Wednesday, December 21, 2016
ராம் மோகன்...
தலைமை செயலர் ..
தமிழக அரசின் தலைமை செயலர் ராம் மோகன் ராவ்
வீடு மற்றும் அலுவலக சோதனை..இங்கே எல்லோரும் பதறுகிறார்கள் மாநில சுயாட்சி லெவலுக்கு..
ஜெயலலிதாவின் தனிசெயலராக இருந்தபோதே இவர்மீது நிறைய குற்றசாட்டுகள் வந்தன ஆனால் ஜெயலலிதா Influence செல்வாக்கை பயன்படுத்தி சரிசெய்தவர் .. ஜெயலலிதாவால் தலைமை செயலராக நியமிக்கபட்ட போது அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு வந்தது..
..
மிகபெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறார்.. இவரை பதவியிறக்கம் செய்து விட்டு சோதனை செய்திருக்கலாம். அரசியல் வாதிகள் அரசு ஊழியர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பது புதிதல்ல ஆனால் தலைமை அதிகாரி பொறுப்பில் இருப்பவர். ஏன் ஒட்டுமொத்த தமிழக நிர்வாக சுமைதலை உள்ளவர் வீட்டில் என்கிறபோது தலைகுனிவை ஏற்பட்டிருக்கிறது அதைதான் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்..
..
இப்போது நடத்தப்படும் சோதனைகளின் பின்னில் எதுவாக இருக்கட்டும் இவர்கள் இத்தனை கொள்ளைகளையும் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் செய்தார்கள் என்பதை மறக்க செய்கிறார்கள் ஜெயாவின் தனிசெயலராக இருந்தவர் இன்னும் சொல்லப்போனால் மன்னார் மாபியாவின் இசைக்கேற்ப ஆடியவர் அதனால் தான் தலைமை பொறுப்பிற்குவரை வரமுடிந்தது.
..
இந்த சோதனைகளின் மூலம் தமிழகத்தில் மறைமுக அதிகாரபிரயோகத்தை காவிகள் தொடங்கியிருக்கிறார்கள் நோக்கம் நேரடியாக எந்தகாலத்திலும் வரமுடியாதென்பதால் இருக்கிற வரை தங்களின் சொல்படி ஆடுகிறவரை வைத்து காலம் கடத்தலாம் ஏறக்குறைய #பொம்மலாட்டத்தை நடத்திட எண்ணுகிறார்கள்.. ரெய்ட் க்கு எதிராக யாரும் பேசவில்லை ஆனால் அதற்காக இந்த சோதனை (ரெயிட்) வளைத்தொடித்து தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டுவைப்பதற்காக இருக்ககூடாது.. மற்றொரு சந்தேகமும் வருகிறது..
உயர்ந்தவர்கள் மட்டுமே அமர்ந்த பதவியில் இடைநிலைக்காரன் வந்தது பொறுக்கவில்லையா என்ற சந்தேகமும் வருகிறது ஏனெனில் முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் தலைமைசெயலர் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்த முடியாது.. முதல்வர் மோடி சந்திப்பின் பின்னணியில் காய்நகர்த்தல் இருந்திருக்கலாம்..
..
இதில் சுவாரஸ்யம் இந்த ராமன் தான் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை செயலராக இருந்தார் ..காலக்கொடுமை
..
#இதெல்லாம்எவ்வளவுஅசிங்கம்தெரியுமா...
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment