Friday, December 2, 2016

மாவீரன் மணி..

அண்ணன் மணி.. தஞ்சையை திமுகவின் கோட்டையாக்கிய கலைஞரின் போர்வாள்.. தஞ்சை பகுதியில் பண்ணையார்களும் நிலக்கிழார்களும் (மிராசுதார்கள்) காங்கிரஸை தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த காலத்தில் தஞ்சையை திமுகவின் பக்கம் கொண்டுவர அரும்பாடுபட்டவர்.. ஓய்வில்லாத உழைப்பிற்கு சொந்தக்காரர்.. ஒவ்வொரு கிளைக்கழகத்தை சேர்ந்தவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையோடு கடிந்துக்கொள்ளும்.. அதே போல் அவர்களையும் உரிமையோடு பேச சொல்லி ரசிக்கும் திமுகவின் மாபெரும் தலைவர்.. .. ஒருமுறை எங்கள் கிராமத்திற்கு வந்து கொடி ஏற்றுவதாக ஒத்துக்கொண்டார்.. நேரமாகிக்கொண்டே போகிறது மக்கள் சலசலக்க தொடங்கிவிட்டனர்.. அமுல்ராஜ்தான் கிளைக்கழக செயலர்.. கோபமாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.. அவர் திட்டிக்கொண்டிருக்கும் போதே ஜீப்பில் வந்திறங்கி அமுல் கோச்சிக்காதடா வரவழியில வண்டி பஞ்சர் அதான் லேட்டாயிடுச்சு என்றவுடன் தொண்டை கிழிய கத்துகிறார் அமுல்ராஜ்.. மாவீரன் கோ.சி.மணி வாழ்க..கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.. கோவத்தை மறந்து உணர்ச்சி மேலிட வானம் அதிர்கிறது கரவோசத்தால்.. எந்த வித கோவமும் கொள்ளாமல் அமுல்ராஜை அணைத்துக்கொண்டே பேசுகிறார்.. கட்சியின் அடிமட்ட தொண்டனையும் அறிந்து வைத்திருந்த மாவட்ட செயலாளர் அதனால் தான் கடைசிவரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது.. .. கலைஞரின் அசைவு தெரிந்து படை திரட்டும் தஞ்சை தளபதி.. கும்பகோணத்தை ஜொலிக்க செய்த வைரம்.. சில துரோகிகள் கட்சியை சொந்த கொண்டாட சில மாவட்ட செயலர்களோடு வெளியேறிய போது தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டி கலைஞரின் பின்னால் கழகம் என உரைக்க சொல்லியவர்.. இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.. மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இவர் அகராதி..Dictionary.. .. #தஞ்சையின்_மாவீரன்.. #மாவீரனுக்கு_மரணமில்லை.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment