Saturday, December 31, 2016

குப்பை..

இனி.. குப்பையில்.. அவ்வளவு சீக்கிரம் கணக்கு தீர்த்தாயிற்று.. பாவம் தோன்றவில்லை மாறாக மிகப்பெரிய பாடத்தை தந்திருக்கிறது.. எதுவரை எல்லையென்பதையும் யாராகினும் கோட்டினுள் நிறுத்தப்பட்டிருக்கவேண்டுமென்பதை உணர்த்திய தருணம் இது.. அதிகார மோகம் ஆளையே கொல்லும்... அறுத்து குப்பையில் வீசுமென தெளிவாக உணரும் வகையில் செய்தி சொல்லியிருக்கிறது.. .. செல்வி ஜெயலலிதா அரசியலுக்கு வந்தவுடனே சட்டென்று ஒரு இரவில் பதவிகளை அடைந்துவிடவில்லை.. ஆணாதிக்க அரசியலில் பெண் எழுந்து நிற்பதே கடினமாக சூழலில் ஆடியது அதுவும் சலங்கை கட்டி ஆட எவ்வளவு சிரமமிருக்கும் .. அவரின் கொள்கையோடு சற்றும் உடன்படாமல் போனாலும் அவரின் அரசியல் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளாமல் இல்லை ஆனால் இன்றைய அதிமுக பொதுசெயலரின் அரசியல் பிரவேசத்தை செல்வி ஜெயலலிதாவோடு ஒப்பிடவே முடியாது.. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகியை பெரும்பாலானோர் ஆதரித்தபோது அவர்களின் நோக்கம் அதிகாரமாக மட்டுமே இருந்தது அப்போது தன் ஆதரவாளர்களிடம் பேசிய ஜெயலலிதா ஒன்றை சொன்னார்.. ஆட்சியை விட நமக்கு கட்சி முக்கியம் கட்சியை கைப்பற்றினால் போதும் ஆட்சி தானாக மக்கள் தருவார்கள் என்று சொன்னார்.. ஜெயலலிதா படிப்படியாக அதிமுகவில் வளர்ச்சியை கண்டவர்.. ஆனால் திருமதி சசிகலா திடீரென ஒரே நாளில் கட்சியின் பதவிக்கு வந்திருக்கிறார்..அப்படிதான் தோன்றும் ஆனால் மிக சாதூர்யமாக தீட்டப்பட்ட நீண்டகால திட்டம் .. மெல்ல கொல்லும் விசம் போல முழுவதுமாக செயலிழக்க செய்து ஒட்டுமொத்த ஆக்ரமிப்பை செய்திருக்கிறார்.. அதனால் தான் யாருக்கும் சசியா என ஆச்சர்யம் வரவில்லை.. மெல்ல மெல்ல படிப்படியாக உங்கள் அறிவில் சேர்ந்திருக்கிறது.. அதனால் தான் இது புது செய்தியாக தெரியவில்லை திரு.ஸ்டாலின் கூட அப்படியா என்றார் அலட்டிக்கொள்ளாமல் .. ஏற்கனவே அறிந்திருந்ததால்.. .. வரும் காலங்களில் குப்பையில் வீசப்படும் வேண்டாத பொருளாவார் ஜெயா.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment