Monday, March 20, 2017

கங்கை..மாசு..

கடவுளே என்பவர்கள் எதற்கு ஒடுக்கப்பட்டவர்களை கோவிலுக்கு அனுப்பனும்னு சொல்லி போராட்டம் நடத்தணும்.. அமர்சிங் எனும் கங்கை அமரன்.. ஓரிருநாள் முன்பு பாவலர் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக பாடி தவறு செய்துவிட்டார் என்றார்.. பாவலர் என்ற அவரின் சகோதரரைப்பற்றிய அவரின் கருத்துக்கு நாம் பதில் சொல்ல தேவையில்லை..ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு ஏன் செல்லவேண்டுமென்கிற தொனியில் வார்த்தை வந்தது பாருங்கள் அங்குதான் பார்பனீயம் வென்றிருக்கிறது.. கடவுள் மறுப்பாளன் அழைத்துக்கொண்டு போனதல்ல அவர்களின் பிரச்சனை தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்டவன் நுழைவதுதான் உறுத்துகிறது.. .. அமரன் அறிந்திருப்பாரென எண்ணுகிறேன்..கீழ்தஞ்சை மாவட்டத்தில் பாவலர் .. காய்ந்த வயல்வெளியில் கச்சேரி செய்திருக்கிறார்.. பொதுவுடமை கருத்துக்களை மட்டுமல்ல.. தீண்டாமையையும் எதிர்த்து பாடியிருக்கிறார்.. அண்ணன் பாடி கஞ்சி ஊற்றியதை மறந்துதான் பேசுகிறார்.. கொஞ்சம் காசும் புகழும் வந்தவுடன் யாரால் ஒடுக்கப்பட்டோம் என்பதையே மறந்து பேசுகிறார்.. #சின்னதாயிடம் கேட்டிருந்தால் காலில் செருப்பில்லாமல் அப்பன் நடந்தது வந்ததையும் கக்கத்தில் துண்டை வைத்து #கும்புடுறேன்_சாமி என ஆண்டபரம்பரையை சொன்னதையும் சொல்லியிருப்பார்.. ஆரம்பம் முதலே புரட்சி பேசிவந்த பாவலரோடு தமிழகமெங்கும் சுற்றி திரிந்ததால்.. பார்பனர்களால் எந்தளவிற்கு அடித்தமர்த்தப்பட்டார்கள் என தெரியாமல் போனதென்று நினைக்கிறேன்.. .. உண்மையில் இவர்களை போன்றவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.. ஆம் பொன்னர்... தமிழிசை.. கங்கை அமரன் போன்றோரிடம் அம்புகளை கொடுத்துவிட்டு .. அவர்கள் இயக்குகிறார்கள்.. நம்மவன் நம்மையே குறிபார்த்து தாக்குகிறான்.. பதவியும் பவுசும் கண்ணை மறைக்கிறது.. இதைதான் காலங்காலமாக செய்கிறது பாசிசம்..நம்மை கொண்டே நம் குடலை உறுவும் வேலை.. பதவி ஆசைகாட்டி மூளைச்சலவை செய்து இவரை போன்றோர் நிறைய இருக்கிறார்கள் நமக்கே தெரியாமல் நம்மிடையே.. திடீரென ஒருநாள் நம்மை கடித்து குதறுவார்கள்... நிறைய பார்த்துவிட்டோம் அமரன் அவர்களே.. குலம் கெடுக்கும் கோடாரிகளை காட்டிகொடுக்கும் கயவர்களை.. கூடயிருந்தே முதுகில் குத்தும் கயவர்களை.. .. உன் தாயை பழித்தால் தான் சோறுகிடைக்கும் உனக்கென்பதால்.. பழிக்கிறாய்.. பாவம் உன் வயிறு நிறைந்தால் சரி.. உணரும் போது நினைவிழந்து வீழ்வாய் அப்போது கூட நாங்கள் தான் தாங்கி பிடிப்போம்.. நீ..சொல்லும் நாத்திகர்கள்.. உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் மறுக்கபடுவதற்கு .. சகமனிதனாக பார்க்காமல் காலில் போட்டு மிதிப்பதற்கு.. தனியாக ஒதுக்கி தண்ணீரை கூட குடிக்க தனி குவளை தந்ததற்கு.. ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டதற்கு.. நீ தான் கோவப்பட்டிருக்கவேண்டும் .. ஆம்.. அதெல்லாம் சொரணை உள்ளவனுக்கு தான்.. .. #சுயமரியாதை_இல்லாதவன்_பிணம்…… .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment