Monday, February 27, 2017
சாவில் சந்தேகம்..
ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கிறார்.. மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே அரைஉயிரோடுதான் இருந்திருக்கிறார் என்கிறார் பொன்னையன்..
இவர்தான் ஜெயலலிதா இட்லி சாப்பிடுகிறார் என்று சொன்னவர்.. இப்போது நீதிவிசாரணை வேண்டுமென கேட்கிறார்.. சசிகலாவோடு இருந்தபோது சந்தேகம் வரவில்லை வெளியேறி ஓபிஎஸ்ஸோடு இணைந்தபிறகு வந்த சந்தேகம்.. சொல்பவர் நம்பிக்கைக்குரியவர் இல்லை.. திரு.பன்னீர் கூட சசிகலாவோடு இருந்தபோது அமைதிகாத்துவிட்டு இப்போது கூக்குரலிடுகிறார்.. இவர்கள் நம்பகதன்மை இல்லாதவர்கள்..
..
ஆனால் ஆரம்பம் முதலே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே எழுந்த சந்தேகங்களை தெளிவிப்படுத்த அரசு முன்வரவேண்டுமென #கலைஞர் அவர்கள் புகைப்படத்தை வெளியிட சொன்னார் .. ஊடகங்களும் அதிமுகவினரும் பெண் என்றும் பாராது போட்டோ கேட்பது நியாயமா என ஒப்பாரிவைத்தார்கள்.. ஏற்கனவே சட்டசபையில் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியேறியவர் மருத்துவமனையில் இருந்தபோது புகைப்படமெல்லாம் எடுத்து செய்திதாள்களில் வெளிவந்ததை சுட்டிகாட்டினோம்.. ஆனால் யாரும் செவிமடுக்கவில்லை.. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மக்கள் மனதில் சந்தேகம் எழ தொடங்கியதும் திமுக நீதிவிசாரணைவேண்டுமென்று கேட்டது முரணான தகவலை தந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் மக்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியது திமுக தான்.. அன்றைக்கு அதிமுகவினர் கேட்கமறுத்து இப்போது கேட்கிறார்கள் இப்போதாவது விசாரணை கேட்கிறார்களே ..
..
ஆரம்பம் முதலே நிறைய சந்தேகங்கள் அப்போலோ அறிக்கையில் முரண்.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னது.. இறந்தே வந்தார் என சிலர் சந்தேகங்களை எழுப்பியது.. இறுதியாக உயர்நீதிமன்றத்தில் அப்போலோ தாக்கல் செய்த அறிக்கை சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்கிறது.. செயற்கைசுவாச கருவிகள் தானாக அகற்றப்பட்டதால் .. என அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது..செயற்கை சுவாச கருவி தானாக எப்படி விலகும்.. அகற்றப்பட்டதென்றால் யார் அகற்றியது.. மருத்துவர் பரிந்துரையா.... அல்லது வேறு யாரேனும் அகற்றினார்களா.. அறிந்து கொள்வது தமிழக மக்களின் உரிமை.. ஜெயலலிதாவை பிடிக்காமல் கூட இருக்கலாம்.. ஆனால் தமிழகத்தினி முதல்வர் அவரின் சாவில் உள்ள சந்தேகம்/மர்மம் தெரியவேண்டியது அவசியம்..
..
பன்னீரும் பொன்னையனும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல.. சந்தர்ப்பவாதிகள் மறுப்பதற்கில்லை.. ஆனால் திமுக கேட்கிறது.. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி கேட்கிறது அதற்கு உரிமையும் தகுதியும் இருக்கிறது.. திமுக மக்களின் உணர்வை சந்தேகதத்தை கேட்கிறது
சாவில் என்ன நடந்தது .. உண்மை வெளிவரவேண்டும்..
..
#உண்மை_நீண்டநாள்உறங்காது……
..
தோழர் ஆலஞ்சி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment