Friday, March 31, 2017

மனபிறழ்..வைகோ

His mental disorder வைகோ.. வேறெப்படி அழைப்பதென்று தெரியவில்லை தெளிவில்லாதவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்கள்..உதிரியும் வார்த்தையின் பொருள் உணராமல் போவது எவ்வளவு அபத்தமானது.. மகோராவை நீக்கியது அண்ணாவையே நீக்கியது போன்றது .. சமீபத்திய உளறல்.. கையில் உள்ளதெல்லாம் விட்டுப்போனால் மனம் பேதலித்துவிடும் சிலருக்கு அவர்கள் தன்நம்பிக்கை இல்லாதவர்கள் கோழைகள் #மனபிறழ் வந்துவிடும் அப்படி யாரும் கண்டுக்கொள்ள மறுக்கிற அதாவது மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிற நிலை.. சிறிய கட்சிகள் கூட இவரை சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன தான் துவக்கிய மநகூ கூட வெளியேற்றிவிட்டது..தொண்டர்களை காணோம்.. இருக்கிற சிலரும் பிரிந்து போகவார்களோ என்கிற நிலையில் எதையாவது செய்து நானிருக்கிறேன் என்று காட்ட நினைத்து எதையாவது பேசி வருகிறார்.. .. அண்ணாவோடு மகோரா வை ஒப்பிடுவதின் மூலம் அண்ணாவை சிறுமைபடுத்துகிறோம் என்று அறியாமல் போனதேன்.. ம கோ ரா வை அண்ணாவோடு இப்போது ஒப்பிட்டு பேசுகிறவர் (எம்ஜிஆர்) மகோராவை வெளியேற்றிய போது ஏன் கூட செல்லவில்லை.. அப்போது எம்ஜிஆர் நீக்கத்தை ஆதரித்து.. சென்னை சட்டகல்லூரியில் மாணவர்கள் தீர்மானம் கொண்டுவந்தது வைகோவிற்கு தெரியாதா அப்போது ஏன் எதிர்க்கவில்லை. அதற்கு பிறகும்.. எம்ஜிஆர் ஆள்வைத்து அழைத்தார் நான் கலைஞரை விட்டு வரமாட்டேன் என்று சொன்னதேன்.. 18 வருடம் கலைஞரின் தந்த பதவி இனித்தது.அதனால் போகவில்லை என்று சொல்லியிருக்கலாமே.. பதவி வரும் கண்ட கனவு பலிக்காமல் போனதால்.. கூட இருந்தவர்கள் ச்சீ .. இந்த பழம் புளிக்கும் என நடையை கட்டியதால்.. உதிரிகட்சிகள் கூட (லெட்டர்பேட் கட்சிகள்) மதிக்காததால்.. இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக சத்தம் கேட்கிறது.. சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு சென்று ஹரியானா விவசாயிகள் வெளியேற வேண்டும் அப்போதுதான் ஆதரவு தருவேன் இல்லையென்றால் நான் கிளம்பிவிடுவேன் .. நான் 52 வருட பார்லிமெண்டேரியன்..என பிரச்சனை செய்தது.. மேலே கூறியதுதான்.. வர வர முத்திக்கொண்டே போகிறது His mental disorder நல்ல மனநல மருத்துவரை காண்பதே சிறந்தது.. .. தோழர் ஆலஞ்சி...

Thursday, March 30, 2017

கலைஞர்...

தலைவர் கலைஞர் சட்டசபையில் இன்று வைரவிழா காண்கிறார்.1957ல் குளித்தலையில் பெற்ற வெற்றியில் கோட்டையில் தொடர்ந்து 60 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக உள்ளார்... இது ஒரு வரலாற்று சாதனை.. Incapable of defeating .. தோற்கடிக்க முடியாத ஒன்றாகவே இவரது சட்டமன்ற வெற்றிப்பயணம் அமைந்திருக்கிறது.. .. கிள்ளியெறிந்துவிடுவேன் என்றவர்களெல்லாம் இடம்தெரியாமல் ஆக்கி தொடர்ந்து மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயலாற்றுகிறார்.. எதிரிக்கட்சித் துணைத்தலைவர்.. அமைச்சர் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் என அலங்கரித்தவர்.. இவரின் சொல்லாற்றலில் சொக்கிப்போய் எதிரிகள் கலங்கி நின்றிருக்கிறார்கள்.. நகைச்சுவையோடும்.. சுவைமாறா தமிழோடும் இவரின் வார்த்தைகளின் சிலம்பாட்டம் சீறிவரும்.. சிலநேரம் தென்றலாய் தடவிபோகும்.. திருசெந்தூர் முருகனின் வேல் காணாமல் போனது.. தகவலை யார் தந்தார்கள் என்கிறார் எம்ஜிஆர் (ம.கோ.ரா) அந்த முருகனே கொடுத்தான் என்கிறார்.. மகோரா.. முருகனின் பெயரில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கைது செய்தார் அப்போதுதான் கலைஞரின் உதவியாளர் சண்முகம் கூட கைது செய்து விசாரித்தார்கள்... .. சட்டமன்றத்தில் ரகுமான்கான் மானியகோரிக்கையில் பேசிக்கொண்டே இருக்கிறார் அடுக்கடுக்காய் குற்றசாட்டுக்கள்.. எம்ஜிஆர் திணறுகிறார்.. சபாநாயகர் உடனே ரகுமான்கானை உட்கார சொல்கிறார் நேரம் முடிந்துவிட்டுதென சொல்லியும் ரகுமான் விடுவதாக இல்லை.. சொல்லி சொல்லி பார்த்து உங்களை அந்த ஆண்டவன் தான் உட்கார வைக்கவேண்டுமென்கிறார் சபாநாயகர்.. கலைஞர் உடனே எழுந்து உட்கார் என்கிறார் ரகுமான் உட்கார்ந்தார்.. சபாநாயகர் ராஜாராம் கலைஞருக்கு நன்றியை சொன்னார்.. உடனே கலைஞர் நீங்கள் தானே ஆண்டவனால்தான் முடியுமென்றீர்.. நானும் ஆண்டவன்தான் தமிழ்நாட்டை ஆண்டவன்தான் என்றார் எம்ஜிஆர் உட்பட சபையே கைத்தட்டியது.. .. கலைஞர் பெருமகன் ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டால் புத்தகமாகவே போடலாம்.. அருந்ததியினருக்கு இட உள்ஒதுக்கீடு.. அப்போது பேசிய கலைஞர்.. மலத்தை அள்ளும் அந்த சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை சபையில் அறிமுக செய்து சொன்னார் என் தலையில் வைத்து கொண்டாடுகிறேன்.. மிகவும் ஒடுக்கப்பட்ட ..இன்னும் சொல்லப்போனால் ஒடுக்கப்பட்டவர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த சமூகத்திற்கு ஒளியேற்றி எந்த கொள்கைக்காக திராவிடம் இயக்கம் தோன்றியதோ அதை சரியான பாதையில் செலுத்தி கவனமாக பயணித்தார்.. .. வைரவிழா காணும் கலைஞர் உடல்நலியுற்று இருக்கிறார் அந்த கம்பீரமான குரலை இப்போது கேட்கமுடியவில்லை.. அவரின் அரசியல் நகர்த்தல்களை கண்டு ரசிக்கமுடியவில்லை.. ஆனாலும் அவரின் பார்வை நம்மீதும் இந்த சமூகத்தின் மீதும் விழுந்துக்கொண்டுதானிருக்கிறது.. அவர் போட்ட பாதையில் தான் தமிழகம் செல்லும்.. சரியான தலைமை தந்துவிட்டு காலம் அவருக்கு சிறிது ஓய்வு தந்திருக்கிறது.. மீண்டும் நலிவு நீங்கி வழிகாட்டி நடத்திட வருவார்.. #இந்த_பெருமகனை_பெற்றதால்_நாம்_பெருமையடைந்தோம்.. .. #திராவிட_பெருந்தலைவர்_கலைஞர்.. .. தோழர் ஆலஞ்சி..

ஜெயலலிதாவின் மவுசு..

தீர்ப்புக்குப் பிறகும் குறையாத ஜெயலலிதாவின் மவுசு/மதிப்பு ..தந்தி டிவி .. தந்தி டிவியின் கருத்தாக இதை ஏற்போம்.. மக்களின் மனநிலையை சொல்வதாக ஏற்கமுடியாது.. ஜெயலலிதா மறைந்து போனதால் மக்களிடையே அவரைப்பற்றி அவ்வளவாக வெறுப்பு இருக்காது காரணம் இறந்தவர்களைப்பற்றி தவறாக பேசகூடாதென்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம்.. இரண்டு ஊடகங்கள் ஜெயலலிதாவை கிரிமினல் 1 என வலியுறுத்தி சொல்லாததும் ஒரு காரணம்.. ஆனால் வெகுமக்களிடம் ஜெயலலிதா பற்றிய எண்ணத்தில் சிறியதொரு விரிசல் விழுந்திருப்பதை தந்தி போன்ற ஊடகங்கள் மறைக்க முயல்வதோடு தூக்கி நிறுத்த போராடுகின்றன.. .. ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் உள்ள வித்தியாசம் அனைவரும் அறிந்ததுதான்..சசிகலாவை அதிகாரத்தில் வரகூடாதென்று கங்கனம்கட்டி வேலைசெய்தவர்கள்.. ஜெயலலிதா முதல்வராக இருந்ததையும் ஒரு கிரிமினல் நாட்டை ஆண்டதையும் மக்களிடம் சொல்ல மறுக்கிறார்கள்.. விசாரணை முடிந்து மாதகணக்கில் கிடப்பில் போடப்பட்டிருந்த தீர்ப்பு.. பெங்களுரு உயர்நீதிமன்றத்தை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று பணித்த உச்சநீதிமன்றம்..விரைந்து தீர்ப்பை தந்திருந்தால் ஜெயலலிதாவும் சிறையில் களி தின்றிருப்பார்.. சசிகலாவிற்காக வேகமாக செயல்பட்டு அரசுநிர்வாகமும் அதிகாரவர்க்கமும் நீதித்துறையும்.. சமூக ஆர்வலர்கள் போர்வையில் உலாவரும் பாசிசவாதிகளும் .. ஜெயலலிதாவிற்கு விரைந்து தீர்ப்பு வழங்க கூறவுமில்லை.. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.. காரணம் ஜெயலலிதா #பாப்பாத்தி .. .. இப்போது கூட ஊடகங்கள் ஜெயலலிதாவின் மவுசை குறையாமல் பார்த்துக்கொள்ளதான் முயற்சிக்கின்றன.. பார்பனன் கொலை செய்தால் கூட.. அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து நாடுகடத்துங்கள் என்கிற #மனுநீதி ஆட்சி செய்யும் நாட்டில்..சசிகலாக்கள் தான் தண்டனை பெறுவார்கள் .. கோமளவல்லிகள் அல்ல.. .. சசிகலா ஜெயா இருவரின் அரசியலையும் வெறுப்பவர்கள் இவருமே தமிழகத்திற்கு தீங்கானவர்கள்..என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்..இருவருமே கிரிமினல்கள் ..ஒருவரை மட்டும் புகழ்வதும் ஒருவரை தூற்றுவதுமான செயல் அருவருக்கதக்கது.. ஜெயலலிதாவின் புகழ் மங்கதொடங்கியது என்பதே உண்மை.. தந்தியின் பாண்டே மூச்சுபிடித்து நின்றாலும் காலம் கரைத்துக்கொண்டே போகும்.. #கிரிமினலாகதான்.. வரலாற்றில் எழுதபடுவார்.. #கிரிமினல்_ஜெயலலிதா_எனும்_கோமளவல்லி.. தோழர் ஆலஞ்சி..

Wednesday, March 29, 2017

மரியாதை...

இந்த படம் சில உண்மைகளை நமக்கு உணர்த்தும்.. இருவேறு கட்சி பிரதிநிதிகளோடு மாண்பிமை அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் விவசாயிகளை சந்திக்கிறார்.. ஒரு பிரிவினர் அமர வைக்கப்படுகிறார்கள்.. மற்றொரு பிரிவினர் நின்றுக்கொண்டே பேசி அனுப்பிவிடுகிறார்.. இரண்டிலும் கலந்துக்கொண்டதென்னவோ உழவர்கள் தான்.. .. திருச்சி சிவா சுயமரியாதைக்காரர்.. எப்போதும் எதிலும் கம்பீரமாக செயல்பட கூடியவர் எக்காரணத்தை கொண்டும் மரியாதைக்கு இழுக்கு வந்துவிட கூடாதென்பதில் கவனம் செலுத்துபவர். எதை எப்படி செய்தால் எவரை அணுகலாம் எப்படி இந்த பிரச்சனையை கையாளலாம் .. எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டுவரலாம் என்று அறிந்தவர்.. அதனால் தான் முன்கூட்டியே சந்திப்பதற்கு நேரம் கேட்டு உழவர் பெருமக்களை அழைத்துக்கொண்டு சந்திந்திருக்கிறார்.. திருச்சி சிவா சந்தித்து விட்டாரே என்ற ஒரு காரணத்திற்காக அவசரகதியில் மாண்பிமை அமைச்சரிடம் நேரம் கூட ஒதுக்காமல் அவசரமாக சந்தித்ததால் நிற்கவைத்தே பேசி அனுப்பிவிட்டார்கள்.. .. தம்பிதுரைக்கு மானம் மரியாதை இதெல்லாம் தெரியாது இத்தனை ஆண்டுகள் டெல்லியிலே குப்பை கொட்டியும் இவரால் எதாவது ஒரு மசோதாவோ.. அல்லது ஏதாவது ஒரு கவனஈர்ப்பு கொண்டுவந்து சபையின் கவனத்தை கையிலெடுக்க முடியவில்லை.. மாறாக தன் தலைமைக்கு சிறிய சங்கடம் வந்துவிட்டால் உடனே கூச்சலிட்டு சபையில் கத்தி கலாட்டா செய்ய தெரியும். இவரென்றில்லை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்திற்கு..ஏதேனும் நல்லது நடந்திருக்கிறாதா.. அல்லது இந்த தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் சரியான பங்களிப்பை செய்து அரசை பணியவைக்க முடிந்திருக்கிறதா.. என்றால் இல்லை.. .. சரியான திறமையான நபர்களை அதிமுக கேர்வுசெய்து நிறுத்தாததும் ..யார் சரியானவர் நமக்கு நல்லதை செய்வார் ..இவரால் தமிழகம் பெருமைபடுமென என சிந்தித்து வாக்களிக்காமல் கண்டவர்களையும் அனுப்பிவைத்ததுதான் இவ்வளவிற்கும் காரணம்.. ஒரு சிலர் திறமையாளர்களாக.. நல்ல சிந்தனை உடையவர்களாக இருக்ககூடும் அவர்களை வாய்திறந்து பேச அதிமுக தலைமை அனுமதிருக்கவில்லை.. தாம் அழைத்துச் செல்கிறவர்களுக்கு மரியாதையை பெற்று தரவேண்டுமென்ற அடிப்படை கூட தெரியாதா.. பாவம் காலில் விழுந்து விழிந்து குனிந்து நின்றே பழகிப்போனதால்.. மானம் மரியாதையெல்லாம் என்னவென்றே அறியாமல் போனீர்கள்.. .. #மானமொன்றே பெரிதென கொண்டு வாழ்ந்தது எங்கள் சமுதாயம்.. #மறந்துபோனதோ.. .. தோழர் ஆலஞ்சி

Tuesday, March 28, 2017

காவி..

18 லிருந்து 20 மணிநேரம் வரை அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டுமாம் , அப்படி முடியாதவர்கள் விலகி கொள்ளலாம்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.. .. இந்தியாவில் மன்னராட்சி வந்துவிட்டதா.அனைத்து அதிகாரமும் பெற்றவரா... அல்லது தங்களுக்கு கிடைத்த வெற்றியின் மமதை அப்படி பேசவைக்கிறதா.. அவர்களே எதிர்பார்க்காத வெற்றியை தந்தது அவர்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையால் அல்ல.. பிரிந்து கிடந்து தங்களுக்குள்ளே அதிகார சண்டையை பகிரங்கமாகவே செய்ததால் மக்கள் வெறுப்பை அவர்கள் (முலாயம் அகிலேஷ்) மீது காட்டியதால் மாபெரும் வெற்றியை தந்தார்கள்.. ஜனநாயகத்தில் இதுபோன்ற வன் வெற்றிகள் தலைகனத்தையே தரும்.. .. மதம் தலைக்கேறிய தலைவர்களை கொஞ்சம் கவனியுங்கள் அவர்களிடம் வெற்றியை தந்தால் இதுபோன்று நெறிகெட்ட செயலைதான் நடைமுறை படுத்துவார்கள்.. பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து காவிகளின் பேச்சை கவனியுங்கள்.. பிணத்தை தோண்டியெடுத்து கற்பழிக்க சொல்வதும் 70 சதவிகிதம் மக்கள் மாட்டுக்கறி உண்ணும் போது தடைசெய்வதும் அதற்காக கொல்வதும் .. இல்லாத ஒன்றுக்காக நாட்டின் வளர்ச்சியை தடுப்பதும் (சேது திட்டம்) .. பாஜகவை தவிர மதவெறியர்களை தவிர மற்றவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்க முயல்வதும் ..தொடர்ந்து செய்திகளாக ..வருகிறது.. இதோ இப்போது நாட்டின் இறையான்மையை ஒருமைப்பாட்டை சீர்குலைக்க மோகன்பகவத் குடியரசுதலைவராக வரவேண்டுமென இப்போதே நூல்விடுகிறார்கள்.. .. தமிழகத்தில் எங்கிருந்தார்கள் என தெரியாதவர்களை எல்லாம் சமூக ஆர்வலர்.. பொருளாதார நிபுணர்.. நடுநிலையாளர் என்ற போர்வையில் விவாதங்களில் தொடர்ந்து பங்களிக்க செய்வதும்.. ராசா போன்ற அரைவேக்காடுகளை வைத்து தினம் தினம் உளறவைப்பதும்.. இதோ இப்போது கூட தமிழர்கள் சோம்பேறிகள்.. பொழுதுபோகாமல் போராடிக்கொண்டிருக்கிறார்களென தலைநகரில் போராடும் உழவர் பெருமக்களை கேலி செய்வதும் நடந்துக்கொண்டுதானியிருக்கிறது.. .. உ.பியில் என்றில்லை ஒட்டுமொத்த இந்தியாவையும் காவிகள் களேபரமாக்கி கொண்டிருக்கிறார்கள்.. அதிகாரம் கையில் இருக்குவரை ஆடதான் செய்வார்கள்.. மதம் தலைக்கேறியவர்கள்.. மக்கள் திரும்பி தாக்கும் போது இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.. மதம் தலைக்கேறியவரிடம் அறிவிருக்காது சிந்கனை செயல் எல்லாம் மூடத்தனங்களால் நிரம்பி வழியும்.. சரியானதை நியாயமானதை தேர்வு செய்ய இயலாது .. மக்கள் மீதான தாக்குதல் ஒரு இரவில் பணமெல்லாம் செல்லாதென்றார்களே அதைப்போல அறிவிலித்தனமாக இருக்கும்.. அப்படியொரு அறிவிப்புதான் 18மணிமுதல் 20 மணி நேரம் உழைக்கவேண்டும்.. மதம் மடையனாக்கும்.. .. #கிறுக்கன்கள்கையில்_என்நாடு... .. தோழர் ஆலஞ்சி

திமுக...

தமிழகத்தில்.. எல்லாகட்சிகளும் தேசிய மாநில ..அங்கீகாரம் பெற்றது.. பெறாதாது. எல்லா கட்சிகளும் சொல்லும் ஒரு வார்த்தை திமுகதான் எங்கள் எதிரி.. இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது.. திமுகவை வைத்துதான் அரசியல் செய்யமுடியும் அல்லது அரசியலை சொல்லி பிழைக்கமுடியும்.. நேற்று கட்சி தொடங்கினாலும் கருணாநிதி ஒழிக என்று சொல்லிதான் துவக்கம் குறிக்கவேண்டும்... .. ஏறக்குறைய 68 கால திமுக வரலாற்றில் தமிழகத்தின் மய்யமாக திமுக சுழல்கிறது இந்த சூரியனை சுற்றிதான்..எல்லாரும் வலம் வருகிறார்கள் அவர்களின் அரசியல் வாழ்வை உறுதிசெய்ய திமுக வேண்டும்.. திராவிட இயக்கம் நூற்றாண்டை கண்டாலும் அரசியல் அங்கீகாரத்தை அதிகாரத்தை பெற்று 50 ஆண்டுகள் பின்னிட்டும்..நிறைய ஏற்றதாழ்வுகளை கட்சி சந்தித்தும்..இதோடு முடிந்தது என்ற பழைய பல்லவியை திரும்ப திரும்ப பாடினாலும்..திமுக விடும் மூச்சுகாற்றில் தான் சிலர் உயிர்வாழ்கிறார்கள்.. எல்லா கட்சிகளும் காங்கிரஸ் அதிமுக உட்பட .. பிற அமைப்பு ரீதியான கட்சிகள் தோற்றதன் பின்னில் அவர்களின் அறியாமையும் கொள்கை பிழையும் மறைந்துவிடும் கவர்ச்சியும் சரியான தலைமை இல்லாமையும்..காரணிகளாக தெரியும்.. .. திமுக இன்றும் நின்று நிலைத்து மக்களிடையே செல்வாக்கோடு இருப்பதின் காரணம்.. இங்கே உணர்வுபூர்வமாக கொள்கையால் இன மொழிஉணர்வால் ஈர்க்கப்பட்டு சாதீய மத சாயலை தவிர்த்து சமூகநீதியின்பால் அக்கறையோடு தொண்டாற்றுகிறவர்கள் அதிகம்..ஒருசிலர் முரண்பட்டிருக்கலாம் மாபெரும் இயக்கத்தில் சில வேண்டாதவைகளும் வேண்டாதவர்களும் இடம்பெறுவது இயல்பு ஆனாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களே அதிகம்.. .. அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் தவிர்த்து வேறுயாரேனும் நாவலர் உட்பட தலைமை பொறுப்பேற்றிருந்தால் இந்நேரம் திமுகவை சிதைத்திருப்பார்கள் கட்சியின் இக்கட்டான காலக்கட்டத்தில் கூட மக்களோடும் இயக்க தொண்டர்களோடும் தொடர்பில் இருந்தார்.. துவண்டுபோய் விழுந்தவனை தாங்கிப்பிடிக்கும் அவரது எழுத்தும் பேச்சும்.. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த போதும் மறுநாள் முரசொலியை தேடுவான் கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார் ‍. கலைஞரின் கடிதம் தான் ஊட்டசத்து.. அதுதான் கலைஞரின் வலிமை.. இன்றுவரை திமுகழகத்தை சுற்றியே அரசியலை இயக்கத்த பெருமை எம்ஆசான் கலைஞரையே சாரும். .. #இந்தநூற்றாண்டின்இணையற்ற_தலைமை.. #திராவிடபெருந்தலைவர்_கலைஞர்.. தோழர் ஆலஞ்சி

Sunday, March 26, 2017

ஜெயலலிதா..

மாலையிலேயே அம்மா இறந்துவிட்டார்கள் என்ற செய்தி பாண்டேக்கும் தெரியும் Ma Foi K Pandiarajan .. கூடவே அது ரங்கராஜ் பாண்டேவிற்கும் தெரியுமென்றார்.. அவர் அரசியல் பேசுவதாகவே வைத்துக்கொள்வோம்.. ஆனால் அப்போலோ நிர்வாகம் முதலில் ஜெயலலிதா இறந்ததாக எல்லா ஊடகங்களிலும் வந்த செய்தியை மறுத்து மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என அறிக்கை தந்ததே .. அப்படியெனில் மருத்துமனை நிர்வாக தந்த செய்தியும் பதிலும் பொய்.. ஏற்கனவே பன்னீரும் இதே செய்தியை அதாவது நாலரை மணிக்கே இறந்துவிட்டார்களென சொன்னார்.. ஒரு மாநில முதல்வரின் மரணத்தில் ஏன் இத்தனை குளறுபடிகள் இவர்கள் அதிகார சண்டையில் மெல்ல உண்மை வெளிவருகிறதே.. இவர்களுக்குள் அதிகார போட்டி வராமல் பதவி ஆசை இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் இப்போது கூட இதை சொல்லபோவதில்லை.. .. என்னவொரு அயோக்கியத்தனம்.. தொடர்ந்து பதவி தந்து அதிகாரம் தந்து இவர்களை அடையாளபடுத்தியவர்.. சரியோ தவறோ திறமை இருக்கிறதோ இல்லையோ தான் விரும்புகிறவரை தூக்கிவிட்டவர்...இவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை இல்லாததால் தான் அடிக்கடி அமைச்சரை .. சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் போலும்.. ஒருவர் கூட உண்மையாக இல்லை..நம்பிக்கையானவரை நல்ல நண்பரை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்ற அந்த பெண்மணியில் வாழ்வியல் எவ்வளவு மோசமானவர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கவேண்டும்..யாரையும் நம்ப முடியாமல் நோயின் பிடியில் சொந்தங்கள் யாருமின்றி பதவி பண அதிகார ஆசை பிடித்தவர்களின் பிடியில் தன் இறுதிநாட்களை கழித்திருக்கிறார்.. உண்மையில் இறக்கமில்லாதவர்களின் பிடியில்.. .. ஜெயலலிதா என்ற அரசியல்வாதியின் மீது கடும் அதிருப்தி உண்டு .. அவரின் அரசியல் எக்காலகட்டத்திலும் நமக்கு ஏற்புடையதாக இல்லை கொஞ்சமும் ஜனநாயமரபுகள் இல்லாத தான்தோன்றித்தனமான, விவரகேடான,ஆட்சியை தான் தந்தார்.. அவரது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் நிறைய சோகங்களை இழப்புகளை கொண்டிருந்தார்.. அவரின் அரசியலை தவிர்த்து அவரது வாழ்க்கை மிக பரிதாபகரமானது .. வாழ்வில் ஒருவரை கூட நம்பிக்கையானவராக தேர்வு செய்யமுடியாத கொடுமை.. உறவுகள் உட்பட மிகவும் சோகமானது.. உறவின் பலம்,இறப்பில் தெரியுமென்பார்கள் அதுகூட ஜெயலலிதாவிற்கில்லாமல் போனது.. .. சரியான எதிரியை இனம்கண்ட அவரால் ஒரு நல்லவரை நம்பிக்கைக்குரியவராக இனம்கான முடியவில்லை.. நல்ல ஒரு மனிதரை /மனுஷியை கூட அவரோடு இல்லை.. எல்லாரும். நயவஞ்சகர்களாகவே,இருந்திருக்கிறார்கள்.. பாவம் வாழ்வியலில்.. #ஜெயலலிதா_தோற்றமனுஷி.. .. தோழர் ஆலஞ்சி..

நல்லதொரு துவக்கம்

#நல்லதொரு_துவக்கம்.. .. தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். சசிகலாவை புகழ்ந்து பேச துவங்கியதும் பார்வையாளர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.. பாண்டே அமைதி ஏற்படுத்த எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை எதிர்ப்பு பலமானதால் அமைச்சர் பாதியிலேயே ஓட்டம் பிடித்தார் நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு பாண்டேவும் இறங்கிப்போனார்.. .. கருத்தை சொல்வதென்பதும் அதை நியாயப்படுத்துவதும் ஒரு வரையறைவரை ஏற்றுக்கொள்ளலாம் அதே நேரம் அளவிற்கதிகமாக போனால் அது திருப்பி தாக்குதலை தரும்..கிரிமினலை புகழ்ந்து அமைச்சரே பேசுவதும் அதை நெறியாளர் தொடர்ந்து அனுமதிப்பதும் தொலைக்காட்சிகளிலே நடந்து வருகிறது.. ஊடகங்கள் காப்ரேட் கம்பெனிகளான பின் அங்கே ஜர்னலிஸம் என்பது வியாபாரமாகி போகிறது.. நியூஸ்7 ல் கூட ஆர்.கே நகரில் போட்டி அதிமுகவிற்குள் என்பதை போலவும் திமுக பலவீனமான வேட்பாளரை நிறுத்தியிருப்பது போல சேதியை கட்டமைக்க முயன்று தோற்றது.... காரணம்.. தாதுமணல் மாபியா வைகுண்டராஜன் தினகரனுக்கு ஆதரவு தந்தவுடன் தன் போக்கை மாற்றிக்கொண்டு நிலைமாறி நின்றது.. .. மக்களின் கோவம் சரியானதும்கூட .. தொடர்ந்து சசிகலாவையும் ஜெயலலிதாவையும் உயர்த்திப்பிடிக்கும் கேடுகெட்டத்தனம் ரசிக்கமுடியவில்லை விலகி கடந்து போகவும் முடியவில்லை.. ஜனநாயகத்தின் நான்காம் தூண்.. செல்லரித்து போய்விட்டது.. ஆளும்கட்சிக்காக வளைந்து நின்றது என்பது மாறி யார் அதிகம் தருகிறார்கள் என்று பார்த்து எழுதுகிற பேசுகிற ஊடகத்துறை .. சிலர் மட்டுமே கொஞ்சமேனும் நேர்மையாக நடந்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.. ஆனால் ஜனநாயகத்தின் நான்காம்தூண்... நான்காம்தர செயல்பாட்டால் தகுதியிழந்து நிற்கிறது.. எமர்ஜென்ஸியின் போது கூட அஞ்சாமல் கருத்திட்டவர்கள்.. இப்போது ஆளும்தரப்பிற்கு ஜால்ரா தட்டுகிறார்கள்.. அதனால்தான் தரங்கெட்டுப்போய் ..பாண்டேக்களும்... கார்த்திகை செல்வன்களும்..உருவாகிறார்கள்.. தங்கள் காப்ரேட் முதலாளிகளின் காலடியில் கிடக்கிறார்கள்.. கோயங்கே .. சிவராமன்.. குல்தீப் போன்றோர் கோலோச்சிய ஊடகத்துறை..இன்று மதிப்பிழந்து மக்கள் விரட்டும் நிலைக்கு வந்துவிட்டது.. .. மக்கள் பிரதிநிதிகள்,அரசு ஊழியர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள்.. இவை அனைத்திலுமே ஜனநாயக மாண்பு கெட்டுப்போய் கிடக்கிறது.. ஊடகத்துறையின் மகத்துவத்தை உணர்ந்து செயல்படாமல் பிழைப்புக்காக நடத்தினால் இப்படிதான் நாசமாய் போகும்.. .. #காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீ தான்! ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே” என்று பாடினார். எங்கள் #புரட்சிகவிஞர்_பாவேந்தர் .. நடுநிலை என்பதே பொய் .. ஏதேனும் ஒன்றை சார்ந்தே நிற்கமுடியும் எனினும் .. சில இக்கட்டான சமயங்களில்/நேரங்களில் தார்மீக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.. இல்லையெனில்.. #மக்களால்_இப்படிதான்விரட்டபடுவீர்கள்… .. தோழர் ஆலஞ்சி..

Saturday, March 25, 2017

திமுக...

#திமுக_வரலாறு.. .. திராவிட இயக்கத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காக திராவிட கழகத்தலிருந்து பிரிந்து தேர்தலை சந்திப்பதென்ற முடிவை அறிஞர் அண்ணா எடுத்தார்.. 1957 ல் தேர்தலை சந்தித்தது 15 பேர் வென்று தமிழக சட்டமன்றத்தில் துவக்கம் குறித்தனர்..அப்போது பேசிய எதிர்க்கட்சி எப்படி நடந்துக்கொள்ளவேண்டுமென்பது ஆளும்கட்சியின் நடத்தையில் இருக்கிறதென்றார் பேரறிஞர் அண்ணா.. .. அப்போது அந்த 15 பேரையும் அடுத்த தேர்தலில் தோற்கடித்து காட்டுகிறேன் என்றார்.. பெருந்தலைவர் காமராஜர் கலைஞர் தவிர மற்றவர்கள் 14 பேர் 1961ல் தோற்றார்கள்.. கலைஞரை தோற்கடிக்க முடியவில்லை.. அப்போது தந்தை பெரியார் காமராஜரை அழைத்து கருணாநிதியை எதிர்த்து யாரை நிறுத்துகிறாய் என கேட்டு பரிசுத்தநாடாரை நிறுத்த பரிந்துரைந்து நானே பிரசாரத்திற்கு வருகிறேன் என்றார்.. தஞ்சையில் பிரமாண்ட பொதுகூட்டம்.. பெரியார் பேச துவங்குகிறார்.. அருகிலிருந்த தேர்தல் அலுவகத்தில் கலைஞர் அமர்ந்து பெரியார் பேசுவதை குறிப்பெடுக்கிறார்.. பெரியார் பேசுகிறார்.. கருணாநிதி எனது நேரடி சீடன்.. அவனிடத்திலே ஒரு பொறுப்பை தந்தால் அதை செய்துமுடிக்கும் வரை உறங்கமாட்டான் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்ககூடியவன்.. சிறந்த அறிவாற்றல் உண்டு என புகழ்ந்து 10நிமிடம் பேசிவிட்டு அதை தொடர்ந்து திமுகவையும் அண்ணா கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசுகிறார்.. ஒருமணிநேரம் பேசுகிறார்.. கலைஞர் கலைஞரைப்பற்றி பேசியதை துண்டு சீட்டாக அருகில் உள்ள வெற்றிவேல் பிரஸில் அச்சடித்து பெரியார் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் விநியோகம் செய்தார் அதில் ஒரு இளைஞன் வேகமாக மேடையில் ஏறி பெரியாரின் மடியில் துண்டு பிரசுரத்தை போட்டுவிட்டார் பெரியார் அந்த துண்டு பிரசுரத்தை படித்துவிட்டு சிரித்துக்கொண்டே சட்டைபையில் வைத்துக்கொண்டார்.. பிரசாரம் முடிந்து வந்து அறையில் அமர்ந்து மீண்டும் படித்துபார்த்துவிட்டு கருணாநிதியை யாராலும் தோற்கடிக்கமுடியாது என கூறி சிரித்தார்.. அந்த துண்டுபிரசுரத்தில் #பெரியார் தன் நேரடி சீடன் கருணாநிக்கு புகழாரம்.. எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஊன்உறக்கமின்றி உழைப்பவன்..என எழுதியிருந்தது.. தஞ்சையில் கலைஞர் வெற்றியடைந்தார் .. 1962ல் காமராஜரால் அந்த14 பேரை தோற்கடித்தாலும் 48 பேர் தேர்வானார்கள்.. .. 1967ல் அண்ணா தலைமையில் ஆட்சியமைக்கிறது.. பதவியேற்றதும் நேரடியாக பெரியாரை பார்க்க செல்கிறார்.. அண்ணா.. காரிலிருந்து இறங்கி நேராக பெரியார் அருகில் அமர்கிறார்.. அண்ணனின் கண்களிலிருந்து நீர் பெரியார் காலில்விழுகிறது பெரியாரிடம் பத்திரிகையாளர் கேட்கிறார்கள் தங்களின் மனநிலை எப்படியிருந்தது என்றார்கள் பெரியார் புதுமணப்பெண்ணின் மனநிலைப்போல இருந்தது என்றார்.. .. திமுக வரலாறென்றாலே அது கலைஞரின் வரலாறுதான்.. திமுக வரலாற்றை துவக்கம் பேரறிஞர் அண்ணா என்றாலும் அதை தொடர்ந்து கட்டிகாத்து யாராலும் எந்நிலையிலும் எக்காலக்கட்டத்திலும் சிதைக்கமுடியாமல் .. துரோகங்கள் பழிவாங்கல்கள்..எல்லாம் கடந்து நான்காம் தலைமுறையினரிடம் தந்திருக்கிறார்.. திராவிடபெருந்தலைவர் கலைஞர்.. ஆம் ஆசான்.. #திராவிடபெருந்தவைவர்.. .. #பெரியாரின்_நேரடிசீடர்... … தோழர் ஆலஞ்சி...

ரஜினி அரசியல்

#ரஜினி_அரசியல்.. ... இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன் #ரஜினிகாந்த்.. . ரஜினி அவர்கள் நல்ல நடிகரா என்று தெரியாது ஆனால் நல்ல வியாபாரி.. என்று மட்டும் புரிகிறது.. தமிழ் அமைப்புகள் ஏறக்குறைய வேண்டுகோள் என்று கூட சொல்லமுடியாது எச்சரித்தன.. இலங்கை பயணத்தை ரத்து செய்யுங்கள் என்றார்கள்.. .. பாஜகவின் எச் ராசா தமிழிசை வகையறாக்கள் ரஜினி செல்லவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.. ரஜினிக்கு தெரியாதா.. லைக்கா நிறுவனம் கட்டிதந்த வீடுகளை வழங்க சென்றால் தனது படம் வெளியீட்டின் போது பிரச்சனை செய்வார்கள் அப்போது பெரும் தலைவலியை தரும்..அதனால் தான் பயணத்தை ரத்து செய்து சிறந்த வியாபாரியாய் நடந்துக்கொண்டார்.. கூட போய் இருந்தால் மைதிரிபால சிறிசேனாவிடம் கோரிக்கை வைத்திருப்பேன் என்று சொல்லி வெளிநாடுவாழ் தமிழ்மக்களை .. குளிரவைத்திருக்கிறார். ரஜினியின் அரசியல் இதுதான்.. எப்போதுமே நிலைபாட்டில் தெளிவற்றதன்மையை வெளிகாட்டி தெளிவாக வியாபாரம் செய்யும் தந்திரம்.. அதனால் தான் தொடர்ந்து சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்.. ஆனால் கமலை பாருங்கள் வாயாலேயே கெடுகிறார்..நெளிவுசுளிவுகளோடு காய்நகர்த்தும் ரஜினியின் திறமை நிச்சயமாக அவரிடம் இல்லை. .. ஒருவகையில் #நன்றி!.. எச்.ராசா போன்றோர்களின் பேச்சை செவிமடுக்காமல் இருந்ததற்கு.. காரணம் சென்றிருந்தால் இன்னமும் கொஞ்சம் குதிப்பார்கள்.. எச்.ராசா சர்மா போன்ற நச்சுகிருமிகள் கருத்துக்கள் புறக்கணிக்கப்படவேண்டும்..யாரும் அவர் பேச்சை மதிப்பதில்லை என்பதால் ஆத்திரம் தலைக்கேறி இன்னும் கொஞ்சம் உளறுவார்..இப்போதுதான் பாஜகவை ஆதரிக்காதவர்களை தேசதுரோகி என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் அந்த லிஸ்ட்டில் ரஜினியை சேர்த்து கொள்வார்.. முத்திப்போய் நிறைய உளறுவார் இனி.. ரஜினியும்..எச்.ராசாவின் பார்வையில் தேசதுரோகியாவார்.. .. #தேசதுரோகி_ரஜினிக்கு_நன்றி.. .. தோழர் ஆலஞ்சி

Friday, March 24, 2017

மம்தாவிற்கு நன்றி!!

இனி.. மத்திய அரசு திட்டங்களை மேற்குவங்கத்தில் செயல்படுத்தவேண்டுமெனில் #ஹிந்தி_சமஸ்கிருத பெயர்களில் இல்லை மாறாக வங்கமொழியில் பெயர் வைத்து செயல்படுத்தப்படும்.. #மானமிகு_மம்தாபானர்ஜி.. உண்மையான பொதுவுடைமையாளர் #செவ்வணக்கம்_மம்தா.. .. ஆம்.. என்னிடம் பேச பரிந்துரைக்க.. செயல்படுத்த, என்னை உட்படுத்த எனதுமொழியில் பேசினால் பெயர்வைத்தால் தானே எனக்கு விளங்கும்..ஆம் ஜீவன் தருண் ஜீவன்ஆரோக்கியா ஜீவன்ஷிகர்..ஜீவன்ஆனந்த..ஆதார்.. பிரதமரின் ஜன்தன் யோஸனா ஆவாஸ் யோஸனா.. யாருக்காவது புரிகிறது திட்டத்தின் பெயர்.. சமஸ்கிருதத்திலும் இந்தியிலும் பெயர்வைத்து பிறமொழி பேசும் மக்களிடையே வலுகட்டாயமாக திணிக்கும் சர்வாதிகாரசெயலை தான் மம்தா துணிவோடு எதிர்க்கிறார்.. தமிழகம் கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்கள் இதை பின்பற்றலாம் முதலிலேயே இதை தமிழகம் செய்திருக்கவேண்டும். காலதாமதமாகானாலும் விரைந்து செயல்படுத்தலாம் .. .. சுயமாநில உரிமையை நிலைநாட்டுவது அவசியம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அவர்கள் மீதான மொழிவழி தாக்குதலை நாம் கண்டுக்கொள்ளாமலே விட்டுவிட்டோம். மாநில சுயாட்சி பேசும் திராவிட கட்சிகள் திமுக உட்பட இதில் கவனம் கொள்ளவில்லையென்பதும் வருத்தம்தரகூடிய விடயம்தான்.. இனியாவது சமஸ்கிருத பெயரில் வரும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமெனில் தமிழில் பெயர்வைத்து பிரசாரம் செய்யவேண்டும்.. என்று உத்தரவிடவேண்டும்.. அப்போதுதான் மக்களின் மொழியில் அதுகுறித்த தெளிவு பிறக்கும்.. சமஸ்கிருத திண்ப்பை முற்றிலுமாக துடைத்தெறியலாம்.. இனி.. #எதுவாயினும்_எம்மொழியில்_பேசு.. .. #மம்தாவிற்கு_நன்றி.. .. தோழர் ஆலஞ்சி

தரங்கெட்டவர்கள்

ஆட்சியாளர்கள் அதிகாரவர்க்கத்தின் மனோநிலை மிகமோசமாக போய்கொண்டிருக்கிறது.. அகந்தை ஆணவம் தலைக்கேறி என்ன பேசுகிறோம் என்பதறிந்தும் திமிரோடு செய்கிறார்கள்.. செல்லூர் ராஜூ உன்புருஷன் கூட இல்லையா என கேட்க தீபா சற்று தடுமாறுகிறார்.. கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல் மாநிலத்தில் ஒரு அமைச்சர் ஒருபெண்ணின் தனிப்பட்ட விடயங்களை பேசிகிறார் /விமர்சிக்கிறார்.. கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாத அடிமடையராக இருக்கிறார்.. யார் இவர் இவருக்கு தீபாவின் குடும்பவாழ்க்கையை பற்றி கேட்க என்ன அதிகாரம் /தகுதியிருக்கிறது.. நெறியாளர் அமைதிகாப்பது அசிங்கம்.. உடனே கண்டித்திருக்கவேண்டும்.. தீபாவின் அரசியலை அவர் செய்யும் நாடகத்தை விமரிச்கலாமே தவிர அவரையோ அவரது குடும்பத்தையோ அல்ல..எதற்கு எல்லை உண்டு அதை மீறி தரம்தாழ்ந்து பேசியிருக்கிறார் ராஜூ.. இவர்தான் செத்தவரின் உடல்மீது அம்மா அரசியல் செய்தவர் இவர் தரம் இவ்வளவுதான்.. .. நாங்கள் தாழ்த்தப்பட்டவனை நிறுத்தியிருக்கிறோம்.. கள்ளசிரிப்போடு வானதிஸ்ரீநிவாஸன்.. திரும்ப திரும்ப சொல்வதின் நோக்கம் கங்கைக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம் எங்களுக்கு புரிகிறது.. தன்னை தாழ்ந்தவன் என அழைக்க விரும்பாத அமரனிடம் நீ.. என்ன செய்தாலும் எவ்வளவு உயரத்தில் நின்றாலும் upper class மேல்வர்க்கத்தில் பெண் எடுத்திருந்தாலும் தாழ்ந்தவன் தான் என சொல்லி புரியவைக்கிறீர்.. வெல்லமுடியும் என்றிருந்தால் வானதியோ அல்லது ராசாவோ விட்டுகொடுத்திருப்பார்களா.. .. பொதுமேடையில் பேசும் போது தனிநபரின் பிறப்பை நையாண்டி செய்வதோ, அவரின் குடும்பநிலையையோ,அவரின் அந்தரங்க விடயங்களையோ பேசுவது அநாகரீகமானது அற்பதனமான செயல்.. உங்கள் முதுகின் பின் ஒளிந்திருக்கும் அசிங்கங்கள் ஆயிரம்.. யாரையும் அவரின் செயல்பாட்டை கொண்டே விமர்சியுங்கள்.. தரம்தாழாமல்.. .. #தரங்கெட்டவர்கள். .. தோழர் ஆலஞ்சி

Thursday, March 23, 2017

தளபதி..

எம் தளபதி நடத்துனர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து பரிதாபகரமாக தோற்றுக்கொண்டிருக்கிறார் என்றேன்.. நண்பர் கவிஞர் நிஷா மன்சூர்.. .. கவிஞரிடமிருந்து கவிதையாய் விமர்சனம்.. தனபாலின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது என்றுதெரிந்தும் கொண்டுவந்ததின் நோக்கம்.. வெரி சிம்பிள்.. சபாநாயகர் சபையை நடத்தும் அழகை விமர்சிக்கவும் எப்படி நடத்தவேண்டும் எப்படி முன்பெல்லாம் சபாநாயகர்கள் இருந்தார்கள் என்பதை தனபாலுக்கு புரியவைக்கவுமே தவிர.. தனபாலை வீழ்த்துவதல்ல எங்கள் நோக்கம்.. வீழ்த்துவது என முடிவெடுத்துவிட்டால் தனபாலை அல்ல எடப்பாடி அரசையே வீழ்த்திவிட முடியும்.. அது அவ்வளவொன்றும் பெரியகாரியமும் அல்ல.. இப்போதுள்ள சூழலில் மிக எளிதாக வளைத்தொடிக்க முடியும்..ஆனால் ஜனநாயகத்தில் கொஞ்சமேனும் நேர்மையை கடைப்பிடிக்கவேண்டுமென்ற தளபதியின் பிடிவாதம் இவர்களின் ஆட்டத்திற்கு முடிவுரை எழுதாமல் தப்பிக்கசெய்கிறது.. .. வறண்டுபோன ஜனநாயக நெறிமுறையை .. மீண்டும் துளிர்விட செய்ய சிறிதாயேனும் தண்ணீர்விட முயற்சிக்கிற பெரும் முயற்சியிது.. இறுக்கமான அரசியல் சூழல் தளர்த்தி வெகுஜன விருப்பத்தை செவிமடுக்கும் ராஜதந்திரம் .. நீண்டகால நிலைத்துநிற்பிற்கு வழிவகைசெய்யும் செயல்முறையைதான் கையிலெடுத்திருக்கிறார்.. நட்டதும் பூக்கவேண்டுமென நினைப்பதும் அதுதான் சரியென்ற அரசியலும் பார்த்து பழகியதால்.. நாமும் கொஞ்சம் அவசரகதியை விரும்ப தொடங்கிவிட்டோம். .. சபாநாயகர் தனபால் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பேசும் போது.. எனக்கு எதிர்த்து வாக்களித்தவர்களின் நம்பிக்கையை பெறும்வகையில் நடந்துக்கொள்வேன் என உறுதியளித்திருக்கிறார் அதுதான் வேண்டும்.. அது மட்டும்தான் சிறந்த செயல்படாக அமையும்.. நல்ல நேர்மையான நெறிகளோடு..புதியதொரு ஜனநாயகபாதையை அமைத்துக்கொண்டிருக்கிறார்.. தளபதி.. நிச்சயம் தமிழக மக்கள் விரும்புகிற தலைவராக/ அரசின் தலைவராக வருவார்.. வெற்றிபெறுவார்.. .. #விடியும் .. .. தோழர் ஆலஞ்சி

Wednesday, March 22, 2017

கிரிமினல்..

தியாக செம்மல்.. தஞ்சை நவநீதகிருஷ்ணன் எம்பி.. புரியவில்லையென்றால் காஷ்மீர் பியூட்டிப்புல் காஷ்மீர் புகழ் .. கிரிமினல் சசிகலாவை இப்படிதான் அழைத்தார்.. தஞ்சாவூர்காரர்களுக்கு தெரியும் .. நடுவர் நீதிமன்றங்களில் தேங்காய்மூடிலாயர் என்று அழைக்கப்பட்டவர்.. கலைராஜன் மூலம் சசிகலாவிற்கு அறிமுகமாகி ஜெயலலிதா வழக்கில் வாதாடியவர்களுக்கு உதவ நியமனம் செய்யபட்டார்.. சசியின் தீவிரவிசுவாசியாக இருந்ததால்/சொல்படி ஆடியதால் மாநிலங்களவை உறுப்பினராகி.. கஷ்மீரில் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து மாநிலங்கவையில் பேசும் வாய்ப்பு வந்தபோது.. பாட்டு பாடி தமிழக மானத்தை வாங்கினார்.. .. அதென்ன #தியாகசெம்மல்.. A2 கிரிமினல் சசிகலா அப்படிதான் ஊடகங்கள் அழைத்திருக்கவேண்டும் .. குற்றவாளி சசி என சமூகவலைதளங்களில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.. நாம் கூட அதிமுக பொதுசெயலர் என்று எழுதுவதால் கிரிமினலை தியாகியாக்கி ஊடகங்களில் பேசி பதியமுடிகிறது.. உண்மையில் வெட்கபடவேண்டிய விடயம்.. கிரிமினல் 1 ஜெயலலிதாவின் சமாதியை அரசே நிர்வகிப்பதும் அரசும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் படையெடுப்பதும் தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது.. செத்துவிட்டதால் ஒருவர் புனிதரென்றால் ஹிட்லர் கூட மேன்மையானவர்தான்.. முதலில் இது இந்தியாவிற்கே இழுக்கு .. உலகமெங்கும் குற்றவாளியை கிரிமினலை புகழ்வதை பார்த்து சிரிக்கிறார்கள் இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருத்த அவமானம்.. ஜெயலலிதா சமாதியை அகற்றியிருக்கவேண்டும் .. அல்லது அரசோ அமைச்சர்களோ அங்கு செல்வதை தவிர்த்திருக்கவேண்டும் அரசு விழாக்களில் கிரிமினல் ஜெயலலிதா படத்தை அகற்றியிருக்கவேண்டும்.. இந்த அசிங்கங்களை எல்லாம் நாம் எதிர்க்காமல் சகித்துக்கொண்டதால்.. கிரிமினல் தியாகசெம்மலானது.. .. விடுதலைக்காக போராடியவர்களை போற்றும்வண்ணம் நாம் தியாகி என்றழைத்து கௌவரம் செய்தோம் இனி.. தியாகி என்றாலே (கிரிமினல்கள் )கொலைகாரர்களும் கொள்ளையடிப்பவனும் நியாபகம் வருவார்கள்.. அதிமுக எனும் கட்சியே அரசியலில் அவமானம் கெட்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள் அரசியலில் மறுப்பதற்கில்லை ஆனால் இவர்கள் கேடுகெட்டவர்கள்.. விரட்டப்படவேண்டியவர்கள் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த தமிழர்களின் மானத்தை வாங்குகிறார்கள்.. ஆம் அதிமுகவினர்.. #அழித்தொழிக்கப்படவேண்டிய_விஷகிருமிகள்.. தோழர் ஆலஞ்சி..

மோடியை நம்பகூடாது.. அட்டர்னிஜெனரல்

#பிரதமர் மோடி சொல்பவற்றை எல்லாம் மக்கள் நம்பத்தேவையில்லை..மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) உச்ச நீதிமன்றத்தில் தகவல்... இதிலிருந்து பிரதமர் பொய் பேசுவார்.. அதாவது வாய்க்குவந்ததை பேசி மக்களை ஏமாற்றுவார்.. ஆனால் அதை நாட்டுமக்கள் கேள்வி கேட்க தேவையில்லை.. நம்பவும் கூடாது .. ஆம்.. பொய் தானே மோடியின் மூலதனம் எப்போதாவது சொன்னதை செய்திருந்தால் தானே நம்பிக்கை வரும் ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் எல்லாமே எப்போதும் செயல்படுத்தபடுவதில்லை.. எல்லாகட்சிகளுக்கும் இது பொருந்தும்..சிலவற்றையாவது செயல்படுத்தினால் தான் அவர்களது மீது நம்பகதன்மை வரும்.. ஆனால் மோடி வார்த்தை பிரயோகம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.. சாமானியனுக்கான சர்க்கார் இதென்று பேசிக்கொண்டே அம்பானிக்கும் அதானிக்கும் சிவப்பு கம்பளம் விரிப்பார்.. ஆனால் ஏழைகள் மீது கொடுங்கோலை பாய்ச்சுவார்.. மன்மோகன் ஆட்சியிலிருநிது இறங்கியபோது இருந்த சிலிண்டர் விலையை விட ₹340 அதிகம்.. இது ஒன்றே போதும்.. பெட்ரோல் 120 டாலர் இருந்த போது கூட இவ்வளவு விலை உயர்வில்லை..பேரல் 52 டாலர் விற்கிற போது விலை 70% வரை உயர்வு.. இவையெல்லாம் சொல்லாமல் செய்தது.. செய்வதாக சொன்னதை பற்றி பேசி பிரயோசனமில்லை. ஏனெனில் உச்சநீதிமன்றத்திலேயே அதெல்லாம் விளையாட்டுக்கு சொன்னது என்ற பின்.. பேசி என்ன பிரயோசனம்.. மோடி வந்தால் இந்தியா மிளிரும் என்றவர்கள் தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.. .. உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசின் நிலைபாடு ஒன்று போதும் இனி யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் வாக்குறுதியாக தரலாம் .. சும்மா பேச்சுக்குதானே சொன்னேன் என சொல்லி தப்பிக்கலாம்.. இதற்கெல்லாம் முன்னோடியாய் தமிழகம்..மறைந்த கிரிமினல் ஜெயலலிதா சொல்லவே வேண்டாம் எல்லாவற்றையும் அறிவிப்பிலேயே ..110 ல் படித்துவிட்டு போய்விடுவார் இந்தநாள்வரை கிடப்பில் தான் .. தமிழகத்தில் மருத்துவமனையையே காணோம் என்று போராடுகிற அவலநிலை .. .. கொடுத்த வாக்குறுதிகளை ஏறக்குறைய நிறைவேற்றிய கட்சியென்று பார்த்தால் திமுகதான்.. தலைவர் கலைஞர் 2006 ல் சொன்னதில் முழுவதுமாகவே நிறைவேற்றினார்... பிரதானமாய் விவசாயிகள் கடன் தள்ளுபடி ஒரு ரூபாய்க்கு அரிசி..என சொல்லிக்கொண்டே போகலாம்.. சிலநேரம் காலதாமதாக எனினும் நிறைவேற்றியிருக்கிறார்.. அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வாய்சவடால் விடவில்லை.. சொன்னதை செய்தார்.. செய்ய முடிந்ததையே சொன்னார்.. #கலைஞர் .. ஆனால் மோடி #வாய்சொல்வீரர்.. .. தோழர் ஆலஞ்சி

Tuesday, March 21, 2017

தா.பா.. கம்யூனிஸசத்தில் அசிங்கம்

இந்திய கம்யூனிஸ்டில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை தா.பா.. இவருக்கு தெரியாமல் இருப்பதே.. நன்று.. பொதுவுடமை சித்தாந்தத்திலிருந்து வெகு பின்னில் வந்துவிட்டார். இந்திய கம்யூனிஸ்ட்டை மக்களின் மனதிலிருந்து துடைத்தெறிந்ததில் பெரும்பங்கு பாண்டியனுக்கு உண்டு.. கீழ்தஞ்சையில் செல்வாக்கோடு இருந்த கதிர்அரிவாள்.. சொணைப்போய்விட காரணம் நம்மாளுதான்.. பெரியவர் நல்லகண்ணுவிற்கு பிறகு தேய்ந்து போனது இந்திய கம்யூனிஸ்ட்.. .. கமிழகத்தின் இன்றைய சீர்கேட்டிற்கு கம்யூனிஸ்ட்களின் பங்கு அதிகம். தா.பா. மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாதென்றாலும் மிகப்பெரிய காரணிகளில் ஒருவர்.. தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று தெரிந்தும் ஜெயலலிதாவோடு சமீபம் காட்டியதும். 2ஜி வழக்கை காட்டி திமுகவோடு இடதுசாரிகளை சேரவிடாமல் செய்ததும்.. மநகூவை ஆரம்பித்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்குவர காரணமாக இருந்தவர்களில் தா.பாவும் ஒருவர் .. கட்சியின் வளர்ச்சியைவிட அதிமுகவின் வளர்ச்சியும் குறிப்பாக கிரிமினல் ஜெயலலிதாவின் வளர்ச்சிக்காக கம்யூனிஸத்தை குழித்தோண்டி புதைத்தவர்..இப்போது இவரை கேட்காமலேயே முடிவுகள் எடுக்கப்படுகிறது.. கண்கெட்டபிறகு வந்த ஞானோதயம்.. பொதுவுடமைக்கு இவருக்கும் ஏழாம் பொருத்தம்.. தன் சொந்த சகோதரரோடு சொத்து பிரச்சனையில் நடந்துக்கொண்ட விதம் பொதுவுடமைவாதிக்கு உகந்ததல்ல.. அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் இவருக்கு சாதகமாக நடக்க மறுத்தது. நியாயம் யார்பக்கம் இருக்கிறதென நீதிமன்றத்தை நாட சொன்னதும் கலைஞர் மீது கடும் கோவம்.. தன் மகனுக்கு பல்கலைகழகத்தில் உயர்பதவி வேண்டி ஜெயலலிதாவின் பின்னால் அலைந்து காரியம் சாதித்துக்கொண்டார்.. .. இடதுசாரி சிந்தனையாளர்களிடம் கூட ... தா.பாண்டியனுக்கு அவ்வளவு நல்லபெயரே இல்லை.. ஊழலுக்கெதிராக குரல் கொடுத்துக்கொண்டே ஜெயலலிதாவை ஆதரித்தது அவர்களின் இரட்டைவேடம் மக்களுக்கு புரிய தொடங்கியது.. திருத்துறைப்பூண்டி பகுதியில் கூட செல்வாக்கை இழக்க நேரிட்டது . பாண்டியனின் கலந்தாலோசிக்காமல் இயக்குவதுதான் எதிர்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்லது.. தா.பா. போன்றவர்கள் பொதுவுடமையின் அசிங்கம்..எப்படி பார்த்தாலும் இவர் தன் கட்சியை விட அதிமுகவிற்குதான் அதிகம் மெனக்கட்டிருக்கிறார்.. .. #கம்யூனிஸ்ட்டில்_கரும்புள்ளி…… .. தோழர் ஆலஞ்சி..

Monday, March 20, 2017

கங்கை..மாசு..

கடவுளே என்பவர்கள் எதற்கு ஒடுக்கப்பட்டவர்களை கோவிலுக்கு அனுப்பனும்னு சொல்லி போராட்டம் நடத்தணும்.. அமர்சிங் எனும் கங்கை அமரன்.. ஓரிருநாள் முன்பு பாவலர் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக பாடி தவறு செய்துவிட்டார் என்றார்.. பாவலர் என்ற அவரின் சகோதரரைப்பற்றிய அவரின் கருத்துக்கு நாம் பதில் சொல்ல தேவையில்லை..ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு ஏன் செல்லவேண்டுமென்கிற தொனியில் வார்த்தை வந்தது பாருங்கள் அங்குதான் பார்பனீயம் வென்றிருக்கிறது.. கடவுள் மறுப்பாளன் அழைத்துக்கொண்டு போனதல்ல அவர்களின் பிரச்சனை தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்டவன் நுழைவதுதான் உறுத்துகிறது.. .. அமரன் அறிந்திருப்பாரென எண்ணுகிறேன்..கீழ்தஞ்சை மாவட்டத்தில் பாவலர் .. காய்ந்த வயல்வெளியில் கச்சேரி செய்திருக்கிறார்.. பொதுவுடமை கருத்துக்களை மட்டுமல்ல.. தீண்டாமையையும் எதிர்த்து பாடியிருக்கிறார்.. அண்ணன் பாடி கஞ்சி ஊற்றியதை மறந்துதான் பேசுகிறார்.. கொஞ்சம் காசும் புகழும் வந்தவுடன் யாரால் ஒடுக்கப்பட்டோம் என்பதையே மறந்து பேசுகிறார்.. #சின்னதாயிடம் கேட்டிருந்தால் காலில் செருப்பில்லாமல் அப்பன் நடந்தது வந்ததையும் கக்கத்தில் துண்டை வைத்து #கும்புடுறேன்_சாமி என ஆண்டபரம்பரையை சொன்னதையும் சொல்லியிருப்பார்.. ஆரம்பம் முதலே புரட்சி பேசிவந்த பாவலரோடு தமிழகமெங்கும் சுற்றி திரிந்ததால்.. பார்பனர்களால் எந்தளவிற்கு அடித்தமர்த்தப்பட்டார்கள் என தெரியாமல் போனதென்று நினைக்கிறேன்.. .. உண்மையில் இவர்களை போன்றவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.. ஆம் பொன்னர்... தமிழிசை.. கங்கை அமரன் போன்றோரிடம் அம்புகளை கொடுத்துவிட்டு .. அவர்கள் இயக்குகிறார்கள்.. நம்மவன் நம்மையே குறிபார்த்து தாக்குகிறான்.. பதவியும் பவுசும் கண்ணை மறைக்கிறது.. இதைதான் காலங்காலமாக செய்கிறது பாசிசம்..நம்மை கொண்டே நம் குடலை உறுவும் வேலை.. பதவி ஆசைகாட்டி மூளைச்சலவை செய்து இவரை போன்றோர் நிறைய இருக்கிறார்கள் நமக்கே தெரியாமல் நம்மிடையே.. திடீரென ஒருநாள் நம்மை கடித்து குதறுவார்கள்... நிறைய பார்த்துவிட்டோம் அமரன் அவர்களே.. குலம் கெடுக்கும் கோடாரிகளை காட்டிகொடுக்கும் கயவர்களை.. கூடயிருந்தே முதுகில் குத்தும் கயவர்களை.. .. உன் தாயை பழித்தால் தான் சோறுகிடைக்கும் உனக்கென்பதால்.. பழிக்கிறாய்.. பாவம் உன் வயிறு நிறைந்தால் சரி.. உணரும் போது நினைவிழந்து வீழ்வாய் அப்போது கூட நாங்கள் தான் தாங்கி பிடிப்போம்.. நீ..சொல்லும் நாத்திகர்கள்.. உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் மறுக்கபடுவதற்கு .. சகமனிதனாக பார்க்காமல் காலில் போட்டு மிதிப்பதற்கு.. தனியாக ஒதுக்கி தண்ணீரை கூட குடிக்க தனி குவளை தந்ததற்கு.. ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டதற்கு.. நீ தான் கோவப்பட்டிருக்கவேண்டும் .. ஆம்.. அதெல்லாம் சொரணை உள்ளவனுக்கு தான்.. .. #சுயமரியாதை_இல்லாதவன்_பிணம்…… .. தோழர் ஆலஞ்சி

சிபிஐ..நாறுகிறது..

சிபிஐ.. மத்திய புலனாய்வு துறை.. இந்த அளவிற்கு சீர்கெட்டு போனது இப்போதுதான் என நினைக்கிறேன் ஆட்சியாளர்களுக்கு எந்தவொரு புலனாய்வு அமைப்பு வளைந்து நிற்கும் தான் ஆனால் நடுவொடிந்துபோய் இப்போது நிற்கிறது.. விசாரணை நீதிமன்றத்தில் தினம் தினம் முகமிழந்து நாறிக்கொண்டிருக்கிறது..₹170000,கோடி என்றவர்கள் இப்போது தடுமாறுகிறார்கள்.. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அடுக்கி வைக்கலாமென்ற பார்பன ஏடு தினமலர்கூட வேறுவழியின்றி சிபிஐ மானத்தை கப்பலேற்றுகிறது.. பாஜகவின் முரளிமனேகர் ஜோஷி வற்புறுத்தியதாலேயோ கையெழுத்திட்டதாக ஆர்.பி.சிங் சாட்சியம் சொல்கிறார்.. கடைசியில் நீர்த்துப்போன கதையாய் .. .. கலைஞர் டிவிக்கு ₹200 வழக்கில் அனுசரனையாக நடந்துக்கொண்டார் என்ற வாதம் கடைசியில் கேலிபொருளாக எல்லோரும் சிரிக்கிற நிலைக்கு வந்திருக்கிறது.. ராசா மிக சிறந்த நிர்வாகி என்பதை காலம் கடந்து நாடு உணர தொடங்கியிருக்கிறது.. கலைஞர் பெருமகன் ஒருவரிடம் ஒரு பதவியை வாய்ப்பை.. தருகிறார்கள் என்றால் நிச்சயமாக அவர் திறமையை பலகட்டமாக கண்டும் கேட்டும் இருப்பார் நிறைய ஆலோசனைக்கு பிறகுதான் கலைஞரிடமிருந்து வாய்ப்பை பெறமுடியும்.. அரசியலில் பொதுவாழ்வில் நிர்வாகத்தில் இதுவரை யாருமே எதிர்கேள்வி கேட்கமுடியாமல் தான் கலைஞரிடம் திணறுகிறார்கள்.. எத்தனை விமர்சனங்கள் பொய் பிரச்சாரங்கள்.. விஷமதனங்கள் .. அனைத்தையும் அவர் கடந்து வந்திருப்பது அவர் தனக்கு சரியெனப்பட்டதை அறிவேற்றதை , துணிச்சலாக செய்திருக்கிறார்.. ஆரம்பத்தில் எதிர்ப்பு வந்தாலும் கடைசியில் கலைஞர் செய்ததுதான் சரி என்று மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.. .. இதோ 2ஜி வழக்கு இந்தியாவில் இது போன்று ஒரு ஊழல் வழக்கு எப்போதுமே பேசப்பட்டதில்லை ஒட்டுமொத்த இந்தியாவின் ஊடகங்களும்.. அரசாங்கமும் அதைவிட உச்சநீதிமன்றமும் வரிந்துக்கட்டிக்கொண்டு திமுகவின் மீது பழிசுமத்தி தனிமைப்படுத்தின.. இது வேறு யாருக்காவது அல்லது எந்த அரசியல் கட்சிக்காவது நடந்திருந்தால் இந்நேரம் அந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.. கலைஞரின் அஞ்சாமையும் .. தவறு செய்யவில்லை என்பதால் எதுவும் நடந்துவிடாது என்று அசைக்கமுடியாத நம்பிக்கையும்.. திமுகவை இதுவரை கட்டிகாத்தது.. இதனால் திமுக இழந்ததென்வோ ஆட்சியைதான் மாறாக தமிழகம்.. கிரிமினல் ஜெயலலிதாவின் கையில் சென்று குட்டிசுவரானது மாநிலத்தின் வளர்ச்சி அகலபாதாளத்தில்.. இன்று தமிழகம் சந்திக்கிற அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணியானது.. மாநிலத்தில் வளர்ச்சியென்பது போய் வறட்சியானது.. .. எதையும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகினால் கடைசியில் இழப்பைதான் தரும்.... பொய்க்கு அலங்காரம் செய்து நம்முன்னே நிறுத்தினார்கள்.. நாமும் நம்பினோம்.. சாயம் வெளுத்தபோதுதான் தெரிந்தது.. உண்மை ஆழ குழித்தோண்டி புதைத்தாலும்.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும்.. நிச்சயமாய் ஒருநாள் வெளிவரும்.. மண்ணை கிழித்துக்கொண்டு முளைக்கும்.. அப்போது புரியும்..அதுதான் இப்போது நடக்கிறது.. #உண்மைஎன்றைக்கும்_உறங்காது…… .. தோழர் ஆலஞ்சி

Sunday, March 19, 2017

தலைநகரில் அம்மணமாய் உழவன்..

திரும்பவும் சொல்கிறேன்.. நாம் தேடி செய்த தவறு இப்போது நம்மை பார்த்து சிரிக்கிறது.. தலைநகரில் அம்மணமாய் உழவர்கள்.. சிறிதுகூட சங்கோசபடாமல் தமிழக மக்களும் அரசும் அதை வேடிக்கை பார்க்கிறோம்.. ஆறு நாட்களாகிவிட்டது.. இருதினங்களுக்கு முன்பு திருச்சி சிவாவும் இப்போது கனிமொழியும் போய் போராடும் உழவனை சந்தித்து அவர்களின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பபடும் என உறுதியளித்தார்கள்.. ஆளும் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் எவரும் கண்டுக்கொள்ளவில்லை.. .. ஏறக்குறைய கடந்த ஆறு ஆண்டுகளில் 600 மேற்பட்ட உழவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்டபோது சொந்த விடயங்களுக்காகவும் நோய்வந்தும் செத்தார்கள் என்றார் கிரிமினல் ஜெயலலிதா.. அப்போதே இவர்களின் பிரச்சனை அதிமுக அரசு கவனித்தில் கொள்ளவே இல்லை.. எப்போதும் தன்னை சுற்றிய அரசியலை தன்னை புகழ்ந்து பாடகேட்டு மக்கள் பிரசிசனைகளை கண்டுக்கொள்ளாமல் தேர்தலில் எதற்கும் ஒருவிலை நிர்ணயம் செய்து வென்றுவிடலாமென்ற அகந்தையில் ஆட்சி நடத்தினார்..நாமும் சொற்பகாசிற்கு ஆசைப்பட்டு வாழ்வாதாரங்களை உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இப்போது அம்மணமாய் தலைநகரில் நிற்கிறோம்.. .. திமுக ஆட்சியில் விவசாயகடன் ₹7000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது விவசாயிகளுக்கு மீண்டும் கடன் வழங்கியது.. அவர்களும் அதை திருப்பி செலுத்தினார்கள் .. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் போனதும் வரலாறு காணாத வறட்சியும் அவர்களை தற்கொலை செய்துகொள்ள செய்தது.. .. இதோ இப்போது கூட கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகைகூட முழுவதுமாக தர அரசிடம் பணமில்லை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி ..பிரதமரை வலியுறுத்த முதல்வருக்கு வக்கில்லை.. வழக்கு ,தேவை, பதவிக்காக தமிழர்நலனை கிரிமினல் ஜெயலலிதா அடகுவைத்தார் இப்போது சசிகலாவின் பினாமி ஆட்சியும் அடகுவைக்கிறது.. நாடாளுமன்ற மக்களவையில் இப்போது திமுகவிற்கு குறைந்த அளவிலேனும் எம்பிக்கள் இருந்திருந்தால் பிரதமரின் கவனத்தை ஈர்த்து மத்தியரசை பணியவைத்திருப்பார்கள்.. யாரை தேர்வு செய்து என்று கூட தெரியாமல் அடிமாடுகளை அனுப்பியதால் .. பாட்டுபாடியும் கிரிமினல் ஜெயலலிதா புகழ்பாடியும் .. ஜெயலலிதாவிற்கு ஒன்றென்றால் கூச்சலிட்டும் காலம்கடத்துவார்கள்.. இப்போது அது கூட இல்லை மோடிக்கு வாலாட்டுகிறார்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஈனத்தனமாய் விழுந்து கிடக்கிறார்கள்..இந்த கேடுகெட்ட அதிமுக எம்பிக்கள் .. .. இப்போது கூட தமிழக அரசு மத்திய அரசிடம். தமிழக உழவர்களின் அவலத்தை எடுத்துரைத்து விவசாயகடனை தள்ளுபடி செய்ய .. கோரலாம்..அதைவிடுத்து ஆட்சியை காப்பாற்ற காலடியில் விழுந்து கிடந்தால் ..காலம் மன்னிக்காது.. .. #தலைநகரில்_உழவன்_கேட்பாரற்று…… .. தோழர் ஆலஞ்சி

Saturday, March 18, 2017

ராசா..வின் இசை சுருதி இழந்து..

ராசா.. எப்போதுமே இப்படிதான்.. கொஞ்சம் தலைகனத்தோடு தோன்றியதை பேசுவார்.. அவரது இசை நம்மை ஏதோயொரு வகையில் மயக்கியிருக்கிறது மனசை சாந்தபடுத்தியிருக்கிறது அதுவரை இசை மேட்டுக்குடி ரசனைக்கானதென்றதை மாற்றி பாமரனின் இசையை பந்தியில் வைத்தவர்.. அவருக்கு முன்பும் பின்பும் யாரும் இதுபோன்ற தாக்கத்தை வெகுமக்களிடையே கொண்டு சேர்க்கவில்லை.. இசையமைப்பில் நிறைய புதிய முயற்சிகளை செய்து சில ராகங்கள்கள் சிலவற்றிக்கும்தான் பயன்படுத்தவேண்டுமென்ற விதியை தூக்கியெறிந்து புரட்சி செய்தவர். கர்னாடக இசையில் மட்டுமே திரைஇசை என்றதை மாற்றி மக்கள் இசையில் மகுடம் சூட்டியவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ராசா பற்றி.. உண்மையில் திரைஇசையில் ராசாவாக தான் வலம்வந்தார் இப்போதும்கூட ராசாவாகதான் தெரிகிறார் இசையில்.. .. இளையராசாவிடம் இசையை மட்டுமே கேட்கவேண்டும் வேறேதும் கேட்டால் இப்படிதான் ஏதாவது உளறிவைப்பார்.. சிலகாலம் முன்பு ஆன்மீகத்தில் ஒன்றிப்போய் இருந்தார்.. அப்போது அவரை பற்றி ஒருவர் தாழ்த்தப்பட்ட குடியிலிருந்து வந்த இசை அரசர் என்று எழுதிவிட்டார் அவர் மீது வழக்கே தொடர்ந்தார் அப்போது அவர் சொன்ன வார்த்தை அதிர்ச்சியை தந்தது .. இந்த இழிபிறவியை போக்கத்தான் பிராயசித்தம் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.. தன்னை தானே தாழ்த்திக்கொண்டவன் எப்போதும் மேன்மை அடைவதில்லை.. ஏன் இதை பதிவு செய்கிறேன் என்றால் ராசாவிற்கு தன் திறமை மீது நம்பிக்கையில்லாமல் தன் முயற்சியால் உயர வந்ததை மறந்து தன்னைதானே சரியாக மதிப்பிட தெரியாதவராகதான் இதுவரை இருக்கிறார்.. கடவுள் நம்பிக்கை என்பது வேறு இவரிடம் இருப்பது கிறுக்குத்தனம்.. .. தன் பால்யகால நண்பர் பாரதிராசாவோடும் தனக்கு கச்சேரிகளில் வாய்ப்பளித்த பாலுவோடும் .. சகதோழனாய் தன்னை புகழ்ந்த வைரமுத்துவோடும் தன் உடன்பிறந்த சகோதரரோடும்..ஒவ்வொரு காலகட்டத்தில் வீம்புபிடித்திருக்கிறார்.. தன் இசைதந்த கம்பீரத்தை தவறாக புரிந்துக்கொண்டதால் தான் தன் பிறவியையே இழிவாக எண்ண முடிந்தது.. இப்போது பாலு தனது இசையில் வந்த பாடல்களை பாட கூடாதென சொல்லியிருப்பதாக வரும் செய்தி ரசிக்கமுடியாத இசை.. திரைஇசை வடிவம் என்பது ஒரு கூட்டுமுயற்சி.. இசையை முழுக்க முழுக்க வடிவமைத்தாலும் அதை ஒருங்கிணைக்க பல்வேறு இசைகலைஞர்களின் உழைப்பும் அதில் அடங்கியிருக்கிறது..அப்படி பாலுவின் உழைப்பும் திறமையும் அதில் சேர்ந்திருக்கிறது என்ற உண்மையை யாராவது ராசாவிடம் எடுத்துச் சொல்லுங்கள்.. ராசாவின் இசையை ரசிக்க முடிந்த நம்மால் பேச்சை ரசிக்கமுடியவில்லை.. .. #நிசப்தம்தான் சிறந்த இசையென்று சொன்னவர் இப்போது கூச்சலிடுகிறார்.. #சுருதிபோன_இசை.. .. தோழர் ஆலஞ்சி

Friday, March 17, 2017

கடவுளை மற மனிதனை நினை..

தோழர் பரூக் படுகொலை.. கோவையை சேர்ந்த அன்வர் என்பவர் சரண்.. கடவுள் மறுப்பை சொல்வதால் ஒருவன் கொல்லப்பட வேண்டுமெனில் இன்னமும் அந்த சமூகம் காட்டுமிராண்டியாக வாழ்கிறது என்று பொருள்.. இஸ்லாம் தெளிவாக சொல்கிறது உனக்கு உன் வழி எனக்கு எனது வழி.. அரைகுறை அறிவோடு இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத அரைவேக்காடுகள்.. தமிழில் வந்த மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு.. சிலரின் மூளை சலவையில் மதியிழந்து திரிகிறார்கள்.. .. கடவுள் உண்டென்றாலும் இல்லையென்றாலும் அதை ஏற்றுக்கொள் அல்லது மறுத்து கருத்திடு அதை விடுத்து கழுத்தறுத்து கொல்வது தான் இஸ்லாம் போதித்ததென்றால் அது மார்க்கமல்ல #மதம்.. இஸ்லாமிய நெறிமுறைகளை வாழ்வியலை சரியாக புரிந்துக்கொள்தாவர்கள்.. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கடும் கண்டணத்திற்குரியது.. இவர்களை போன்றவர்களை கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.. .. கடவுளை மற மனிதனை நினை என்று சமத்துவம் பேசிய ஒருவனை கொன்றுவிட்டால் .. ஆயிரமாயிரம் மறுப்பாளர்கள் மனிதநேயர்கள் .. வருவார்கள்.. உலகில் பாதிக்குமேல் கடவுள் மறுப்பாளர்கள்தான் என்கிறது ஒர்ஆய்வு.. விஞ்ஞானிகள் உலகம் போற்றிய போற்றும் நல் வழிகாட்டிகள் சிறந்த மனிதர்கள் எல்லாம் நாத்திகர்களாகதான் வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.... உலகையே தன் சிரிப்பால்/நடிப்பால் கவர்ந்திழுந்த.. #சார்லிசாப்ளின்.. சாதாரணமாக சிந்தித்தால் கூட எனக்கு எதிலும் கடவுள் நம்பிக்கை ஏற்படவில்லை என்றார்.. அதுதானே உண்மை.. .. முதலில் மனிதனாகுங்கள்.. பிறகு உங்கள் கடவுளைக் கட்டிக்கொண்டு அழலாம்.. எந்தமதமும்/கடவுளும் தன்னை மறுப்பவனை ஏற்றுக்கொள்ளாதவனை அழிக்க நினைக்கவில்லை கொல்ல சொல்லவில்லை.. மதம் மடையர்களையே உருவாக்கும் என்பதற்கு .. பரூக் படுகொலையே உதாரணம்.. கடவுள் இல்லை ..இல்லை ..இல்லவே இல்லை ..கடவுள்தான் வேண்டுமெனில் அதை உங்கள் மனதிற்குள் வைத்துக்கொள்ளுங்கள்.. #மடையர்களே…… .. #மதம்தவிர்_மனிதனாகலாம்... .. தோழர் ஆலஞ்சி

Thursday, March 16, 2017

மானமிகு ராசா...

#ஆதாரமெங்கே.. .. 2014 பிப்ரவரியில் ராசாவை இந்தி சேனல் india tv யில் Rajit sharma பேட்டி கண்டார்.. அவரது நிகழ்ச்சி பிரபலம் ஆப்கே அதாலத் கோர்ட் போல வடிவமைக்கப்பட்ட அரங்கில் நடந்தது.. அப்போது என்ன சொன்னோரோ அதுதான் இப்போதும் நடக்கிறது.. 2.2 11 நான் கைதுசெய்யபட்டேன் 11.2. 11 ல் times of india 3000 கோடி சொத்து சேர்த்திருப்பதாக எழுதியது அப்போது நீதிபதியிடம் வருமானத்திற்கு அதிகமாக நான் ஒரு ரூபாய் சேர்ந்திருந்தது நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தயார் என்றேன் இதுவரை முடியவில்லை என்றார்.. தகுதியில்லாத Ineligible கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதாக சிபிஐ சொன்னது நான் அமைதியாக இருந்தேன் சட்ட அமைச்சகம் அந்த நிறுவனங்கள் (கம்பெனிகள்) தகுதியானது Eligible என trial court விசாரணை நீதிமன்றத்தில் சொன்னது என்றார்.. .. அதுதான் இந்த ஆறு ஆண்டுகளில் ராசாவிற்கு எதிரான ஆதாரங்களை தரமுடியாமல் சிபிஐ திணறுகிறது.. நேற்றைய தினம் கூட பொறுமை இழந்த நீதிபதி ஷைனி.. விசாரணை துவக்கத்தில் என்ன சொன்னீர்களோ அதையேதான் இப்போதும் சொல்கிறீர்.. குற்றசாட்டபட்டவருக்கும் சிபிஐக்கும் நீதிவழங்க ஆதாரத்தை வழங்கவேண்டும்.. என சிலகேள்விகளை கேட்டார். பத்துநாள் அவகாசம் கேட்டு தற்காலிகமாக தப்பித்தது..சிபிஐ மிக தெளிவாக கோப்புகளில் ராசா எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்.. ஆறு ஆண்டுகள் கடந்தும் அவர்களால் ஒரு சிறிய ஆதாரத்தை கூட தரமுடியவில்லை .. .. ஆனால் இதனால் திமுக இழந்தது ஏராளம் .. ஊடகங்கள் அரசியல் கட்சிகளும் திமுகவை இருக்குமிடம் தெரியாமல் ஆக்க கடும்முயற்சி எடுத்தார்கள் எத்தனை சைபர் என தெரியாதவன் எல்லாம் கம்பு சுத்தினான்.. அதனால் #நிஜ_கிரிமினல்_ஜெயலலிதா பலனடைந்தார்.. மூட்டை மூட்டையாய் பணம் அறிவாலத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக அறிவுகெட்ட வைகோ சொன்னார்.. கம்யூனிஸ்ட்கள் திமுகவை தீண்டதகாக கட்சியாக சித்தரித்து நிஜ கிரிமினலோடு சேர்ந்து கும்மாளமிட்டார்கள் உலகில் அதிநவீன கட்டங்களையெல்லாம் படமெடுத்து இதெல்லாம் ராசா வெளிநாடுகளில் வாங்கி குவித்தவை என்றார்கள்.. .. ஏய்.. ஈனப்பிறவிகளே.. இதோ சிபிஐ சாட்சியோ ஆதாரமோ இல்லாமல் திணறுகிறது.. தங்களிடம் ஆதாரம் இருந்தால் கொடுத்துதவுங்கள் ‍.. இல்லையெனில் #மானமிகு_ராசாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்.. சிஏஜி அறிக்கையை அரசியலாக்க வேண்டாமென இன்றைய நிதியமைச்சர் அரூண்ஜெட்லி சொல்கிறார் .. ஆனால் பாஜக தான் 2ஜியில் சிஏஜி அறிக்கையை வைத்துக்கொண்டு வானத்துக்கும்பூமிக்கும் குதித்தது நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் செய்தது.. .. வேறோன்றுமில்லை.. தாழ்த்தப்பட்டவர்கள் உயர்பதவிக்கு வந்தால் அவர்கள் மீது ஊழல் குற்றசாட்டை சுமத்தி கேவலபடுத்துவதுதான் இந்தியாவில் நடக்கிறது.. உச்சமீதிமன்ற தலைமைநீதிபதி பாலகிருஷ்ணன், பாஜக தலைவராக வந்த பங்காருலட்சுமணன்..என அடுக்கிகொண்டே போகலாம்.. .. ராசா பெரியாரை படித்து அண்ணாவை ரசித்து கலைஞரால் வார்த்தெடுக்கபட்டவர். பார்பனீயத்தால் ஒன்றும் செய்யமுடியாது.. #மானமிகு_ராசா... .. தோழர் ஆலஞ்சி

பொன்னர் வெறும் கருவி..

திரு.பொன்ராதா மீது செருப்பு வீச்சு.. நாகரீகமான சமூகத்தில்தான் வாழ்கிறோமா.. பொன்னர் மீது கடும்கோபம் உண்டு அவரின் கருத்துகள் செயல்கள் நம்மை இழிவுபடுத்துகிறது..ஆனால் அதற்காக செருப்பை வீசுவதை ஏற்கமுடியாது அது நம் எதிர்ப்பை காட்ட சரியான வழியுமல்ல.. .. பொன்னர் தமிழிசை போன்றோரெல்லாம் கருவிகள் பாவம் அவர்களது இயலாமை நம் மீது ஏதாவது பேசினால் தான் தங்கள் எஜமானர்களிடம் ஏதாவது நக்காபிச்சை கிடைக்கும்.. எப்போதுமே நம் பிரதான எதிரிகள் நேரடியாகவே நம்மோடு மோதுவதில்லை அவர்கள் நம் இனத்தின் மீதான தாக்குதலை நம்மவரை கொண்டே செய்வார்கள் அது தான் அவர்களது பலம்.. எதற்கெடுத்காலும்,உணர்ச்சிவயப்படும் தமிழர்களின் உணர்வின் மீதே கல்லெறிவார்கள்..நாமும் சட்டென்று பொங்கி கருவியை துளைத்துவிடுவோம்..எய்த்தவன் நம்மை பார்த்து கைக்கொட்டி சிரிப்பான்.. நம் இன எதிரிகள் ஆயுதம் இரண்டுதான்..ஒன்று நம்மவரை நமக்கெதிராக திருப்பிவிடல்.. மற்றொன்று திறக்கப்படாத கதவுகளும் மடிக்கப்படாத விரிப்புகளும் தான்.. முதல் ஆயுதத்தில் தோற்றால் இரண்டாவதை களமிறக்கி நம்மை மதிமயக்கித்தில் ஆழ்த்தி காரியம் சாதித்துக்கொள்வார்கள்.. .. சிறியளவில் கூட இல்லாத ஒரு கூட்டம் பெருவாரியவர்களின் உரிமைகளை நம்மிடமிருந்து தட்டிப்பறித்து சுகபோகம் அனுபவிக்கிறார்களே எப்படி என நாம் சிந்தித்ததுண்டா.. உணர்ச்சிவயப்படுத்தியே நம்மை பரபரப்பாக வைத்திருக்கிறார்கள்.. நாம் செருப்பை வீசுவோம் நம் கோவம் தணிந்துவிடும் அப்புறம் அவர்கள் வேலை ஜரூராக நடக்கும் நாம்தான் எப்போதும் போல் வழக்கு நீதிமன்றம் சிறைச்சாலை என அலைந்துக்கொண்டே இருப்போம்.. அவர்கள் இருட்டுக்குள் நாலுசுவற்றுக்குள் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவார்கள்.. உயர்பதவி பொறுப்பு..அதிகாரமையம், ஆட்சி எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பார்கள்.. நாம் சிறைச்சாலைகளில் தனி அறைகளில் காலத்தை கழித்துக்கொண்டிருப்போம் .. பொன்னரோ தமிழிசையோ அல்ல நமது இலக்கு.. இதற்கு மூலக்காரணத்தை‍/ காரணமானவர்களை கண்டறிந்து அவர்களின் செயல்களை அம்பலமாக்கி அவர்களின் கொள்கையோடு .. அவர்களின் திட்டங்களை முறியடிக்க ..யுத்தம் நடத்தவேண்டும்.. அது நேரானதாக இருத்தல் அவசியம் அதற்கு நம்மிடையே ஊடுறிவியிருக்கும் துரோகங்கள் இனம் கண்டு ஒதுக்கிவிடவேண்டும் அரசியலில் பொதுவாழ்வில் இருக்குமிடம் தெரியாமல் செய்தாலே போதும்.. நம் இன எதிரிகள் நேரடியாக நம்மோடு மோத தைரியமில்லாமல் போவார்கள்.. .. பொன்னர் மீது செருப்பெறிவது நமக்குதான் அசிங்கம்.. .. தோழர் ஆலஞ்சி

உயர..உயர..பற

கூட்டை விட்டு வெளியே வா! உலகம் உனது.. பறந்து திரி.. பழகிக்கொள்.. வேட்டையாட . வல்லூறுகள் வழி மறிக்கும் சிக்காமல் .. தப்பிக்க... போராடு.. உலகம் இனிதாகும். வானம் உனதாகும்.. வலியில்லாமல்.. வரும் எதும் இனிதாகாது... இறக்கையை விரி. எல்லாம் வரும் உயர பற.. உனதாகும் .. வானமே எல்லை.. வசப்படும் வரை பற.. உனது..இலக்கை .. நீயே..தீர்மானி.. முயற்சி.. இலக்கு ... இலகுவாகும்.. #முயற்சித்தால்.. வசப்படும் ... எல்லாம்.. #இறக்கை_விரி .. தோழர் ஆலஞ்சி.. மீள்..

பட்ஜெட்..

டாஸ்மார்க் கடைகளை மூடியதே பொருளாதாரவீழ்ச்சிக்கு காரணம்.. பொருளாதார மேதை Economic Genius ஜெயகுமார்.. குற்றவாளி படத்தை ஒட்டி சபைக்குவந்து சிறையில் இருக்கும் மற்றொரு குற்றவாளியின் வழிகாட்டுதலில் நடத்தேறிய வரவுசெலவு நிதிநிலை அறிக்கை.. இதுபோன்ற கேவலம் தமிழகத்தை தவிர வேறெங்கும் நடக்காது.. இனி நடக்காது காக்கவேண்டியது மக்களின் பொறுப்பு. .. முட்டாள்கள் கையில் மூலதனம் தந்தால் முச்சந்தியில் நிற்கவேண்டும் என்பார்.. அதுதான் நடக்கும்.. வரிகளை முன்பே அதிகரித்து அறிவிப்புசெய்துவிட்டு வரியில்லா பட்ஜெட் என்பது ஏமாற்றுவேலை.. கடந்த இரண்டாண்டில் மட்டும்,இரண்டு லட்சம் கோடி கடன்சுமை.. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதிஒதுக்கப்படவில்லை அதனால் புதிய திட்டங்கள் ஏதுமில்லை.. கரும்பு விவசாயகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைதொகை 1400 கோடிகளுக்கு மேல் இருக்க 127 கோடி ஒதுக்குவதிலிருந்தே அரசின் கையில் பணமில்லை என்பதை காட்டுகிறது.. மீனவநண்பர்களுக்கு கொஞ்சம்,ஆசுவாசம் தரும் பட்ஜெட் அவ்வளவுதான்.. .. வித்தை தெரியாதவன் கையில் நூல் பொம்மைகள் தாறுமாறாக ஆடும் பொம்மலாட்டம் அதுதான் இங்கே நடந்தேறுகிறது.. உலகிலேயே கிரிமினல் பெயரை புகழ்ந்து அதுவும் சிறையில் தண்டிக்கப்பட்ட கிரிமினலை புகழ்ந்து பேசுவது அசிங்கமாக இருக்கிறது.. எதிர்க்கட்சிதலைவர் தளபதியின் பதில் சொல்ல முடியாமல் குற்றம்சாட்டப்பட்டவர் தேர்தலில் போட்டியிடலாம் என்கிறார்.. தண்டிக்கப்பட்டவர் தண்டனைக்காலம் கழிந்தும் ஆறுவருடங்கள் போட்டியிட முடியாது என செங்கோட்டையன் அறியாதவரா.. பாவம் கோபி மக்களை எண்ணி வருத்தம் தோணுகிறது.. காலில் விழும் கலாச்சார சீரழிவை துவக்கிவைத்த மானங்கெட்ட ,மதியிழந்தவரை தொடர்ந்து தேர்வு செய்து அனுப்புவதேன் .. .. சிறந்த நிதிநிலை அறிக்கையை எல்லாம் கண்ட தமிழகம்.. இப்போது அனுபவமில்லாதவர்களின் கையில் சிக்கி திணறுகிறது.. பட்ஜெட் குற்றவாளிகளின் (கிரிமினல்கள்) புகழ்பாடுகிறதே தவிர வேறொன்றுமில்லை.. கூமுட்டைகள். .. #ஆடத்தெரியாதவன்_வேசம்கட்டுகிறான்…… .. தோழர் ஆலஞ்சி

Wednesday, March 15, 2017

தளபதி..பெருமைக்கொள்வோம்

பெருமைபடவேண்டிய விடயம்.. கொஞ்சம் அடர்த்தியாக இருந்த சூழலை மாற்றி.. எளிமைபடுத்தியிருக்கிறார்.. செயல்தலைவர் இளைஞர்கள் (இளைஞர்அணிகூட்டத்தில்) மத்தியில் உரையாற்றிய போது பணி செய்யுங்கள் வாய்ப்புகள் உங்களை தேடிவருமென உறுதியளித்தார் நிச்சயமாக தலைமுறை இடைவெளியை உணர்ந்து நாம் மதிக்கும் மூத்தோரோடு வரும் தலைமுறையும் (இளைஞர்கள்) இணைத்து அழைத்துச்செல்ல வேண்டுமென எண்ணும் போதே .. நான்காம் தலைமுறை மிக அருமையாக கட்டமைக்கப்படுவதாகவே எண்ணுகிறேன்.. .. நேர்காணலில் அனைவரிடமும் கலந்தாலோசித்து கருத்துக்களை கேட்டு இறுதியில் ஒருவருக்குதான் வாய்ப்பு என்று வருகிற போது வெற்றியை பிரதானமாக்கிய நகர்வு அவசியம்.. தேர்தல் அரசியலில் அது இன்றியமையாதது.. பகுதி செயலாளர் எனும்பட்சத்தில் அவரை தொகுதியில் அறியாதவர் யாரும் இருக்கமுடியாது அவருக்கும் தொகுதி நிலவரம் அத்துபடி.. எனவே மருதுவை தேர்வு செய்திருக்கிறது.. நேர்காணலில் அவர் சொன்ன ஒருவிடயம் என்னால் செலவு செய்ய முடியாது இது எல்லாரிடமும் வரும் வார்த்தை தான் எனினும் இங்கே உண்மையாய் வந்தது அதை கருத்தில் கொண்டு அவரையே நிறுத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.. .. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் தமிழக அரசியலில் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமைக்கு பிறகு வரும் புதியதொரு மாற்றம்.. கட்சிக்கு புதிய உத்வேகத்தை தந்திருக்கிறது.. தலைமுறை மாற்றம் ஏற்படும் போது வரும் இயல்பு இதென்றாலும் அதில் நேர்மையை கடைபிடிக்கவேண்டியது அவசியம் அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு கடினம் என்பதை அறிந்தும் விடாபிடியாக புதியபாதையை வகுத்துவருகிறார் #தளபதி அவர்கள்.. நல்லதொரு முயற்சி.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறது வாழ்த்துகள்.. .. இயக்கத்தின் வெற்றி .. இளைஞர்களிடத்தில் நமது கொள்கைகளை கொண்டுசேர்ப்பதிலும்.. அவர்களின் பங்களிப்போடு அடுத்த இலக்கை நோக்கி நகர்த்துவதிலும்.. குறிப்பாக சாமானியர்களை அதிகம் இனம்கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி பங்காற்ற வைப்பதிலும் திமுகவின் வெற்றி இருக்கிறது.. இந்த இயக்கம் வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல.. சமுதாயத்தின் முன்னேற்றத்தை.. சமூகநீதியை நிலைநாட்டி.. ஒடுக்கப்பட்ட.. பின்தங்கிய மக்களை அரவணைத்து அவர்களுக்கான அரசியலை உரிமையை பெற்று தருவதிலும்.. அவர்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதிலும்.. இனம் மொழி கலாச்சாரம் பண்பாட்டை கட்டிகாப்பதிலும் இருக்கிறது இயக்கத்தின் வெற்றி.. .. தனிநபருக்கானதோ தனிபிரிவினருக்கானதோ அல்ல இந்த இயக்கத்தின் பணி.. ஒட்டுமொத்த இனத்திற்கானது.. அந்த இனத்தின் அடுத்த தலைமுறையை தலைமேற்று வழிநடத்த #அருமையான_தளபதி கிடைத்திருக்கிறார்.. மகிழ்ச்சி!.. மகிழ்ச்சி!! பெரும்மகிழ்ச்சி!!! .. #திராவிடன்_என்பதில்_பெருமைக்கொள்வோம்…… .. தோழர் ஆலஞ்சி

தளபதி...தீ..

நாகரீகமில்லாமல் எப்படி பேசமுடிகிறது.. தங்களைப்பற்றி தாங்களே அறிந்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு பேசவிடமுடிகிறது.. அதிமுகவும் திமுகம் உயிரோடில்லை பாமகதான் இருக்கிறது.. அன்புமணி.. கச்சதீவை கொடுத்ததற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும்.. தமிழிசை.. அழைத்தாலும் வரமாட்டேன்.. இப்படி சிலர் .. போடா போக்கத்தவனுகளா.. என்றுதான் சொல்லதோணுகிறது.. என்னமோ ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் சரியான தலைமையோ கட்சியோ இல்லையென்பதைப்போல ஒரு தோற்றத்தை ஊடகங்களும் சில்லுவண்டிகளும் ஏற்படுத்த நினைக்கின்றன.. கலைஞர் ஓய்வில் இருப்பதால் திமுக அவ்வளவுதான் என்பதைபோல நினைக்கிறார்கள்.. முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. திமுக முன் எப்போதுமில்லாத அளவிற்கு பலம் பெற்றுவருகிறது. அதிமுக கூட நீங்கள் நினைக்கிற அளவிற்கு பலம்,இழந்துவிடவில்லை இதுதான் உண்மை.. மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக தமிழிசை கொஞ்சம் ஓவராக ஆடுகிறார்.. திமுக சலங்கை கட்டினால்.. தமிழிசை இருக்குமிடம் தெரியாமல் போவார்.. .. ஜனநாயக அரசியலில் சிறுகட்சிகளும் அமைப்புகளும் ஏன் தனிப்பட்டவர்கள் கூட கருத்திட விமர்சிக்க அனுமதியுண்டு ஆனால் வார்த்தை பிரயோகங்கள் சலிப்பை தரகூடாது.. அகம்பாவத்தையோ, அருவருக்கதக்கவகையிலோ இருக்கலாகாது.. முதலில் எதை பேசுகிறோம் பேசுவதும் சரியா.. அல்லது விமர்சனம் உண்மையானதா.. சொல்லும் சொல்லில் நயம் இருக்கிறதா யாரையும் காயப்படுத்தாமல் பேசுகிறோமா.. அதை விட பேச நமக்கு தகுதியிருக்கிறா என எண்ணி பார்க்கவேண்டும்.. முடவன் கொம்புதேனுக்கு ஆசைபடுவது தவறில்லை .. ஆனால் தானே.. மரம் ஏறி தானே எடுத்து உண்ணவேண்டுமென்றால் அது சரியாகாது.. விழுந்து மேலும் உடைத்துக்கொள்ள வேண்டிவரும்.. அன்புமணி தான் மட்டுமே தகுதியானவர் பாமக மட்டுமே தகுதியான கட்சியென சொல்லிக்கொண்டு திரிகிறார்..இவ்வளவு பெரிய பின்னடைவிற்கு பிறகும் சாதிய கட்டமைப்பில் இருந்து வெளியே வராமல்..பேசுவது அவரின் இயலாமையை காட்டுகிறது.. .. எச்.ராசா பொன்னர் தமிழிசை அன்புமணி.. இவர்கள் வாய் திறந்தாலே சம்பந்தமே இல்லாமல் உளறுவதையே காணமுடியும் காரணம் இவர்களால் எதையும் சாதிக்கமுடியாது என்கிற இயலாமை.. மக்கள் செல்வாக்கு இல்லாததும் பெரியதொரு தாக்கத்தை இவர்களால் ஏற்படுத்தமுடியாததும் குறுகிய வட்டத்திற்குள்ளே தான் அரசியல் செய்யமுடியும் அதுவும் வேறுவழியின்றி என்கிற ஆற்றாமை இவர்களின் பேச்சினுடே தெரிகிறது.. திமுகவை திட்டியாவது கொஞ்சம் பிழைக்கமுடியாதா என நினைப்பவர்கள்.. .. #வாழ்கவசவாளர்கள்.. .. தோழர் ஆலஞ்சி

Monday, March 13, 2017

ராஜாஜி..பதிவிலிருந்து..

“ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டஎம் அன்னையின் மீது திகழ் அன்பெனு மேன்கொடி வாடிய காலை அதற்குயிர் தந்திருவான் --- --- --- --- --- வீரிய ஞானம் அரும்புகழ் மங்கிட மேவிய நல் ஆரியரை மிஞ்சி வளைத்திடு புன்மை.. --- --- --- --- --- வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம் வந்தே மாதரமே” இவர், இதே சுதேசமித்திரனின் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப் பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே --- --- --- --- --- வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப் பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே” எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார். இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது” என்ற பாடலில், “வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர். --- --- --- --- --- பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன், புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன். மாட்டுதீர் மிலேச்சர் மனப்படி ஆளும் ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன் ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர் யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!” “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்”

கமல்..

மெல்ல தலைகாட்டுகிறது பூனைக்குட்டி.. கமல் எனும் நாத்திகரின்..? பேட்டி முழுவதும் மீண்டுமொருமுறை கேட்டுபாருங்கள்.. பத்து தருண்விஜய் தெரிவார்.. காந்தி திலகரோடு சர்வாக்கரை இணைக்கும் மெல்லிய தந்திரம் நமக்கு புரியாமல் இல்லை.. இப்படிதான் ஆரம்பத்தின் சமூகத்தின் பால் அதிகோபம் கொள்வதைபோல காட்டிக்கொண்டிருப்பர்.. கமல் அரசியல் செய்வதை தடுக்கவில்லை வெளிப்படைதன்மை இல்லாத போகிறபோக்கில் எல்லோரையும் சகட்டுமேனிக்கு திருடர்கள் போல பேசுவது ஏதோ ஒன்றை முன்னெடுக்க என்பதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள் .. முற்போக்கு பேசுகிற பார்பனர்கள் ஆபத்தானவர்கள் என்பார் எமது பேராசிரியர் நன்னன் அவர்கள் கம்யூனிஸிட்களில் பார்பனர்கள் தலைமை பொறுப்பை ஏற்று கடைசியில் கட்சியை ஒன்றுமில்லாததாக்கியதை போல தான் .. கமல் பேச்சினுடே தொடர்ந்து சொன்னவிடயம் பாஜக வெற்றிபெற்றிருக்கிறதே.. என்றபோது அதை மௌனமாய் மழுப்பி கடந்து போனார்.. சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் மன்னிப்பு எழுதி கொடுத்த சர்வாக்கரை காந்தியோடு இணைத்து பேசும் போதே .. #அவர் வெளியே வருகிறார்.. .. மக்கள் கருத்துகளை தைரியமாக சொல்லவேண்டுமென்கிறார்.. மோசமான ஆட்சியாளருக்கெதிராக போராட வேண்டுமென்கிறார்..சரி.. ஆனால் விஸ்வரூப பிரச்சனையில் நேரடியாக பாதிக்கப்பட்டும் ஜெயலலிதா பெயர் சொல்ல மறுக்கும் இவரது நேர்மை கேள்விகுறியாகிறது.. அநீதி என்று தெரிந்தும் அப்போது ஏன் வாய்மூடி இருந்தார் என்று கொஞ்சம் யோசித்தால் புலப்படும்.. தோழர் மதிமாறன் சொல்வதை போல .. போலியானவர் கமல்.. நேரடியாக எதையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ மறுப்பவர்கள் /ஆதரிக்கவோ தெரியாதவர்கள் பலவீனமானவர்கள் அதைவிட ஆபத்தானவர்கள். .. சிலர் என் மீது கோவபடகூடும்.. தனிபட்ட கமலின் மீதோ அவரது கலையின் மீதோ எந்த எதிர்கருத்துமில்லை அவரது தனிப்பட்ட விடயங்களை நாம் பேசபோவதுமில்லை பேசவும் தேவையில்லை.. ஆனால் அவரது சமூகம் சார்ந்த கண்ணோட்டம் போலியானது .. .. சிறிய தகவல்.. நான் கமலின் தீவிர ரசிகன்.. #நடிப்பிற்குமட்டும்.. .. தோழர் ஆலஞ்சி

De Mock racy..

ஜனநாயகம் போலி...ஆபாசமாகிறது.. de MOCK racy..சொன்னவர் மன்மோகன் சிங்.. Long live democracy என்ற பிரதமர் மோடியின் ட்விடிற்கு மன்மோகன் தந்த பதில்.. உண்மையில் மன்மோகன் போன்றவர்களிடமிருந்து இதுபோன்று..கருத்துக்கள் வருவது எந்தளவிற்கு ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கிறது பாஜக என்று புரிகிறது.. கோவாவில் 17 இடம் பிடித்தவரை அழைக்காமல் 13 பேரை ஆட்சியமைக்க அழைத்து.. சுயேட்சைகள் விலைபேசும் கேவலம் அதைவிட காங்கிரஸ் சார்பில் நின்று வென்றவர் பாஜக தாவும் அவலம் மணிப்பூரில்.. அதனால்தான் மன்மோகன் U bribe / kidnap 43 mla in panjab.. long live de Mock racy... என பதில் அளித்திருக்கிறார்.. .. சசிகலா எம்எல்ஏக்களை அடைத்தவைத்தபோது.. சிலர் ஊடகங்களில் வந்து வாய்கிழிய பேசினார்கள்.. விசு போன்ற அவாள்கள் இப்போது வாய்மூடி ஜனநாயகத்தை வேடிக்கை பார்க்கிறார்கள்.. சசி செய்தது கூட அவரிடமுள்ள எம்எல்ஏக்களை அடைத்துவைத்தார். ஆனால் இங்கே வெற்றிபெற்று ஒருதினம் கூட முடியவில்லை அதற்குள் விலைபேசும் அயோக்கியத்தனத்தை பாஜக செய்கிறது..இது ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்து மூச்சரைக்க செய்யும் வேலை இது.. இப்படிதான் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் தேர்தல் நடைமுறை தேவையில்லை.. விலைபேசி அல்லது ஏலம் விட்டு ஆட்சிக்கு வரலாம்.. மக்கள் யாரை தேர்ந்தெடுத்திருக்கிறார்களோ அவர்களே ஆட்சி செய்ய அனுமதிக்கவேண்டும் சட்டமன்றத்தில் பெருபான்மை நிரூபிக்க முடியாமல் போனால் அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோரலாம்.. அதைவிடுத்து 17 உறுப்பினர் உள்ளவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுக்காமல் 13ஐ அழைப்பது..சரியான முறையா.. குறுக்குவழியில் தான் எப்போதுமே வெற்றிபெற நினைக்கும் பாசிச சிந்தனையுடைவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை எப்போதும் இருப்பதில்லை மதவெறியை மூலதனமாக்கி வெற்றிபெற நினைப்பவர்கள்.. அவர்களின்,ஆயுதம்.. திறக்கப்படாத கதவுகளும் மடிக்கப்படாத விரிப்புகளும்தான்...இதைவைத்துதான் உயரவர நினைப்பவர்கள்.. லஞ்சம் கடத்தல் பெண் பணம் பதவி என ஆசைகாட்டி ஜனநாயகத்தை கடித்து குதறுகிறார்கள்.. .. மத்தியில் ஆட்சி கையிலிருப்பதால் எதையும் செய்யலாமென்று நினைக்கிறார்கள் தாங்கள் விரும்புகிற ஆட்சி வரவேண்டுமென நினைப்பது ..அல்லது தாம் விரும்புகிறவர் ஆட்சிவரவேண்டுமென்று எண்ணுவது அதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது கயமைத்தனம்.. .. #ஜனநாயகம்_மூச்சுதிணறுகிறதுDemocracy_Apnea… .. தோழர் ஆலஞ்சி

Sunday, March 12, 2017

தியான அரசியல்

பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு செய்யப்படும் தியானம் #சகாம தியானம்.இறையனுபூதிக்காக மட்டும் செய்யப்படும் தியானம் #நிஷ்காம தியானம். .. இப்போதெல்லாம் #சகாம_தியானம் தான் விரும்பி நடந்தேறுகிறது.. தியானம் செய்தால் மனம் தூய்மையாகுமென நம்ப படுவதை இங்கே தவறாக தன் ஆசையை நிறைவேற்ற கொள்ள செய்யாமல் மக்களை மூடர்களாக்க நடத்தப்படும் கீழ்தரமான நாடகமாக நடத்தப்படுகிறது.. .. தமிழர்களா எளிதில் முட்டாளாக்க முடியுமென நம்புகிறார்கள் பாருங்கள் அங்குதான் அவர்களின் செயல் அவர்களை காட்டிக்கொடுத்து விடுகிறது.. வீட்டுவாசலுக்கே வரகூடாதென்று தடைவிதித்திருந்தவர் நேரில் பார்க்கவே விரும்பதாவர் இறந்தவுடன் சமாதியில் அமர்ந்து தியானம் செய்யலாம் மரணம் எவ்வளவு உதவுகிறது பாருங்கள்.. .. எந்த தைரியத்தில் இவர்கள் இதை செய்கிறார்கள்.. பன்னீர் வந்து தியானமிருந்ததால் புத்தர் லெவலுக்கு கொண்டுபோனார்கள்.. பதவியில் இருந்தபோது வாய்மூடி இருந்துவிட்டு பதவி பறிக்கப்பட்டவுடன் உத்தமன் வேசம் கட்ட தியானம் தொடக்கம் குறித்ததே அதைப்போல .. ஒருவேளை இங்கே தன்னை விரட்டிய அத்தையை கண்மூடி தியானத்தில் #நிஷ்காமத்தில் காண்கிறாரோ.. இதுபோன்ற சுயநல கிருமிகளை இனம்கண்டு புறந்தள்ளவேண்டும்.. .. அதுசரி (குற்றவாளி) கிரிமினல் சமாதியில் தியானமிருந்து என்ன வரம் பெற போகிறார்கள் எப்படி கொள்ளையடிப்பது என்பதை கற்றுதர மௌனமாய் கேட்கிறார்களோ.. மனதை ஒருமைபடுத்த தியானம் என்றார்கள் இங்கே அரசியல் செய்ய தியானத்தை பயன்படுத்துகிறார்கள்.. மனஅமைதிக்கு என்றது போய் பதவிஆசைக்கு தியானம் என்றாகிவிட்டது.. மனதை ஓருமைப்படுத்த தியானம் என்பதுபோய் பேராசைக்கு என்றாகிவிட்டது.. .. #நல்லதொழில்_தியானம்.. .. தோழர் ஆலஞ்சி

Saturday, March 11, 2017

அதிகார யுத்தம்

தினகரனை அழைத்து வந்து பேட்டிகாண்கிறார்.. நவீன சங்கரரை பார்த்து வந்தபிறகு இதெல்லாம் நடக்கிறது.. சரி.. பேட்டி மிக அபத்தம்.. ஜெயலலிதா கட்சியைவிட்டு நீக்கிய பிறகும் ஜெயாவோடு தொடர்பில் இருந்தேன்.. இதை ஜெயா உயிரோடு இருந்தபோது மறைமுகமாக கூட தெரிவிக்கவில்லை. மருத்துமனையிலிருந்து வீடு திரும்பியதும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாமென்றிருந்தார்.. திவாகரனையும் நடராஜனையும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை..சித்தியும் சித்தப்பாவும்,27 ஆண்டுகள் உறவில் இல்லை.. அதிமுக சட்டவிதிப்படி இடைக்கால பொதுசெயலர் நியமிக்கபடலாம்.. .. இதிலிருந்து என்ன சொல்லவருகிறார்.. நான்தான் அதிமுக அதாவது சசிகலா அதிமுக நான்தான் குடும்பத்திலிருந்து பிறர் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்காதீர்கள் அவர்கள் யாரென்று தெரியாது கட்சிக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை..என்ற ரீதியில் பேட்டியளிக்கிறார்.. அடிக்கடி திமுகதான் எங்கள் பிரதான எதிரி என சொல்வதன் காரணம் .. அப்போதுதான் நாங்கள்தான் அதிமுக என மக்களை/ஊடகங்களை நம்பவைக்கதானே தவிர வேறில்லை.. .. திரு.துரைமுருகன் பேசியதிலும் காரியம் இல்லாமல் இல்லை.. இவரெல்லாம் யார் என்ற கேள்வி நிறைய பொருள் பொதிந்தது.. காரணம் நாளையே இவரது குடும்பசண்டையில் சசியால் தூக்கியெறியபடலாம்.. அதுமில்லாமல் தினகரனை அதிமுகவினருக்கே பிடிக்கவில்லை..எது அதிமுக என்று முடிவாகிவிட்டபிறகு பேசலாம் என்று நினைத்து பேசியிருக்கிறார் துரைமுருகன்.. ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புகிறார்.. அதன் மூலம் அரசியலில் பலம்பெற்றால் நேரடி ஆட்சி அதிகாரத்தை கையிலெடுக்கலாமென திட்டம் காரணம் நான்காண்டுகள் என்பது மிகப்பெரிய காலஅவகாசம்.. அதை கருத்தில்கொண்டுதான் காய்நகர்த்துவதாக தெரிகிறது எங்கே தன் குடும்பத்திலிருந்து போட்டிக்கு வந்துவிடுவாரிய்களோ என அஞ்சிதான் .. முன்னெச்சரிக்கையாக நடராஜனையும் திவாகரையும் கழட்டிவிட தீர்மானித்து பேசியிருக்கிறார்.. .. ஆர்.கே.நகர் மக்கள் கைகளில் தான் இருக்கிறது..இவரை போன்றவர்கள் (மாபியாக்களை) ஆரம்பத்தலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும்.. இல்லையெனில் இந்த விச செடி படர்ந்து நாட்டையே அழித்துவிடும்.. #எச்சரிக்கை. .. தோழர் ஆலஞ்சி

அரசியல் .. தேர்தல் முடிவுகள்

தேர்தல்.. உ.பி மாநிலத்தில் 15 வருடத்திற்கு பிறகு அறுதி பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைக்கிறது.. கோவாவிலும் பஞ்சாப்பிலும் காங்கிரஸ்.. உத்ரகாண்டடில் பாஜக.. தேர்தல் முடிவுகள் உணர்த்துவதென்ன.. இந்தியா முழுவதும் உ.பி தேர்தல் யாருக்கு என பேசப்பட்டது .. ஆரம்பம் முதலே சமாஜ்வாடிக்கு பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.காரணம் அப்பன் மகன் அதிகார சண்டை பெரியளவில் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின.. முலாயம் விட்டுகொடுக்க மறுத்ததும் பின் வேறு வழியின்றி சரண்டர் ஆனதும் மக்களிடம் வெறுப்பை தந்தது.. அதோடு ஆளும்கட்சிக்கு எதிரான பார்வை .. எப்பதுமே ruling party இருக்கும் எதிர்போக்கும் எஸ்பியை பள்ளத்தில் தள்ளியது.. மிக முக்கியமாக இஸ்லாமிய வாக்குகள் இந்த முறை எஸ்பி காங்கிரஸ்க்கு கிடைக்கவில்லை கணிசமான வாக்குகளை உவைஸி பிரித்துக்கொண்டு போனார்.. 23 விழுக்காடு முஸ்லிம்களை ஒருங்கிணைக்க நல்ல தலைமை இல்லாததும்.. பாஜக முற்றிலுமாக முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாதது.. போன்றவை எதிர்வினையை தந்ததால் அதன் பலன் பாஜக மொத்தமாக கொண்டுபோனது.. .. இது மோடிக்கு ஆதரவாக என்பதைவிட அகிலேஷ் முலாயமிற்கு எதிராக என கொள்ளுதலே சரி.. பஞ்சாப்பில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.. அதேபோல கோவாவிலும் இங்கெல்லாம்,ஆளும்கட்சி மீதான அதிருப்தி மிக தெளிவாக பதிவாகியிருக்கிறது.. இந்த தேர்தல் ஏற்கனவே மக்கள் தீர்மானித்த முடிவாகதான் இருக்கிறது.. பாஜகவிற்கான வாக்குகள் ஒருங்கிணைக்கப்படாதவரை பாசிசம் வளரும் என்பதை முடிவு காட்டுகிறது.. எஸ்.பி காங்கிரஸோடு உவைஸி கைகோர்த்திருந்தால் கொஞ்சம் மெச்சப்பட்டிருக்கிருக்கலாம்.. ஆனால் கட்சிக்குள் சண்டை அதுவும் அப்பன் மகனுக்கு என்கிற போது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. பிறமாநில முடிவுகளோடு ஒப்பிடும் போது தானே தேடிக்கொண்ட வினை இது என்பதை அகிலேஷ் உணர்ந்திருப்பார்.. முலாயமின் சொல்லை கேட்டிருக்கவேண்டும் நீண்ட அரசியல் அனுபவமுடையவரை புறக்கணித்தது முடிவில் தெரிகிறது. .. நடந்த தேர்தல் மற்றொரு சேதியை சொல்கிறது.. மாநிலத்தில் ஆளும்கட்சி தோற்றியிருக்கிறது.. மாநிலத்தில் நடைபெற்ற அரசின் மீதான வெறுப்பும் கோபமும் பிரதிபலித்திருக்கிறது.. மக்கள் கோபம் கொள்ளவேண்டும் அப்போதுதான் ஜனநாயகம் செம்மையாகும்.. சில காலம் ஜனநாயகத்தின் கருப்புபக்கங்கள் நம்மை பார்த்து சிரிக்கும் அதே மக்கள் திரும்பவும் தூக்கியடிப்பார்கள்.. அப்போது ஜனநாயகத்தின் வலிமை தெரியும்.. .. #வெற்றிபெற்றோருக்கு_வாழ்த்துகள்… .. தோழர் ஆலஞ்சி

Friday, March 10, 2017

தமிழக கோமாளிகள்..

நாடாளுமன்ற மேலவையில் தமிழக எம்பிகள்.. அதிமுக எம்பி மைத்ரேயன் ஜெயா மரணம்குறித்து பேச விஜிலா கடும் எதிர்ப்பை தெரிவித்தார் சபாநாயகர் குரியன் எச்சரிக்கை செய்தி.. மற்றொன்று செய்தி தமிழக மீனவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கனிமொழி மத்திய அரசு என்ன செய்கிறது .. என கேட்கிறார் கொடுக்கப்பட்ட மூன்று நிமிடம் போதாது என போராடுகிறார்.. .. இதுதான் தமிழகத்தின் நிலை.. யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து அனுப்பியதன் விளைவு.. நல்ல தலைவர்களை புறக்கணித்து காசிற்காக சில ஊடகங்களில் பொய்யுரையை நம்பி .. தகுதியில்லாத தரம் கெட்டவர்களை தேர்வு செய்து அதிகாரத்தை கொடுத்ததால் அவர்கள் தங்களுக்கு வேண்டியவரை மேலவைக்கு அனுப்பி தங்கள் புகழ்பாடவும் யாரும் எதிர்த்தால் கூச்சலிடவும் சபையை கேலிகூத்தாக்கிறார்கள்.. முன்பெல்லாம் தமிழக எம்பிகள் பேச ஆரம்பித்தால் நாடே கூர்ந்து கவனிக்கும்.. பிரதமர்வரை இருந்து கேட்பார்கள்.. ஆனால் இப்போதெல்லாம் பியூட்டிபுல் காஷ்மீர் பாடல் பாடும் தெரு பாடகரை தேர்வு செய்திருக்கிறோம்.. .. திமுகவை சிலகாலம் புறக்கணித்தின் விளைவு கண்கூடாக தெரிகிறது.. திமுக தலைமை மிக சமார்த்தியமாக பேசகூடியவர்களை பிரச்சனை சரியான முறையில் கையாளும் திறமையாளர்களை.. தங்கள் வாததிறமையால் நாடாளுமன்றத்தை திணறடித்தவர்களை..நாட்டையே திரும்ப பார்க்கவைத்தவர்களை அனுப்பி தமிழகத்தின் மானத்தை காத்தது.. இரா.செழியன் ..நாவலர் தொடங்கி கனிமொழி ஆர்.எஸ்.பாரதி வரை .. திருச்சி சிவா போன்றவர்களால் நாடாளுமன்றம் பெருமைபடுகிறது.. ஆனால் நவநீதம் போன்றவர்களால் தமிழர்கள் தலைகுனிகிறார்கள்.. .. எதை பேசவேண்டும் நாடாளுமன்றம் போன்ற கண்ணியமிக்க ,பெருமைக்குரிய சபையில் எவ்வளவு முக்கியமான பிரச்சனைகள் தமிழகத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது.. எப்படி கொடுக்கப்படும் சிறியகால அளவில் கவனஈர்ப்பு செய்து மத்திய அரசிடம் பதிலை பெறவேண்டுமென தெரியாமல் ..சொந்த பிரச்சனையை உட்கட்சி பூசலை கையிலெடுத்து நேரத்தை விரயம் செய்கிறார்கள்.. இது வரை ஒரு அதிமுக உறுப்பினர் கூட சரியாக திறமையாக பேசியதாகவோ வாதிட்டதாகவோ தெரியவில்லை.. மக்களின் பிரச்சனையை சபைக்கு அறிவித்து கவனஈர்ப்பு செய்ததாகவோ... எந்தவொரு தமிழக நலன்கள் மீதான விவாதத்தில் தங்கள் பங்கை சிறப்பாக செய்ததாகவோ தெரியவில்லை மாறாக திமுக எந்த பிரச்சனை பற்றி பேசினால் அதற்கெதிராக பேசி.. திசைதிருப்பி தமிழகநலன்களை கெடுத்தே வந்திருக்கிறார்கள்.. ஜெயலலிதாவிற்காக பேச தெரிகிறது சண்டை போடதெரிகிறது.. ஆனால் மக்களின் துன்பங்களை துடைக்க வழிவகை செய்ய முடியவில்லை.. .. காரணம் நாம் தான்.. தகுதியில்லாதவர்கள் அரிதாரம் பூசி மயக்கியவர்களை நம்பி போனோம்.. சாயம் வெளுத்தால் நிஜம் தெரியுமென அறியாமல்.. நேரம் ஆக ஆக சாயம் போனது.. நிஜம் நம்மை சுட்டெரிக்கிறது.. .. #சாயம்_வெளுத்தால்_மோகம்போகும்…… .. தோழர் ஆலஞ்சி

Thursday, March 9, 2017

ஆர்.கே.நகர்

ஆர்.கே நகர்.. இடைத்தேர்தல்.. யார்யாரெல்லாம் களமிறங்க போகிறார்கள் என்பதுகூட இன்னும் முடிவாகாத நிலையில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் யார் வெற்றிபெற கூடாது என்பதுதான்.. .. அதிமுக சசிகலாதரப்பு இங்கே நிறைய பணத்தோடும் அதிகாரபலத்தோடும் போட்டியிடும்.. காரணம் அவர்களுக்கு அதிமுக யாரிடம் என்ற கேள்விக்கு மக்கள் தரும் அங்கீகாரமாக இதை கணக்காக்கலாம்.. பன்னீர் தரப்பு தன் நிலையை கொஞ்சமேனும் மெச்சப்படுத்த இதை பயன்படுத்த முயற்சிக்கும்.. தீபாவை இங்கே பேசவேண்டியதில்லை ஆயிரம் வாக்கு வாங்கினாலே பெரிய விசயம் தேர்தல் பணிசெய்ய ஆட்கள் கிடைப்பார்களா என்று தெரியவில்லை.. சசி அதிமுக எங்களின் பிரதான எதிரி திமுகதான் என அடிக்கடி சொல்லி வருவதற்கு காரணம் நாங்கள் தான் அதிமுக .. பன்னீரோ தீபாவோ அல்ல என்று மக்களுக்கு புரிய வைப்பதற்காக என்று நினைக்கிறேன்.. .. திமுக யாரை நிறுத்தினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் களப்பணி ஆற்ற அக்கட்சியினர் தயாராக இருப்பார்கள் ஜனநாயக முறைப்படி விருப்பமனு ..நேர்காணல் எல்லாம் முடிந்து தெரிவுசெய்யபடுவார்.. அதிமுகவில் பணபலம் பொருந்தியவரை நிறுத்தலாம்.. மற்றவர்கள் பாடு கொஞ்சம் சிரமம் தான். இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனபோக்கு இந்த முறை மாற்றியமைக்கப்படலாம்.. வாக்குகள் சிதறுவதை இடைதேர்தலில் கணக்கில் கொள்ளமுடியாது .. காரணம் பிரதானமாக பணம் பேசும் ₹5000 வரை வாக்கிற்கு செலவு செய்ய இருப்பதாக செய்திகள் கசிகின்றன.. காரணம் கட்சியில் ஏற்பட்டிற்கும் பிளவில் மக்கள் யாரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் தொண்டர்கள் வருவார்கள்.. அதைவிட சசிகலா மீதான விமர்சனங்கள் ஜெயா மரணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க உதவும்.. அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்வார்கள்.. மக்களின் ஆசையை தூண்டிவிடுவார்கள்.. தோற்றால் எதிர்காலம் கேள்விகுறியாகுமென அறியாதவர்கள் அல்ல.. எல்லாவகையிலும் வன்முறையை கையிலெடுத்தாவது வெல்ல முயற்சிப்பார்களி.. காரணம் தங்கள் முன் நிற்கும் பிரச்சனைகளை சந்திக்க கட்சியும் ஆட்சியும் வெற்றியும் அவசியம்.. ஆனால் எந்தளவிற்கு முடியுமென தெரியவில்லை.. .. எது எப்படியோ திமுகவோடு இனி வரும்காலங்களில் மோதபோவதுயார் என்பதை இந்த தேர்தல் தெரிந்து விடும்.. பாஜக மநகூவெல்லாம் ஆளும்கட்சிக்கு பூத் ஏஜெண்ட் (வாக்குசாவடிமுகவர்) எண்ணிக்கையை உயர்த்த உதவுவார்களே தவிர.. மானம் மரியாதை.. யார் வரகூடாது என்று சிந்திப்பதெல்லாம் அவர்கள் அகராதியிலேயே இல்லை.. ஏனெனில் தண்டிக்கப்பட்ட கிரிமினலையே நல்லவரென்கிற கொள்கை உடையவர்கள் கிரிமினலை ஆதரிக்கவர்கள்.. .. நேரடி போட்டி யாருக்கென்பது சிலதினங்களில் முடிவாகிவிடும்.. ஆர்கே நகர் மக்கள் முடிவெடுக்கட்டும்.. #பணமா_கௌரவமா.. Money or honor.. .. தோழர் ஆலஞ்சி

Wednesday, March 8, 2017

செத்தவீட்டில்_கூத்துக்கச்சேரி..

#வீதிக்குவரும்.. ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டார்கள்.. ஓபிஎஸ்ஸும் விஜய் பாஸ்கரும்.. விசாரணை வந்தால் நீதான் முதலில் ஜெயிலுக்கு போவாய் என்கிற ரீதியில்.. உண்மையில் இவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கிறது.. நான்கு மணிக்கே ஜெயலலிதா இறந்ததாக செய்தி வந்ததாகவும் உடனே மருத்துவமனை சென்றேன் விஜய்பாஸ்கர் இல்லையென சொன்னதாக பன்னீர் சொல்கிறார்.. இருவருமே குற்றம் செய்திருக்கிறார்கள்.. மாநிலத்தின் மூத்த அமைச்சர் பன்னீர் முதல்வருக்கு என்ன நடந்தது என கேட்கும் உரிமை இருக்கிறது ஆனால் எதற்காக இவ்வளவு காலம் அதை மறைத்து வைத்து இன்று ஏன் பேசவேண்டும்.. இன்னும் இவர்கள் வாய் திறந்தால் யாரெல்லாம் உள்ளே போவார்கள்.. யார் கொன்றார்கள் அல்லது இயற்கையான மரணமா.. என்பதெல்லாம் அறியலாம்.. .. திடீரென்று தா.பாண்டியன் ஆஜராகி... சிகிச்சை அளித்த டாக்டருக்கு நன்றி சொல்வார்கள் என்கிறார்.. பி.எச். பாண்டியனின் சில கேள்விகள் சந்தேகத்தை தருகிறது.. ஜெயலலிதாவிற்கு 4 மணிநேரம் எம்பாயிங் செய்தார்கள் ஆனால் அதை 15 நிமிடம் செய்ததாக சொல்கிறார்கள் .. கருப்பு பூனைப்படை அவ்வளவு சீக்கிரம் விலக்கிக்கொள்ள முடியாது ஆனால் ஜெயலலிதா மருத்துமனையில் இருந்த 75 நாட்கள் கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் இல்லை .. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருகிறார்கள்.. .. பன்னீர் கோஷ்டி பகிரங்கமாகவே ஜெயாவை சசிகலாதான் கொன்றிருக்கவேண்டுமென்கிற ரீதியில் பேசுகிறார்கள்.. இன்னும் கொஞ்சம் நாள் போனால் நேரடியாகவே குற்றம் சாட்டலாம்.. சுகாதரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் என்னோடு எம்ய்ஸ் மருத்துவ அறிக்கைப்பற்றி விவாதித்ததாக சொல்கிறார்..என்னிடம் விவாதிக்கவோ அறிக்கைப்பற்றி எதுவும் சொல்லவில்லை அவர் அந்த அறிக்கையை திரும்ப பெறாவிட்டால் வழக்கு தொடர்வேன் என்கிறார்.. .. உண்மையில் பன்னீர் விசாரணை கேட்டு வழக்கு தொடரலாம்..யாரேனும் ஒருவர் எந்த தரப்பில் இருந்தாவது சசிகலா தரப்போ அல்லது பன்னீர்தரப்போ வழக்கு பதிவு செய்யலாம்.. அப்போதுதான் உண்மை வெளிவரும்.. இவர்கள் ஆடும் நாடகம் முடிவுக்கு வரும்.. தினம் தினம் மாறிமாறி ஒருவர் மற்றவரை கைக்காட்டி நடத்து கூத்து முற்று பெறும்.. .. இல்லையெனில் இவர்கள் ஆதாயம் தேட ஜெயலலிதா மரணத்தை கொண்டு களிக்கிறார்கள்.. என்றே மக்கள் புரிந்து கொள்வார்கள்.. .. #செத்தவீட்டில்_கூத்துக்கச்சேரி.... .. தோழர் ஆலஞ்சி

Tuesday, March 7, 2017

உண்ணாவிரத நாடகம்

ஜெயா மரணத்திற்கு நீதிகேட்டு தமிழகம் முழுவதும் மற்றும் மும்பை சிங்கப்பூர் உள்ளிட்ட முப்பது இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறும்.. மா.பா. பாண்டிராஜன் உண்மையில் இவர்களுக்கு அக்கறை இருக்கிறதா என சந்தேகம் தான் வருகிறது.. அதிகாரத்தில் இருந்தவரை வாய் திறக்காதவர்கள் .. கீழிறக்கப்பட்டவுடன் ஜெயா மரணத்தில் சந்தேகம் கொள்வார்களாம்.. நாளை உண்ணாவிரதமிருப்பவர்கள் தான் அப்போலோவில் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் என்றவர்கள் எங்களோடு விவாதித்தார் காவிரி பிரச்சனை முதல் எல்லாவற்றிக்கும் ஆலோசனை தந்தாரென பொய் சொல்லி தங்களையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றியவர்கள்.. கொலைக்காரர்களை விட இவர்கள் மோசமானவர்கள்.. .. தொடர்ந்து பன்னீரை அதிகாரத்தில் இருக்க வைத்திருந்தால் இப்பவும் கைக்கட்டி வாய்பொத்தி சசிகும்பலுக்கு சேவகம் செய்துக்கொண்டிருப்பார்.. திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஜெயலலிதா மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் புகைப்படத்தை வெளியிடுங்கள் மக்கள் செய்தி தொடர்புத்துறை மூலம் வெளியிட்டிருந்தால் எல்லா சந்தேகங்களும் தீர்ந்திருக்குமே ஆனால் அப்போது திமுக மீது பாய்ந்தவர்கள் இன்று ..தெருவில் வந்து போராடவருகிறார்கள்.. உள் சண்டையில் ஆதாயம் தேடவே தவிர உண்மையான அக்கறை இல்லை.. இருந்திருந்தால் பன்னீர் முதல்வராக இருந்தபோதே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம்... .. காலம் கடந்தேனும் முன்னாள் முதல்வரின் மரணத்தில் எழும் சந்தேகங்களை கண்டறிய விரதம் இருக்கிறார்கள்.. ஏதோ ஒரு வழியில் அவர்கள் மனம் உறுத்தியிருக்கும் கடைசி வரை சிந்திக்க விடாமலேயே அடிமைபோல நடத்திவந்தவரின் இறுதி நாட்கள் மிகவும் பரிதாபகரமாக இருந்திருக்கிறது..இறந்தபிறகு கடுமையாக விமர்சிக்கபடுகிறவர்கள் பட்டியலில் ஜெயலலிதா சேர்ந்திருக்கிறார் என்பதும் உண்மையான விசுவாசியை / தொண்டனை, நம்பிக்கைக்குரியவரை கொண்டிருக்கவில்லை என்பதும் .. நல்ல நட்பென்று ஒருவரை கூட வாழ்நாளில் அவர் சந்தித்ததே இல்லை என்பதும் மிக கொடூரமானது.. #நல்ல_நேர்மையான_எதிரியை அவரால் காணமுடிந்தது ஆனால் நல்ல நண்பரை, நம்பிக்கையான ஊழியரை நல்ல வழிகாட்டியை ஜெயலலிதாவால் இனம்காண முடியவில்லை என்பது பெரும்சோகம்.. .. மரணம் தரும் சந்தேகங்கள் வரலாற்று நெடுக உண்டு.. ஆனால் அத்தனை பேரும் ஒரு சிலரையாவது நம்பிக்கையானவராக பெற்றியிருப்பார்கள்..இங்கே எல்லோருமே பதவிக்காக கூழைகும்பிடு போட்டும் பணத்திற்காக திட்டம் தீட்டி காய்நகர்த்தியும் ஏமாற்றியிருக்கிறார்கள்.. அப்படி ஏமாற்றிய ஒரு கும்பல் தான் நாளை உண்ணாவிரமிருக்கிறது.. .. #விதைத்தெல்லாம்_வினையாகிப்போனது…… தோழர் ஆலஞ்சி

எழுபதாண்டில் ஒர் இயக்கம்

#IUML இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. எழுபதாவது ஆண்டில்.. அகில இந்திய முஸ்லீம் லீக்காக ஒன்றிணைந்த இந்தியாவில் நவாப் சலீம் முல்லாகான் 1902 ல் தொடங்கினார்.. இந்திய பாக் பிரிவினைக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் "அகில" என்பது நீக்கப்பட்டு 1948 மார்ச்10 ல் இந்திய ஒன்றிய இஸ்லாமிய கூட்டிணைவாக IUML தொடங்கப்பட்டது .. அதன் தலைவராக கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் வந்தார்.. அதை தொடர்ந்து பனாத்வாலா சுலைமான்சேட் .. தொடங்கி இன்று பேராசிரியர் எழுபதாவதாண்டில் தலைமை ஏற்றியிருக்கிறார்.. .. இந்தியா விடுதலைக்கு பிறகு இதன் தலைமை பொறுப்பை பனாத்வாலா தவிர்த்து திராவிடர்களே ஏற்றுவந்திருக்கிறார்கள்.. காயிதெ மில்லத் ஷிகாப் தங்ஙள், இ.அகமது இப்போது பேராசிரியர்.. வடமாநில முஸ்லீம்கள் அதிகளவில் காங்கிரஸ் பேரியக்கத்தோடு ஐக்கியமாகிவிட்டதால் அல்லது பின்துணைத்ததால் பெரியளவில் சமூக மக்களிடம் சென்று சேரவில்லை.. அதிகார போட்டியும் அகந்தை மனப்பான்மையும் தெற்கிந்தியாவில் பல பிரிவுகளாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்தி கொள்கிற அமைப்புகளாக தங்களே சரி என்கிற ரீதியில் பிரிந்து போய் செயலிழந்த சமூகமாக இஸ்லாமிய சமூகம் இருந்து வருகிறது.. மலபாரில் மட்டும் ஒன்றுமையுணர்வால் அதிகாரத்தை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள்.. தமிழகம் போன்ற மாநிலங்களில் கேட்கவே வேண்டாம்.. மொத்தம் எத்தனை இஸ்லாமிய அமைப்புகள் என்பதை எண்ண விரல்கள் போதாது.. .. நீண்ட இடைவெளிக்கு பிறகு தேசிய தவைவராக ஒரு தமிழர் வந்திருக்கிறார்.. மிகவும் மென்மையான போக்கும் எளிமையுமே இவரது முகவரி.. நெல்லையில் எழுபதாவது ஆண்டு விழா கொண்டாடுகிறார்கள் வாழ்த்துகள்.. எங்களூர் சேர்ந்தவர் மாவட்ட பொறுப்புகளிலும் மாநில பொறுப்புகளிலும் இருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி.. எனது நண்பரும் சிறந்த சமூக ஆர்வலரும் toshiba elevator மத்திய கிழக்கின் நிர்வாக இயக்கனரும் சிறந்தநிர்வாகியும் நல்ல எழுத்தாளருமானM J இக்பால் Jamal Mohamed Mohamed Iqbal அவர்கள் ஷிகாப் தங்ஙள் விருதை பெறுகிறார்.. பெரும் மகிழ்ச்சி.. .. இஸ்லாமிய சமூகம் பிரிந்து கிடப்பது காலபோக்கில் கிடைக்கவேண்டிய அங்கீகாரத்திற்கு தடையாக இருப்பதை அறிந்து ஒரு கொடி நிழலில் சேரவேண்டும்.. இது குறிப்பாக முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வை பெற வழிவகை செய்யும். இன்னமும் தடுக்கப்பட்டும் வரும் உரிமைகளை கூட போராடி பெற முடியும்.. நூற்றாண்டு இயக்கத்தில்.. சுதந்திர இந்தியாவின் எழுபது வருட பழமைவாய்ந்த இயக்கத்தின் கீழ் பிற இஸ்லாமிய சமூக அமைப்புகள் செயல்பட்டால் உன்னதநிலையை அடையலாம்.. .. எழுபதாண்டாய்.. சமூக நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழும் IUML க்கு வாழ்த்துகள்.. .. தோழர் ஆலஞ்சி...

Sunday, March 5, 2017

அரசின் அவலட்சணம்

தமிழகத்திற்கு மட்டும் ஏன்இந்த விலை உயர்வு.. வாட் வரி மதிப்புகூட்டிவரி 27% இருந்து 34% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திக்கிறது.. முன்னறுப்பின்றி மக்கள் மீதான வரி விதிப்பதென்பது சர்வாதிகாரம்.. நிலையற்ற அரசு இதுபோன்ற முடிவுகளை எடுக்க தார்மீக உரிமையில்லை.. என்ன காரணம்.. தமிழக அரசு பெரும் நிதிநெருக்கடியில் இருப்பதாகவும் பென்சன்தாரர்களுக்கு சம்பளம் வழங்ககூட நிதி இல்லை என்கிறார்கள்..ஐந்துலட்சம் கோடி கடன்சுமை இந்த ஆண்டு தவணை மட்டும் 17 ஆயிரம் கோடி கட்டவேண்டியிருக்கிறது ஆனால் கையில் காசில்லை.. இதே நிலை நீடித்தால் அரசு திவாலாகிவிடும்.. மிக மோசமான நிதி சுமையை அதிமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செய்திருக்கிறது.. ஒரு பக்கம் நிதிச்சுமை மறுபக்கம் நிர்வாக சீர்கேடு தன்மீது வழக்கால் சரியாக செயல்படமுடியாமை ஜெயலலிதா அரசின் லட்சணம் இதுதான்.. .. மிக மோசமான அரசை தமிழகம் இதுவரை கண்டதில்லை .. அரசு நலதிட்டங்களுக்கு பணம் இல்லாதது அறிந்தும் மீண்டும் மீண்டும் நலத்திட்டங்களை தொடர்ந்து அறிவித்து மக்களை ஒருவித எதிர்ப்பார்ப்பில் இருக்கவைத்ததும்.. அதையே மூலதனமாக்கி தேர்தலில் வெற்றி பெற்றதும்தான் நடந்தது .. காசுக்கு வாக்களிக்கும் கயமை .. நம்மிடையே குற்றவுணர்வே இல்லாமல் எப்போது வந்ததோ அன்றே நேர்மையான அரசியல் /அரசு என்பது இல்லாமல் போனது.. மிகவும் ஏழைகளை குறிவைத்து பணவிநியோகம் என்பது போய் நடுத்தர மக்களையும் ஏன் வசதிப்படைத்தோரையும் விலைக்கு வாங்கிட முடியுமென்கிற நிலையை இங்கே உருவாக்கி இருக்கிறார்கள்.. பணத்தை செலவு செய்தவன் அதை திரும்ப எடுக்க எதையும் செய்ய துணிகிறான்.. எம்எல்ஏக்கள் விலைபோனார்கள் என கூக்குரலிடும் நாம்தான் வாக்குகளை விற்று இருக்கிறோம்.. பின் எப்படி நல்ல அரசு வரும் நல்லவர்கள் வருவார்கள்.. .. நிர்வாக திறமையை பறைசாற்றியவர்களை தொலைநோக்கோடு திட்டங்களை வகுத்தவர்களை எதையும் அளவோடு சலுகைகளை வழங்கி கீழ்த்தட்டில் இருப்போரை உயர்த்திவிட நினைத்து அதை செயலிலும் நிரூபித்தவர்களை மறந்து.. நமக்கு தொடர்ந்து இன்னலை தந்தாலும் அரசு நிர்வாகத்தை அலங்கோலமாக்கினாலும் நமக்கென்ன என்றிருந்ததால்தான்.. இன்றைக்கு அறிவிலிகளின் கைகளில் அரசாங்கம் மக்கள் அல்லல்படுகிறார்கள்.. இன்னும் நிறைய வரும் அரசின் கையாலாகாத செயல்கள்.. அமைதியாய் கடந்து போகவேண்டியதுதான்.. .. அரசியல் கோமாளிகள் கையில் நிர்வாகம்.. #திவால் .. தோழர் ஆலஞ்சி

Friday, March 3, 2017

பொன்மனதளபதி

#பொன்மனதளபதி.. நெடுவாசலில் தளபதியார்.. போராட்டத்தை அரசியலாக்கவிரும்பவில்லை ஆம் அரசியல் ஆதாயம் தேடவேண்டிய அவசியம் திமுகவிற்கு எப்போதும் இருந்ததில்லை என தெளிவாக சொன்னார் ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவந்தது என்கிறாரே வைகோ என்றதற்கு மிக தெளிவான பதிலை தந்திருக்கிறார்.. மீத்தேன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே mou போட்டோம் அதுவும் அங்குள்ள மக்களிடம் ஒப்புதல் வேண்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு வர கூடாது விவசாயிகள் பாதிக்கப்படகூடாது.. என்று தெளிவாக விளக்கினார்.. கூடவே என்மீது வைகோவிற்கு தனிபாசம் உண்டு அரசியலில் துறவறம் சென்றிருந்தார் என நினைத்தோம் என்னைப்பற்றி பேசி அரசியலில் பிழைத்துக்கொண்டிருக்கிறார்.. அண்ணா சொன்னதைப்போல வாழ்க வசவாளர்...என்றார்.. .. கனிந்திருக்கிறார்.. பொன்மனம் மிக தெளிவான அரசியல் நாகரீகமான சொல்லாடல்.. யாரை எங்கே வைக்கவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.. வைகோ போன்ற நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகளுக்கு தெளிவான விளக்கத்தை ஆதாராத்தோடு விளக்கியிருக்கிறார்.. அரைகுறை அறிவோடு எதையும் அணுகுவது ஆரம்பம் முதலே வைகோவிற்கு உண்டு அவசரகதியில் செயல்படுவோரிடம் காணப்படும் செயல் இது தெளிவின்மையும் எரிச்சலும் கையாலாகாததனமும் அடுத்தவரின் வளர்ச்சியில் ஏற்படும் பொறாமையும் வைகோவை சீரழித்திருக்கிறது.. .. எந்தவொரு போராட்டமும் அரசியல்படுத்தபடவேண்டும் அப்போதுதான் அது வெகுஜனங்களை சென்றடையும் வெற்றியடையும் அரசியல் செய்கிறார் என சிலர் பேசலாம் அரசியல் கட்சிகள் அதைதான் செய்யும் செய்யவேண்டும்.. இதுவரை நிறைய பேர் வந்தார்கள் ஆனால் பிரதான எதிர்க்கட்சி களத்திற்கு வந்தபிறகுதான் அதன் potency ஆற்றல்/வல்லமை பெறும் அரசிற்கு அழுத்தத்தை தரும் எல்லாவற்றையும் விமர்சிப்பதென்பது சரியான அரசியல் அல்ல மைய அரசு தொடர்ந்து தமிழகவிரோதபோக்கை செய்துக்கொண்டிருக்கிறது சேதுசமுத்திரம் நுழைவுதேர்வு மீனவர் பிரச்சனை ஜல்லிக்கட்டு...நெடுவாசல் .. வெகுமக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் அரசு மக்கள்அரசாகாது.. .. தளபதி செயலாற்றும் விதம் சிலருக்கு எரிச்சல் தருகிறது சிலகட்சி தலைவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.. ஆளும் அரசை விமர்சிப்பதை விடுத்து எதிர்க்கட்சி தலைவரை விமர்சிக்கிறார்கள் இதிலிருந்தே திமுகவும் தளபதியும் சரியானபாதையில் செயல்படுவது வெளிச்சமாகிறது.. மக்கள் செல்வாக்கில்லாதவர்கள் தளபதியை எதிர்ப்பதன்மூலம் தங்களை நிலைநிறுத்தக்கொள்ள வேண்டியிருக்கிறது.. பாவம் பிழைத்துபோகட்டும்.. #தளபதி_மின்னுகிறார்.. .. #பொன்மனதளபதி... தோழர் ஆலஞ்சி

Thursday, March 2, 2017

மறைக்கப்படும் உண்மைகள்

தினம் தினம் ஒருகூத்து.. ஒவ்வொருவரும் ஒருகதை சொல்கிறார்கள் கட்டைவிரலை தூக்கி காண்பித்தார் என்கிறார் செங்கோட்டையன்.. எங்களோடு ஆலோசித்தார் என்ன சீனிவாசன் எப்படியிருக்கீங்க என கேட்டாரென திண்டுக்கல் பொய்யன்..நாடி துடிப்பு குறைய குறைய கதறி அழுதார் சசிகலா ரா.பாலாஜி.. இவர்தான் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் 50 திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு வாக்களித்திருப்பார்கள் என்றவர்.. பதவி இருந்தவரை அமைதியாக இருந்துவிட்டு போனபின் மரணத்தில் சந்தேகம் என்கிறார் பன்னீர்.. பதவிக்காகவோ பதவி பறிபோய்விடுமென்றோ இவர்கள் வாய்க்கு வந்ததை கதைக்கிறார்கள்.. பாவம் உண்மைதான் சொல்லமறந்தார்கள்.. .. ஒருமரணம் நிறைய சேதிகளை மக்களுக்கு சொல்லி புரியவைத்திருக்கிறது இதுவரை தெய்வம் என நினைத்து கொண்டாடியவர் தெய்வமல்ல மக்களின் பணத்தை கொள்ளையடித்த திருடி .. கூட்டுக்கொள்ளையடித்திருக்கிறார்.. என புரியவைத்திருக்கிறது.. சசிகலா குடும்பம் காசுக்காக எதையும் செய்யுமென தெரிந்திருக்கிறது.. அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பதவிக்காக எந்தநிலைக்கும் தன்னை தாழ்த்திக்கொள்வார்கள்.. மக்கள் நலமென்று எதுமில்லை நாலுகாசு பார்க்கமுடியுமா அதுவும் விரைந்து முடியுமா என பார்க்கிற கூட்டமிது என மக்கள் தெளிவாக உணர்த்திருக்கிறது ஜெயாவின் மரணம்.. .. இருக்கிற காலத்திற்குள் சம்பாதித்துவிட வேண்டும் இனி எப்படியிருந்தாலும் முடியாது என்பதை உணர்ந்ததால் தான் அடுக்கடுக்காய் பொய்களை அவிழ்த்துவிடுகிறார்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிப்பதறியாமல் பிதற்றுகிறார்கள்.. ஜெ.வின் மரணம் நிறைய சந்தேகங்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டபோதே #கலைஞர் பெருமகன் ஏன் புகைப்படம் வெளியிடவில்லை என கேட்டார் அப்போது துள்ளிகுதித்தவர்கள் இன்று சந்தேகம் இருப்பதாக சொல்வதுதான் வேடிக்கை.. இன்னமும் வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் சவப்பெட்டியில் ஆணியடித்து புதைத்திருக்கிறார்கள்.. நிறைய கேள்விகளுக்கான விடைகளை அப்போலோநிர்வாகமோ, மருத்துவர்களோ கூட இருந்தவர்களோ மறைக்க முற்பட்டிருப்பது அவர்களின் வாய்மொழியே சாட்சியம் கூறுகிறது.. .. வெளிவரும் நிச்சயம் அப்போது புரியும் நிழலாய் வந்து கொன்றது .. யாரென்று.. அதுவரை இந்த கிறுக்கர்களின் கேலிகூத்தை கவனித்துக்கொண்டிருப்போம்.. அவர்களே உண்மையை ஒருநாள் உளறிக்கொட்டிவிடுவார்கள்.. .. #சாயம்வெளுக்கும்_ஒருநாள்.. தோழர் ஆலஞ்சி...

Wednesday, March 1, 2017

புத்தங்களே அறிவின் நுழைவாயில்

இன்று பெரும் மகிழ்ச்சியில்.. . தளபதி பிறந்தநாளுக்கு புத்தகங்கள் குவிந்திருக்கின்றன.. வழக்கமான பிறந்தநாள் விழாக்களிலிருந்து மாறுபட்ட விழா.. புத்தங்களை பரிசாக தந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.. முன்பெல்லாம் திருமண விழாக்களுக்கு செல்லும் போது புத்தங்களை பரிசளித்திருக்கிறேன்.. என்னை சின்ன சிரிப்போடு சிலர் பார்த்திருக்கிறார்கள்.. உண்மையில் மிகச்சிறந்த பரிசு புத்தகங்கள்.. .. அறிவை சேமித்துக்கொள்ள உதவும் அற்புதம்.. நிறைய விடயங்கள் நமக்கு தெரியாததை அறிந்துக்கொள்ள உதவும்.. எந்தவகையானதாக இருந்தாலும் எதைப்பற்றி எழுதியிருந்தாலும் நம் கொள்கையிலிருந்து ..கோட்பாட்டிலிருந்து மாறுப்பட்டிருந்தாலும்.. மூடம் பேசினாலும் காமம் கவிதை கலவி,இல்லறம் ..விஞ்ஞானம் நளபாதம் எதுவாக இருந்தாலும்.. மடமையை போதிப்பதாக இருந்தாலும்,மதம் புராணம் வேதம் சடங்கு கேலி கூத்து என விளங்காதவை , எதற்கும் உதவாததாக இருந்தாலும்.. கலை பண்பாடு கலாச்சாரம் மொழி இனம் எதுவாக இருந்தாலும் படியுங்கள்.. சொல்லப்போனால் எழுதப்படாத வெள்ளை காதிதத்தை தவிர எல்லாவற்றையும் படியுங்கள்.. தெரிந்துகொள்வது எல்லாம் அறிவு அதில் உங்கள் அறிவு ஏற்பதை ஏற்பதுவே சிறந்தது.. பகுத்தாயும் திறன் மனிதனுக்கு மட்டுமே உண்டு.. எது சரி.. எது பொய் எது நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது..எதனால் எந்த பிரயோசனமும் இல்லை என பகுத்தாய்ந்து அதன்படி நடப்போம்.. .. அறிந்து கொள்ளுதல் அறிவு அதை ஆய்ந்தறிந்து ஏற்றல் பகுத்தறிவு.. சில குப்பைகள் கூட நம் மனதில் ஆழ சென்று விதைதூவும்.. ஆனால் அறிவேற்பதை மட்டுமே செழிக்கவிட வேண்டும்.. .. இந்த பிறந்தநாள் தளபதியாருக்கு மிகச்சிறந்த பரிசை தந்திருக்கிறது.. புத்தகங்களாய் அறிவு மலையாய் குவிந்து இருக்கிறது.. நிச்சயம் இது பயனுள்ளதாக்க அருகிலுள்ள நூலகங்களில் சேர்க்கப்படும்.. மக்களின் அறிவை தீர்க்கும் அரும்மருந்தாகும்.. பூமாலைகளும் பொன்னாடைகளும் பதாகைகளும் தராத மகிழ்ச்சியை இந்த நூல்கள் தரும்.. .. #புத்தகங்களே_அறிவின்_நுழைவாயில்…… .. #பெருவாழ்வு_வாழ்க_தளபதியாரே…… .. தோழர் ஆலஞ்சி