Thursday, March 23, 2017

தளபதி..

எம் தளபதி நடத்துனர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து பரிதாபகரமாக தோற்றுக்கொண்டிருக்கிறார் என்றேன்.. நண்பர் கவிஞர் நிஷா மன்சூர்.. .. கவிஞரிடமிருந்து கவிதையாய் விமர்சனம்.. தனபாலின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது என்றுதெரிந்தும் கொண்டுவந்ததின் நோக்கம்.. வெரி சிம்பிள்.. சபாநாயகர் சபையை நடத்தும் அழகை விமர்சிக்கவும் எப்படி நடத்தவேண்டும் எப்படி முன்பெல்லாம் சபாநாயகர்கள் இருந்தார்கள் என்பதை தனபாலுக்கு புரியவைக்கவுமே தவிர.. தனபாலை வீழ்த்துவதல்ல எங்கள் நோக்கம்.. வீழ்த்துவது என முடிவெடுத்துவிட்டால் தனபாலை அல்ல எடப்பாடி அரசையே வீழ்த்திவிட முடியும்.. அது அவ்வளவொன்றும் பெரியகாரியமும் அல்ல.. இப்போதுள்ள சூழலில் மிக எளிதாக வளைத்தொடிக்க முடியும்..ஆனால் ஜனநாயகத்தில் கொஞ்சமேனும் நேர்மையை கடைப்பிடிக்கவேண்டுமென்ற தளபதியின் பிடிவாதம் இவர்களின் ஆட்டத்திற்கு முடிவுரை எழுதாமல் தப்பிக்கசெய்கிறது.. .. வறண்டுபோன ஜனநாயக நெறிமுறையை .. மீண்டும் துளிர்விட செய்ய சிறிதாயேனும் தண்ணீர்விட முயற்சிக்கிற பெரும் முயற்சியிது.. இறுக்கமான அரசியல் சூழல் தளர்த்தி வெகுஜன விருப்பத்தை செவிமடுக்கும் ராஜதந்திரம் .. நீண்டகால நிலைத்துநிற்பிற்கு வழிவகைசெய்யும் செயல்முறையைதான் கையிலெடுத்திருக்கிறார்.. நட்டதும் பூக்கவேண்டுமென நினைப்பதும் அதுதான் சரியென்ற அரசியலும் பார்த்து பழகியதால்.. நாமும் கொஞ்சம் அவசரகதியை விரும்ப தொடங்கிவிட்டோம். .. சபாநாயகர் தனபால் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பேசும் போது.. எனக்கு எதிர்த்து வாக்களித்தவர்களின் நம்பிக்கையை பெறும்வகையில் நடந்துக்கொள்வேன் என உறுதியளித்திருக்கிறார் அதுதான் வேண்டும்.. அது மட்டும்தான் சிறந்த செயல்படாக அமையும்.. நல்ல நேர்மையான நெறிகளோடு..புதியதொரு ஜனநாயகபாதையை அமைத்துக்கொண்டிருக்கிறார்.. தளபதி.. நிச்சயம் தமிழக மக்கள் விரும்புகிற தலைவராக/ அரசின் தலைவராக வருவார்.. வெற்றிபெறுவார்.. .. #விடியும் .. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment