடும்.. காரணம் அவர்களுக்கு அதிமுக யாரிடம் என்ற கேள்விக்கு மக்கள் தரும் அங்கீகாரமாக இதை கணக்காக்கலாம்.. பன்னீர் தரப்பு தன் நிலையை கொஞ்சமேனும் மெச்சப்படுத்த இதை பயன்படுத்த முயற்சிக்கும்.. தீபாவை இங்கே பேசவேண்டியதில்லை ஆயிரம் வாக்கு வாங்கினாலே பெரிய விசயம் தேர்தல் பணிசெய்ய ஆட்கள் கிடைப்பார்களா என்று தெரியவில்லை.. சசி அதிமுக எங்களின் பிரதான எதிரி திமுகதான் என அடிக்கடி சொல்லி வருவதற்கு காரணம் நாங்கள் தான் அதிமுக .. பன்னீரோ தீபாவோ அல்ல என்று மக்களுக்கு புரிய வைப்பதற்காக என்று நினைக்கிறேன்.. .. திமுக யாரை நிறுத்தினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் களப்பணி ஆற்ற அக்கட்சியினர் தயாராக இருப்பார்கள் ஜனநாயக முறைப்படி விருப்பமனு ..நேர்காணல் எல்லாம் முடிந்து தெரிவுசெய்யபடுவார்.. அதிமுகவில் பணபலம் பொருந்தியவரை நிறுத்தலாம்.. மற்றவர்கள் பாடு கொஞ்சம் சிரமம் தான். இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனபோக்கு இந்த முறை மாற்றியமைக்கப்படலாம்.. வாக்குகள் சிதறுவதை இடைதேர்தலில் கணக்கில் கொள்ளமுடியாது .. காரணம் பிரதானமாக பணம் பேசும் ₹5000 வரை வாக்கிற்கு செலவு செய்ய இருப்பதாக செய்திகள் கசிகின்றன.. காரணம் கட்சியில் ஏற்பட்டிற்கும் பிளவில் மக்கள் யாரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் தொண்டர்கள் வருவார்கள்.. அதைவிட சசிகலா மீதான விமர்சனங்கள் ஜெயா மரணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க உதவும்.. அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்வார்கள்.. மக்களின் ஆசையை தூண்டிவிடுவார்கள்.. தோற்றால் எதிர்காலம் கேள்விகுறியாகுமென அறியாதவர்கள் அல்ல.. எல்லாவகையிலும் வன்முறையை கையிலெடுத்தாவது வெல்ல முயற்சிப்பார்களி.. காரணம் தங்கள் முன் நிற்கும் பிரச்சனைகளை சந்திக்க கட்சியும் ஆட்சியும் வெற்றியும் அவசியம்.. ஆனால் எந்தளவிற்கு முடியுமென தெரியவில்லை.. .. எது எப்படியோ திமுகவோடு இனி வரும்காலங்களில் மோதபோவதுயார் என்பதை இந்த தேர்தல் தெரிந்து விடும்.. பாஜக மநகூவெல்லாம் ஆளும்கட்சிக்கு பூத் ஏஜெண்ட் (வாக்குசாவடிமுகவர்) எண்ணிக்கையை உயர்த்த உதவுவார்களே தவிர.. மானம் மரியாதை.. யார் வரகூடாது என்று சிந்திப்பதெல்லாம் அவர்கள் அகராதியிலேயே இல்லை.. ஏனெனில் தண்டிக்கப்பட்ட கிரிமினலையே நல்லவரென்கிற கொள்கை உடையவர்கள் கிரிமினலை ஆதரிக்கவர்கள்.. .. நேரடி போட்டி யாருக்கென்பது சிலதினங்களில் முடிவாகிவிடும்.. ஆர்கே நகர் மக்கள் முடிவெடுக்கட்டும்.. #பணமா_கௌரவமா.. Money or honor.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment