Friday, March 24, 2017

தரங்கெட்டவர்கள்

ஆட்சியாளர்கள் அதிகாரவர்க்கத்தின் மனோநிலை மிகமோசமாக போய்கொண்டிருக்கிறது.. அகந்தை ஆணவம் தலைக்கேறி என்ன பேசுகிறோம் என்பதறிந்தும் திமிரோடு செய்கிறார்கள்.. செல்லூர் ராஜூ உன்புருஷன் கூட இல்லையா என கேட்க தீபா சற்று தடுமாறுகிறார்.. கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல் மாநிலத்தில் ஒரு அமைச்சர் ஒருபெண்ணின் தனிப்பட்ட விடயங்களை பேசிகிறார் /விமர்சிக்கிறார்.. கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாத அடிமடையராக இருக்கிறார்.. யார் இவர் இவருக்கு தீபாவின் குடும்பவாழ்க்கையை பற்றி கேட்க என்ன அதிகாரம் /தகுதியிருக்கிறது.. நெறியாளர் அமைதிகாப்பது அசிங்கம்.. உடனே கண்டித்திருக்கவேண்டும்.. தீபாவின் அரசியலை அவர் செய்யும் நாடகத்தை விமரிச்கலாமே தவிர அவரையோ அவரது குடும்பத்தையோ அல்ல..எதற்கு எல்லை உண்டு அதை மீறி தரம்தாழ்ந்து பேசியிருக்கிறார் ராஜூ.. இவர்தான் செத்தவரின் உடல்மீது அம்மா அரசியல் செய்தவர் இவர் தரம் இவ்வளவுதான்.. .. நாங்கள் தாழ்த்தப்பட்டவனை நிறுத்தியிருக்கிறோம்.. கள்ளசிரிப்போடு வானதிஸ்ரீநிவாஸன்.. திரும்ப திரும்ப சொல்வதின் நோக்கம் கங்கைக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம் எங்களுக்கு புரிகிறது.. தன்னை தாழ்ந்தவன் என அழைக்க விரும்பாத அமரனிடம் நீ.. என்ன செய்தாலும் எவ்வளவு உயரத்தில் நின்றாலும் upper class மேல்வர்க்கத்தில் பெண் எடுத்திருந்தாலும் தாழ்ந்தவன் தான் என சொல்லி புரியவைக்கிறீர்.. வெல்லமுடியும் என்றிருந்தால் வானதியோ அல்லது ராசாவோ விட்டுகொடுத்திருப்பார்களா.. .. பொதுமேடையில் பேசும் போது தனிநபரின் பிறப்பை நையாண்டி செய்வதோ, அவரின் குடும்பநிலையையோ,அவரின் அந்தரங்க விடயங்களையோ பேசுவது அநாகரீகமானது அற்பதனமான செயல்.. உங்கள் முதுகின் பின் ஒளிந்திருக்கும் அசிங்கங்கள் ஆயிரம்.. யாரையும் அவரின் செயல்பாட்டை கொண்டே விமர்சியுங்கள்.. தரம்தாழாமல்.. .. #தரங்கெட்டவர்கள். .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment