Tuesday, March 7, 2017
உண்ணாவிரத நாடகம்
ஜெயா மரணத்திற்கு நீதிகேட்டு தமிழகம் முழுவதும் மற்றும் மும்பை சிங்கப்பூர் உள்ளிட்ட முப்பது இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறும்.. மா.பா. பாண்டிராஜன்
உண்மையில் இவர்களுக்கு அக்கறை இருக்கிறதா என சந்தேகம் தான் வருகிறது.. அதிகாரத்தில் இருந்தவரை வாய் திறக்காதவர்கள் .. கீழிறக்கப்பட்டவுடன் ஜெயா மரணத்தில் சந்தேகம் கொள்வார்களாம்.. நாளை உண்ணாவிரதமிருப்பவர்கள் தான் அப்போலோவில் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் என்றவர்கள் எங்களோடு விவாதித்தார் காவிரி பிரச்சனை முதல் எல்லாவற்றிக்கும் ஆலோசனை தந்தாரென பொய் சொல்லி தங்களையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றியவர்கள்.. கொலைக்காரர்களை விட இவர்கள் மோசமானவர்கள்..
..
தொடர்ந்து பன்னீரை அதிகாரத்தில் இருக்க வைத்திருந்தால் இப்பவும் கைக்கட்டி வாய்பொத்தி சசிகும்பலுக்கு சேவகம் செய்துக்கொண்டிருப்பார்.. திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஜெயலலிதா மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் புகைப்படத்தை வெளியிடுங்கள் மக்கள் செய்தி தொடர்புத்துறை மூலம் வெளியிட்டிருந்தால் எல்லா சந்தேகங்களும் தீர்ந்திருக்குமே ஆனால் அப்போது திமுக மீது பாய்ந்தவர்கள் இன்று ..தெருவில் வந்து போராடவருகிறார்கள்.. உள் சண்டையில் ஆதாயம் தேடவே தவிர உண்மையான அக்கறை இல்லை..
இருந்திருந்தால் பன்னீர் முதல்வராக இருந்தபோதே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம்...
..
காலம் கடந்தேனும் முன்னாள் முதல்வரின் மரணத்தில் எழும் சந்தேகங்களை கண்டறிய விரதம் இருக்கிறார்கள்.. ஏதோ ஒரு வழியில் அவர்கள் மனம் உறுத்தியிருக்கும் கடைசி வரை சிந்திக்க விடாமலேயே அடிமைபோல நடத்திவந்தவரின் இறுதி நாட்கள் மிகவும் பரிதாபகரமாக இருந்திருக்கிறது..இறந்தபிறகு கடுமையாக விமர்சிக்கபடுகிறவர்கள் பட்டியலில் ஜெயலலிதா சேர்ந்திருக்கிறார் என்பதும் உண்மையான விசுவாசியை / தொண்டனை, நம்பிக்கைக்குரியவரை கொண்டிருக்கவில்லை என்பதும் .. நல்ல நட்பென்று ஒருவரை கூட வாழ்நாளில் அவர் சந்தித்ததே இல்லை என்பதும் மிக கொடூரமானது.. #நல்ல_நேர்மையான_எதிரியை அவரால் காணமுடிந்தது ஆனால் நல்ல நண்பரை, நம்பிக்கையான ஊழியரை நல்ல வழிகாட்டியை ஜெயலலிதாவால் இனம்காண முடியவில்லை என்பது பெரும்சோகம்..
..
மரணம் தரும் சந்தேகங்கள் வரலாற்று நெடுக உண்டு..
ஆனால் அத்தனை பேரும் ஒரு சிலரையாவது நம்பிக்கையானவராக பெற்றியிருப்பார்கள்..இங்கே எல்லோருமே பதவிக்காக கூழைகும்பிடு போட்டும் பணத்திற்காக திட்டம் தீட்டி காய்நகர்த்தியும் ஏமாற்றியிருக்கிறார்கள்..
அப்படி ஏமாற்றிய ஒரு கும்பல் தான் நாளை உண்ணாவிரமிருக்கிறது..
..
#விதைத்தெல்லாம்_வினையாகிப்போனது……
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment